Tuesday, July 24, 2012

சபாநாவலன் சொல்லும் தேசிய இனப்பிரச்னையில்...( 3)

சபாநாவலனின்:

தேசிய இனப்பிரச்னையில் ஏகாதிபத்தியங்களின் சதி!



ஆரிய திராவிட மோதல்கள:

திராவிட மொழிகள் பற்றி ரெபெர்ட் கால்டுவெல் 1856-1875 காலத்தில் ஆய்வுகளை நடத்தி திராவிட மொழிகள் பற்றிய நூல் வெளியிட்டார் என்பதுடன் குண்டர்ட் ஆகியோரும் திராவிடர் கருத்தியலை வளர்த்தனர். மக்ஸ்முல்லர் ஆரிய மொழிகள் பற்றிய ஆய்வு வெளியிட்ட (1853) காலப்பகுதியிலேயே இவையும் இடம் பெற்றமையும் இணைத்துப் பார்க்கவேண்டும். ஆரிய, திராவிட மொழியாய்வுகளாகத் தொடங்கிய இவைகள் விரைவில் ஆரிய, திராவிட மக்களினம்கள் என்ற கருத்துக்களாக வளர்க்கப்பட்டதை அன்றைய கொலனிக்கால மேற்குலக அரசியலின் தயாரிப்பாகவே விளங்கவேண்டும். இந்திய சிப்பாய் கலகம் பிரிட்டிஸ் அரசைப் பயமுறுத்தியிருந்தது ஒன்றிணைந்த இந்திய தேசிய எழுச்சிக்கான தொடக்கமாக அது இருந்தது.எனவே மக்களிடையே பிளவுகள், துண்டாடல்கள் தனியடையாளத் தேடல்கள் ஊக்குவிக்கப்பட்டன. இப்போக்குகள் தொடர்ந்து வளர்ந்து ஆரியர்- திராவிடர் உயர்வுச் சண்டைகளும் யார் இந்திய மூத்தகுடி வந்தேறுகுடி என்ற வாதிடல்களும் தோன்றின.கண்முன்னேயுள்ள அந்நிய பிரிட்டிஸ் ஆக்கிரமிப்பாளர்களை விட்டு விட்டு ‘கைபர்கணவாய்’ ஊடாக மந்தைகளை ஓட்டிக் கொண்டு வந்தவன் ஆரியன் திராவிடன்தான் மூத்தகுடி என்ற வாதம்கள் தோன்றின. புராண இதிகாசம்களில் ஆரியர்- திராவிடர் தேடப்பட்டனர். ராமர் ஆரியன்,இராவணன் திராவிடன்,வசிட்டர் பிராமணன், விஸ்வாமித்திரன் சூத்திரன், சமஸ்கிருதம் தேவபாசை அதல்லாதவை நீசபாசை என்ற சச்சரவுகள் முன்வந்தன.


ஆரியர்- திராவிடர் சச்சரவுகள் சாதாரண இந்திய மக்களை நெருங்கவில்லை. மாறாக,ஐரோப்பிய சார்பான ஆங்கிலக்கல்வி பெற்றவர்களும்நகர்ப்புறம்சார்ந்த நடுத்தரவர்க்கமுமே இக்கருத்தியல்களின் பின்பு அலைந்தனர். பிரச்சாரப்படுத்தினர். தாம் சொந்தமாக மேற்குலக மொழி , நாகரீகம், கருத்துக்களில் பறிபோயிருப்பதை இவர்கள் உணராமல் ஆரிய திராவிடக்கற்பனை எதிரிகளையும் தீரர்களையும் தேடி பழைய வரலாற்றின் இருட்டுள் நுழைந்தனர். புராண,இதிகாசக் கருத்துக்களை சரித்திர உண்மைகட்குச் சமமாய் நிறுத்தனர். திராவிடநாடு, ஆரிய தேசம்,இந்துஸ்தான் கேட்கும் இயக்கங்;கள் தொடங்கின. இவை இந்திய சுதந்திரத்தின் பின்பு ஏகாதிபத்தியங்களின் சொற்கேட்கும் பரிவினைச் சக்திகளாகின. இவர்கள் மேற்கத்தைய கலாச்சாரத்தின் பிம்பங்களாகவுமிருந்தனர். திராவிடப் பெருமை பேசியவர்கள் ஆரியர்களை தமது எதிரிகளாகப் பிரகடனப்படுத்தியிருந்தனர். அதாவது வட இந்திய ஆரியரையே அவ்வாறு கருதினார். ஆனால் மேற்குலக வெள்ளை ஆரியரை தம்மை வென்று அடிமை கொண்டவர்களை எதிர்க்கவில்லை.அல்லது குறைந்தது வட இந்திய ஆரியராகக் கருதப்பட்டவர்களை எதிர்த்தது போல் இது நடைபெறவில்லை. ஏன் இவர்கள் இந்தியக் கறுப்பு ஆரியரை எதிர்த்துவிட்டு ஐரோப்பிய வெள்ளைத் தோல் ஆரியரை விட்டு வைத்தனர்?


மேற்கத்தைய வெள்ளை ஆரிய நாகரீகத்தைப் பின்பற்றினர். அவர்களின்மொழி. பகுத்தறிவு, விஞ்ஞானம், அறிவியல், அரசியல், தத்துவம் இவைகளை ஏற்று ஒழுகினர். இது எப்படி நடைபெற்றது. மேற்குலக, வெள்ளை ஆரியரின் மருத்துவம் இல்லாமல் இந்தியாவின் கொலரா, அம்மை, தொழுநோய்,இளம்பிள்ளைவாதம், கசம்,மலேரியா இல் இருந்து இந்திய ஆரியர் மட்டுமல்ல திராவிடரும் தப்பிப்பிழைத்து இருக்க முடியுமா? மேற்கத்தைய ஆரியராககருதப்பட்டவர்களின் ஜனநாயகம், அரசமைப்பு முறைகளை திராவிடர் தழுவவில்லையா?இங்கு கற்பனையான திராவிடர் ஆரியர்களை நிறுவும் சண்டைகள் மனித விரோதமானவையே. திராவிடர்,ஆரியர் என்ற இரு பிரிவினரிடமும் ஒருவரிடம் இல்லாத சிறப்பு உயர்வுகள்மற்றவர்களிடம் இருப்பதான கருத்துக்கட்டல்கள் மானுடவியல் ரீதியில் ஆதாரமற்றவை.மக்களின் பண்புகள் அவர்களின் வாழ்நிலையில் கட்டமைப்படுபவையே தவிர பிறப்பிலேயே உயிரியல் ரீதியில் முன்பே நிர்ணயிக்கப்பட்டவையல்ல. வரலாற்றில் முன் எப்போதோ நிகழ்ந்த அநீதிகட்கு பல ஆயிரம் ஆண்டுகள் கடந்து பழியெடுக்க வேண்டும் சபதம் செய்வது அக்காலத்தின் வரலாற்றுப் போக்கை மறுத்து திருத்தம் செய்ய முயல்வதாகும். ஒரு காலகட்ட தனியுடமை அமைப்பின் மனித இழிவுகட்கு இன்றைய மனிதர்களின் ஒரு பிரிவைப் பொறுப்பாக்குவது ஒட்டு மொத்த சமுதாயச் செயற்பாட்டின் இயக்கத்திலிருந்து அவர்களை தனியே பிரித்துக் காண்பது தவறாகும். குற்றம் நிறைந்த தனிச் சொத்துடமை அமைப்பை எதிர்ப்பின்றி விட்டு வைத்துக் கொண்டு அதனால் இயக்கப்படும் மனிதப்பிரிவுகளையோ தனிமனிதர்களையோ விசாரணை செய்யமுயல்வது சமூக இயக்கப் போக்கை மதிப்பிடாதவர்கட்கு மட்டுமே முடிந்த காரியமாகும். சாபம் தருவதோ, சபிப்பதோதீர்வு அல்ல உயர்வு, தாழ்வு பற்றிய கருத்துக்கள் நல்லன கெட்டவை பற்றிய பகுப்புக்கள் யாவும் சமூகத்தின் பொருளாதார உற்பத்திப் போக்கின் நலன்களில் இருந்தே வருகின்றது. குற்றம்கள் ஏனைய மனிதர்களை இழிவு செய்தல் அடிமைப்படுத்தல் என்பன ஏதோ தனிமனித மனம்களில் இருந்து உதித்து வருவதில்லை. சாணக்கியர் முதல் மனு வரை அக்காலகட்ட அரசியல்,சமூக பொருளியல் கட்டளைகளையே நிறைவேற்றினர்.கடந்த காலத்தை நாம் செப்பனிடமுடியாது. மாறாக கடந்தகாலப் போக்குகளை ஆய்ந்து எதிர்கால, நிகழ்கால,சமூக மாற்றங்கட்கு கீழ்ப்படுத்த வேண்டும். மனிதர்களின் அக அம்சங்கள் உள்மன உலாவல்கள் புறநிலையாக நிலவும் சமூகவாதிகளின் கருத்துக்கட்டளையிடலாகும். அநீதிகளை உற்பத்தி செய்யும் சமூக அமைப்பை இயங்கவிட்டுக் கொண்டு அந்த இயக்கத்துக்கு உட்படும் மனிதர்களை மட்டும் குற்றம் குறை காண முடியாது.


ஒரு மக்கள் பிரிவுக்கு எதிராக பகைமையுணர்வுகள், பழியெடுக்கும் சபதம்கள் இந்தியாவின் தேசம் தழுவிய ஒன்றிணைதல் தொடங்க பிரதான தடையாக இருந்தது. திராவிட நாகரீகம் ஆரியத்தை விட உயர்ந்தது. அங்கு கடவுள் இல்லை , சாதி கிடையாது, பிராமணியம் நிலவவில்லை என்ற வரலாற்று ஆய்வுக்குட்படாத செய்திகள் சரி;த்திரத் தகுதி பெற்று உலாவின. புராண, இதிகாசப் பாத்திரம்கட்கு உயிர் தரப்பட்டு அவர்கள் திராவிட மற்றும் ஆரியக் கருத்துக்களுக்கான போராளிகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டனர். திராவிட நாகரீகத்தில் செல்வந்தர்கள், ஏழைகள், மதகுருக்கள், உலோகத் தொழிலாளர்கள், சுதந்திரமற்ற அடிமைகள் இருந்ததை மறைத்தனர். அவ்வாறே ஆரியரும் தம் வளர்ச்சியல் கடந்து வந்த மானுடவியல் உண்மைகள் நிலவவில்லை என்று மறுத்தனர். திராவிட கருத்தியலானது ‘லெமூரியா’,குமரிக்கண்டம்,குமரிநாடு, ஏழ்கடல்நாடு, ‘தென்குமரி முதல் வடவேங்கடம் வரை’ பரவிய தமிழ்நாடு என்ற தமிழ்த்தேசியவாதக் கனவுகளை பின் தொடர வைத்தது. தமிழ்நாட்டு தேசியமானது திராவிடத்தின் குழந்தையாகும். இந்தியா என்பது பலவித சாதி,சமய, இனக்குழு, சமூகப் பிரிவுகள், மொழிகளின் நாடாகும். இவைகளிலே பிளவும் முரண்களும் சச்சரவுகளும் நிலவவே செய்யும் என்பதன் பொருள் அவர்களிடையே பொதுவான வர்க்கரீதியிலான அம்சம்களும் உடன்பாடான சமூகப் போராட்டத் தேவைகளும் நிலவாது என்பதல்ல. அந்நிய பிரிட்டிஸ் ஆட்சியை எதிரிடத்தக்க பலத்தை தம்மிடையே திரட்ட கடமைப்பட்ட இந்தியர்களாக உருவாகி வந்த மக்களை பிரிட்டிஸ் அரசு ஆரியர், திராவிடர், தலித்தாக மட்டுமல்ல, இந்துவாக, சீக்கியர், முஸ்லிம், பௌத்தர்களாக கூறு போட்டுக் கையாண்டது. அந்தப் பிரிவுகளிடையே தனித்தனி தலைமைகளை உருவாக்கி தன் கீழ் கையாண்டது.


திராவிடத் தமிழ்ப் பெருமைகளைத் தேடி தமிழ்தேசியவாதிகள் எகிப்து, பாபிலோனியா, பேர்சியா, கிறீஸ், மத்தியதரைக் கடற்பிரதேசம் எங்கும் பயணித்தார்கள். இலங்கையில் பண்டிதர் கணபதிப்பிள்ளை அலெக்சாண்டர் ஒரு தமிழன் என்று கண்டு பிடிக்க தமிழ்நாட்டில் பெருஞ்சித்திரனார்,ம.பொ.சி,ஆதித்தனார் போன்றவர்கள் இதையொத்த கண்டு பிடிப்புக்களை நிகழ்த்தினர்.இவர்கள் ஏகாதிபத்திய பிரிவினை அரசியலுக்கான சிறந்த இரைகளாக இருந்தனர். சுமேரிய, எகிப்து நாகரீகம்கள் திராவிட நாகரீகம் எனவும் இந்த நாகரீகம்களின் மூலம் தமிழர் நாகரீகமே என்ற விளக்கம்களும் உலாவின. இவைகளின் வரலாற்றுப் பெறுமதிகள் பற்றி தமிழ்தேசியவாதிகள் கவலையுறவில்லை.
தமிழ்நாட்டு திராவிடக் கருத்துக்கள் பிராமணிய எதிர்ப்பை மனித விரோத மட்டத்துக்கு வளர்த்துச் சென்றனர். ஆரியக் கருத்தாளர்கள் யூதர்களை எப்படி மதித்தனரோ அப்படியே திராவிடர்களை ஆரியக் கருத்தாளர்களும் திராவிடச்சிந்தனையாளர்கள் ஆரியரையும் நடத்த விரும்பினர். தென்னிந்திய திராவிடவாதிகள் வாய்ப்புக் கிடைத்தால் ஜெர்மனிய நாசிகளைப் போல் ஆரியர்கட்கும் பிராமணர்கட்கும் வதைமுகாம்களை அமைக்குமளவு தயாராக இருந்தனர்.திராவிடப் பெருமை, திராவிட தேசம் பேசிய பெரியார் கூட ஆரியரை பிராமணர்களை எதிர்த்தாரே தவிர வெள்ளை ஆரியரான பிரிட்டிஸ்காறரை எதிர்க்கவில்லை. மாறாக அவர்களின் நாகரீகம், பகுத்தறிவு, விஞ்ஞானம் இவைகளைப் புகழ்ந்து இந்திய விவசாய சமூகத்தின் பின் தங்கிய நிலைமைகளை நையாண்டி செய்தார். மேற்கு நாகரீகம் தொழிற்துறை வளர்ச்சியின் விளைவு, தொழி;ற்புரட்சியின் முன்பு பிரிட்டன் கூட இந்திய நிலைமைகளையொத்த சமூக நிலைமையையே கொண்டு இருந்தது என்று இவர்கள் கண்டாரில்லை. இந்தியப் பிராமண மதகுருக்களை போல்ஜரோப்பாவில் பாப்பரசர் கிறிஸ்தவமதகுருக்களைநியமிப்பது போல் மன்னர்களையும் நியமித்தனர். பல சமயங்களில் வரி செலுத்தாத மன்னர்களின் நாட்டை அடமானமாகப் பெற்றாhர்.மன்னார்கள் இ;ல்லாத போதும் மன்னராக இளவயது சிறுவர்கள் இருந்தபோதும் பாப்பரசரே நாட்டை நிர்வகித்தார். தன்னை எதிர்த்த மன்னர்களை விலக்கினார்.அவர்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்யுமாறு மக்களை கிறீஸ்துவின் பெயரால் தூண்டினார். தனது சார்பான புதிய மன்னர்களை நியமித்தார். நாடுகளிடம் இருந்து கப்பம் பெற்றார். பகை நாடுகள் மீது படையெடுத்தனர். ஏனைய நாடுகளை அந்த நாடுகள் மேல் படையெடுக்கும்படி தூண்டிவிட்டார். புரட்டஸ்தாந்து மதத்துக்கு மாறிய நாடுகளையும் தமது பகை நாட்டிலும் ஞானஸ்நானம், திருமணம், சாவு, அடக்கம் செய்தல் ஆகியவற்றுக்கான கிரிகைளை அவர்மறுத்தார
திருச்சபை உத்தியோகம்கள், பதவிகள் விற்கப்பட்டன. வாங்கப்பட்டன.


மதகுருக்கள், நிலபுல சொத்துக்களை வைத்து இருந்தார்கள். அந்த நிலம்களில் ஏழைகளும் அடிமைகளும் உழைத்தார்கள். சந்தைகளில் அக்காலத்தில் மனிதர்கள் ஆடு,மாடுகள் போல் விற்று வாங்கப்பட்டனர். அடிமைகள், தியோர்கள் (Theows)என்று அழைக்கப்பட்டனர். ஏழைகள் கடனைத் திருப்பித் தர முடியாத விவசாயிகள் தம்மைத் தாமே நிலப்பிரபுக்களிடம் விற்றுக் கொண்டனர். பிரிட்டனில் கி.பி.1000 இல் அடிமையகளே சந்தைகளில் முக்கிய விற்பனைப் பண்டமாக இருந்தனர். தப்பியோடும் அடிமைகள் திருடும் அடிமைகள் கல்லால் அடித்துக் கொல்லப்பட்டனர். கொலை செய்யப்பட்டனர். அடிமைகளைக் கொல்ல உரிமை இருந்தது. குற்றம் செய்தவர்களை தீயை ஏந்தச் செய்தல் நீரில் மூழ்கச் செய்தல் ஆகியவை ஊடாக குற்றமற்றவர்கள் என நிரூபிக்கக் கோரும் நீதிசார் நடைமுறைகள் ஐரோப்பாவில் இருந்தன. மதகுருக்கள், படைத்தலைவர்கள்,அரசுப்பிரதிநிதிகள், செல்வந்தர்கட்கு அரசன் மானியமாக வழங்கிய நிலம் Bochland என்று அழைக்கப்பட்டது. இந்த நிலம்களில் விவசாயிகள் குத்தகைக்கு உழைத்தார்கள். குத்தகையாக விளைபொருள் தராத விவசாயிகளைக் கொல்லும் உரிமை நிலவுடமையாளனுக்கு இருந்தது.கிறீஸ்த திருச்சபைகள் தமது சொந்த நீதிமன்றம்களைக் கொண்டிருந்தன. இங்கு கிறீஸ்தவ திருச்சபை சார்ந்த குற்றவாளிகளை இவை விசாரித்து அரச நீதிமன்றம்களை விட மிகவும் குறைவான தண்டனையே வழங்கின. உதாரணமாக அரச நீதிமன்றம் கொலைக்கு மரணதண்டனை வழங்கியபோது திருச்சபை நீதிமன்றம் கொலைக்கு தமது திருச்சபை ஆட்களை கிறீஸ்தவ மதச் சின்னம்கள் மத ஆடைகளை களைந்து விடும்படி மட்டுமே தீர்ப்பளித்து. பாவம்களைச் செய்த பாவிகளிடம் இருந்து கிறிஸ்தவ மதகுருக்கள் பணத்தைப் பெற்றுக கொண்டு பாவம்களை போக்கும் பொருட்டு ‘பாவமன்னிப்பு சீட்டுக்களை’ வழங்கினர். இப்படியாக செய்த பாவம் போக்கப்பட்டுப் புண்ணியம் விலைக்க வாங்கப்பட்டது. பாவமன்னிப்புச் சீட்டுக்களை விற்பதற்காக ஐரோப்பா எங்கும் பாப்பரசரின் கிறீஸ்த பாவம் போக்கிகள் அலைந்த திரிந்தார்கள்.


கி.பி. 1539 இல் பிரிட்டனில் கத்தோலிக்க மதத்தைக் காக்க ஆறுவிதிகட்கான சட்டம் (The statute of six Articles) கொண்டு வரப்பட்டது.இதன் மூலம் கத்தோலிக்க கொள்கைகளை நம்பாதவர்களை உயிரோடு எரியூட்டும் சட்டம் நடைமுறைக்கு வந்தது. கிறிஸ்தவ வழிபாட்டின்போது படைக்கப்படும் ரொட்டியும் வைனும் கிறீஸ்துவின் தசையும் இரத்தமுமாகும் என்பதை நம்ப மறுப்பது தெய்வ நிந்தனையானது. கத்தோலிக்க எதிர்ப்பாக்கப்பட்டு மரணத்துக்குரிய தண்டனையானது 14ம் நூற்றாண்டில் வெடிமருந்து கண்டு பிடிப்பு பின்பு பீரங்கிப்படைகள் உருவாகின.சண்டையிட்டன. கி.பி. 1600 இன் பின்பே பிரிட்டனில் வெளிநாட்ட உள்நாட்டு வர்த்தகம் வளர்ந்தது. நகரம்கள் எழுந்தன. துறைமுகங்கள் கப்பல்கட்டும் தொழில்கள் வந்தன. 1525 இல் வில்லியம் டிண்டேல்; (William Tyndale) பைபிளை லத்தீனில் இருந்து ஆங்கிலத்துக்கு மொழி பெயர்த்தார். அதன் பின்பே ஆங்கிலமொழி வளர்ந்தது. கலைகள், இலக்கியம், அறிவுத்துறைகள் வளரத் தொடங்கின. இங்கு தொழில் மயமாதலின் விளைவாகவே வர்த்தக வளர்ச்சி காரணமாகவே இவை நிகழ்ந்தன. அடிப்படையில் இந்திய பிரிட்டிஸ் சமூகங்கள் அக்காலத்தே கிட்டத்தட்ட ஒரே மட்டத்திலேயே இருந்தன.ஐரோப்பிய முதலாளிய வளர்ச்சி தான் மேற்குலகை மாற்றியது.இந்தியாவின் உடன் கட்டை ஏறும் முறைபோல ஐரோப்பிய ‘விக்கிங்கர்’ மக்கள் பிரிவிடம் ஆண் இறக்கும்போது பெண்ணையும் அவனுடன் சேர்த்து எரிக்கும் பழக்கம் நிலவியது. எனவே இந்து சமயத்தையோ பிராமணியத்தையோ இதுவரை மனிதவரலாற்றில் இல்லாத கொடுமைகளைக் கொண்டிருப்பதாகக் கற்பிக்க முடியாது. பல ஆயிரம் வருடம் மாறாத சமூகமாக இந்தியா இருப்பதே இதற்குக் காரணம் மறுவகையில் இந்தியாவானது பேர்சியா,பபிலோனியா, எகிப்திய நாகரீக மிச்சம்களையும் நினைவுகளையும் கொண்டுள்ள ஒரு சமூகமாகும்.இந்திய சமூக இருப்பை வரலாற்று மற்றும் மானுடவியல் ரீதியில் அணுகாமல் அதன் மிகப் பின் தங்கிய பொருளாதார உற்பத்திமுறைகளோடு இணைத்து ஆராhமல் வெறும் ஆரிய,பிராமண வெறுப்புக்களால் எதிர்கொள்வது காலம் கடந்த பெரியாரிய,அம்பேத்காரிய அரசியல் சரக்குகளாகும்.இந்திய முழுச்சமூக அமைப்பும் சோசலிசத்துக்குள் வரும்வரை இந்திய சமூகக் கொடுமைகளை ஒரு போதும் முழுமையாக ஒழிக்கமுடியாது என்பதே இந்திய அரசியல் சமூகப் போக்குகள் திரும்பத்திரும்ப நிரூபிக்கும் விடயமாகும்.


இந்தியாவின் சகோதர மக்கள் பிரிவுகளிடையேயுள்ள அநீதிகள் முரண்பாடுகள் என்பன வர்;க்க சமூக ஒழுங்குகட்குட்பட்டவை சாதிகள் என்பன வர்க்க சமூகத்தின் வெளித்தோற்றமாகும். பல்வகையான தொழி;ற் பிரிவினைக்குட்பட்ட உழைப்பாளர்களின் பிரிவாகும். சாதிகளை வர்க்க சமூகத்தின் அம்சமாகப் பார்க்க மறுத்தவர்களது மதிப்பீடுகள் இன்று பொய்த்துப் போய்விட்டன. பிரிட்டிஸ் ஆட்சிக்காலத்தில் பிரிட்டனையன்றி உள்ளுரில் சொந்த தேச மக்களை ஆரியர்- திராவிடர் என்ற வரலாற்றுக் கற்பிதங்களுடன் இப்போக்குகள் இந்திய சுதந்திரத்தின் பின்பு நாட்டுப் பிரிவினை வடக்கு, தெற்கு பேதம் வடவர்- தென்னவர் சார்ந்த தீராத சச்சரவுகட்கு இட்டுச் சென்றது. இவர்கள் ஏதோ ஒரு வகையில் மேற்குலக சக்திகளின் அரசியல் நிதிக்கட்டளைகட்கு உட்பட்டே செயற்பட்டனர். இந்தியாவின் முன்னேற்றமற்ற பழைய விவசாய சமூக அமைப்பில் உள்ளுரின் பிரச்னைகளைத் தீர்க்கமுடியவில்லை. பலவிதமான சமூகப் பிரிவுகள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கலகம் செய்ய வாய்ப்புகள் நிலவியது என்ற போதும் மறுபுறம் இந்திய மக்களின் பல வண்ணப் பண்புடைய போக்குகள் பகை மட்டுமே நிரம்பியவையாகக் காண்பிப்பது திராவிட – ஆரிய பிரிவினைவாத சக்திகட்கு அவசியமாக இருந்தது. இவை ஒரு தேசமாக பொதுப்பண்புகளை நோக்கி வளரத்தக்க வரலாற்றுக்கட்டத்தில் இருந்தன. இன்று வளர்ச்சியடைந்த எல்லா முதலாளித்துவ நாடுகளிலும் இத்தகைய பல இனக்குழுத்தன்மை வாய்ந்த வித்தியாசமான ஏற்றத்தாழ்வான போக்குகளிலிருந்து முன்னேறி வந்தமையே. ஆரியர் – திராவிடர் பல ஆயிரம் வருடங்களாக ஓயாது ஒழியாது போரிட்டனர் என்ற வரலாற்றுப் புனைவுகள் தான் ஒருவரையொருவர் பழியெடுக்க முயலும் இந்த இரண்டு பிரிவுகட்கும் ஆதாரமாகும் இந்தியாவின் சகல துன்புறும் மக்கள் பிரிவுகளும் ஒன்று சேராமல் இந்தச் சிந்தனைகள் பார்த்துக் கொண்டன என்ற அளவில் இவர்கள் முதலாளித்துவ அமைப்புக்கு சிறப்பான சேவை புரிந்தார்கள்.


இந்திய ஆரியக்கருத்துக்காவிகள் இந்தியாவுக்கு முதலாளிய வழயில் கூட ஒரு போதும் தேவைப்பட்டிராத யூத எதிர்;ப்பைக் கொண்டிருந்ததுடன் கிட்லரையும் ஜெர்மனியப் பாசிசத்தையும் வெளிப்படையாகவே ஆதரித்தனர். தாம் ஐரோப்பிய ஆரியருடன் சேரும் ஒரே இனம் என்று நம்ப இவர்கள் கற்பிக்கப்பட்டு இருந்தனர். இவர்கள் திராவிட மற்றும் தலித்திய வெறுப்புக்களைக் கொண்டிருந்ததுடன் ஆரியரின் மதம் என்று தாம் கருதிய இந்துமதம் ஊடாக சகலரையும் அதனுள் உள்ளடக்கி விட முயன்றனர். இவர்களின் பொது அம்சமாக சோசலிச எதிர்ப்பு இருந்தது. இவர்கட்கு எதிர்நிலையில் செயற்பட்ட பெரியார்,அம்பேத்கார் போன்றவர்கள் தாம் சார்ந்த மக்களை சோசலிசத்தின் பக்கம் போகாமலும் பிரிட்டிஸ் மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு வரை முன்னேறாமலும் பார்த்துக் கொண்டார்கள். இதற்கு இவர்கள் ஆரிய எதிர்ப்பை இடதுசாரிச் சாயலுடன் வெளிப்படுத்தினர். இந்த இரு பிரிவும் பல நூறு மில்லியன் கணக்கான ஏழைகளாலும் உழைப்பாளர்களாலும் நிரம்பிய இந்திய மக்களை இணையவிடாமல் செய்தனர். மனிதப்பண்பாட்டு அம்சங்களை உயர்வு தாழ்வு முறைகளை தீவிரமாய் பேசியதின் ஊடாக மக்களின் பொருளாதார அம்சங்களை அதை வெல்வதற்கான வழிவகைகளை புறம் தள்ளிவிட்டனர். இன்று தமிழ்நாட்டில் பெரியாரியம், தலித்தியம், பின் நவீனத்துவம், காந்தீயம், திராவிடம், இந்துமதம் பேசிய எல்லோருமே சுற்றிச் சுற்றி மேற்குலக அரசியல், கருத்தியல், பொருளாதார ஆர்வம்கட்கு உட்பட்டவர்களே. பல தொகை மேற்குலக NGO க்கள் இவர்களுடன் உறவு கொண்டுள்ளமை இதற்கு வெளிப்படையான சான்று 1990 இன் தொடக்கத்தில் பெரியார், அம்பேத்கார், காந்தியம்,பின் நவீனத்துவம், தலித்தியம் பற்றி பெரும் தொகை ஆய்வுகள், நூல்கள் வெளிவந்தமையும் இதற்கான அமைப்புக்கள் புத்தமைக்கப்பட்டமையும் இடதுசாரி அமைப்புக்களின் இடத்துக்கு இவை பதிலாக நிறுவ முயற்சிக்கப்பட்டமையும் ஏதோ நினையாயப் பிரகாரமாக நடந்தேறவில்லை. உலகம் முழுவதும் மேற்குலகு சார்பான கருத்துக்கள் முன்னேறிக் கொண்டிருந்தபோதே இவை நடந்தன.


ஸ்டாலினிசக் கட்சிகளில் இருந்து வெளியேறிய அரசியல் உதிரிகள் இப்போக்குகளில் முன்னணியில் இருந்தனர். NGO நபர்களாக மாறுவதற்கான கல்வித்தகைமை, ஆங்கில மொழியறிவு நடுத்தவர்க்க சமூகப் பின்புலம் என்பன அவர்கட்கு தோதாக இருந்தது. இவர்கள் கலகக்காறர்களாகவும் கட்டுடைப்பாளர்களாகவும் புத்தமைப்பாளர்களாகவும் தோன்ற முயன்றனர். இவர்கள் உலக மயமாதலுள் நுழைந்த இந்திய முதலாளித்துவத்துக்கு ஏற்ற கருத்தியல் தயாரிப்பை வழங்க முயன்றனர். உலக மயமாதலில் நேரடியாகப் பயன் பெறத் தொடங்கிய புதிய சமூகப் பிரிவுகளின் பேச்சாளர்களாக மாறினர். இவர்கள் பெரியார், அம்பேத்கார், காந்தி போன்றவர்களை புனரமைத்தனர். புதிய வாதம்களால் நிரப்பினர் என்பது மறுபுறம் இந்தியா தழுவிய ஒரு புதிய முதலாளிய வளர்ச்சிக்கு எதிரான மேற்குலக நாடுகளின் விருப்பார்வமாகவும் இது இருந்தது. இந்தியாவில் மட்டுமல்ல பெருமளவு 3;ம் உலக நாடுகளில் பலவித சமூகக்குழுக்களை மேற்குலக நாடுகள் அரசியல் வாழ்வுக்கு கொண்டு வந்த சமயமாக அது இருந்தது. NGO க்களின் சகாப்தம் தொடங்கிய தருணம் அது தான். இவை இடதுசாரிகள், சமூக விடுதலை அமைப்புக்கள், கொரில்லா இயக்கம்களின் பலம்களையும் குறைக்க முயன்றன. அவர்களின் இடம்களைக் கைப்பற்றின. தமிழ்நாட்டில் தியாகு, திருமாவளவன், அ.மாக்ஸ்,ராமதாஸ், ரவிக்குமார் போன்ற ஸ்டாலினிசக் கட்சி மற்றும் மாவோயிச ஆயுதக்குழுக்களின் நபர்கள், சாதிய அமைப்புக்களை உருவாக்கியதுடன் இடதுசாரிச் சிந்தனைகளை ஆய்வதாய்த் தொடங்கி கடைசியாக மாக்சிய விரோதத்துக்கு வந்து சேர்ந்தனர். 1990 களில் மேற்குலக நாடுகளில் தோல்வியடைந்த சீர்திருத்தவாத சோசலிச அரசியல் கருத்துக்களின் உதவியுடன் மாக்சியத்தை ஆராய முயன்ற இவர்கள் இறுதியாக நம்பிக்கையழிவுக்கும் இவர்களது குழுக்கள் பிரிந்து உடைந்து சிதறி தனிமனிதர்களாக காணாமல் போவதற்கும் வழியானது. 1990 தொடங்கி அதன் பத்தாண்டு முடிவு வரை புதிய எழுத்தியக்கம் படைத்தவர்களாகக் கருதப்பட்டவர்கள் இன்று எந்தப் பயன்பாடுமற்றவர்களாக அரசியல் தனியன்களாக மாறிவிட்டனர். புகலிடங்களி;ல் அரசியல் , இலக்கிய கலகங்களை மூட்டியவர்களாக தம்மை உரிமை கோரிக் கொண்ட இவர்கள் இன்று அம்பலமாகிவிட்டனர். இவர்கள்கைடேக்கர் நீட்சேயை மட்டுமல்ல மேற்குலக பாசிசத்தின் நவீன செமிட்டிக் எதிர்ப்பு வடிவம்களையும் தமிழ்நாட்டில் இறக்குமதி செய்து இருந்தனர். மாக்சியம் செமிட்டிக் பாதிப்புடைய சிந்தனை என்று குற்றம்சாட்டப்பட்டதுடன் நீட்சேயின் பாசிசத் தோற்றக் காரணிகளை மறைத்து அவனைப் போற்றினர். பாசிச சிந்தனாவாதி மாட்டின் கை டேக்கர் கொண்டாடப்பட்டார். மாற்றாக ஜெயமோகன் போன்ற இந்துமதவாதிகள் இவர்களின் உதிரித் தகவல்களைச் சேகரித்துக் கொண்டு செமிட்டிக் மற்றும் மாக்சிய எதிர்ப்பும் பேசத் தொடங்கினர்.தழிழ்நாட்டில் பெரியாரியம் மற்றும் தலித்தியம் பேசியவர்கள் திராவிடர் சிந்தனைக்கு நெருக்கமானவர்களாக இருந்த போதும் மறுபுறம் மேற்கத்தைய ஆரிய மற்றும் பாசிச செமிட்டிக் எதி;ர்ப்புக் கருத்துக்களையும் பிற்காலத்தில் கொள்முதல் செய்து இருந்தனர் என்பது பெரும் முரண்பாடாகும்.


இன்று திராவிடம் ஆரியம் காந்தியம் என்பன இந்திய பொது முதலாளிய வளர்ச்சியுள் நவீன மயமாகும் தொழிற்துறையுள் கலந்து உருகத் தொடங்கிவிட்டன. இவைக்கு எதிர்காலமில்லை. திராவிடம் என்பது தென்னிந்திய திராவிட மக்களை ஒன்றிணைப்பது என்று தொடங்கி பின்பு தமிழ்நாட்டில் திராவிட இயக்கமாக பெரியாரியமாகக் குறுகி இன்று இவை பாராளுமன்ற வாதக் கட்சி அரசியலில் கூட வழக்கொழிந்து வருகின்றன. திராவிட இயக்கம்கள் இன்று இந்திய தேசியப் போக்குள் ஈர்க்கப்பட்டு கலந்துவிட்டன. தமிழ்நாட்டு திராவிட இயக்கவாதிகட்கு வெள்ளை மற்றும் கறுப்புத் திராவிடர்கள் இருப்பது தெரியாது. இவர்கள் இந்தியாவுக்கு வெளியல் உள்ள திராவிடராகக் கருதப்படுபவர்களை எண்ணுவதில்லை. செமிட்டிக் மற்றும் மங்கோலிய மக்கள் பிரிவுகளுடன் கூட திராவிடமொழிபேசும் மக்கள் பிரிவுகட்கு தொடர்புள்ளது என்பதால் ‘உலகத்திராவிடர்களே ஒன்றிணையுங்கள்’ என்றா இவர்கள் கேட்கமுடியும். திராவிடப் பெருமை என்பது ஆரியப் பாசிசச் சிந்தனா முறைக்குச் சமமானதே. திராவிடர்கள் ஆரியரால் ஒடுக்கப்படுகின்றனர் என்ற கருத்து வரலாற்றின் அறியாக்காலத்துக்கு உரியதான சான்று தர முடியாத கருத்துக்களைப் பின் தொடர்வதாகும்.


‘இஸ்லாமிய அடிப்படைவாதம்’ என்ற ஏகாதிபத்திய கருத்தியல் அப்படியே நாவலனால் எடுத்துக் கையாளப்படுகின்றது. இஸ்லாமிய மக்களுக்கு எதிரான மேற்குலக யுத்தத்திற்கு ‘இஸ்லாமிய அடிப்படைவாதம்’ என்ற தனிமைப்படுத்தும் அரசியல் சித்தாந்தம் பாவிக்கப்படுகின்றது.மத்திpய கிழக்கு நாடுகள் முழுவதும் அமெரிக்காவை எதிர்ப்பவர்கட்கு இப் பெயர் தரப்படுகின்றது. ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் ஈரானிலும் மேற்குலக அரசை எதிர்த்து போராடும் சக்திகட்கு இப்பெயர் இடப்படுகின்றது. ஒரு அரசியல் போராட்டம், ஏகாதிபத்திய எதிர்ப்புப் பண்புடைய இயக்கம் இப்படியாக மதவாத விளக்கம்களால் மட்டும் நிரப்பப்பட்டது. இஸ்லாம் எதிர்ப்பு இயக்கம் என்பது அரபு மக்கள் எதிர்ப்பு இயக்கம்களாகவும் இனவாத ஐரோப்பிய மேன்மை பேசும் அமைப்புக்களாகவும் இருந்தன.ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் புதிய நாசி இயக்கம்கள் இப்போ யூதர்களை விட இஸ்லாமையும் முழு முஸ்லிம்களையும் எதிர்ப்பவர்களாக மாறியுள்ளனர். ஆபிரிக்க,ஆசிய முஸ்லிம்கள் மதவெறி கொண்ட கீழ்நிலை மனிதர்களாக அழித்தொழிக்கப்பட வேண்டிய மக்கள் பிரிவாக மாற்றப்பட்டுள்ளனர். ஜெர்மனியில் அரசு மட்டுமல்ல புதியநாசி அமைப்புக்களின் உறுப்பினர்கள் ஒன்றிணைந்து நாடு தழுவிய "PROD" என்ற இஸ்லாமிய எதிர்ப்பு இயக்கத்தைத் தொடங்கியுள்ளனர். அன்றைய யூத எதிர்ப்பு இன்று இஸ்லாம் எதிர்;ப்பாக மாறியுள்ளது. ஊடகம்களில் பெரும் தொகையான இஸ்லாம் எதிர்ப்புச் சொற்கள் புழக்கத்துக்கு வந்துள்ள தினசரி புதிய ‘இஸ்லாம் மேலான விமர்சகர்கள்’ (Islamkritiker) தோன்றுகின்றார்கள். இணையத்தளம் முதல் பத்திரிகைகள் வரை முஸ்லிம்களைப் பயங்கரவாதிகள் தற்கொலைக் குண்டுதாரிகள், குழந்தைத் திருமணம், கட்டாயத் திருமண வழக்கம்களை உடையவர்கள் என்று உருவகிக்கின்றன. புதிய நாசி இணையத்தளம்களில் அரபுக்கள் பன்றிகளையொத்தவர்கள் என்று வர்ணிக்கப்படுகி;ன்றார்கள்.இஸ்லாமிய அடிப்படைவாதம் என்பது ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்துக்கு இடப்பட்ட பெயராகும்.


இதனுள் உலகின் பலநூறு மில்லியன் முஸ்லிம் மக்கள் இருக்கின்றார்கள். உலகில் நடைபெறும் ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம்களை எல்லாம் மதத்தின் பெயரால் அடையாளப்படுத்த முடியுமா? புஸ் ஒரு கிறீஸ்தவ அடிப்படைவாதி என்று ஏன் கொள்ளப்படுவதில்லை? ஐரோப்பியக் கூட்டமைப்பை ஒரு கிறீஸ்தவக் கூட்டமைப்பு என்று ஏற்றுக்கொள்ள முடியாதா? பிரிட்டனின் அயர்லாந்து மேலான ஒடுக்குமுறையை புரட்டஸ்தாந்து, கத்தோலிக்கப் போராட்டமாக நாம் விளக்கமுடியாதா? தலாய் லாமாவின் சிந்தனைகள் ஏன் பௌத்த மத அடிப்படைவாதமாய்க் கொள்ளப்படுவதில்லை? தமிழ், சிங்கள பிரச்னையை ஏன் பௌத்த, இந்துமத அடிப்படைவாதம்கட்கு இடையேயான போராட்டமாய் விளக்கப்படுவதில்லை? ஒரு அரசியல் போராட்டத்தின் விளைவுகளே இன்று இஸ்லாமிய அடிப்படைவாதம் என்று மேற்கு நாடுகளால் பிரச்சாரப்படுத்தப்படுகி;ன்றது. மதம் என்ற அளவில் கிறீஸ்தவம் இஸ்லாம், யூதநம்பிக்கை யாவுமே கிட்டத்தட்ட ஒரே மூலத்தில் பிறந்த ஒரே சாயல்படைத்த மதம்களாகும். மதம்கட்கு உள்ள பிற்போக்குத்தன்மை, மனித விரோதப் பண்புகள் எல்லா மதம்கட்கும் பொதுவானவை. பைபிள்புனிதமானது அதன் தழுவலாகப் பிறந்த ‘குர்ரான்’ கொடியது என்ற வகுத்தல்கள் மேற்குலக அரசியலின் படையலாகும். இஸ்லாமிய இயக்கம் வரலாற்றில் தீவிரத்தன்மை பெற்ற காலம்களை நாம் பார்த்தால் அது மேற்கு நாடுகளின் அரசியல்,இராணுவச் சதிகளின் விளைவாகவே இருந்தது. முதலாம் உலக யுத்த சமயத்தில் ஜெர்மனி,அரபு முஸ்லிம்கள் மத்தியில் பிரிட்டன் பிரான்சுக்கு எதிராக ‘புனித யுத்தம்’ எனப்படும் இஸ்லாமிய மதவாத அமைப்புக்களை உருவாக்கியது. அல்ஜீரிய விடுதலைப் போராட்டத்துக்கு எதிராக பிரான்சும் மேற்குநாடுகளும் அங்கு இஸ்லாமிய இயக்கம்களை உருவாக்கினர்.


ஆப்கானில் சோவியத் யூனியனுக்கு எதிராகவும் பாலஸ்தீனத்தில் PLO வுக்கு எதிராக இஸ்ரேல்’ஹமாஸ்’ இயக்கத்தை தொடங்கியது. பாகிஸ்தான், காஸ்மீர்,சீனா, லிபியா. முன்னாள் யூகோஸ்லாவியா எங்கும் மேற்குலக உளவுத்துறைகள் இஸ்லாமிய இயக்கம்களை உருவாக்கிpன. இவர்களே குரான் போதி;க்கும் இஸ்லாமியப் பள்ளிகளையும் உருவாக்கினர். அப்படி எதிர்ப்புரட்சி சக்திகளான இஸ்லாமிய இயக்கம்கள் உலக மயமான பின்னர் மத்திய கிழக்கு எண்ணெய் வளம்கள் ஆசிய நாடுகளின் பொருளாதாரத்தோடு பிணைந்த பின்பே ஏகாதிபத்திய எதிர்ப்பு குணத்தைப் பெறுகின்றன. இஸ்லாமிய இயக்கம்கள் என்பது ஆசிய,ஆபிரிக்க மக்களின் ஒரு பிரிவின் மேற்குலக எதிர்ப்பு இயக்கமாகும். 1990 முன்பு இந்த முஸ்லிம்அமைப்புக்ககள் அமெரிக்கக் கட்டுப்பாட்டுள் இருந்தன. கொம்யூனிச எதிர்ப்பும் உள்நாட்டில் ஜனநாயக எதிர்ப்பையும் சர்வாதிகார அரசியலையும் கொண்டிருந்தவையாகும். இன்று ஆசிய,ஆபிரிக்க எரிபொருள் வளம்களை காக்கும் இயக்கம்களாக உள்ளன. இந்த எழுச்சி தனி நாடுகளில் அல்ல ஒரு மில்லியாடனுக்கும் மேற்பட்ட மக்களின் இயக்கமாக உள்ளது. 3ம் உலக வளம்கள், தொழிற்துறை சார்ந்த போக்குகள் இதனால் பலமடைகின்றன. மேற்கு நாடுகள் எவ்வளவுக்கு கொடூரமான சக்திகளாகி மாறி யுத்தப் பயங்கரவாதம் செய்கின்றனவோ அந்த மட்டத்துக்கு இஸ்லாமிய இயக்கம்களும் கொடூரமாக மாறுகின்றன. இஸ்லாமிய இயக்கம்கள் ஜனநாயகம், மனித உரிமைகள் என்பவற்றைக் கண்டறியாத 3ம் உலக சமூகம்களில் இருந்து உருவானவை என்பதால் இனக்குழுத்தன்மை வாய்ந்த தீவிரமான குணாதிசயம்களை வெளிப்படுத்துகின்றன. இப்பிராந்தியம்களில் தொழி;ற்துறை முன்னேற்றம் வளரும்போது இஸ்லாமிய இயக்கம்கள் பலமிழக்கத் தொடங்கும் மேற்குலக ஆதிக்கம்கள் முஸ்லிம் நாடுகள் மேல் குறையக் குறைய இந்த இயக்கம்கள் ஏனைய முதலாளிய ஜனநாயக அமைப்புக்கட்கும் தொழிலாளர் அமைப்புகட்கும் வழிவிடவேண்டிய வரும்.


இங்கு நாவலன் இஸ்லாமிய அடிப்படைவாதம் பேசுகிறாரே ஒழிய கிறீஸ்தவ, பௌத்த,யூத அடிப்படைவாதம்களை அவர் பேசவில்லை. ஏகாதிபத்தியம்களை எதிர்க்கும் அமைப்புக்களை அது தற்காலிக இருப்பினும் கூட நாம் ஏகாதிபத்தியம்களோடு ஒன்று சேர எதிர்க்கக்கூடாது. பலம் பொருந்திய பிரதான எதிரிக்கு எதிராய்ப் போராடும் எமது பலமற்ற எதிரிகளை எதிர்ப்பதென்பது மேற்குலக ஒடுக்குமுறையாளர்களை ஆதரிப்பதில் தான் கொண்டு போய் விடும். இஸ்லாமிய அடிப்படை வாதம் என்ற கருதுகோளே மேற்குலக பிரச்சாரகர்களாக மாறுவது தான். இஸ்லாமிய அடிப்படைவாதத்தைப் பேசும் நாவலன் திபேத்திலும் பர்மாவிலும் உள்ள பௌத்த அடிப்படைவாதத்தைப் பேசவில்லை என்பது அவரது சிந்தனையொழுங்கு பற்றிய பிரச்னையாகின்றது. தலாய்லாமா, பின்லாடன் இருவருக்கும் உள்ள ஒற்றுமை மத அடிப்படைவாதம் என்றால் பின்லாடனின் மதவாதம் ஏகாதிபதி;திய எதிர்ப்புப் பண்புடையது என்பதுடன் மேற்குலக கூலியான தலாய் லாமாவை விட உயர்வானது.
‘இந்தியா போன்ற நாடுகளில் நிலப்பிரபுத்துவக் கட்டமைப்பு, வன்முறையால் அழிக்கப்பட்டது. தொழிற்புரட்சியின் ஆரம்பம் சிதைக்கப்பட்டது. அந்நிய மூலதனத்தால் நிரப்பப்பட்டது’என்று வரிசைப்படுத்துகின்றார் நாவலன்.


இங்கு மிகவும் மேலோட்டமானதும் எளிமைப்படுத்தப்பட்ட சுலோகம்களில் அவர் சிக்கியுள்ளதைக் காண்கின்றோம். இந்தியா மிகவும் மந்தகதிபடைத்த உலகின் பழமையான விவசாயப் பண்புகளையும் உற்பத்தி வடிவம்களையும் கொண்ட நாடாகும். பிரிட்டனின் வரவு என்பது இந்திய நிலப்பிரபுத்துவக் கட்டமைப்பை முழுமையாக அழிக்கவில்லை. அது மன்னர்களையும் ஜமீன்தார்களையும் கொண்டு அதை நிர்வகித்தது மறுபுறம் பல நூறு மக்கள் பிரிவுகள், இனக்குழுக்கள், மொழி மற்றும் பிரதேசப் பிரிவுகள் உடைய மக்களை ஒரே இந்தியாவாக பிரிட்டிஸ் இணைத்தது. ஒரே விதமான சட்டம், நிர்வாகம், கல்வி, சுகாதாரம், தெருக்கள், வாகனம், புகையிரதம் ஆகியவைகளைக் கொண்டு வந்தது. ஒரு மத்தியப்படுத்தப்பட்ட பலமான அரசை உருவாக்கியது. நாடு தழுவிய தொடர்பும் நாணயம், வரிமுறைகளையும் ஏற்படுத்தியது.; ஒரு புறம் பிரிட்டன் இந்தியாவின் பழைமையை அழித்தது. மறுபுறம் புதியதாக சமூக,பொருளியல் நிலைகளை உருவாக்க அது கட்டாயப்படுத்தப்பட்டது. ஆக்கலும் அழிவும் இணைந்தே நடந்தது. இந்தியாவில் பரவலாக நகரம்கள் உருவானது என்பது ஒரு குறிப்பிடத்தக்க தொழில் வளர்ச்சிவர்த்தகம் என்பன அல்லாமல் ஏற்பட்டிருக்கமுடியாது. இந்தியா கைப்பற்றப்பட்டுக் கொண்டிருந்தமைக்கு சற்று முன்பாகவே பிரிட்டனில் தொழி;ல்புரட்சி ஏற்பட்டு இருந்தன. பிரிட்டனின் இளம் முதலாளியம் பெரும் பேராசையுடன் கொலனிகளைச் சூறையாடியது மூலப்பொருட்களை ஏற்றுமதி செய்தது.பிரிட்டனில் இருந்து உற்பத்திப் பொருட்களை இறக்கி கொலனிகளில் விற்றது. இந்தியக் குடிசைக் கைத்தொழில் உட்பட சிறு தொழில்கள் இதனால் அழியத் தொடங்கியது. பிரிட்டனின் பெரும் துணி ஆலைகளைக் காக்க இந்தியாவில் பருத்தியைக் கொண்டு மிகச் சிறப்பாக நெய்யப்பட்ட மஸ்லின் துணிகளின் உற்பத்தியை அழிக்க இந்திய நெசவுத் தொழிலாளர்களின் பெருவிரல்கள் வெட்டுவது வரை பிரிட்டன் சென்றது. இந்திய தொழிற்துறை வளர்ச்சியை பிரிட்டனால் தாமதிக்கச் செய்ய மட்டுமே முடிந்தது. ஒரு தொழிற்துறை வல்லமை பெற்ற நாடாக இந்தியா உருவாகத் தேவையான சமூகத் தயாரிப்பு, இந்தியர் என்ற தேசிய உருவாக்கம் என்பன பிரிட்டிஸ் காலத்திலேயே உருவாகின்றது.


இந்தியாவானது பிரிட்டிஸ் காலத்தில் அந்நிய மூலதனத்தால் நிரப்பப்பட்டது என்ற நாவலனின் விளக்கமானது அவரின் புரிதல் சார்ந்த குழப்பத்துக்கு அடையாளம், பிரிட்டன் இந்தியா உட்பட கொலனிகளைக் கொள்ளையிட்டே தனது சொந்த மூலதனத் திரட்டலையும் பிரிட்டிஸின் தேசியப் பொருளாதாரம், தொழிற்துறைகளைக் கட்டிக்கொண்டது. மறுபுறம் இந்தியாவானது பிரிட்டிஸ்காலத்தில் தான் தொழில் மயமாக்கலுக்கு பயிற்றுவிக்கப்பட்டது. பிரிட்டன் இந்தியாவைக் கைப்பற்றாமல் இருந்திருந்தால் இந்தியா தொழில்மயமாக இன்னமும் நீண்டகாலம் தனது சொந்த வழியில் வளரவேண்டி வந்திருக்கும். முதலாம் இரண்டாம் உலக யுத்த சமயத்தில் பிரிட்டனில் பொருட்கள் உற்பத்தி செய்ய முடியாமையாலும் வி;லை அதிகமாக முடிந்தமையாலும் இந்தியாவிலும் பகுதியாக உற்பத்தி செய்தது. சில தொழிற்துறைகளை இந்தியாவுக்கு கொண்டு வந்தது. பிற்காலத்தில் மேற்கத்திய மூலதனம்கள் தேசிய எல்லைகளை மீறி வளரத் தொடங்கியபோது அவை இந்தியா உட்பட நம் உலக நாடுகளில் நுழைந்தன. ஆனால் இன்றைய உலக மயமாதலில் இந்திய மூலதனம் தனது தேசிய எல்லைகளையும் தாண்டிக்கொண்டு 3ம் உலக நாடுகளில் மட்டுமல்ல மேற்கு ஐரோப்பாவிலும் நுழைவதை நாவலன் காணவில்லை என்பது அவரது பிரதான குறைபாடாகும்.


இந்தியா, சீனா இரண்டும் 21ம் நூற்றாண்டுக்கான நாடுகள் என்று "Die Zeit" என்ற ஜெர்மனியப் பத்திரிகை எழுதுகின்றது. உலக மக்கள் தொகையில் 35 வீதமானவர்கள் இப்பிராந்தியத்தில் வாழ்கின்றார்கள் என்பதுடன் உலகின் மிகப் பெரிய உழைப்பாளர்களின் நாடுகளாக இப்பிரதேசம்கள் மாறிவிட்டன. ஆசிய அபிவிருத்தி வங்கியான "ADB" யின் தலைவர் Haruhiko Kuroda ஆசியாவுக்கான பொது நாணயம், வரித்தீர்வு என்பவை பற்றிப் பேசியுள்ளார். ஜப்பானிய Yen சீன Yuan தென்கொரிய Won , இந்திய ரூபாய் இவைகட்கு மாற்றான நாணயமொன்றைக் கொண்டு வரத்திட்டம் உள்ளது. உலகவங்கி, சர்வதேச நாணய வங்கி இவை ஆசியப் பிராந்தியத்தில் மட்டுமல்ல முழு 3ம் உலக நாடுகளிலும் சக்தியிழந்துவிட்டது. இலங்கை, பாகிஸ்தான், வங்காளதேசம், பூட்டான், நேபாளம், மாலைதீவு ஆகிய பகுதிகளில் மட்டுப்பட்டுக் கிடந்த இந்தியா இப்போ இந்தியத்துணைக்கண்ட எல்லைகளைக் கடந்து வெளியேறி உலகு தழுவிய சந்தை, மூலதனமிடல், தொழிற்துறைகளில் மேற்குலக நாடுகளின் பிரதான போட்டி நாடாகிவிட்டது. இந்தியா, பிறேசில், தென் ஆபிரிக்கா என்பன கூட்டாக "IBSA" என்ற சுதந்திர வர்த்தக வலயத்திட்டத்தை உருவாக்கியுள்ளன.பிறேசிலுடன் கூட்டாக "Icone" என்ற ஆய்வுத்திட்டத்தை தொடங்கியுள்ளது. உயிரணுத் தொழிநுட்பம், விண்வெளி ஆய்வு மற்றும் விமானத் தயாரிப்பு தொழிநுட்பம், அணுத்தொழில்துறை, மருந்துப் பொருட்கள் தயாரிப்பில் இவர்கள் ஆய்வு மற்றும் தயாரிப்புக்களில் ஈடுபட்டுள்ளன. இந்திய மருந்;துப்பொருள் தயாரிப்பு நிறுவனமான Ranbaxy பிறேசில் முதல் தென் ஆபிரிக்காக வரை நுழைந்துள்ளமையால் பாரம்பரியமான ஜெர்மனிய பிரிட்டிஸ் மருந்துப் பொருள் தயாரிப்பு நிறுவனம்கள் தமது சந்தைகளைப் பறி கொடுத்துள்ளன. மேற்குலகின் உயர்ந்த உற்பத்திச் செலவு அதிகவிலைகளுடன் உலக சந்தைகளில் இந்தியா, சீனா, பிறேசில் போன்ற நாடுகளுடன் மேற்கு நாடுகள் போட்டியிட முடியவில்லை.


பிரிட்டனிடமிருந்து Ford நிறுவனத்தால் வாங்கப்பட்ட Jaguar >land rover ஆகியவைகளை இந்திய Tata motors வாங்குகின்றது.இதேபோல் tata நிறுவனத்தின் துணை நிறுவனமான Tata steels பிரிட்டிஸ், நெதர்லாந்து ஆகிய நாடுகளின் உருக்கு இரும்புத் தயாரிப்பு நிறுவனமான Corus ஐ வாங்கியின் மூலம் உலகின் 5 வது பெரிய இரும்பு உருக்கு நிறுவனமாக மாறியுள்ளது. இதே நிறுவனம் சிங்கப்பூரின Natsteel தாய்லாந்தின் ; Millenium steel ஐ வாங்கியுள்ளது. இதன் மூலம் இத்தாலியின் Riva ஜெர்மனியின் Thyssen Krupp ஆகிய இரும்பு உருக்கு தயாரிப்பு நிறுவனங்களை முறையே 9 வது மற்றும் 10 வது இடத்துக்குத் தள்ளியுள்ளது. மற்றொரு இந்தியரின் நிறுவனமான Lakshmi Mittal தான் உலகின் மிகப் பெரும் இரும்பு உருக்கு தயாரிப்பு நிறுவனமாகும். இது அமெரிக்காவின் "Nucor"மற்றும் "USS" விடப் பெரியதாகும். லுக்சம்பேர்க்கின் "Arcelor" ஐ 2005 இல் 26 மில்லியாடன் டொலருக்கு வாங்கியதின் மூலம் இது சீனா முதல் மேற்கு நாடுகள் வரை ஆதிக்கம் செலுத்தும் நிறுவனம் ஆகிவிட்டது. பிரிட்டன், இந்தோனேசியா,ரூமேனியா, கசகஸ்தான் உட்பட பல நாடுகளில் தொழிற்சாலைகளைக் கொண்டுள்ளது. இந்த இந்து முதலாளி ரூமேனியத் தொழிலாளர்கட்கு கிறீஸ்தவ தேவாலயம் இலவசமாய்க் கட்டித் தருகின்றான். பிரிட்டிஸ் தொழிற்கட்சிக்கு நிதி தருகின்றான். Lakshmi Mittal க்குப் போட்டியாக வந்த மற்றைய இந்திய நிறுவனமான Tata இப்போ உலகில் 50 நாடுகளில் 96 நிறுவனம்களைக் கொண்டுள்ளது. இதில் 2,50,000 தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். இரும்பு, இயந்திரத் தொழில், இரசாயனம், நுகர்பொருள், எரிபொருள்,தொலைத்தொடர்பு, உட்பட பலதுறைகளில் இது உள்ளது. இத்தாலிய Fiat , ஸ்பெயினின் ; Hispano Carrocera ஆகிய வாகனத் தயாரிப்பு நிறுவனம்களில் Tata நிறுவனம் பங்குகளை வாங்கியுள்ளது. இது Tata Motors>Tata steel > Tata consultancy எனப் பல துணை நிறுவனம்களைக் கொண்டுள்ளது. Tata CTS தான் ஆசியாவிலேயே மிகப் பெரிய software தயாரிப்பு நிறுவனமாகும்.
இந்தியா தனது உற்பத்தியில் 40 வீதத்தை வெளிநாடுகட்கு ஏற்றுமதி செய்கிறது. இந்தியாவின் சீனாவுக்கான ஏற்றுமதி கடந்த 5 வருடத்தில் 12மடங்காக அதிகரித்துள்ளது. சீனாவின் Dong Fang>Changchun >FAW , போன்ற வாகனத் தயாரிப்பு போலவே இந்திய Ashok Leyland >Tata பெரிய வாகனத் தயாரிப்பில் இறங்கிவிட்டது. இந்திய கைத்தொலைபேசி நிறுவனமான Bahatri தென் ஆபிரிக்க கைத் தொலைபேசி நிறுவனமான MTN ஐ 62 மில்லியன் வாடிக்கையாளருடன் வாங்கியுள்ளது.


இந்திய "HAL" நிறுவனம் அமெரிக்காவின் "Bell" கெலிகொப்டர் உற்பத்தி நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் "Bell Texto407″ என்ற புதிய நவீன கெலிகளைத் தயாரிக்க உள்ளது. இதே சமயம் ஐரோப்பிய, "EADS"வுடன் இணைந்து இந்தியாவில் "Eurocopter" என்ற கெலிகொப்டர்களை தயாரிக்க ஒப்பந்தமாகியுள்ளது. பிரான்சின் ; Renault வாகனத் தயாரிப்பு நிறுவனம் இந்திய, M&M நிறுவனத்துடன் கூட்டாக வாகனத் தயாரிப்புத் திட்டம்.ஜெர்மனிய VW>BMW>, கார்த்தயாரிப்பு நிறுவனம்கள் இந்தியாவுள் நுழைவு. இந்தியாவானது உலகில் சீனாவுக்கு அடுத்து உலகின் மிகப் பெரிய தொழிலாளர்களைக் கொண்ட நாடாக வளர்கி;ன்றது. நவீன முதலாளியம் வளர்கின்றது என்றால் அதன் எதிர்விளைவாக தொழிற்துறைப் பாட்டாளி வர்க்கமும் இந்தியாவுள் உருவாகி வருகின்றது. 2010 ஆம் ஆண்டில் சீனாவில் 109 மில்லியன் தொழிற்துறைப் பாட்டாளிகள் இருப்பர் என்றால் இந்தியாவில் அது 80 மில்லியனாக இருக்கும் என்று மதிப்பீடுகள் காட்டுகின்றன. இந்தியாவில் சிறு தொழில் சிறு உற்பத்தி அழிகின்றது என்றால் பெரும் தொழிற்துறைக்கு வழிவிடவே இது நடைபெறுகின்றது. சிறுவிவசாயி, சிறு உற்பத்தியாளன், சிறுவர்த்தகர், சிறுகைத்தொழில் என்பன அழிபட்டே தீரும். சிறுவிவசாயிகள் நெசவாளர்கள் தற்கொலை செய்வது நடைபெறுகின்றது. இது முதலாளிய வளர்ச்சிப் போக்கின் விதியாகும். முன்பு வளர்ந்த மேற்கு நாடுகளிலும் இத்தகையவை நடந்தன. இறுதியாகச் சோசலிசம் வந்து முழு மக்களையும் விடுதலை செய்யும் வரை வர்க்க சமுதாயக் கட்டமைப்பைத் தகர்க்கும் வரை இந்த மனித அநீதிகளை நிறுத்த மார்க்கமில்லை. நாவலன் ஏனைய சமகால தமிழ்ப் பரப்பு சீர்திருத்தவாதப் போக்காளர்களைப் போலவே உலக மயமாக்கலுக்கு முந்திய மதிப்புக்களில் பின் தங்கிவிட்டனர். ஐரோப்பிய மையவாதப் போக்குகள் மேற்குலகே இன்னமும் 3ம் உலக நாடுகளைக் கட்டியவிழ்ப்பதான பழைய கருத்துக்களில் உறைந்து போயுள்ளனர். இன்றைய மேற்குலக வங்கி மற்றும் பெரு நிறுவனங்கள் சந்திக்கும் நெருக்கடிகள் 3ம் உலக நாடுகளையும் பின் தொடர்கின்றது. மேற்கு ஐரோப்பிய நாடுககும் ஐரோப்பாவும் தமது உலகார்ந்த முதன்மையிடத்தை இழந்து விட்டன. இந்த நாடுகளில் தொழிலாளர்களின் எழுச்சி, மக்கள் கிளர்ச்சிகட்கான காலம் அரும்பத் தொடங்கிவிட்டது. அதைக் காண நாம் அனைவரும் கட்டாயம் உயிருடன் இருப்போம். தமிழ்த்தேசியம் தமிழ்ஈழம் சமஸ்டி என்ற சகல வரலாறு கைவிட்ட போக்குகளை முழுமையாகத் தலை முழுகவும் வாழும் புகலிட நாடுகளின் மக்கள் கிளர்ச்சிகள், சோசலிசத்துக்கான உழைக்கும் மக்களின் முழக்கம்களில் கலக்கவும் காலம் கட்டளையிடும். இது தவிர்க்கமுடியாமல் நடக்கும் தப்ப முடியாமல் நாம் முகம் கொடுப்போம்.


3ம் உலக நாடுகள் எல்லாவற்றிலும் நிலப்பிரபுத்துவக் கட்டம் இருந்தது என்ற நாவலனின் கருத்தாவது, ஆபிரிக்கா மற்றும் அரபு நாடுகளில் கிட்டத்தட்ட நிலப்பிரபுத்துவம் நிலவவில்லை என்றே கொள்ளவேண்டும். ஆபிரிக்கா நிலப்பிரபுத்துவத்துக்கு முற்பட்ட இயற்கையுடன் இயைந்த வாழ்வு, வேட்டையாடல் சுயதேவைக்குப் பயிரிடல் என்பன நிலவியது. இங்கு நிலப்பிரபுத்துவம் இருக்கவில்லை. கொலனிக்காலத்திலேயே ஐரோப்பியர் பெரும் நிலப்பரப்பில் பயிர் செய்யத் தொடங்கினர். அரபு நாடுகளில் விவசாயம் பிரதான தொழிலாகவோ நிலம் அதிகாரத்துக்கானதாகவோ இருக்கவில்லை. அரபு மக்கள் மந்தை மேய்ப்பும் நாடோடிப் பண்புகளையும் கொண்டிருந்த மக்கள் நிலையான விவசாயம் செய்யத்தக்க நீர்வளமோ ஆறுகளோ அங்கு இல்லை.வாழக்கடினமான புவியியல் நிலையில் அவர்கள் இருந்தனர். இந்தியா, சீனா இடையேயான வர்த்தகம்களைக் கொள்ளையிடுபவர்களாகவும் அதன் பின்பு அவர்கள் வர்த்தகம் புரிபவர்களாகவும் ஒரு பகுதி மாறுகின்றது. வர்த்தகம் வளர்ந்த பின்பே அரபுக்களின் நாகரீகம் வளர்கின்றது. நாவலன் எழுந்தபாட்டுக்கு நிலப்பிரபுத்துவம் என்பதை பிரயோகிக்கப் பார்க்கின்றார்.

செவ்விந்தியர்கட்கோ ஆபிரிக்க மக்களினம்கட்கோ இதைப் பொருத்தமுடியாது. அவர்கள் இக்கட்;டத்தை வந்தடைய இன்னமும் காலம் இருந்தது. இவர்கள் நிலப்பிரபுத்துவத்துக்கு முந்திய இனக்குழுத்தன்மை படைத்தவர்களாக இருந்தனர். இந்த நாடுகளில் காலனி ஆதிக்கம் ஏற்பட்ட பின்னர் இவை அப்படியே கைப்பற்றி ஆளப்படவில்லை என்பதையும் புதிய சமூக பொருளியல் நிலைமைகட்கான அடித்தளம்கள் இடப்பட்டன என்பதையும் நாம் காணவேண்டும். நிர்வாக முறைகள், புதிய முதலாளிய பண்பாட்டின் தொடக்கம், சுதேசிய மொழிகள் பரவலாதல், எழுத்து வடிவம் பெறல், அச்சுக்கலை வளர்ச்சி என்பன தேசியம், முதலாளியம் என்பன வளர்வதற்கான தொடக்க நிலையாயின. மேற்கு நாடுகளின் மூலதன உருவாக்கம் என்பது அமெரிக்காவில் தங்கம், வெள்ளி கண்டுபிடிக்கப்பட்டமை இந்தியா, சீனா, ஆபிரிக்கா கைப்பற்றப்பட்டமையூடாகவே நடந்தது. தம் சொந்த நாட்டுள் பெறப்பட்ட செல்வம் மூலப்பொருள், சந்தையுள் அவை தங்கியிருக்கவில்லை. குடியேற்ற நாடுகளுடன் வரியற்ற வர்த்தகம், சமமற்ற பொருளாதார கொடுக்கல் வாங்கல்கள் நிலவின.


‘உலக மயமாக்கலை விளக்க வந்த நாவலன், மலிவான உழைப்பு, மூலதனம், எரிபொருள், சந்தைதேடி ஏகாதிபதி;தியங்கள் 3ம் உலக நாடுகட்கு வந்தன’என்கிறார


உலக மயமாதல் என்பது ஏகாதிபத்திய பொருளாதார சகாப்தத்தில் தவி;ர்க்கமுடியாத கட்டமாகும். ஏகாதிபத்தியம்கள், உலகமயமாதலுக்கு முன்பே 3ம் உலக நாடுகளின் மலிவான உழைப்பு, மூலவளம், எரிபொருள், சந்தை என்பனவற்றை தடையின்றி பெற்று வந்தன. ஆனால் உலக மயமாதலின் விளைவாக மேற்கத்தைய தொழிநுட்பங்கள் நவீன உற்பத்தி முறைகள் கீழைநாடுகட்கு பரவியுள்ளமையும் சொந்த உற்பத்தி ஆற்றலையும் தம் கண்டம் தழுவிய சொந்தமூலதன பலத்தைப் பெற்றமையும் நாவலனுக்கு புலப்படவில்லை. ஆசியாவில் சீனா, இந்தியா, வியட்நாம், இந்தோனேசியா, மலேசியா என்று பல தொகை நாடுகள் பொருளாதார பலத்தை பெறத் தொடங்கி விட்டன. உதாரணமாக சீனாவானது 1978 இல் உலக ஏற்றுமதியில் 0.8வீத கொண்டிருந்தது. இது 2006 இல் 20 வீதமாக வளர்ந்தது.2005இலேயே சீனாவின் பொருளாதாரம் பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளின் பொருளாதாரத்தைத் தாண்டி வளர்ந்தது. உலகில் 4 வது இடத்தை வகித்தது. 2008 இன் முடிவில் சீனாவின் பொருளாதாரம் உற்பத்தி ஆற்றல் அமெரிக்க,ஐரோப்பிய நாடுனகளை முந்தி முதல் இடத்தைப் பெற்றுவிடும் என்று மேற்கத்தைய முதலாளித்துவப் பொருளாதாரவாதிகளே ஒப்புக் கொள்கின்றனர். உலக மயமாதலில் வளர்ச்சிக்கு ஐம்பது நூறு ஆண்டுகள் எனத் தேவைப்படவில்லை. பிரிட்டிஸ் பொருளாதார வளர்ச்சி இரண்டு மடங்காக அதிகரிக்க 58 வருடங்கள் எடுத்தது. அமெரிக்கப் பொருளாதாரமானது இரு மடங்காய் ஆக 47 வருடங்கள் தேவைப்பட்டது. ஆனால் சீனப் பொருளாதாரம் 9 வருடத்துக்குள் இரண்டு மடங்கால் வளர்ந்தது. 2000 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட மதிப்பீட்டில் 4 வருடங்களில் கிராமங்களில் இருந்து 70 மில்லியன் மக்கள் நகரம்களில் குடியேறினர். 2005 ல் மட்டும் 147 மில்லியன் மக்கள் நகரம்கட்கு வேலை தேடி வந்தனர். இப்போது வருடாவருடம் 60 மி;ல்லியன் மக்கள் வேலைதேடிச் சீனப் பெரு நகரம்கட்கு வருகின்றார்கள். 2000 ஆண்டில் 562 ஆக இருந்த சீன நகரம்களின் தொகை 2006 இல் 688 ஆக ஆகியுள்ளது.


schanghai>Peking>Chongqing போன்ற பெரு நகரம்கள் மேற்குலகின் லண்டன், பாரிஸ், பெர்லின், பிராங்பேர்ட், நியூயோர்க் போன்ற நகரம்களை சிறு பட்டினம்களாக மாற்றிவிட்டது. சீனக் கிராமங்களில் இருந்து வந்த விவசாயிகள் சீனாவின் பெரு நகரம்களில் உலகின் மிகப் பெரிய உழைப்பாளர்களின் பெரும்படையை உற்பத்தி செய்துவிட்டார்கள். பெரியபாட்டாளி வர்கக்ம் படைக்கப்பட்டுள்ளது என்பது உலக மயமாதலின் சோசலிசம் சார்பான எதிர்வினையாகும். மேற்குலக வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் சீனாவுள் நுழைந்த போதும் அதற்கான தொழிநுட்பம் மூலதனமிடலில் முழு அதிகாரம் பெற்றிருக்கவில்லை. Ford,Benz,Bmw,Vw என்பன இன்று சீனத் தொழிற்சாலைகளில் உற்பத்தியாகி சீன மூலதனம் – சந்தை நலன்கட்கு கட்டுப்பட்டே வெளி வருகின்றன. ஜெர்மனியின் பயணிகள் பஸ்சான "Man"இன் "Neoplan starliner"விலை 350,000 Euro ஆகும். இதே தரம் மாதிரியில் சீன உற்பத்தியான "Zonda A9" 100>000 euro விலையில் முழு ஆசிய ஆபிரிக்க அரபு நாட்டுச் சந்தைகளில் நுழைந்துவிட்டது.. Benz இன் Smartஐ சீனா IAAபெயரில் மிக மலிவாகத் தயாரிக்கின்றது. சீன Mokick நிறுவனம் "Mad Ass" மோட்டார் சைக்கிளைத் தயாரித்து 2,000 Euro விலைக்கு ஜெர்மனியச் சந்தைக்கு கொண்டு வந்துள்ளது. சீன வாகன, உற்பத்தியால் மட்டும் ஜெர்மனிக்கு வருடாவருடம் 30 மில்pலியன் யூறோ நட்டம் ஜெர்மனி தயாரிக்கும் அதே பொருட்களை சீனா உற்பத்தி செய்யத் தொடங்கியமை காரணமாக 2006 இல் மட்டும் ஜெர்மனியில் 70,000 வேலை இடங்கள் இழக்கப்பட்டது. இது 2005 ஐ விட 5 மடங்கால் அதிகம்.


வாகனம் , விமானம், ஆயுதம், எலக்ரோனிக், மருந்துப் பொருள்,மருந்துஉhகரணங்கள். விளையாட்டு,மற்றும் தோல்பொருட்கள், ஆடையணிகள் என்பனவற்றுடன் அணு மற்றும் உயிரணுத் தொழிநுட்பம் விண்வெளி ஆய்வு மற்றும் விமானத் தொழிற்துறைகளையும் சீனா பெற்றுவிட்டது. இன்று உலகின் மிகப் பெரும் நிலக்கரி உற்பத்தி நாடும் சீனா தான்.எண்ணை எரிசக்திக்கு மாற்றான சக்திகளைப் பெற சூரிய ஒளி, காற்று,நீர்,கடலலை, உயிரியல் வாயுக்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தும் துறைகளையும் அவர்கள் வளர்த்துள்ளனர். 2006 இல் சீனாவானது 103 மில்லியாடன் யூறோக்களை புதிய ஆய்வுகட்கு மட்டும் ஒதுக்கியுள்ளது. நாடு முழுவதும் பாதைகள், பெருந்தெருக்கள்,பாலம்கள்,ரெயில்பாதைகள், புதிய விமான நிலையங்கள் பெருகி மக்களிடையேயான தொடர்புகளும் பரிவர்த்தனைகளும் அதிகரிக்கின்றது. 2005 இல் சீனாவில் 1926 தினசரிப் பத்திரிகைகள் 9500 சஞ்சிகைகள், 273 வானொலிகள், 302 தொலைக்காட்சிச் சேவைகள் இருந்தது.ஐரோப்பிய நாடுகளின் சந்தைகள் சீனப் பொருட்களால் நிரம்பியுள்ளது. ஜெர்மனியில் 40 வீத கொம்பியூட்டர் ,எலக்ரோனிக் பொருட்கள் சீன இறக்குமதியாகும். 2008 இல் சீனாவின் ஜெர்மனிக்கான ஏற்றுமதி 2007ஐ விட 20 வீத அதிகரிப்பு கைத்தொலைபேசி,கம்பியூட்டர், தொலைக்காட்சி, பொழுதுபோக்கு ,எலக்ரோனிக் பொருட்கள், மருந்துவகை, மருத்துவ உபகரணங்கள், இரசாயனப் பொருட்கள், ஆடை வகைகள், விளையாட்டுப் பொருள், தோல்ப்பொருள், உணவுப்பொருள், வீட்டுத் தளபாடங்கள் என்பன பெரும்பகுதி சீனாவில் இருந்தே ஜெர்மனிக்குள் இறக்குமதியாகின்றது. 10 வருடம் முன்பு இந்தப் பொருட்களை பெரும் பகுதியாக வெளிநாடுகட்கு ஏற்றுமதி செய்த நாடாக ஜெர்மனி இருந்தது. மேற்குலக நாடுகளுக்கு பொருட்களை மலிவாகத் தயாரிக்க முடியவில்லை. உற்பத்திச் செலவு அதிகம், மூலப்பொருள் இறக்குமதியில் தங்கிய நாடுகள் இவை. சீனாவில் ஒரு மணி நேர ஊழியம்0.70 சென்ட்களாகும். இது ஜெர்மனியியல் மணிக்கு 27 யூறோவாகும். இதனால் சீனாவுடன் உலகச் சந்தையில் மேற்கு நாடுகளால் போட்டியிட முடியவில்லை.


2007 இல் சீனாவின் அரசநிதி இருப்பு 1.2 பில்லியன் டொலர்களாக இருந்தது 2008 இல் இது 2 பில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளது.இதேசமயம் முழு ஐரோப்பியக் கூட்டமைப்பு நாடுகளின் மொத்த நிதி இருப்பு 200 மில்லியாடன் டொலர்களாகும். அதாவது சீனா ஐரோப்பியக் கூட்டமைப்பு நாடுகளை விட கிட்டத்தட்ட 10 மடங்கு அதிகமான அரச நிதியிருப்பைக் கொண்டுள்ளது என்று மாக்சியவாதியும் சமூக ஆய்வியல் அறிஞருமானOskar Negt 2007 இல் எழுதிய சீனாவின் வளர்ச்சி பற்றிய "Modernisierung im zeichen der drachen china und der Europaische Mythos der Moderne"நூலில் குறிப்பிட்டுள்ளார்.அமெரிக்க, மேற்கு ஐரோப்பிய நாடுகட்கு வெளியேயான ஆசிய,லத்தீன் அமெரிக்க நாடுகளின் வளர்ச்சிகளை நாவலன் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. அவர் 1990 களில் உலக மயமாதலுக்கு முன்பான இடதுசாரி பார்வையை சுமந்து கொண்டிருப்பதுடன் உலக மயமாகும் பொருளாதாரத்தை அரசியல் நிகழ்வுப் போக்கின் உள்ளார்ந்த விளைவுகளை படித்தறியத் தவறினார். 1947 இல் ; Harry.S.Truman மார்சல் திட்டத்தைக் கொண்டு வந்து இரண்டாம் உலக யுத்தத்தால் நாசமறுந்து கிடந்த ஐரோப்பிய முதலாளித்துவ நாடுகளைத் தற்;காலிகமாகக் காத்தனர். இதன் உலக சோசலிசத்தை நோக்கி இந்த நாடுகள் செல்லாமல் செயற்கையாகத் தடுக்கப்பட்டது. ஆனால் இன்றைய உலக மயமாதலின் பின்பு அமெரிக்காவிடமோ மேற்கு ஐரோப்பிய ஏகாதிபத்தியம்களிடமோ ஒருவரை ஒருவர் காக்கும் சக்தி கிடையாது. ஆசிய, லத்தீன் அமெரிக்க தொழிற்துறையும் மூலதனமும் உலக மூலதனத்தினதும் தொழிற்துறையினதும் தவிர்க்கமுடியாத பிரிவு என்ற போதும் மேற்குலக நாடுகள் தமது முதன்மை இடத்தை இழந்து விட்டன. அமெரிக்காவுக்கும் மேற்கு ஐரோப்பாவுக்கும் வெளியே புதிய 100 க்கும் மேற்பட்ட உலகப் பெரு நிறுவனங்கள் தோன்றிவிட்டன என்று அமெரிக்காவில் உள்ள பெரு நிறுவனங்கட்கான ஆலோசனை அமைப்பான Boston Conating Grop (BCG) மதிப்பிட்டுள்ளது. இந்திய Tata > suzlon Energy> ,சீனக்காகிதப் பொருள் உற்பத்தி நிறுவனமான "Nine Dragons Paper" மெக்சிக்கோவின் Grupo Bimbo பிறேசிலின் Marcopolo என்று பல நிறுவனம்கள் மேற்குலக நிறுவனம்களின் தனிமுதல் இடத்தை கைப்பற்றிவிட்டன. மேற்கைரோப்பிய நாடுகளின் பாரம்பரிய வைன் உற்பத்திக்கு கூடப் போட்டியாக லத்தீன் அமெரிக்கா, கிழக்கு ஐரோப்பிய நாடுகள், அவுஸ்திரேலியா, தென்ஆபிரிக்கா போன்ற நாடுகள் வந்துவிட்டன. ஐரோப்பியக் கூட்டமைப்பு நாடுகளில் 3.4 மில்லியன் கெக்டர் நிலத்தில் பயிராகும் வைன் இதனால் தேக்கத்துக்கும் விலை வீழ்ச்சிக்கும் உள்ளாகியுள்ளது.வருடம் 1.5 மில்லியன் லீட்டர் வைன் விற்பனை செய்ய முடியாமல் தேங்கிக் கிடக்கின்றது. ஐரோப்பிய வாழ்க்கைத் தரத்தில் ஏற்பட்டுள்ள பெரும் வீழ்ச்சி வைன் நுகர்வைப் பாதித்துள்ளது என்பதுடன் உலக மயமாதலின் சுதந்திரமான முதலாளித்துவ சந்தைச் செயற்பாட்டில் மேற்கு ஐரோப்பிய நாட்டு வைன் உற்பத்தியாளர்கட்கு அரச மானியம் வழங்கியும் கூட அவர்களைக் காப்பாற்ற முடியவில்லை.


எரிபொருள் மற்றும் மூல வளங்கள் ஏகாதிபத்திய கட்டுள் இருப்பதாக நாவலனின் பார்வையும் இன்றைய நிலைமைகளை அவரால் உய்த்துணர முடியவில்லை என்பதற்கு நிரூபணமாகின்றது. முதலில் எரிபொருள் பிரச்னையை நாம் விளங்க முற்படால். 1910 இல் உலகில் 34.12 மில்லியன் தொன் நிலக்கரி வருடம் பாவிக்கப்பட்டது. அப்போது ஐரோப்பிய நாடுகள் நிலக்கரியுள்ள பிரதேசங்களை தமது கட்டு;ப்பாட்டுள் கொண்டு வர தம்மிடையே போர் செய்தன. ஆனால் இன்றைய உலக மயமாகிய பொருளாதாரத்தின் எரிபொருள் பசியானது பிரமாண்டமானது. உலக மனிதர்கட்கு இன்று 100 மில்லியன் தொன் எண்ணெய் தேவை என்பதுடன் எரிவாயு, சூரியசக்தி, நீர், அணு, நிலக்கரி உயிரியல் வாயு, கடல் அலைகள் ஊடாகக் கூடச் சக்தி பெறும் காலமிதுவாகும். மேற்கு நாடுகளில் மட்டுமல்ல ஆசிய லத்தீன் அமெரிக்க நாடுகளில் உள்ள செல்வந்தர்கள், நடுத்தரவர்க்கம் மட்டுமல்ல தொழிற்துறை வளர்ச்சியடைந்து வரும் இந்த நாடுகளில் பெரும் பகுதி மக்கள் காலைக்கடன், குளிப்பு, சுடுநீர்ப்பாவனை, வீட்டை வெப்பமூட்ட கோப்பு, தேநீர், உணவு தயாரிப்பு, குளிர்சாதனப் பெட்டி, தொலைக்காட்சி, கொம்பியூட்டர், பொழுதுபோக்கு, எலக்ரொனிக் பொருட்கள், கார்,விமானப்பயணம், சுற்றுலா சகலத்திற்கும் இன்று எரிசக்தி தேவை. தொழிற்துறை வளர வளர விஞ்ஞானமும் வாழ்க்கைத் தரமும் உயர உயர இதன் தேவை உயர்ந்து வருகின்றது. எனவே உலக வளம்கள் சரியாகப் பங்கிடப்படாத முதலாளிய அமைப்பில் இதைப் பெறுவதற்கான போராட்டமும் மூர்க்கமாக மாறிவிட்டது. ஜெர்மனியில் ஒரு மனிதருக்கு அவர் வாழ்நாளில் தலைக்கு 225 தொன் நிலக்கரி 116 தொன் எண்ணெய் மற்றம் அது சார்ந்த பொருட்கள் 40 தொன் இரும்பு, 1.1 தொன் செம்பு 200 கிலோ ளுஉறநகநட தேவை.ஆனால் இப்போ உலக மயமாதலின் பின்பு மேற்குலக மனிதர்களின் வாழ்க்கைத் தரம் நுகர்வு இரண்டும் புதிய போட்டியாளர்கள் 3ம் உலக நாடுகள் படைக்கப்பட்டு விட்டனர். தமது வளர்ச்சிக்கு ஏற்ற பங்குகளையும் பொருளாதார உரிமைகளையும் கோரத் தொடங்கி விட்டனர். மூலப் பொருட்கள், சந்தைக்கான போட்டி என்பது மேற்குலக நாடுகளிடையே என்பது மாறி 3ம் உலக நாடுகளுடனான மேற்குலகப் போட்டிகளாகிவிட்டது. மேற்குலக ஏகாதிபத்தியம்கள் தமது 400 ஆண்டு கால உலக வரலாற்றின் பொருளாதார, இராணுவ மேன்நிலையை இப்போ இழக்கத் தொடங்கிவிட்டன இதைத் தான் நாவலன் காணத் தவறிப் போனார்.
மேற்குலக எரிபொருள் நிறுவனம்களானBP,Exxom,MobilChevron,Taxaco,Gulf,Shell போன்ற உலகு தழுவிய நிறுவனம்களே மேற்குலக அரசியலை நிர்ணயித்தன.


நினைத்தபோது இந்த நாடுகளை போர் செய்ய வைத்தன. இப்போ கிழக்கு ஐரோப்பா முதல் 3ம் உலக நாடுகள் வரை புதிய உலகப் போட்டியாளர்கள் வந்துவிட்டனர். ரஸ்சிய-Gasprom,சீன CNPL , ஈரானின் NIOC , வெனிசூலாவின் ; PDVSA , பிறேசிலின்PETROBAS , மலேசிய PETRONAS என்பன தோன்றி விட்டன. முன்பு இப்பிரதேச எண்ணெய் வளம்களும் எண்ணெய் இருப்பும் உள்ள நாடுகள் மேற்குலகத்துக்கு வெளியே உருவாகி வளர்கின்றன. எண்ணை வர்த்தகமென்பது பாரம்பரியமாக அமெரிக்க நாணயமான டொலரில் நடைபெற்ற ஒன்றாகும்.இப்போது ஈரான் தொடக்கம் லத்தீன் அமெரிக்க நாடுகள் வரை யூறோ முதல் தமது சொந்த நாணயம்களில் எண்ணை வர்;த்தகத்துக்கு வரத் தொடங்கியுள்ளன. டொலரின் வீழ்ச்சி, மேற்குலக நாடுகளின் கார்கட்கு குறைந்த விலையில் எரிபொள் தர முடியாமை என்பன அவர்களின் வாகன உற்பத்தி நிறுவனம்களை நட்டம் ஆள்குறைப்புக்கும் தள்ளிவிட்டுள்ளது. மத்திய கிழக்கு , வட ஆபிரிக்க நாடுகளில் 798 மில்லியாடன் பெரல் எண்ணை இருப்பு உண்டு. ஆனால் இந்த நாடுகள் மேற்குலக எதிர்ப்புக்கும் இஸ்லாமிய ஆதரவுக்கும் வந்துவிட்டதுடன் தமது எரிபொருளுக்கான சந்தையை சீனா, இந்தியா, ஜப்பான், தென் கொரியா உட்பட ஆசிய நாடுகளில் பெற்று விட்டன. உலகப் பயங்கரவாத எதி;ர்ப்புப் போhர் என்ற இஸ்லாமுக்கு எதிரான ஏகாதிபத்திய யுத்தப் பயங்கரவாதம் இந்த நாட்டு மக்களை ஏகாதிபத்திய எதிர்ப்புப் பக்கம் வரப் பண்ணியுள்ளது. உண்மையில் ஈராக் யுத்தம் என்பது இந்தியா, சீனா உட்பட வளரும் ஆசிய நாடுகளிடமிருந்து மத்திய கிழக்கு எண்ணை வளத்தைக் காக்கும் முதல் முயற்சியாகும். புஸ்ஸின் பொருளாதார ஆலோசகரான lawrence Lindsey ஈராக்கிய யுத்தம் தொடங்கியபோது ‘ஈராக்கில் ஏற்படும் ஒரு அரசுமாற்றம் தினசரி 3 முதல் 5 மில்லியன் பெரல் எரிபொருளை அமெரிக்காவுக்கு கொண்டு வரும்’என்றார். உப ஜனாதிபதி Richard Cheney வெளிநாட்டு அமைச்சர் Condellezza Rice இருவரும் முறையே "Hailliburton" ,"Chevorn"போன்ற அமெரிக்க எரிபொருள் நிறுவனம்களைச் சேர்ந்தவர்களாவர்.ஆனால் மேற்கு நாடுகள் முன்பு போல் உலக எரிபொருள் வளம்களை தனியே அனுபவிக்கமுடியாது தனிஆளுமை செய்த காலம் போய்விட்டது. வடகடலில் பிரிட்டன் நோர்வேக்கு உள்ள எண்ணை வளம் கடந்த 5 வருடத்தில் 20 வீத ஆல் வீழ்ச்சியடைந்துள்ளது. 2007 இல் உலகில் 435 அணுஉலைகள் இருந்தன. 29 புதிதாகக் கட்டப்பட்டு வந்தது 64.புதி;தாகக் கட்டத் திட்டமிடப்பட்டது. இதில் வட தென் அமெரிக்க நாடுகளில் 127 இருந்தது. 5 புதிதாகத் திட்டமிடப்பட்டது. ஐரோப்பாவில் 130 இருந்தது. 2 கட்டப்பட்டது. 1 திட்டமிடப்பட்டது. ஆனால் ஆசியாவில் 110 அணுஉலைகள் உள்ளது. 19 புதியதாகக் கட்டப்பட்டது. 43 கட்டத் திட்டமிடப்பட்டது. இது அணுசக்தி உற்பத்தியின் தீவிர வளர்ச்சியைக் காட்டியது.


3ம் உலக நாட்ட வளர்ச்சியினையடுத்து தங்கம், வெள்ளி, Platin உற்பத்தி இரண்டு மடங்காய் அதிகரித்தது. கணனியின் ; Chips க்கு Silizium மும் காரின் புகையில் உள்ள காபனீரொக்சைட்டைக் கட்டுப்படுத்தும் Kataly sator தயாரிப்புக்கு Platinஅல்லது Palladium தேவை.நவீன Digital தொழிநுட்பத்துக்கு கடும் பாவனைகளுடனும் எண்ணை, நிலக்கரி, நிலவாயு நுகர்வும் தொடர்புடையதாகும். ஆபிரிக்காவில் இப்போ அதிக யுத்தம்கள் நடைபெறுவதற்கான காரணம் மேற்குலக நாடுகள் இந்தியா, சீனா, தென்கொரியா, ஜப்பான், பிறேசில் ஆகிய நாடுகளிடம் ஆபிரிக்காவை இழந்து கொண்டு இருப்பதாகும். ஆபிரிக்கக் கண்டத்தல் எண்ணை, எரிவாயு மட்டுமல்ல தங்கம்,வெள்ளி Platin,செம்பு, உரான், பொஸ்பரஸ், இரும்பு,அயடயதெயஇடீயரஒiஇமுழடியடவஇஉழடவயn என்பன உண்டு. ஊழடவயn கைத்தொலைபேசித் தயாரிப்புக்கு முக்கியமானது. இதன் விலை வெள்ளியை விட அதிகமாகும். கொங்கோவில் உள்ள malanja,Bauxi,Kobalt,coltan வளம்களை தொடர்ந்து பாதுகாக்கவே மேற்குநாடுகள் உள்நாட்டு யுத்தத்தை தொடங்கி வைத்தன. ஆயுதக்குழுக்களை பயிற்றுவித்து போரில் இறக்கியுள்ளன.சிம்பாவேயில் முகாபே அரசுக்கு எதிராக மேற்குநாடுகள்எதிரணியான MDC" க்கு நிதிதந்து ஆதரிக்கின்றன சிம்பாவேயில்உள்ள Platin. . இரத்தினக்கற்கள்உட்படவளம்கள் மேற்குநாடுகளிடமிருந்து சீனாவின் கைகளுக்கு மாறியமையே இதற்குக் காரணமாகும்.


உலகின் 90வீத Platinஆபிரிக்காவிலேயே உள்ளது.கொங்கோவில் மட்டும் உலகின் 40வீத Phosphat வளம் உள்ளது.1999க்கும் 2006 இடையில் சீன- ஆபிரிக்க வர்த்தகம் 20 மடங்கால் 35 மில்லியாடன் டொலர்களாக அதிகரித்தது.அங்கோலா,நைஜீரியா,சிம்பாப்வே, தென்ஆபிரிக்கா எங்கும் சீனாவின் மிகப் பெரும் முதலீடுகள்இடப்பட்டது அங்கோவில் மாத்திரம் 10 மில்லியாடன் டொலர்களை சீனா முதலிட்டுள்ளது. அங்கோலா 2007 இல் 10 வீத வளர்ச்சியை எட்டியது. 2008 இல் 20 வீத வளர்ச்சி பெற்றுள்ளது.அதன் எரிபொருள் வளங்கள் சீனாவுக்கு பெரும்பகுதியாய் செய்கிறது.ஆபிரிக்காக வரலாற்றில் முதன் முறையாக உள்நாட்டு யுத்தம்களையும் மீறி வளரவும் முயல்கின்றது. அங்கோலா ஆபிரிக்காவில் மிகவும் வேகமாக வளரும் நாடாகும் செய்தித் தொடர்பு, போக்குவரத்து, மருத்துவம், கல்வி, தொழிற்துறை என்பனவற்றுக்கு அது 10 மில்லியாடன் டொலர்களை முதலிட்டுள்ளது. சீன அரசு, நிறுவனமான China Road & bridgecorp அங்கோலா, சூடான், நமீபியா, மாலி, உகண்டா, சியராலியோன் ஆகிய நாடுகளிலும் பாலங்கள், தெருக்கள் என்பவற்றை அமைக்கின்றது. சீன, இந்திய , தென்கொரிய நிறுவனம்கள் ஆபிரிக்கா எங்கும் துறைமுகம்கள், விமான நிலையங்கள், அரச கட்டிடங்கள்,விளையாட்டரங்குகள்,புகையிரதப் பாதைகள், தொழிற்சாலைகள், கழிவுநீர் வாய்க்கால்கள் என்பனவற்றை அமைக்கின்றன. அங்கோலாவில் எண்ணை, இரும்பு,காதிகம் சீமெந்து தொழி;ற்சாலைகளை சீனா அமைக்கின்றது. அதன் அண்டை நாடுகளுடனான தெருக்கள், புகையிரதப் பாதைகள், தொலைத் தொடர்புகள், ஆபிரிக்கா 2005 இல் 5 வீத வளர்ச்சி, கடந்த 15 வருடத்தில் இல்லாத குறைவான பணவீக்கம் ஆபிரிக்க எயிட்ஸ், பட்டினி, உள்நாட்டு யுத்தம், குழந்தை மரணம்கள் இவைகளால் மட்டுமே நிரப்pபிக் கிடப்பதான பழைய மேற்குலகப் பார்வையை நாம் விலக்கிப் பார்த்தால் ஆபிரிக்கா முதலாளித்துவப் பாதையிலான வளர்ச்சியை பெறத் தொடங்கிவிட்டது. நைஜீரியா 6.5மூ,கானா5.8மூ,சூடான்8மூ,கென்யா6.5மூ,தான்சானியா 6.9மூ, சிம்பாப்வே6.5மூ, தென் ஆபிரிக்கா 4.8மூ என்று வளர்ச்சியைக் காட்டுகின்றன.சூடான், சிம்பாப்வே, தென்ஆபிரிக்கா, நைஜீரியா உட்பட ஆபிரிக்க நாடுகட்கு எதிரான மேற்குலகின் கடும் பிரச்சாரம் மனித உரிமைகள் பற்றிய அலறல்களை இந்தப் புலத்திலேயே காணவேண்டும்.


‘ஆபிரிக்க யூனியன்’ என்ற அமைப்புடன் தற்போது தென்ஆபிரிக்கா, நமீபியா உட்படப் பல நாடுகள் ஒருங்கிணைந்து "Sach" என்ற பொதுஅமைப்பை உருவாக்கியுள்ளன.2010 இல் சீனாவுடனான ஆபிரிக்க நாட்டு வர்த்தகம் 100 மில்லியாடன் டொலர்களைத் தாண்டி விடும் என்று மதிப்பிடப்படுகின்றது. தென் ஆபிரிக்கத் துறைமுகம்களான Durban,east London,Port Elizabeth இருந்து சீனாவுக்கு இரும்பு, நிலக்கரி, Platin ஏற்றிச் செல்லும் கப்பல்கள் தொகை அதிகரித்து விட்டது. 1000 க்கு மேற்பட்ட சீன நிறுவனங்கள் ஆபிரிக்காவில் உள்ளது. கடந்த 7 வருடத்தில் 750,000 சீனர்கள் ஆபிரிக்க நாடுகளுக்கு சென்றுள்ளனர். இவர்கள் சீன நிறுவன நிபுணர்கள், நிர்வாகிகள், தொழிலாளர்கள் ஆக இவர்;கள் பணிபுரிகின்றனர். இவர்கட்கான கடைகள் சீன உணவு பகுதிகள், வீடுகள் எழுகின்றன. சீன உயர்நிர்வாகிகட்காக ஆடம்பரமாளிகைகள்,சீன மருத்துவர்கள் நுளம்புகளை சமாளிக்க வல்ல வலைகள், குளிரூட்டப்பட்ட வசதிகள், டேபிள் டெனிஸ் விளையாட்டு என்பனவும் ஆபிரிக்கக் கண்டத்தில் நுழைந்துள்ளது. சீன- ஆடைகள், தொலைக்காட்சி, கொம்பியூட்டர், குளிர்சாதனப் பெட்டி, கைத்தொலைபேசி, மோட்டார் சைக்கிள், ஆடம்பர பஸ்கள், எலக்ரோனிக் பொருட்கள், ஆயுதம்கள், விமானம்கள், உணவுப் பொருட்கள்,குண்டுதுளைக்காத வாகனங்கள் என்பன மேற்குலக உற்பத்திகளை விட மிகவும் மலிவாக ஆபிரிக்கச் சந்தைக்குள் வந்துள்ளது. சீன ஊடகவியலாளர்கள் தென்ஆபிரிக்கா, அங்கோலா, நைஜீரியா, கானா, கென்யா, உட்பட பல நாடுகளில் நிரந்தரமாக உள்ளனர். ஆசிய நாடுகள் ஆபிரிக்க வளம்கள், மற்றும் அரசியல் போக்குகளில் முக்கியத்துவம் பெற்று விட்டன. சீனாவுக்கான மூன்றிலொரு பகுதி எண்ணை ஆபிரிக்காவிலிருந்தே வருகின்றது. சூடானின் 25மூ எண்ணைவளம் உட்பட ஆபிரிக்க எண்ணைவளம்கள் சீனாவின் Petrochia மற்றும் "Cnool" என்பனவற்றிடம் உள்ளது. 40மூசீனாவின் எரிவாயு ஆபிரிக்காவிலிருந்து தான் வருகின்றது. இந்திய எரிபொருள் நிறுவனமான "Onel"ஆபிரிக்காவில் உள்ளது.


சீனாவுடன் இந்தியக் கூட்டு மட்டுமல்ல, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ, இலங்கை,தாய்வான், தாய்லாந்து, மலேசியா,இந்தோனேசியா,வியட்நாம், கம்பூச்சியா, லாவோஸ் என்பன ஒரே நிதி மற்றும் பொருளியல் கூட்டுள் வந்துள்ளன. தென் சீன நகரான kunmiing இல் இருந்து லாவோஸ்,கம்பூச்சியாவின் துறைமுகமான Sihanouk ville தொடர்புடன் தாய்லாந்துக் குடாக்கடல்வரை சீனா 2,000 கிலோ மீற்றர் வரை பாதை அமைக்கிறது. இந்த நாடுகளில் பெரும் பொருளாதார முதலீடுகள் செய்கிறது பர்மா,வடகொரியா சகல இடமும் சீன மூலதனம் பரவுகின்றது. ஆசிய நாடுகள் உலக வங்கி, ஐஎம்எவ், இடம் கடன் பெற்ற காலம் போய்விட்டது. சீன மூலதனம் தொழிற்துறைகள் இப்பகுதிகளைக் கட்டுப்படுத்தத் தொடங்கிவிட்டது. கம்பூச்சியாவுக்கு உலக வங்கி 70 மில்லியன் டொலர் தருவதாக வாக்களித்துவிட்டு அதை நிறுத்திய போது சீனா கம்பூச்சியாவுக்கு 600 மில்லியன் டொலர் கடனாகத் தந்தது. சீனா ஆசியாவினது மட்டுமல்ல 3ம் உலக நாடுகளது வங்கியாகவும் ஆகிவிட்டது.மேலும் சீனாவும் ரஸ்யாவும் இணைந்து மத்திய ஆசிய நாடுகளுடன் இணைந்து " என்ற கூட்டை உருவாக்கியுள்ளன. இதை மேற்கு நாட்டு ‘ஊடகம்கள்’ கிழக்கின் நேட்டோ கூட்டமைப்பு’ என்று பெயரிட்டன. 2007 இல் அமெரிக்க விமானப்படை , கப்பற்படை என்பன கூட்டாக சீன- ஜப்பானிய-தாய்வான் கடற்பரப்பில் தனது நவீன விமானம் தாங்கிக் கப்பலான "Kitty Nawk" தலைமையில் 12 போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களுடன் பயிற்சி நடத்திக் கொண்டு இருந்தபோது இப்பகுதியின் கீழாக சீனாவின் மிக நவீன நீர்மூழ்கிக் கப்பல்கள் இவர்கள் அறியாதவாறு கடந்து சென்றுவிட்டது. அந்த மட்டத்துக்கு சீன இராணுவத் தொழிற்துறையும் ஆற்றல் மிக்கதாகிவிட்டது. 1957 இல் சோவியத் யூனியனின் ‘ஸபுட்நிக்’ விண்வெளி;க் கோள் ஏவப்பட்ட போது அமெரிக்காவுக்கு ஏற்பட்ட அதிர்ச்சியை ஒத்த அதிர்ச்சி இதிலும் ஏற்பட்டது என்று மேற்குலக ஊடகம்கள் எழுதின.
சீனா உட்பட ஆசிய உற்பத்திப் பொருட்கள் தரம் குறைந்தவை. மேற்குலக உற்பத்திகளை கொப்பியடித்தவை என்ற பிரச்சாரம் ஜெர்மனி போன்ற மேற்கு நாடுகளில் நடக்கின்றது. 1770 இல் பிரிட்டனில் தொழிற்புரட்சி நடந்த பி;ன்பு அதைக் கொப்பி பண்ணியே ஏனைய ஐரோப்பிய நாடுகள் தொழில் மயமாகின. ஜெர்மனியானது 1850 களில் பிரிட்டனைப் பின்பற்றியே தொழில் மயமாகியபோது அதன் உற்பத்திப் பொருட்கள் பிரிட்டிஸ் உற்பத்தி போல் தரமாக இருக்கவில்லை. பிரிட்டன் உட்பட ஏனைய மேற்கு ஐரோப்பிய சந்தைகட்கு ஜெர்மனியப் பொருட்கள் வந்தபோது போட்டி மற்றும் ஜெர்மனியப் பொருட்களின் தரக்குறைவுகளைக் காட்டவே ஜெர்மனியப் பொருட்களுக்கு Made in Germany என்று உற்பத்தி அடையாளம் இடப்படவேண்டம் என்று பிரிட்டன் கட்டளையிட்டது. பிற்காலத்தில் ஜெர்மனி வளர்ச்சிப் போக்கில் பிரிட்டனை விட சிறந்த தரமான உற்பத்திகளைச் செய்தது Made in Germany என்பது அப்பொருளின் தரத்துக்கு அடையாளமானது. இது சீனாவுக்கும் பொருந்தும்.


‘கொலம்பியாவும் பிறேசிலும் வியட்நாமும் ஒப்பிடமுடியாத வேறுபாடுகளைக் கொண்டுள்ளன. அந்த நாடுகளின் சமூக அமைப்பு வளம், மக்கள் தொகை என்று மாறுபாடுகள் உண்டு. என்று நாவலன் கூறுகிறார்.


இப்படித் தனித்தும் பிரித்தும் பார்க்கும் எண்ணப்போக்கு நாவலனிடம் எப்படி வந்தது, தமிழ்தேசியவாதிகளின் தனித்தவில் அரசியல் பாதிப்புக்களாலும் தமிழ்நாட்டின் தனியிருப்பு, தனித்தவளை தேடும் போக்குகளாலும் இவர் சிந்தனை செய்ய முடியாது தடுக்கப்பட்டார் என நாம் கொள்லலாம். நாவலன் காட்டும் நாடுகட்கு இடையே இருப்பது போன்ற வேறுபாடுகளை மேற்கு ஐரோப்பிய நாடுகளிடையே இல்லையா? ஜெர்மனிக்கும் பிரான்சுக்கும் இடையே இவை கிடையாதா? இப்படி இருக்க இவை எப்படி ஐரோப்பியக் கூட்டமைப்பாக நாட்டோவாக இணைகின்றன. ஐரோப்பிய நாடுகளுடன் அமெரிக்காவுக்கு வேறுபாடுகள் இல்லையா? அப்படி இருக்க இவர்கள் ஒன்றாக நிற்கிறார்கள். இந்த நாடுகளிடையே ஒரே விதமான அமைப்புக்களை உடையவை என்ற ஒற்றுமை இல்லையா? வேறுபாடுகள் என்பதே மறுமுனையில் ஒருமைப்பாட்டையும் கொண்டது தானே? கொலம்பியா, பிறேசில், வியட்நாம் என்பன விவசாயப் பொருளாதார உற்பத்தி வடிவம்களில் இருந்து இப்போ உயர்தொழிற்துறை நாடுகளாக மாறுவது என்பதில் ஒன்றுபட்ட இயல்புகள் இல்லையா? வியட்நாம் நிலச்சீர்திருத்தம் செய்து விவசாயிகட்கு நிலம் வழங்கிவிட்டது என்றால் லத்தீன் அமெரிக்க நாடுகளில் பிறேசில், பொலிவியா, வெனிசூலா,நிக்கரகுவா, சிலி, ஆஜன்டீனா என்று முழு நாடுகளுமே நிலச்சீர்திருத்தம் விவசாயிகட்கு நிலம் தருவது, கல்வி,சுகாதாரம், சமூகசேவை உட்பட முதலாளிய வழிப்பட்ட சீர்திருத்தம்களைச் செய்வது ஒத்த தன்மையை வெளியிடவில்லையா? லத்தீன் அமெரிக்கா உட்பட ஆசிய நாடுகளும் தமது நூற்றாண்டு கால சமூக உறக்கத்தை கலைக்கத் தொடங்கியுள்ளன. லத்தீன் அமெரிக்காவில் போர்த்துக்கேய மொழி பேசும் பிறேசிலும் பிரான்ஸ் மொழி பேசும் கெயிட்டியும் ஆங்கில மொழி பேசும் ஜமேக்காவும் ஏனைய ஸ்பானிய மொழி பேசும் நாடுகளுடன் ஒரே கூட்டாக கண்டமாக உருவாகும் நிகழ்வுப்போக்கு நடைபெறுவது ஏன் நாவலனுக்கு எட்டவில்லை?


வெனிசூலா இல் எழுந்த லத்தீன் அமெரிக்க ஜனநாயக மயமாகும் இயக்கம்கள், பொலிவியா, எக்குவடோர், பராகுவே, பிறேசில், ஆஜன்டீனா, சிலி, நிக்கரகுவா, கௌத்தமாலா, உருகுவே என்பன கியுபாவுடன் ஒன்றிணைந்து "Marcosu" என்ற பொதுக் கூட்டமைப்பாக செயற்படத் தொடங்கியுள்ளன. இந்த நாடுகள் தம்மிடையேயான கூட்டான நிதி நடவடிக்கைகட்காக’தென்பகுதி நாடுகட்கான வங்கி (Banco del sur) யை 7 மில்லியாடன் டொலர் மூலதனத்துடன் ஆரம்பித்துள்ளன. இது உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய வங்கிகட்கு எதிராக தமது கண்டத்தில் செயற்படும்.இதனால் லத்தீன் அமெரிக்காவின் 20 நாடுகள் தம்மிடையே பொருளாதாரம், நிதி நடவடிக்கைகளில் இணைகின்றன. டொலர் நாணயத்துக்கு எதிராக ஒரு பொது நாணயத்தைக் கொண்டு வருவது பற்றிய திட்டம்கள் உள்ளது. 20 அக்டோபர் முதல் பிறேசில்,ஆஜன்ரீனா இரு நாடுகளும் தம்மிடையே தம் சொந்த நாணயம்களான Pesos,Reals இல் வர்த்தகச் செயற்பாடுகளைத் தொடங்கியுள்ளன.இதனால் டொலர் இப்பிரதேசங்களில் செல்வாக்கு இழக்கத் தொடங்கியுள்ளது. அமெரிக்க சிஎன்என் க்கு எதிராக "Tele Sur" என்ற லத்தீன் அமெரிக்க நாடுகட்கான ஸ்பானிய மொழியிலான தொலைக்காட்சிச் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இது அரபுநாடுகளில் செயற்படும் அல்ஜசீரா, தொலைக்காட்சிக்கு சமமானதாகும். லத்தீன் அமெரிக்காவை ஒரே தாயகமாய்க் கொள்ளும் இலட்சியத்தை முன்பு சிமோன் பொலிவர், பரபன்டோ மார்ட்டி போன்றவர்கள் கொண்டு இருந்தனர். சேகுவேரா முழுக்கண்டத்தையும் ஒரே நாடாக ஆக்கும் இலட்சியத்தைக் கொண்டு இருந்தார். லத்தீன் அமெரிக்காவின் இன்றைய நாடுகளும் எல்லைகளும் செயற்கையாக நாடு பிடிப்பாளர்களால் ஏற்படுத்தப்பட்டதாகும். இக்கண்டம் முழுவதும் ஸ்பானியர், செவ்விந்தியர், கறுப்பு இன மக்கள் என்போரே முக்கிய மக்கள் பிரிவாக உள்ளனர். எப்படி கனடாவும் அமெரிக்காவும் ஒரே தேசமாக பல்லின மக்கள் வாழும் நாடாக இருக்க முடியுமோ அவ்வாறே லத்தீன் அமெரிக்கக் கண்டமும் ஒரே நாடாக இருப்பதே அதில் வாழும் மக்களின் வாழ்வுக்கு சாதகமாக இருக்கமுடியும். இங்கு நாவலன் ஏகாதிபத்தியம்கள், கொலனிக்கால நாடு பிடிப்பாளர்கள் செயற்கையாக வகுத்த எல்லைகளையும் நாடுகளையும் அப்படியே ஏற்கிறார்.


அமெரிக்காவின் 50 மாநிலம்களையும் 50 நாடுகளாகப் பிரிக்கமுடியாதா? கனடாவையும் பிரான்ஸ் மொழிபேசும் கியூபெக் மாநிலம் முதல் பல நாடுகளாகப் பிரிக்கமுடியாதா? இந்த பிரிக்கப்பட்ட நாடுகளை உலக வரைபடத்தில் தனித்தனி நாடுகளாகப பார்த்திருக்க முடியாதா? ஆபிரிக்காவும் லத்தீன் அமெரிக்காவும் செயற்கையாகப் பிரிக்கப்பட்ட சிறு சிறு நாடுகளாகத் துண்டாடப்பட்ட கண்டங்களாகும். இங்கு நாவலனும் ஏகாதிபத்திய பிரிவினைச் சித்தாந்த வழிப்பட ஒழுகுகிறார். தனித்தனி நாடுகளின் தனித்தன்மைகளையும் வேறுபாடுகளையும் தேடியலைகிறார். அதுவும் அதை உலக மயமாகும் பொருளாதாரத்தின் காலகட்டத்தில்இதைச் செய்கிறார


அமெரிக்கா கண்டம் தழுவிய எழுச்சியும் ஒற்றுமையும் சோசலிசமும் வந்துவிடும் என்ற காரணத்தாலேயே அமெரிக்கா இராணுவ ஆட்சிகளை லத்தீன் அமெரிக்க கண்டம் முழுவதும் கொண்டு வந்தது வளம்களை சூறையாடியது. இன்று கொலம்பியா, மெக்சிக்கோ தவிர அனைத்து நாடுகளிலும் இடதுசாரி அரசுகள் பதவிக்கு வந்துள்ளன. இராணுவ அரசுகள் ஒழிக்கப்பட்டுள்ளது. முதலாளிய ஜனநாயகம், சோசலிச திசைவழியிலான போக்குகள் வளர்கின்றன. நிலமற்ற மக்கள் ,ஏழைகள், விவசாயிகள், செவ்விந்தியர்கள் ஆகியோருக்கு நிலம்கள் வழங்கப்படுகின்றது. எனவே இம் மக்களின் விவசாய இயக்கம்களாக எழுந்த கொரில்லா இயக்கம்கள் பலமிழக்கத் தொடங்கியுள்ளன. முதலாளித்துவ ஜனநாயக இயக்கம்களாக உருமாறுகின்றன. சிலியிலும் ஆஜன்ரீனா எல் சல்வடோலரிலும் வருடத்துக்கொரு சதிப்புரட்சி இராணுவ சர்வாதிகாரம் சி.ஐ.ஏ. அரசியல் தலைவர்களை கொலை செய்த காலம் அமெரிக்க வாழைப்பழக் கொம்பனி, ‘ ‘ "Chiquita"கொக்கோ கோலாக் கொம்பனி என்பன லத்தீன்அமெரிக்க வாழை பழக்குடியயரசுகளைஆட்சிசெய்தகாலம
இன்றில்லை காஸ்ரோவிற்கு அடுத்து லத்தீன்அமெரிக்கநாடுகளில் வெனிசூலாவின்’சாவஸ்’கண்டம் தழுவியஅரசியலின் முக்கிய தலைவராகியுள்ளார். ஜெர்மனியின் முக்கிய சஞ்சிகையான "Der Spiegel"விசேட இதழ் (5,2006)’எண்ணையுடன் சேகுவரா, (Che Guvera mit öl)என்றதலைப்பில் வெனிசூலாவின் சாவஸ் பற்றி கட்டுரை எழுதுகிறது. வெனிசூலாவின் எரிபொருள் வளத்தால் பெறப்படும் பணம் லத்தீன் அமெரிக்க நாடுகட்கு நிதியாக,நீண்டகாலக் கடனாக செல்வதை எழுதிய கட்டுரை அமெரிக்காவில் கறுப்பு இன ஏழை மக்கள் வாழும் பகுதிகளான, Boston,Newyorker,Bronx,ஆகிய பகுதிகட்கு குளிர்காலத்தில் வெப்பமூட்ட சாவஸ் எண்;ணை வழங்கிதைக் குறித்து எழுதியுள்ளது.’இந்தத் தென்னமரிக்க மனிதர் அமெரிக்க ஏழை மக்களைக் கைப்பற்றி விட்டார்’ என்கிறது. மறுபுறம் ஜெர்மனிய ஊடகம்கள் சாவஸ் மற்றும் பொலிவியாவின் ஈவா மொராலஸ் ஆகியோரை காஸ்ட்ரோவின் வாரிசுகள் தீவிரக் கொம்யூனிஸ்ட் சர்வாதிகாரிகள் என்று குறிப்பிட்டன.


வெனிசூலா உட்பட அந்நிய எரிபொருள் நிறுவனம்களை வெளியேற்றி; சகலதையும் அரசுடமையாக்கியதுடன் பிறேசில், கியூபா, பொலிவியா உடன் பெருமளவு ஒப்பந்தம்கள் மேற்கு நாடுகளை எதிர்க்கும் சீனா, ஈரான், ரஸ்யாவுடன் புதிய ஒப்பந்தம்களைச் செய்துள்ளது. அமெரிக்காவின் உருக்கு இரும்பு நிறுவனமான Sidor பிரான்சின் ; lafarge , சுவிசின் Holeim ஆகிய சீமெந்துத் தொழிற்சாலைகள் சகலதும் அரசுடமையாக்கப்பட்டுள்ளது. அலுமேனியம், கார், உழவு இயந்திரம் ஆயுதம் தயாரிக்கும் தொழிற்சாலைகளை நிறுவுகின்றது. செயற்கைக் கோள் ஏவல் ஆகியவற்றுடன் விண்வெளி ஆய்வுக்கும் திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு வருகின்றது. 2004 முதல் 40,000 முதல் 50,000 வீடுகள்வெனின்சூலாவில
வருடாவருடம் கட்டப்பட்டு வருகின்றது. லத்தீன் அமெரிக்க நாடுகள் அமெரிக்காவுடன் இணைந்து கியூபாவை எதிர்த்து தனிமைப்படுத்திய காலம் போய் இப்போ கியூபாவின் பாதுகாப்பு அரண்களாகிவிட்டன. பிறேசில்,கியூபா,வெனிசூலா புதிய எரிபொருள் வளம்கள் கண்டுபிடிக்கப்பட்டதுடன் முழுக்கண்டத்திலும் 103 மில்லியாடன் பெரல் எரிபொருள் வளம் உள்ளமை இந்த நாடுகளை இன்னமும் நெருக்கமாய்க் கொண்டு வருகின்றது.
சேகுவேரா போராடி மரணமடைந்த பொலிவியாவில் 1985 பின்பு எட்டு அரசுகள் மாறின.; 20 வருடத்தில் எந்த மாற்றமும் இல்லை. 9 மில்லியன் மக்கள் தொகை கொண்ட மூன்றில் இரண்டு பகுதி மக்கள் தினசரி ஒரு டொலருக்கும் நிறைவான வருமானம் பெறும் நாட்டில் இப்போது தான் ஏனைய லத்தீன் அமெரிக்க நாடுகளையொத்த சமூக மாற்றங்கள் நிகழ்கின்றது. முன்பு அமெரிக்க நிறுவனம்களிடமிருந்த சுரங்கம்களில் பணிபுரிந்த தொழிலாளர்களின் ஆயட்காலம் சராசரியாக 35 வருடங்களாக இருந்தது..இவர்களில் பெரும்பகுதி சுவாசப்பை நுரையீரல் வியாதிகளால் இறந்தனர். பொலிவியாவில் எண்ணை எரிவாயு, செம்பு, உரான், Zink,Blei,lithium,சல்பேட், நீர்வளம் என்பவைகளைக் கட்டுப்படுத்திய Pacific,LNG,British petrollum,Repsol என்பன அரசுடமையாக்கப்பட்டு வெனிசூலா, பிறேசில்,கியூப உதவிகளுடன் கூட்டாக செயற்பாடு இதனால் பொலிவிய அரசின் வருமானம் 1மில்லியாடனில் இருந்து 4 மில்லியாடல் டொலராக அதிகரித்தது.செல்வந்தர்களான1000 குடும்பங்கள் 25 மில்லியன் கெக்டர் வளமான நிலத்தை வைத்து இருந்தன. இதில் நில உடமையாளனான Branco marincovic என்பவனின் குடும்பம் மட்டும் 150,000 கெக்டர் நிலத்தை உடமையாய்க் கொண்டு இருந்தது. பொலியாவில் வாழ்ந்த Quechua , Aymaraஉட்பட 36 செவ்விந்திய இனக்குழுக்கள் ஈவா மொராலஸ் அரசின் நிலச்சீர்திருத்தத்தின் கீழ் பெரும் நில உடமையாளர்களிடமிருந்து பறிக்கப்பட்ட நிலம்கள் கிடைக்கின்றது. முன்பு இந்த செவ்விந்தியர்கள் வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் முன்பு நடனமாடுபவர்களாக விவசாய நிலம்களில் அரைஅடிமைகளாகவே இருந்தனர். இவர்கள் நிற இனரீதியில் மோசமாக நடத்தப்பட்டனர். "Indios"என்பது இழிவான சொல்லாக இருந்தது. இப்போது பொலிவியா அரசுத்தலைவராக உள்ள ஈவா மெராலஸ் ஒரு செவ்விந்தியர் விவசாயிகளாக இருந்து போராடியவர்.அண்மையில் செவ்விந்திய இனக்குழுக்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து 8 மைல்தூர ஊர்வலமாக தலைநகரை நோக்கி வந்தனர். தமக்கு அனைவருக்கும் நிலம் வழங்கும்படி கோரினர். 18ம் நூற்றாண்டில் ஸ்பெயின் ஆக்கிரமிப்பாளருக்கு எதி;ராகப் போராடிய தமது தலைவர்களான Tupac Katari,Bartolina siso பெயரில் சபதம் எடுத்தார்கள். 2007 இல் முதலாவது செவ்விந்தியப் பெண்களின் மாநாடு கூட்டப்பட்டுள்ளது. பள்ளி செல்லும் குழந்தைகட்கு மாதம் 20 யூறோ பெறுமதியில் அரசால் நிதி உதவி வழங்கப்படுகின்றது.

பொலிவியாவில் மட்டுமல்ல முழு லத்தீன் அமெரிக்காவிலும் செவ்விந்திய மக்களின் விழிப்புணர்வு ஜனநாயகத்துக்கான போராட்டம்கள் நடக்கிறது. வெனிசூலா, பொலிவியாவில் இருந்து பிறேசில், ஆஜன்ரீனா முதல் பல ஆயிரம் கிலோ மீற்றர் தொலைவில் உள்ள நாடுகட்கு எண்ணெய் எரிவாயுக் குழாய்கள் அமைக்கப்படுகின்றன. கியூப வைத்தியர்கள் , ஆசிரியர்கள் தொழில்நுட்பவியலாளர்கள், உயிரியல் மருத்துவத்துறை நிபுணர்கள், சகல ஸ்பெயின் மொழி பேசும் நாடுகட்கும் பல ஆயிரக்கணக்கில் செல்கிறார்கள். லத்தீன் அமெரிக்க நாடுகளிடையே வித்தியாசம்கள் தனித்துவம்கள் இருப்பதாக ஒரு முதலாளியத் தேசியவாதி போல் சிந்திக்கும் நாவலன் இந்த நாடுகள் முழுவதுமே கடந்த நூறாண்டு முழுவதும் அமெரிக்காவால் இயக்கப்பட்ட இராணுவ அரசுகளாக சர்வாதிகார ஆட்சிகளாக இருந்தது என்ற ஒரே தன்மையைக் காணவில்லையா? இதன் தலைவர்களின் பெரும் பகுதி அமெரிக்க இராணுவப் பள்ளியில் பயிற்றப்பட்ட ஜெனரல்களாக இருந்தனர் என்ற பொது ஒற்றுமையைக் காணவில்லை. எல்லா நாடுகளிலும் கொரில்லா இயக்கம்கள் எழவில்லையா? விவசாயிகள் நிலம் கோரியும் நகர்ப்புறத் தொழிலாளர்கள் அந்நியப் பெரு நிறுவனம்களின் சுரண்டலுக்கும் எதிராகவும் போராடவில்லையா? இது முழு லத்தீன் அமெரிக்காவுக்கும் பொதுத்தன்மைகளாக இருக்கவில்லையா? ‘விடுதலை இறையியல்’ தத்துவம்தென்னமெரிக்கக்கண்டம் தழுவிச் செயற்பட்டமை எதைக் காட்டுகின்றது? ஆஜன்ரீனாவின் கடன்கள் பற்றி நாவலன் எழுதியுள்ளார். 1990 க்கு முன்பு உலக வங்கி, சர்வதேச நாணய வங்கிகட்கு லத்தீன் அமெரிக்க நாடுகள் அடிமைத்தேசம்களாக இருந்தன. இன்று நிலை வேறு அமெரிக்க, மேற்கு ஐரோப்பிய வங்கிகள் நட்டமடைகின்றன. சர்வதேச நாணய வங்கி இப்போ 565 மி;ல்லியாடன் டொலர் நட்டப்பட்டுள்ளது. அமெரிக்க வீடுகள், நிலம்களில் முதலீடு செய்தமையால் வந்த இழப்பு, டொலர் பெறுமதி வீழ்ச்சி புதிய கடன்களையோ முதலீட்டையோ இதனால் செய்யமுடியவில்லை. சர்வதேச நாணய வங்கி தனது தங்க இருப்பில் 403.3 தொன்னை ஏழுமில்லியாடன் டொலருக்கு விற்பனை செய்கிறது. 2009 இல் 100 மில்லியன் டொலர் செலவைக் குறைக்கவும் ஆட்களைக் குறைக்கவும் சர்வதேசநாணயவங்கிதிட்டம். இதன் தலைமை உறுப்புரிமை நாடுகளிடம் அவசர நிதியைக் கோருகின்றது. சீனா, இந்தியா, தென்கொரியா, சிங்கப்பூர்,அரபுஎண்ணை நாடுகள் பிறேசில், வெனிசூலா என்பன முக்கிய கடன் வழங்கும் நாடுகளாக ஆகிவிட்டன. சீனா தனது சேமிப்பில் உள்ள உபரி டொலரை ஆசிய,ஆபிரிக்க நாடுகட்கு கடனாகத் தருகின்றது. வெனிசூலா தனது கண்டம் கடந்து வெள்ளை ரஸ்யாவுக்குக் கூடக் கடன் தருகின்றது.

எனவே உலக நாணய வங்கி, உலக வங்கி என்பன ஏழைநாடுகளை நிதி தர மறுத்துப் பணிய வைத்த காலம் போய்விட்டது. லத்தீன் அமெரிக்க நாடுகள் 1970,1980 களில் பெற்ற கடனைக்கூட சர்வதேச நாணய வங்கிக்கு சேர்பியா, உருகுவே, சிலி, ஆஜன்ரீனா, பிறேசில் என்பன கட்டிவிட்டன. பிலிப்பைன்ஸ் மற்றும் உலகின் 4 வது பெரிய கடனாளி நாடான இந்தோனேசியா என்பன உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய வங்கியிடமிருந்து விடுதலை பெற்றுவிட்டன. சிம்பாப்வே, அங்கோலா முதல் பொலிவியா இலங்கை வரை உலக வங்கிக்கு சவால்விடும் நிலைக்கு வந்துள்ளன.லத்தீன் அமெரிக்க நாடுகள் தமது ‘ தென் அமெரிக்க நாடுகட்கான வங்கியை உருவாக்கியது போல் இஸ்லாமிய முதலீட்டு வங்கியான IBFW 70 நாடுகளை உறுப்பினராய்க் கொண்டு 500 மில்லியாடன்டொலர்முதலீட்டில் தொடங்கியுள்ளது. முஸ்லிம் நாடுகள் உட்பட பல ஆசிய நாடுகளின் எண்ணை, எரிவாயு விற்பனையில் திரளும் உபரிமூலதனத்தை ஆபிரிக்க, ஆசிய நாடுகட்கு கடனாகத் தருகின்றது. அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் பொருளாதாரத் தடைக்குள்ளான ஈரான், லிபியா, சூடான், சிரியா இந்த இஸ்லாமிய முதலீட்டு வங்கியில் இணைந்துள்ளன. மலேசியத் தலைநகரான கோலாலம்பூரில் உள்ள இந்த Petronas Towers வங்கியின் பிரிவான ‘இஸ்லாமிய நிதிச் சேவை நிறுவதற்குரியதாகும். அமெரிக்கப் பொருளாதார நிபுணரான இந்த loretta Napoleoni இந்த IBFW வங்கியை உலகில் மிக வேகமாக வளரும் வங்கி இதற்கு உலகம் முழுவதும் கிளைகள் உருவாகிறது.114 மில்லியாடன் முஸ்லிம் மக்களின் 2.7 பில்லியன் டொலர் சொத்துடன் இதில் இணைந்துள்ளனர் என்கிறார். இந்த வங்கி சிறுகடன்கள், எரிவாயு எண்ணை, கட்டிடத் தொழில், உதைபந்தாட்ட Formel -1 எனப்படும் கார்ப்பந்தயம் இவைகளில் முதலீடுகள் செய்கிறது. மேற்குலகால் புறக்கணிக்கப்பட்ட பெருமளவு முஸ்லிம் முதலாளித்துவப் பொருளாதாரப் போக்காளர்கள் கல்வியாளர்களை இத்தகைய அமைப்புக்கள் உள்வாங்கியுள்ளன. பிறேசில் வெனிசூலா என்பன ஈரான், சிரியா உட்படப் பல நாடுகளுடன் பொருளாதாரத் தொழிற்துறை பரிமாற்ற உடன்படிக்கைகளைச் செய்துள்ளன.மறுபுறம் ‘ஆசிய அபிவிருத்தி வங்கி’யானது ஆசிய நாடுகட்கான பிரதான நிதி நிறுவனமாக ஆகிவிட்டது. இதனால் இந்தப் பிரதேசங்களில் உலகவங்கியும் சர்வதேச நாணய நிதியமும் பெறுமதியிழந்துவிட்டன.


ஆஜன்ரீனா பற்றிப் பேசும் நாவலன் அதன் அண்டை நாடான பிறேசிலின் அபிவிருத்தியைக் கவனித்து இருந்தால் அக்கண்டத்தின் பொதுப்போக்கை அவர் அவதானித்திருக்க முடியும். 1990 களின் ஆரம்பத்தில் பிறேசில் லத்தீன் அமெரிக்காவிலேயெ பெரும் கடனாளி நாடு உலக வங்கியாலும் சர்வதேச நாணய வங்கியாலும் கட்டளையிடப்பட்டு ஆட்சி செய்த நாடு இப்போ இந்த நாடு தனது 190 மில்லியன் மக்கள் தொகையுடன் உலகில் உள்ள 10 வது பெரியவளரும் தொழி;;ற்துறை நாடு அதன் தேசிய வருமானம் 1.3 பில்லியன் டொலர்கள் அரச இருப்பு 200 மில்லியாடன் டொலர்களாகும். தங்கம், நிலக்கரி Nickel, Bauxid,Mangen உற்பத்தியில் உலகில் மிக முக்கிய நாடு தினசரி 1.5 மில்லியன் பெரல் எண்ணை உற்பத்தி செய்கிறது. சோயா, கரும்பு இவைகளி;ல் இருந்து உயிரியல் எரிசக்தியை உற்பத்தி செய்யும் உலகின் முதன்மை நாடு. அமெரிக்காவால் ஒரு காலத்தில் கட்டுப்படுத்தப்பட்ட நாடு இன்று முழு லத்தீன் அமெரிக்காவில் மட்டுமல்ல ஆபிரிக்கா, அரபுநாடுகளிலும் அதன் சந்தையும் மூலதனமும் நுழைகிறது. மறுபுறம் சீனாவானது ஏனைய லத்தீன் அமெரிக்க நாடுகளில் போலவே பிறேசிலிலும் அமெரிக்க இடத்தைப் பிடித்துள்ளது. இங்கு மட்டும் சீனாவின் 70 பெரு நிறுவனம்கள் உள்ளது. இவை 300 பாரிய பொருளாதாரத் திட்டம்களைக் கொண்டுள்ளன. வீதிகள், பாலம்கள், மருத்துவமனைகள், தொழிற்சங்கங்கள், வீடமைப்புத் திட்டங்கள் யாவற்றையும் சீனக்கட்டிட நிறுவனம்களே அமைக்கின்றன.பிறேசிலின் எண்ணை முதல் சோயாவரை சீனாவுக்கு ஏற்றுமதியாகிறது. சிலி நாட்டின் முக்கிய ஏற்றுமதிப் பொருளான செம்பு, இப்போ பெரும் பகுதி சீனாவுக்குச்செல்கிறது. முன்புஇந்த மூலப் பொருள்வளத்தைப் பெற அமெரிக்கா இராணுவச் சதிப்புரட்சியை நடத்தி சோசலிஸ்ட் அலன்டேயைக் கொன்றது. ஆனால் இப்போ எந்த லத்தீன் அமெரிக்க நாட்டையும் அமெரிக்காவால் உசுப்பமுடியவில்லை. வெனிசூலா, பொலியாவில் இராணுவச் சதிப்புரட்சிக்கும் கலகக் குழுக்களை உருவாக்கவும் முயன்று தோற்றது. அமெரிக்காவின் பொருளாதார இயலாமை இராணுவ அரசியல் வீழ்ச்சிகளையும் கூடவே கொண்டு வந்துள்ளது.தொழிற்துறை வளர்ச்சி தான் அது சார்ந்த புதிய பொருளாதார வாழ்வு முறை தான் ஜனநாயகம் மனித உரிமை தனிமனித சுதந்திரம் என்பனவற்றை முதலாளிய மட்டத்துள் கொண்டு வரும். இவையே சோசலிச இயக்கம்களும் புதிய தொழிற்துறைப் பாட்டாளி வர்க்கமும் அரசியல் பலம் பெறவல்ல அடிப்படையாகும்.நாவலன் தனித்தனி நாடுகளின் தனியுரிமையை வித்தியாசம்களை வலியுறுத்த முயன்றமை அங்கு சோசலிசம் வரும் என்பதை மறுப்பதில் முடிவடைந்துள்ளது.


உலகச் சந்தையை வெல்ல மலிவாக உற்பத்தி செய்யவேண்டும். சம்பளம் உயரக்கூடாது. வட்டி அதிகரிக்கக்கூடாது. வட்டியை விட இலாபம் அதிகமாக இருக்கவேண்டும். 3ம் உலக நாடுகளில் மூலப் பொருள், மலிவான உழைப்பு காரணமாக பொருட்களை உற்பத்தி செய்து உலகச் சந்தைக்கு கொண்டு வர முடிகிறது. இதனால் மேற்குலக நாடுகளால் போட்டியிட முடியவில்லை. அவர்களின் டொலர், யூறோ, பவுண் ஆகிய நாணயம்கள் பெறுமதி இழப்பால் நிச்சயமற்ற தன்மையால் உலகச் சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரிக்கின்றது. தங்கமானது கிட்டத்தட்ட உலக நாணயமாகிவிட்டது. 3ம் உலக நாடுகள் புதிய உலக நாணயத்தை கண்டறிய வழி தேடுகின்றன என்றால் மேற்குலக ஏகாதிபத்தியம்களின் அந்திம காலத்தை எண்ணிப் பார்க்கமுடியும். அமெரிக்க, பங்குச்சந்தை வீழ்ச்சி 3ம் உலக நாடுகளையும் தொட்டது.உலக மயமாகி மென்மேலும் இணையும் மூலதனச் செயற்பாட்டில் ஒன்று திரண்டு வரும் நிதிச் செயற்பாடுகள் இதைத் தவிர்க்க முடியாததாக்கியுள்ளது. சீனப்பொருட்களுக்கான சந்தை இன்று மேற்குநாடுகளிலும் பிரதானமாகியுள்ளது. ஜெர்மனியில் உள்ள பிராங்பேர்ட் நகரில் இயங்கும் " International centre for corporate culture und history "என்ற அமைப்பு "Das ende des weissen mannes"என்ற நூலை வெளியிட்டுள்ளது. இந்த நூல் மேற்குலக வெள்ளை நாகரீகத்தின் முடிவைப் பேசுகிறது மாக்சிய நோக்கில் மேற்குலகு சோசலிசப் புரட்சியின் காலகட்டத்தில்ஜரோப்பாநுழைகிறது. தொழிலாள வர்க்கம் தனது கடந்த அனுவச் செழிப்போடு சமுதாய மாற்றத்துக்காக போராட்டத்தை தொடங்குமென்பதாகும்.


‘உலக மயமாதல் என்பது வளர்ச்சியடைந்த நாடுகளின் சொந்த நலன்கட்கான மறு ஒழுங்கு என்பது நாவலனின் வாதமானது.
இது மிக மேலோட்டமான பழைய இடதுசாரிப் பார்வை என்பதுடன் சமூக இயங்கியல் மற்றும் வளர்ச்சி நிலைமைகளை கணக்கெடாத கருத்தியலுமாகும். கிழக்கு சோசலிச நாடுகள் வீழ்ந்தபோது மேற்கு நாடுகள் அந்த நாடுகளில் புகுந்து சூறையாடத் தொடங்கிய போதும் அது எதிர்விளைவுகளை உள்ளடக்காததாக இருக்கவில்லை.அங்கு வளர்ச்சி பெற்ற தனியார் மூலதனம் இன்மையால் ரஸ்யாவில் அரசுவகைபட்ட முதலாளியம் தோன்றியது. எரிபொருள் உட்பட, பிரதான மூலப்பொருள் வளம்களை உள்ளடக்கிய அரசு மூலதனம் எழுந்தது. . Gasprom அப்படித்தான் எழுந்தது. பழைய சோசலிச நாடுகள் உட்பட சீனா , வியட்நாம் வரை தொழிற்துறை வளர்ச்சி ஏற்படத்தக்க மக்களின் கல்வி வளர்ச்சி, சமூகவியல் பக்குவம் என்பன நிலவின. ஆபிரிக்காவில் உலகின் எப்பகுதியையும் விட அளவிட முடியாத மூலப் பொருள் வளம்கள் உடையதாக இருந்தும் அது தொழிற்துறையில் வளரத் தடையாக அம்மக்களின் கல்வி, சமூகவியல் பக்குவம் என்பன நிலவின. ஆபிரிக்காவில் உலகின் எப்பகுதியையும் விட அளவிடமுடியாத மூலப்பொருள் வளம்கள் உடையதாக இருந்தும். அது தொழிற்துறையில் வளரத்தடையாக அம்மக்களின் கல்வி, சமூகவியல் வளர்ச்சி நிலை போதாக இருந்தது. அடுத்து உலக மயமாதலை மேற்குலக ஏகாதிபத்தியங்களே கொண்டு வந்தபோதும் அது அவர்களுக்கே கட்டுப்பாடாத பொருளாதார விதிகளைக் கொண்டது. தன் சொந்த விதிகளின்படி இயங்குவது இது நாம் கருதுவது போல் மனித மூளைகட்கும் அதன் ஆசைகட்கும் கட்டுப்பட்டு நிற்பதில்லை பிரிட்டிஸ் வங்கிகளான Rbs,HSBC,Barclays என்பன பிரிட்டிஸ் ஏகாதிபத்தியம் விரும்பியா நட்டப்பட்டன? அமெரிக்காவிலும் உள்நாட்டிலும் வீடுகள், நிலம்களில் அந்த முதலீடுகளிலும் பங்குச்சந்தை மற்றும் ஊக வாணிபத்தாலும் அவை சரிந்தன. அமெரிக்காவின் 103 வருடப் பழைமையான ஜிஎம (GM) வாகனத் தயாரிப்பு நிறுவனம், 100 வருடம் வயதுடைய citigrup,Lehman Brothers எப்படி இருந்த இடம் தெரியாமல் போகின்றன? சுவிட்சர்லாந்தின் யுபிஎஸ் (USB)வங்கி நட்டமடைந்து அரபு மற்றும் சிங்கப்பூர் வங்கிகளால் இப்போ கடன் தந்து காக்க முயலும் நிலை எப்படி ஏற்படுகின்றது? பிரிட்டிஸ் பிரதமர் சீனாவிடம் உலக வங்கிக்கு நிதி தரும்படி கெஞ்சுகிறாரே? உலக மயமாக்கல் என்பது தன்னைப் படைத்தவர்களையே கொன்று தின்கிறது. சந்தையின் கட்டளைகள் அலட்சியப்படுத்த முடியாதவை.


உலக மயமாதல் என்பது மேற்கு நாடுகள் விரும்பித் திணித்த ஒன்றல்ல மாறாக ஏகாதிபத்pதியப் பொருளாதார வளர்ச்சியின் தவிர்க்கமுடியாத கட்டம் இது. அமெரிக்காவையோ ஜெர்மனியையோ கேட்டுக் கொண்டு செயற்படுவதில்லை. உலகச் சந்தை உலக மூலப் பொருட்கள் இன்று மேற்குலக நாடுகளின் கட்டுப்பாட்டுள் இருந்து மிக வேகமாக இழக்கப்பட்டு வருகின்றது. இந்த நாடுகளில் வங்கிகள், பெரு நிறுவனங்கள் நட்டமடைதல், வேலை இழப்பு, உற்பத்திக் குறைப்பு, நுகர்வு வீழ்ச்சி, மக்களின் வாழ்க்கைத் தரம் வீழ்ச்சி, உணவுப் பொருட்கள் உட்பட சகலதும் விலையேற்றம் என்பன எதைக் காட்டுகிறது என்பதை நாவலன் எண்ணிப் பார்க்கவில்லை. நட்டப்படும் பிரிட்டின் வங்கிகட்கு அரசு நிதி தர முயல்வதும் அரசுடமையாக்க முயல்வதும் காட்டுவதென்ன? மேற்குலக ஏகாதிபத்தியம்கள் தமது இதுவரை கால பொருளாதார சக்தியை 3ம் உலக நாடுகளிடம் இழக்கத் தொடங்கிவிட்டன என்பது தான்.பிரிட்டனில் வீட்டு விலைகள் சரிவு, வீடுகட்கான வட்டி விகிதம் அதிகரிப்பு, கடன் பெற முடியாமை பெருகிறது.அடுத்த 2 வருடத்தில் வீட்டு விலைகள் குறைந்தது 30 வீத ஆக விழுந்துவிடும் என்று ஐஎம்எவ் எச்சரிக்கின்றது. 1980 இல் பிரிட்டிஸ் பிரதமராக இருந்த மார்கிரெட் தட்சர் வர்க்கம் மறைந்து விட்டது. பிரிட்டிஸ் மக்கள் உடமையுள்ள சமுதாயமாக (Ownership society )இருக்கமுடியும். எல்லோரும் வீடுகள் வைத்திருக்க முடியும் என்றார். முதலாளித்துவத்துள் எல்லோரும் எல்லாமும் அடையலாம் என்ற கற்பனை கலைகிறது. பிரான்சின் மொத்தக் கடன் அதன் தேசிய வருமானத்தில் 65வீத என்பதும் ஸ்பெயினின் மத்திய வங்கியான "Banco de Espana" அரசுக் கடன்களைக் கட்ட 80 தொன் தங்க இருப்பை விற்பனை செய்யவுள்ளது. ஸ்பெயினின் ஏற்றுமதி 222 மில்லியாடன் டொலர்களாகவும் இறக்குமதி 324 மில்லியாடன் டொலராகவும் அதிகரித்துள்ளது. அதன் வெளிநாட்டுக் கடன் 1.6 பில்லியன் டொலராக ஏறியுள்ளது.


இது முதலாளியத்தின் மரணகண்டமாகும். அமெரிக்காவும் ஏற்றுமதியை விட அதிகமாக இறக்குமதி செய்து நுகர்கிறது. இது உலக மயமாதலின் பின்பு ஏற்பட்ட நிகழ்வாகும். நாவலனிடம் செயற்படும் ‘ஐரோப்பிய மத்தியவாத பார்வை’ இன்றைய உலகார்ந்த சடுதியான மாற்றம்களை உள்வாங்க விடாமல் தடுத்துவிட்டது. உலகில் உள்ள சர்வாதிகாரிகள் ஊழல் அரசியல்வாதிகள் மாபியாக்கள் முதல் இந்திய சினிமா நடிகர் நடிகைகளில் தொடங்கி பிரபாகரன் பரம்பரைகள், உமாமகேஸ்வரன், பிரேமதாசா வரை காசு ஒழித்து வைத்திருந்த சுவிஸ் வங்கிகளே நட்டத்துக்கு மேல் நட்டம் Ubs,Credit Suisse வங்கிகளில் போட்ட காசு போன காசாகிவிட்ட நிலை உலகின் முக்கிய செல்வந்த நாடுகளில் ஒன்றான சுவிஸ் வங்கிகள் பொறியும் என்று முதலாளித்துவவாதிகள் கனவு கூடக் காணவில்லை. உலக மயமாதலின் பின்பு 3ம் உலக நாடுகளில் இருந்து சுவிஸ் வங்கிகட்கு கறுப்புப் பணம்கள் கிட்டத்தட்ட வருவதில்லை. ஆசிய,லத்தீன் அமெரிக்க நாடுகளில் கண்டம் தழுவிய அளவில் பெரும் வங்கிகள் தோன்றிவிட்டன. வங்கித் தொழிலால் வாழ்ந்த உலகின் பணப்பெட்டியாக இருந்த சுவி;ஸ் கடந்த காலம் போல் இனி இருக்கமாட்டாது. இதுவும் உலக மயமாதலின் விளைவு தான். ஜெர்மனியில் உள்ள நுகர்வோர் பற்றிய ஆய்வு நிறுவனமான "Die Gesellschaft fur Konsumforchung" 15,000 தங்குவிடுதிகளில் நடத்திய ஆய்வில் அண்மைக்காலத்தில் சிறந்த உல்லாசப் பயணிகளாக ஆசியர்களே உள்ளனர் என்று தெரிவிக்கின்றது.2007 மே மாதம் நடத்திய இந்த ஆய்வில் ஜப்பானியர்கள்,சீனர்கள் அதிகம் பண்புள்ளவர்களாகவும் பணம் செலவு செய்பவர்களாகவும் கூடுதலான ‘டிப்ஸ்’ தருபவர்களாகவுமுள்ளனர் என்கிறது இந்த ஆய்வு இதில் தம் சொந்த நாட்டிலேயே ஜெர்மனிய உல்லாசப் பயணிகட்கு 5வது இடமே கிடைத்துள்ளது. ஒரு காலத்தில் 100 வருடம் முன்பு சீனர்களை ‘கூலி’ என்ற பெயரில் அரை அடிமைகளாக ஜெர்மனிக்கு கொண்டு வந்து வேலையில் ஈடுபடுத்தினார்கள். அந்த மக்கள் உலக மயமாதலின் பொருளாதார தொழிநுட்ப வரத்தாலேயே இப்படியாகியுள்ளனர். கடைசியாக உலக மயமாதலை உலக சோசலிச இயக்கத்தால் மட்டுமே சகல மனிதகுல உறுப்பினர்கட்குமானதாக மாற்றமுடியும். உலக மயமாதலுக்கு மாற்று சோசலிசம் தான் என்று உணர்வற்ற நிலையிலேயே நாவலன் தேசியஇனப்பிரச்சனையில் ஏகாதீபத்தியங்களின் சதி தனது முடிவை எட்டியுள்ளது.


15.01.2009
தமிழரசன்-பெர்லின

Thursday, March 18, 2010

எஸ்.பொ.வின் வரலாற்றில்(பகுதி:7)

எஸ்.பொ.வின் வரலாற்றில் வாழ்தல் நூல் விமர்சனம்(7)


(டிசம்பர் 2007 இன் இக்கட்டுரை கையெழுத்துப் பிரதியாக எழுதப்பட்டு ஐனவரி 2010 இல் அச்சுப்பிரதியாக வெளியிடப்படுகிறது)


பகுதி:(7)


எல்.எஸ்.எஸ்.பீ

இலங்கை மக்களுக்காக சிங்களவர், தமிழர், முஸ்லீம், பறங்கியர், மலயகத்தோட்டத் தொழிளாளர்கள் என்று பிரிக்கபடாத மனிதக்கூட்டத்துக்காக மாக்சியவாதிகள் நின்றார்கள். தமிழர்கட்கு ஒன்று சிங்களவர்கட்க்கு ஒன்று முஸ்லீம்கட்க்கு மற்றொன்று. என அவர்கள் தொழில் சங்கங்கள் எதையும் அமைக்கவில்லை, தமிழரசுக் கட்சியின் வாலான ஈழவேந்தன் போன்ற தமிழினவாதிகள் பிற்காலத்தில் தமிழாகட்கு என்று தமிழ் மொழிவழித் தொழிற்சங்கம் அமைத்த செயல்மூலம் நேரடியாக தொழிலாளர் வர்க்கத்துள் இனவாதத்தை புகுத்தினர். அமெரிக்க தூதரகத்தில் பகுதி நேரமாய் பணிபுரிந்த ஈழவேந்தன் போன்ற அமெரிக்க நபர்கள் இப்படி அல்லாது எப்படியும் இருக்கமுடியாது. ஏகாதிபத்தியங்களின் நேரடி நபர்கள் அல்லாத எஸ்.பொ. போன்றவர்கள் சிங்கள,தமிழ் முரண்பாடுகள் இயற்கையானவை எனக்கருதுவடன் இதை பின்தொடர்ந்து இடதுசாரிகள் வரவில்லை என்று குறைப்படுகின்றனர். திருகோணமலை துறைமுகத்தை பண்டாரநாயக்கா தேசியமயமாக்கியபோது பிரிட்டிஸ் விசுவாசத்தில் சற்றேனும் தவறே இழைக்காத தமிழரசுத்தந்தையோ பிரிட்டிஸ்சாரரின் தனையாகி தமிழர்களின் பிரச்சனை தீர்க்காமல் திருகோணமலை துறைமுகத்தை இலங்கை அரசிடம் ஒப்படைக்க வேண்டாமென்று பிரிட்டிஸ் அரசுக்கு தந்தி அடித்தவர். அதாவது திருகோணமலை துறைமுகம் இலங்கை மக்களின் சொத்தாக இருப்பதைவிட பிரிட்டிஸ் அரசின் கீழ் இருப்பதை விரும்புமளவு ஏகாதிபத்திய அரசுக்கு சார்பாக இருந்தவர். தமிழர்களை அதிகமாக கொண்ட திருகோணமலை நகரசபையோ பிரிட்டிஸ் அரசு திருகோணமலை துரைமுகத்தில்; தொடர்ந்து இருக்கலாம் என்ற தீர்மானம் நிறைவேற்றியது. பிரிட்டிஸ் அரசாங்கமும் தமது திருமலைதளம் இருப்பதை நகரசபை ஆதரிப்பதை சுட்டிகாட்டி வாதிட்டது. திருகோணமலை நகரசபையை அரசு வாங்கியதால் மட்டும் இது நிகழ்ந்திராது. தமிழ் தேசியவாதிகளின் பாரம்பரியமான பிரிட்டிஸ் சார்புநிலையாலும் இது நடந்தது. இந்தியா கோவாவை இணைத்தபோது மேற்க்குநாடுகள் அதை ஆக்கிரமிப்பு என்றனர்.

இத்தகைய நிலையை தமிழ் நடுத்தரவர்கத்தின் அரசியல் சக்திகளான தமிழரசு தமிழ்காங்கிரஸ்,தமிழர்சுயாட்சிகழகம், உட்பட்டவை சகலசக்திகளும் ஏகாதிபத்தியத்திற்கு மறுப்பு சொல்லாத அரசியலை செய்;தன. தமிழ்மொழி,தமிழர்பிரச்சனை,இல்லாவிட்டால் இந்த தமிழரசுகட்சி போன்ற கட்சிகளே கிடையாது. தமிழர் பிரச்சனை தீரக்கூடாது என்பதில் தமிழரசு முதல் சிங்கள இனவாத கட்சியான யு.என்.பீ வரை கூட்டாய செயல்பட்டன. எப்படி தமிழனவாதம் இல்லாவிட்டால் தமிழரசுக்கட்சி இல்லையோ அப்படியே சிங்களதேசியம் இல்லாவிட்டால் எல்.என்.பீ அடுத்த மணித்தியாலத்திலேயே இல்லாது போய்விடும். எனவே இரு பகுதியும் இனவாதத்தை மறைமுகமாய் காத்தர்கள். மேற்கு நாடுகள்,இலங்கையுள் தலையிட ஏன் இந்தியாவும் தலையிட ஏதுவான நிலையை இது நிரந்தரமாக்கியது. இங்கு எல்.எஸ்.எஸ்.பீ பலமுறை பிரச்சனைகளை எதிரிட்டது தமிழ், சிங்கள இனவாதிகள் எல்.எஸ்.எஸ்.பீயை சுற்றி வளைத்து தாக்கினார்கள் தொழிளாளர் வர்க்க இலட்சியத்தை பலவீனப்படுத்தினர். தொழிளாளர் வர்க்க இயக்கமான எல்.எஸ்.எஸ்.பீ தொடர்ந்து வளர்ந்திருந்தால் தமிழ்,சிங்கள இனவாதிகள் பலம் குறைய தொடங்கியிருக்கும் இடதுசாரிகளின் அரசியல் பலம் குறைந்த போதே இனமோதல்களும்,தமிழர்கள் மேலான தாக்குதல்களும் அதிகரித்தன.சிங்கள அரசு கருமமொழிச்சட்டம் வந்தபோது “இந்தநாடு இரண்டாக பிளவுபடபோகிறது,தமிழ்மொழிபேசம் நாடாக ஒன்றும் சிங்களமொழி பேசும் நாடாக இன்னொறமாக இலங்கை உடையப் போகிறது.ஒரு சிங்களக் குடியரசும் மற்றொரு வடக்கு,கிழக்கு இனைந்த கொமன்வெல்த் நாடுகளில் அங்கம்பெறும் தமிழ் அரசம் உருவாகப்போகிறது என்று எச்சரித்தவர்கள் எல்.எஸ்.எஸ்.பீயினர்தான்.தமிழ்தேசியவாதிகள், சிங்களதேசியவாதிகள் என்ற இரண்டு பிரிவும் முக்கியமாக பிரிட்டனினால் இயக்கப்படுவதை அவர்கள் கண்டார்கள். தமிழ் அரசுகட்சியின் சமஸ்டி முறை பிரிட்டிஸ் அரசியல் மாதிரியைப் பார்த்து எழுந்தது எனில் ய+.என்.பீ க்கு ஆதரவாக பிரிட்டிஸ் அரசு தொடர்ந்து செயல்பட்டதுடன் பிரிட்டிஸ் தூதரகம் இன்றுவரை தேர்தல் முதல் சகலதிலும் யூ.என்.பீக்கு அதரவான தலையீடு செய்து வருகிறது என்பது அறியாத ஒன்றல்ல யாழ்பாணத்தில்தான் முதன்முதலில் இளைஞர்காங்கிரஸ் தொன்றி முழு இலங்கை மக்களின் விடுதலை பிரிட்டிஸ் ஆட்சியிலிருந்து சுதந்திரம் அன்று பிரகடனப்படுத்தியது இதற்கு எதிராகவே தமிழ்காங்கிரஸ்,தமிழ்அரசுகட்சி போன்றவைகள் தமிழினவாத நடுத்தரவர்க்கம் உருவாகியது ஏதோ சய நிர்ணய உரிமையை தேசிய இனப்பிரச்சனையை எல்.எஸ்.எஸ்.பீ விளங்காமையால்தான் தமிழ்தேசியவாதிகளை ஆதரிக்கவில்லை என்று சில நேர்கோட்டுச் சிந்தனையாளர்கள் நினைக்கிறார்கள். எல்லா தேசிய விடுதலை இயக்கத்தை மாக்ஸியவாதிகள் ஆதரிப்பதில்லை. ஏகாதிபதியம்களின் அரவணைப்பில் எழும் போராட்டங்களை எப்படி ஏற்பது. தமிழ் தேசியவாதிகள் முழு இலங்கை மனிதர்களுக்கும் ஆபத்தாயினர்.சிங்களமொழிச் சட்டத்தடன் தமிழ்மொழிக்கும் சம இடம் கோரி எல்.எஸ்.எஸ்.பீ எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தியபோது ஒன்றில்கூட தமிழரசு தமிழ்காங்கிரஸ் கலந்துகொள்ளவோ,ஆதரவுக் காட்டவோ இல்லை. 1955 ஒக்ரொபரில் கொழம்பு நகர மண்டபத்தில் எல்.எஸ்.பீ நிங்கள அரநகருமொழிச் சட்டத்துக்கு எதிராக கூட்டத்தை நடத்தியபோது யு.என்.பியும் தீவிர வலதுசாரிகளும் குழப்பம் விலைவித்து கைக்குண்டு வீசினர் இதில் எல்.எஸ்.எஸ்.பீ தலைவர்களில் ஒருவரான ரெஜிமெட்டிஸ் தனது இடது கையை இழந்தார்.பல தொகையானோர் காயமடைந்தனர்.இதைக் கண்டிக்கவோ எல்.எஸ்.எஸ்.பீயுடன் இணைந்து எதிர்ப்புகளை முன்னெடுக்க தமிழினவாதிகளின் கட்சிகளும் தயாராக இருக்கவில்லை அதை யு.என்.பிக்கும் எல்.எஸ்;.எஸ்.பீக்குமான அரசியல் பிணக்கு என்பதாக திரித்தனர்.

1958இல் நடந்த இனக்லவரத்தை “தற்காலத்துக்குத் திரும்புதல்” என்று கொல்வின் ஆர்.டி சில்வா குறிப்பிட்டாh. எஸ்.பொவும் 1972 அரசியலமைப்பு சட்டத்துக்காக கொல்வினையே காரணம் சொன்னார்.இலங்கைக்கு புதிய அரசியல் அமைப்பை உருவாக்கும் திட்டம் 1956ல் சிறிலங்கா சுதந்திரகட்சி மற்றும் எம்.ஈ.பி கூட்டரசாங்தில்தான் முதன் முதலில் இருந்தது.அதற்கான ஒரு பாராளுமன்றத் தெரிவுக்கு குழு நியமிக்கப்பட்டது.இதையே 1970 தேர்தலில்…………சிறிமாவோ பண்டாரநாய்க்கா அரசு திரும்பவும் கொண்டுவந்தது.அவர் இடதுசாரிகளுடன் இணைந்து நாட்டை குடியரசாக்க முயன்றனர். தமிழ் தேசியவாதிகள் அரம்பம் முதலே புதிய அரசியலமைப்பை பகிஷ்கரித்ததுடன் அதை இலங்கை தமிழர்களுக்கு எதிராகவே கொண்டுவரவதாக பேசதொடங்கியது. புதிய அரசியலமைப்பு சட்டம் பிரிட்டிஸ் முடிக்குரிய அரசிடம் இருந்து இலங்கை மக்களை விடுவித்து இலங்கை மக்களிடம் முதலாளித்துவ ஜனநாயக உரிமைகளை கொண்டு வந்தது. பிரிட்டிஸ் ஆதரவு தமிழ் இனவாதிகளே இதை எதிர்த்து நின்றனர் தமிழருக்குச் சட்டம்,தமிழ் உரிமை,என்ற சாட்டில் இலங்கை மக்களின் எதிரிகளாக தேசத்துரோகிகளாக மாறினர். புதிய அரசியலமைப்புச்சட்டம் சிங்களத்தில் உள்ள சட்டங்கள் தமிழ் மொழி பெயர்ப்புடன் வழங்கும் ஒழுங்கும் இருந்தது.வடக்கு கிழக்கு பகுதிகளில் தமிழ் அரசு,நீதிமன்றம் மொழியாக இருந்தது. இதை கூடப்பாவிக்க தமிழ் தேசியவாதிகள் தயாராக இருக்கலில்லை. எஸ்.பொ.இங்கு எல்.எஸ்.எஸ்.பீ லேக்ஹவுஸ் தேசிய மயமாக்க முயன்றதை ஏன் எதிர்க்கிறார்? இன்றைய யு.என்.பி தலைவர் ரனில் விக்கிரமசிங்காவின் தந்தை எஸ்மன் விக்கிரமசிங்காதான் தேசியமயமாகும் போது லேக்கவுஸ் உடமையாளராக இருந்தார். ஜெ.ஆர் இன் உறவினர் விஜயரத்தினாதான் முதலாளி. அது இடதுசாரி எதிர்ப்பு ஊடகமாகவும் இருந்தது. அதைத்தான் எல்.எஸ்.எஸ்.பீ அரசுடமையாக்க முயன்றது. மக்கள் சொத்தாகியது. இதற்கு ஏன் எஸ்.போ வுக்கு குலப்பன்காச்சல் வருகிறது சிங்கள தேசியவாதத்தை பிரச்சாரம் செய்யும் ஒரு ஊடக நுpறுவனத்தை ஒடுக்கினால் ஏன் தமிழ் தேசியவாதி எஸ்.பொ வுக்கு ஒவ்வாமை நோய் பரவகிறது?

இளம் இலங்கைத் தேசம் தேசியம் வளரத்தக்க பொருளியல் வாய்த்திராத அனுபவமற்ற பிஞ்சுநிலை முதலாளிய அரசியல் கொண்டதாக இருந்தது. சுதந்திரம்,ஜனநாயகம்,இவைகளை அனுபவித்து வளர்ந்திராததாக இருந்தது இங்கு தமிழ்,சிங்கள தேசியவாதிகள். ஏகாதிபத்தியத்தின் வளர்ச்சியடைந்த இராஜதந்திரம் முன்பு நின்று பிடிக்ககூடியவர்களாவும் இருக்கவில்லை. ஒரே இலங்கைத்தேசத்தின் மக்களாக தமிழ்,முஸ்லிம்,சிங்கள மக்கள் பரிணமிக்கத்தக்க சுயபொருளாதார பலம் இருக்கவில்லை. எனவே அன்னியசக்திகள் இவர்களை இன,மதரீதியில் ஆளுக்கொருபக்கமாக பிரித்தனர்.பிரிவினைப்போக்குகள் அன்னிய சக்திகளாலேயே இந்தியாவில் நடந்தது போல் இலங்கையிலும் விதைக்கப்பட்டது.இந்தியாவில் இந்துமதவாதிகள் சீக்கியர்கள்,திராவிடர்கள்,அ+ரியர்,தலித்தியம்,முஸ்லீம் எனச்சகல போக்குகளும் ஏதோ ஒரு வகையில் அன்னிய ஏகாதிபத்தியத்துடன் தொடர்பூண்டு இருந்தது.இந்திய நடுத்தரவர்க்கத்தின் வளர்ச்சி,ஜனநாயகமயமயமாதல்,மேற்க்கு அரசியல்,சமூக சிந்தனை போக்குகளின் வளர்சியால் மட்டும் இவை நிகழ்ந்து விடவல்லை. இந்தியாவிலிருந்து பாக்கிஸ்தானைப் பிரித்ததில் பிரிட்டனின் பங்கு இருந்தது. கோவா,ஹைதராபாத்,காஸ்மீர்,அரசுகள் இணைந்தபோது இந்தியாவுக்கு மேற்கில் இருந்து எதிர்;ப்புக் காட்டபட்டது.எனினும் இந்தியாவின் மொழிப்பிரச்சனையை மாநில அரசுமூலம் ஓரளவு தீர்க்குமளவு இந்திய முதலாளித்துவத்துக்கு சிறிய மூலதனமாவது இருந்தது. ஆனால் இலங்கையில் தமிழ்,சிங்கள,பிரச்சனை என்பது அன்னிய சக்திகளின் நேரடிப்படைப்பாகும். இது ஏதோ தனியே சிங்கள தேசியவாதத்தின் பிடிவாதத்தில் நடந்ததோ,தமிழ் நடுத்தரவர்கத்தின் அன்னியசக்திகளின் சொல் கேட்கும் புத்தியாலும் மட்டும் நிகழ்ந்து விடவில்லை. இலங்கை சுதந்திரம் பெற்றபோது 7 விகித மக்களே ஆங்கில மொழியறிந்தவராக இருந்தனர்.93 விகிதம் சிங்கள,தமிழ் மொழியே பேசினர். சுதந்திரத்தின் பின்பு ஆங்கில மொழியின் இடத்தை சிங்கள,தமிழ் மொழிகள் பெறுவது இயற்கையான விடயமாக இருந்தது. நாட்டின் மொத்தமக்கள் தொகையில்71 விகிதமானோர் சிங்கள மக்களாகவும் தமிழர் 11 விகிதமானவர்களாகவும், மலைய மக்கள் 10 விகிதமானவர்களமாகவும்,15 விகிதம் முஸ்லீம் மற்றும் இந்தியதமிழர்கள் சிங்களம்,தமிழ் இரண்டு மொழிகளைப் பேசுபவர்களாகவும் இருந்தனர். மலேயா முஸ்லீம்கள் 0.3விகிதமாகவும் பறங்கியர் மற்றம் ஐரோப்பிய மக்கள் 0.4 விகிதமாகவும் இருந்தனர். போத்துகேய, மலேய மொழிகள் சிறு அளவில் பேசப்பட்டன.1948 இன் பின்பு ஆங்கிலம் அரசகருமமொழி என்ற இடத்தை இழக்க வேண்டியக்கட்டாயம் இருந்தது. போத்துகேயர்,ஒல்லாந்தர், பிரிட்டிஸ்காலத்தல் பெரும்பாண்மை மக்களின் மொழியான சிங்களம் அரசகருமமொழியாக இருந்ததில்லை. கண்டிராச்சியத்தில் தமிழ்மொழியை அரசமொழியாக ஏற்கும் மனப்பக்குவம் சிங்கள மக்களுக்கு இருந்தது. அவற்றில் தமிழ்மொழி சிறுபான்மையினர் மொழியென்று நினைக்கவில்லை. ஆனால் சுதந்தரத்தின் பின்பு நாட்டின் அரசியலுக்கும் சமூக வாழ்வுக்கும் ஏனைய மொழிகளை விட பெருமளவு மக்களின் மொழியான சிங்களம் முக்கியமாக இருந்தது.இது சிங்கள தேசியவாதத்தால் திணிக்கப்படவில்லை.உலகில் எல்லா முதலாளிய நாடுகள் போலவும் பெரும்பான்மை மக்களின் மொழியாகவும் அது தன் முக்கிய இடத்தைக்கோரியது.பிரிட்டிஸ் அ+ட்சிகாலத்தில் சிங்கள மொழி உரிமைக்கு சிங்கள மக்கள் போராடியிருந்தனர். ஆனால் தமிழ் மக்கள் மத்தியிலிருந்து ஆங்கிலமொழிக்கு எதிரான நேரடிப்போராட்டங்கள் இடம்பெறவில்லை.

ஆனால் 1950களில்தான் தமிழ்உரிமைக்கோசம் சிங்கள மக்களுடன் சேர்ந்து வாழ்ந்த தென்னிலங்கை அல்லது கிழக்குமாகாணத்தமிழ் முஸ்லீம்; மக்களிடமிருந்து கேட்வில்லை மலையக தமிழ் மக்களிடமிருந்து எழவில்லை மாறாக தனித்தமிழ் பிரதேசத்தில்வாழ்ந்த யாழ்குடா நாட்டுத்தமிழ்ரிடமிருந்தே எழுந்தது ஆங்கிலச்செல்வாக்கும் இலங்கையின் சிறந்த ஆங்கிலப்ள்ளிகளை உடையவர்களிடமிருந்தே எழுந்தது. ஆங்கிலம் பேசி கழிசான் போட்வர்கள் மட்டுமே படித்தவர்களாக மனிதர்களாக மதிக்ப்பட்ட நடுத்தர மக்களிடமிருந்தே பிறந்தது. ஆங்கிலம் தெரியாதவர்கள் படியாதவர்களாக கருதிய சமூகத்திடமிருந்தே வந்தது. ஜி.ஜி பொன்னம்பலம் போன்ற யாழ்பாணத்தமிழ் மக்களின் பொரும் அரசியல்வாதிகள் பேசுவது. எழுவது மட்டுமல்ல யோசிப்பதும் ஆங்கில் மொமியிலேயேதான். பொன்னம்பலம் டிக்சனெறியில் இல்லாத ஆங்கிலம் பேசும் அறிவாளி என்று புழுகுவதற்க்கு என்றே பென்சன் எடுத்த கூட்டம் யாழ்பாணப்பகுதியில் இருந்தது. பொன்னம்பலம் மேடையில் பேசும்போது ஆங்கிலச் சொற்களுக்கான தமிழ்ப்பதத்தை அருகேயுள்ளவர்களிடம் அடிக்கடி கேட்பது வழக்கம் இது சிலசமயம் நடிப்பாக ஆங்கிலமொழியை வழிப்பட்ட சமூக மொன்றினை தனது ஆங்கில மேதமை குறித்து வியப்பில் அ+ழ்த்தும் செயற்பாடாகவே இருந்தது. பொன்னம்பலத்தின் சகோதரன் ஒரு கிறிஸஸ்தவபாதிரியார். இவர்கள் இருவரும் கிறஸ்தவசூழலிலேயே இருந்து வளர்ந்தவர்கள் பொன்னம்பலத்திடம் தமிழ்பற்றோ இலங்கைமக்கள் சார்ந்த தேசிய உணர்வோ ஒருபோதும் இருந்ததில்லை ஆனல் தேர்தல் சமயத்தில் மட்டும் பொன்னம்லம்பட்டு வேட்டி சால்வை நெசனல் போட்டு சந்தனப்பொட்டு குங்குமப்பொட்டு; கைதடியுடன் சனங்களிடயே உலாத்துவது வழக்கம் தேர்தலில் வென்றபின்பு அவர் கொழும்பு. 7 வீடு தோட்டம். மலேசியாவின் தோட்டம் என்பவற்ரில் படுத்துறங்கி ஒய்வெடுக்கவும் பார்வையிடவும் சொந்தசோவிகட்குப் போய்விடுவார். ஒரு போதும் யாழ்பாணத்துக்கோ, பருத்திதுறையிலோ தங்குவது கிடையாது வழக்குக்குமட்டுமே யாழ்பாணம் வருவதுண்டு மற்றபடி அரசியல், வழக்கு அதுசார்ந்த உiழுப்பு பிழைப்பு எல்லாம் கொழும்போடுதான் கடைசியாக யாழ்யாணத்தொகுதியில் ஜி.ஜி பொன்னம்பலம் தோற்கடிக்கப்பட்டு 3வது இடத்தை பெற்றபோது தனது சொந்தசெலவில் வாக்குச்சீட்டுக்களை 3தரம் எண்ணி தோல்வி நிச்சயப்படுத்தபட்ட போது அவர் கடைசியாகசொன்னவார்த்தை “நன்றிகெட்டதமிழச்;சனம”; என்பதாகும். இது பொன்னம்பலத்தின் அரசியல் போக்கிரித்தனத்துக்கு கிடைத்த தோல்வியாகும். நன்றி கெட்ட பொன்னம்பலம் தமிழ் மக்களை நன்றிகெட்டவர்களாக்கினார் ஊர்காவற்துறை நவரத்தனத்துக்கு அடுத்து தமிழ் ஈழழ் கேட்டவர்களில் ஒருவரான சுந்தரலிங்கம் கணக்கில் புலி மகாராணிக்கு கணக்கு படிப்பித்தவர் என்ற உண்மை பொய் அறியாச்செய்திகள் உலாவின. சுந்தரலிங்கம் சரியானதடிப்புபிடித்த அரசியல்வாதி வாக்குகேட்கபோகும்போது கூட வழியில் அவர் தனது லாண்ட்றோவர் வாகனத்தைவிட்டு இறங்கிபோகமாட்டார். தன்னைஎதிர்த்துபோட்டியிட்ட வுவனியா சிவசிதம்பரத்தை அவர் ஜெ.சி படித்தவரென்று மேடைகளில் அரசியல் பேசியவர். இதன்மூலம் கல்வியறிவற்ற முழுவன்னிவிவசாயிகளையும் சுந்தரலிங்கம் மானம்கெடுத்தினார். தான் பெரும்படிப்படித்தவன் என்ற செருக்குதான் சுந்தரலிங்கத்திடம் இருந்தது. அ+னால் லண்டனில் மெத்தப்படித்த சுந்தரலின்கமும் ஜெ.சி படித்த வவுனியாசிதம்பரமும் செய்த அரசியல் எந்தவித்தியாசமுடையதல்ல சிங்கள எதிர்ப்பு பேசிய இவர்கள் பாராளுமன்றக்கூட்டம் முடிந்ததும் கொழும்பில் உயர்வர்த்தகத்தினர்கூடும் கிளப்புகளில் ஒன்றாய் கூடித் தண்ணியடிக்குமளவு சிங்கள அரசியல்வாதிகட்க்கு நெருக்கமாகவிருந்தனர்.

மேடைகளில் மோட்டுச்சிங்களவன் மஞ்சள்துண்டுக்கு கழுத்தறுக்கும் சிங்களவன். எனப்பேசிய தமிழ் தேசியவாதிகள் தமிழனை சுருட்டுக்கும் தேத்தண்ணீருக்கும் வாங்கலாம் என்று பேசிய சிங்கள இனவாதிகட்க்குக் குறைந்தவர்களில்லை. 1958 இனக்கலவரம்பற்றி 50 வருடம் கடந்தும் தமிழ் தேசியவாதிகள் பேசுகிறார்கள் ஆனால் இனக்கலவரத்தைமூட்டிவிட்டவர்களில் தமிழ் அரசுக்கட்சியும் ஒன்றாக இருந்;து அகிம்சை பேசிய தமிழரசுக்கட்சியின் ஆட்கள் கிழ்க்கில் ரெயினைமறித்து தீவைத்து சிங்களவர்களை கொலைசெய்தபின்பே பழைய நுவரெலியா நகரமேரைகளுவாஞ்சிக்குடியில் வைத்து கொலைசெய்தபின்னரே சிங்கள இiவாதிகள் இதை தொடக்கமாகவைத்து தென்னிலங்கையில் தமிழர்களைத்தாக்கினார்கள். இக்கலவரத்தில் 6,700 தமிழர்கள் கப்பல்மூலம் யாழ்பாணத்துக்கு அனுப்பபட்டபோது திருகோணமலைத்துரைமுக்த்திலிருந்து 2,700 சிங்களவர்கள் கொழும்புக்கு அனுப்பப்பட்டார்கள் என்பதையும் தமிழினாதிகள் பேசிதில்லை 1958 இனக்கலவரத்தைதூண்டும்சக்திகளாக அன்னியசக்திகள் இருந்தன என்ற கருதுகோள்கள் மறுக்ககூடியவையல்ல.

கார்த்திகேயனைக்கூட பெருமளவு
மதிப்புமரியாதையுடன் எழுதாத எஸ்.பொ தமிழரசுக்கட்சிசெல்வநாயகத்தை சகலரும்மேலாக உயர்த்தி தந்தை, எந்தை என்கிறார். ஏதோதமிழரசுகட்சியில் இருந்து வளர்ந்தவர்போல் அவர் தந்தை தந்தை உச்சரிக்கின்றார். செல்வநாயகத்தை தமிழ்காங்கிரஸ்மேடைகளில் மந்தை செல்வநாயகம் என்று குறிப்பிட்டார்கள் தீப்பொறிப்பத்திரிகை அதென்ன தந்தை தந்தையில்லா குழந்தைகட்கெல்லாம் இவர்தான் தந்தையா என்று எழுதியது. காங்கேசந்துறை தொகுதியில் கிராமமக்கள் செல்வநாயகத்தை கிழவன் என்றுதான் குறிப்பிடுவர்கள் இன்றையதமிழ்மக்களின் அழிவுக்கு புலிப்பாசிஸ்டுகள் மட்டும்பொறுப்பல்ல செல்வநாயகமும் முழுப்பொறுப்பாகும் தமிழ்ஈழம்கேட்ட செல்வநாயகம் பின்பு பாராளுமன்றத்தில் பேசும்போது தமிழ்மக்களை கடவுள்காப்பாற்றவேண்டும்; என்று குறிப்பிட்டார் தமிழ்ப்போராட்டத்துக்குவழிகாட்டத்தெரியாதவர்களே தனிநாடுகேட்டர்கள், செல்வநாயகத்தின் சாந்தமானகுணம், அதிர்ந்து பேசாத்தன்மை, உரத்து பேச முடியாத நரம்புவியாதியால்பாதிக்கப்பட்டதன்மை என்பன அவருக்கு நல்லமனிதர் தோற்றத்தை எற்படுத்தியது. அவர் சிறந்த பேச்சாளரோ, அறிவாளியோ, எழுத்துத்துறை சார்ந்த தகுதிகளோ படைத்திராதவர் அல்ல பொன்னம்பலம் தேர்தல் மேடைகளில் ஏ செல்வநாயகம் உனக்குஎன்னைவிடவயதுகுறைவு வா இரண்டுபேரும் அடிபட்டுப்பார்ப்போம் யார்வெல்கிறார்கள் என்று பார்க்கலாம் என்று அழைப்பதுவழக்கம் கிட்டதட்ட இதற்க்கு சமமான அரசியலையே செல்வநாயகத்தின் கட்சியும் செய்தது. எல்.எஸ்.பீ எஜ் தலைவர்கள் செல்வநாயகத்தைவிட சிறந்த்பேச்சாளர்கள், அதிகம் எழுதியவர்கள், கல்வியாளர்கள் தொழிலாளர்கள் ஏழைமக்களுக்காக அரசியலைச்செய்தவர்கள். அவர்கள் தந்தை தளபதி இரும்புமனிதர், தேசித்தலைவர், பெரியார் என்றும் மக்களுக்கு மேலாக எந்தப் பட்டங்களும் வரித்துக் கொள்ளாதவர்கள் செல்வநாயகம் கட்சி எப்போதாவது பரிட்டனை எதிர்த்து அவர்களின் கொலனிக்காலத்தையாவது பரிட்டனை எதிர்த்து பேசியதுகிடையாது. சங்களவரைஎதிர்த்துக்கொண்டு பிரிட்டிஸ் அரசை ஆதரித்தவர்கள் அவர்கள். தம் சொந்ததேசத்து மக்களை வஞ்சித்துக்கொண்டு பிரிட்டிஸ் எசமானர்களைவிசுவாதித்தவர்கள். ஆனால் எல் எஸ்.பி தொடக்கத்திலேயே பிரிட்டிஸ்சார்பு “இலங்கை தேசியகாங்கிரஸ்சை எங்கும் எதிர்த்து நின்றார்கள். 1936 இல் பிலிப்குணவர்த்தன அவிசாவலைத்தொகுதியிலும் என்.எம். பெரோரூவான் வெலத் தொகுதியிலும் எஸ்.ஏ விக்கிரமசிங்க அக்குரைசைத்தொகுதியிலும் போட்டியிட்டார்கள். கூட்டங்கள் ஆங்கிலத்துக்கு பதிலாக சிங்களமொழியில் பேசத்தொடங்கினார்கள் ….. இவர்களின் மூலம்தான் சோசலிசம் மாக்சியம் போன்ற சொற்கள் அவற்றின் விஞ்ஞான அரசியல் அர்த்தத்தில் மக்களிடம் வந்து சேர்ந்தன. அன்று தொழிலாளர்கட்சி எனப்பட்ட தொழில்கட்சி சோசலிசம் பேசவில்லை என்பதுடன் இலங்கைவரலாற்றிலேயே முதல் முதல் மட்டுமல்ல இந்தியதுனைக்கண்டத்திலேயே “ஸ்டாலிசம்” பற்றிய அரசியல் மதிப்புடையவர்கள் எல்.எஸ்.பி மட்டுமே இருந்தது. 1937, 1938 மொஸ்கோவழக்குகள் ஸ்பெயின் உள்நாட்டுப்போர் ஸ்டானிசத்தின் ஜக்கியமுன்னித்தந்திரங்கள் கொலனி நாடுகளின் விடுதலை 3ம் அகிலத்தின் முடிவு 4ம் அகிலத்தின் தொடக்கம் இவைகளைப்பேசி, எழுதி விவாதித்த ஒரே இந்தியத்துனைக்கண்டக்கட்சி எல்.எஸ்.பி மட்டுமே. ஸ்டானிச அரசியலுக்கு மாறாக மாக்சியத்தின் அரசியல். மதிப்பீடுகள் சகலதையும் கொண்டு வந்தார்கள்.

2ம் உலகயுத்தத்தை முதலாளித்துவயுத்தம் என்றுமதிப்பிட்டதுடன் பிரிடடிஸ் அரசுக்கு மேலும் ஆதரவு தரக்கூடாது என்ற பிரச்சார இயக்கத்தை நடாத்தியது. பரிட்டன், ஜேர்மனி இடையேயுத்தத்தை நாம் உள்நாட்டுயுத்தமாக ஏகாதிபத்தியத்திடமிருந்து விடுதலை பெறும் போராக மாற்றவேண்டும். யூக்கோசிலாவியா, சீனா, இந்தோனேசியா பலஸ்தீனம், பிலிப்பைன்ஸ், மொராக்கோ, வியட்னாம் ஆகியநாடுகளில் மக்களோடும். தொழிலாளர்களோடும் நாம் இணையவேண்டும் என்று கொல்வின் ஆர்.டி சில்வா போன்றவர்கள் பேசினர் ஏகாதிபத்தியர்களுடன் சமாதானம் இல்லை ஸ்டாலினிசத்தின் ஐக்கிய முன்னித்திட்டம் வர்க்க சமரசமாகும் முதாலாளியையும் தொழிலாளர்களையும் ஒன்றாய்கூடிவாழக்கேட்பது வர்க்கம்களை ஒன்றய்கரைக்கமுயற்சிப்பது என்ற விமர்சனத்தை வைத்தனர், பிரான்ஸ் இத்தாலி, கிரிஸ் ஸ்பெயின், ஆகியநாடுகளின் சோசலிவ நாடுகள் இரண்டாம’; உலகயுத்தம் முடிந்தகட்டத்தில் எகாதிபத்தியங்கள் இச்சந்தர்ப்த்தை பயன்படுத்திக் கொண்டனவே தவர அதற்க்குமாற்றாக சோவியத்யூனியனுக்கு ஒரு சிரு சலுகையும் நற்பயனையும் காட்டவில்லை, ஜேர்மனியில் நாசிகட்க்கு எதிராக எஸ்.பிடி யும் கொமினிஸ்கட்சியும் கூட்டுக்குவரவிட்டால் கட்டாயம் நாசிகள் அதிகாரத்தைகைப்பற்றுவார்கள் பாசிசம் வந்துவிடும் என் ரொட்ஸ்கி மாக்ஸியவாதிகளையும். சோவியத்யூனியனையும் திரும்பத்திரும்ப எச்சரித்தார் அதை அலட்சியப்படுத்தியமையின் பலனை ஸ்டாலினிசத்தின் தீர்க்க தரிசனமின்மையை சோவியத்மக்கள் மட்டுமல்ல ஜேர்மனியமக்களும் அனுபவிக்கவேண்டிவந்தது ஸ்;டாலின் 1935 இல் ஸ்nயின் சர்வாதிகாரி பிராங்கோவுடனும் பின்பு கிடலருடனும் ஒப்பந்தத்திற்க்கு போனபோது உலகின் மாக்சிய இயக்கங்களும் தொழிளாளர்அமைப்புகளும் இது தவறில் முடியும் என்று எச்சரித்தனர் மீண்டும் அது அப்படியே நடந்தது ஸ்டாலினிசை அரசியல் மதிப்பீடுகள் மீண்டும் அது அப்படியே நடந்தது ஸ்டாலினிசை அரசியல் மதிப்பீடுகள் மீண்டும் மீண்டும் தோல்வியுற்றன.
கிட்லருடன் சேர்ந்து ஸ்டாலின் போலந்தையும் லெத்லாந்து, லத்துலேனியா போன்றநாடுகள் ஆக்கிரமித்தபோது பங்குபோட்டு பிரித்துகொண்டபோது ஜேர்மனிய பாரிச இராணுவமான “றநாசஅயஉhவ” உடன் செம்படையினர் அங்கு ஒன்றாய் கைகுலுக்கிகொண்டபோது உலகின் மாக்சியவாதிகள் வாயடைத்துபோயினர். ஜேர்மனியில் தினம்தினம் செத்துக்கொண்டு இருந்த கொமினிஸ்டுகள் கடும் கோபமும் வெறுப்பும் அடைந்தனர். பின்பு சோவியத்ய+னியன் கிட்லரால் தாக்கப்பட்டபோது அது பலருக்கு அதிர்ச்சியழித்தது. ரோடஸ்கியின் கருத்துகளை தெரிந்தவர்கட்கு இது அதிர்ச்சியளிக்கவில்லை.
தமிழ்ர்கடகு 50க்கு 50 கேட்டவராக இன்றுவரை பொன்னம்பலம் தமிழ்தேசியவாதிகளால் நினைவகூரப்படுபவர் இது பொன்னம்பலம் என்ற கெடடிக்காரரின் மூளையில் கண்டறியப்பட்டதாக விளக்கங்கள் தரப்பட்டது. இதுவும் பிரிட்டிஸ் அரசியலில் இருந்து பெறப்பட்டதாகும். டொமினியன் அந்தஸ்டைய குடியேற்றநாடுகளான வெள்ளையர் அதிகமாகவவாழும் அவுஸ்திரேலிய, கனடா, எனபன ஏற்க்கப்பட்டபோது பிரிட்டிஸ் அரசியலில் 50க்கு50 என்ற குரல்கேட்கதொடங்கியது. இதையே பொன்னம்பலம் தனதென வரித்துக்கொண்டார். 1944 இலேயே என தமிழ் சிங்களம் இரண்டும் அரசகருமமொழி மொழிச்சமத்துவம் நிலவினாலே இலங்கையர் என்ற உணர்வு பிறக்கும் மொழிப்பிரச்சியில் அன்னிய சக்திகள் தலையீடு உள்ளதால் இதை தீர்ப்பது அவசியம் என்று எல்.எஸ்.எஸ்.பீவாதிட்டது. பௌத்தமதம் சிங்கள அனத்துக்கு உரியது சிங்கள மொழி பௌத்தமத்தின்காவலர் என்ற சிங்கள இனவாதிகளின் கருத்தையெட்டி 1955இல் பாராளுமன்றத்தில்பேசிய என்.மெ; பெரெரா சீனாவிலும் இந்தியாவிலும் பர்மாவிலும் பௌத்தர்கள் இல்லையா. அங்கு பௌத்தம் சிங்கள மொழியாலா பாதுகாக்கப்படுகிறது அவர்கள் சிங்கள மொழியை பேசுகிறவர்களா என்று கேட்டார் அவர் மொழிப்பிரச்சானையை நாம் பொருட்படுத்தாமல்விட்டால் அது வடகொரியா தென்கொரியா ஒத்த பிரச்சனையாகிவிடும் என்று கூறினார்.

1956 இல் பாராளுமன்றத்தில் பேசிய கொல்வின் ஆர், 4, சில்வா நான் உறக்கமற்ற இரவுகளைக் கடந்து வந்துள்ளேன் என்று தொடங்கி “மொழிப்பிரச்சைனை என்பது இலங்கைக்குமட்டும் உரியீதான ஒன்றல்ல விடுதலை பெற்றதென்கிழககு ஆசிய மக்கள் கொலனி நாடுகட்டும் உரியதாகும். அவர்கள் இதுவரையிலான உத்தியோக பூர்வமானமொழிகளை மாற்றுகிறார்கள் அரசமொழி சிங்களமொழி போன்ற பிரச்சனைகள் எற்படுகின்றன இந்தியாவில் இந்திமொழிப்பிரச்சனை ஏற்பட்டது. பரிந்தபாகிஸ்தானில் இருந்தும் கூட உருது மற்றம் வங்காளமொழிப்பிரச்சைனகள் ஏற்படுகின்றன 45 விகிதம் மக்களது மொழியான வங்காளம் பிரிவினையை கொண்டுவரும் நிலையில் உள்ளது சிங்கள தமிழ்மொழிப்பிரச்களைகளும் இதற்கு சமமானதே” என்ற அவர் சிங்கள மொழிச்சட்டம் செமிட்டிக்எதிர்ப்புச்சட்டத்துக்கு நிகரானது என்று கூறினார் இந்தியா பாகிஸ்தான் பிரிவினை மட்டுமல்ல அன்றே 1950 களிலேயே பாகிஸ்தானில் இருந்து வங்காள தேசம் உருவாகும் பரிவினைஎற்படும், என்பதை கொல்வின் மதிப்பிட்டவர். தமிழரசுக்கட்சியின் சமஷ்டி பிரிவினைதான் மொழிக்கொள்கை கவனிக்கப்படாவிட்டால் எதிhகாலத்தில் ஆபத்தான வடிவை எடுக்கும். இது ஜின்னாதவின் பாகிஸ்தான் கோரிக்கைக்கு சம்மாக வளர்ந்துவிடும் என்று டுளுளுP கூறியது. தமிழ் சிங்கள இனவாதிகளின் செவித்துவாரங்களில் இது புகவில்லை. அவர்கள் அமெரிக்க பிரிட்டிஸ் தூதரகங்களில் சொல்லப்படுபவைகளைக்கேட்க தம்மை அர்ப்பணித்திருந்தனர்.

1955 இல் டுளுளுP யின் சிறந்ததலைவர்களின் ஒருவரான லெஸ்லிகுனவர்த்தன சுவிற்சர்லாந்து உதாரணத்தைக் காட்டிப்பேசினார் 74 விகித ஜேர்மனியர்கள் 21 விகித பிரான்ஸ் காரர்கள் 4விகித இத்தாலியர்கள் 1 விகித ரோமானியர்கள் ஆகிய மக்களினம் கொண்ட நாலரை மில்லியன் மக்கள் தொகையுடைய நாட்டைப்போல் இலங்கைப்பிரச்சனையையும் தீர்க்முடியும என்று அவர் உதாரணம் சொன்னார். லெஸலிகுணவர்த்தன இதை கூறி 50 வருடம் கழித்து புகலிடத்தில் உள்ள தமிழ் ஜனநாயகவாதிகள் எனப்படுவோர் கூடும் இடங்களில் தாமே சுவிற்சாலந்து மாதிரியை முதல் முதல் கண்டுபிடித்து பரப்புவதால் உரிமைகோரிக்கோரிக்கொண்டனர் இந்த சமாதானவாதிகட்கு ஏகாதிபத்தியநிழலில் இருந்துகொண்டு அரசியல் உரைப்பவர்கட்க்கு இலங்கை வரலாறோ, இடதுசாரிவரலாறோ, மட்டும் தெரியாமல் போகவில்லை. தமிழ் மக்களின் பிரச்சனையை பொருளாதார தொடர் புகளிலிருந்து பிரித்து ஏதோ மொழிப்பிரச்சனை சட்டம்மூலம் உறுதி செய்தல் மூலம் தீர்ந்துவிடும் எனக்கருதினர்.

சிங்கள அரசகரும மொழிச்சட்டம் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டபோது அதை எதிர்க்க டுளுளுP உடன் சேர்வேண்டிய தமிழரசு, தமிழ்காங்கிரஸ் இரண்டும் அவர்களை எதிர்த்து நின்றன. செல்வநாயகம் பாராளுமன்றத்தில் பேசுகையில் டுளுளுP கொம்யூனிஸ்கட்சிகளுக்கு இது ஒரு அரசியல் பிரச்சனை தமிழர்கட்கு வாழவா சாவா என்ற பிரச்சனை எனக் கூறினார் செல்வநாயகம் போன்றவர்கட்கு தமிழர்களின் மொழிப்பிரச்சைனை என்பது சட்டப்புத்தகங்களில் இடம்பெறச்செய்யும் பிரச்சனையாகவும் மக்களின் வாழ்நிலையோடு பொருளாதார இயக்கத்துடன் சம்பந்தப்பட்டதாக பார்க்கத் தெரியாது போயினர். தமிழ் உண்ர்வுகள் ஊடாகவே பார்த்தனர். செல்வநாயகம், பொன்னம்பலம், சுந்தரலிங்கம், வன்னியசிங்கம், போன்றவர்கள் சிங்கள இனவாதிகளைவிட இடதுசாரிகளான டுளுளுP யினரையே தாக்கினர். இவர்களை எதிர்ப்பதி;ல் யு.என.பி தமிழ்க் கட்சிகளிடையே மிகுந்த ஒற்றுமை காணப்பட்டது. சிங்கள இனவாதிகள் “நீங்கள் யாழபாணத்துக்கு போங்கள் நீங்கள் யாழ்பாணத்தவர்களாலோ கிழக்குமாகாணதவர்களோ தெரிவு செய்யப்படவில்லை. எனவே உங்களுக்கு தமிழர்களுப்பற்றிய பேச உரிமையில்லை” என்று டுளுளுP பார்த்து ஊறியபோது தமிழ் தேசிய வாதிகள் “நீங்கள் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப் படுத்தவில்லை நாம்தான் தேர்ந்தெடுக்கப்பட்டோம் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் நீங்களில்லை” எனச்சொன்னார்கள். இருபகுதி இனவாதிகளும் தமிழ், சிங்கள பிளவுகளை நிரந்தரமாக்கமுயன்றனர். இரு பரிவு மக்களின் கூட்டுவாழ்வு மற்ற இனப்பிரிவினருக்கதாக வாதிடுவது வெறுக்கப்பட்டு டுளுளுP ஒதுக்கப்பட்டது. தமிழ் சிங்கள இனவாதிகள் தீவிர மனித வெறுப்பு நோய்க்குள்ளாயினர் இங்கு இடதுசாரிகளின் அரசியல் டினமானது இருபக்க இனவெறியர்களுடனும் அவர்கள் நாள்முழுக்க மல்லுக்கட்டவேண்டியிருந்தது. 1930களில் இறுதியிலேயே தனது கட்சியின் இளமைக்காலத்திலேயே டுளுளுP ஆங்கிலமொழிக்கு பதிலாக சிங்கள தமிழ்மொழிகள் அரச கருமொழியாக அரசசேவை நீதிமன்றம் பொலிஸ் இலங்கையில் இரண்டுமொழிகளும் பங்கேற்க வேண்டும் எனக்கோரியது.

தமிழ் தேசியவாதமும் டுளுளுP யும்

சிங்களத்தேசியம் என்பது வரலாற்று ரீதியாக தமிழ் தேசியத்தில் இருந்து பெருத்த மாறுபாடுடையதாகும் தமிழ் தேசிய்வாதிகள் சங்கிலியன், பண்டாரவன்னியன் கைலாயவன்னியன் போன்ற யாழ்பாண மற்றம் வன்னிசிற்றரசர்களையே சுதந்திரவீரர்;களாக கருதினர். வடக்கு வெளியே பிரிட்டிஸ்; உட்பட அன்னியர் ஆட்சியை எதிர்த்து பேரிட்டவர்கள். அவர்கள் அறியமாட்டார்கள் கௌரவம்தரமாட்டார்கள் பிரிட்டிஸ் ஆட்சியை எதிர்த்துபோரடிய கெப்பிட்டிப்பொல, கொங்கலகொடபண்டா, புரான் அப்பு வென்குடப்பொல, வென்வேரிப்யப்பொல், அமங்கலதேரோ, போன்ற புரட்சியாளர்களைக்கண்டு பெருமைப்படமாட்டார்கள் அவர்களுக்கு சிங்களவர் என்ற அடையாளம் மட்டுமே தரப்பட்டது. கண்டியின் கடைசிமன்னன் சிறிவிக்கிரம்ராஜ சிங்கன் என அழைக்கப்படும். கண்ணுச்சாமியை தமிழ் தேசியவாதிகள் கண்டிய சிங்களவர்களை அடக்கி ஆண்ட தமிழன் என்ற தமிழ் இனவாதப்பெருமையால மட்டுமே போற்றினார்கள் அப்போது கண்டியில் அரசாங்கமொழியாகத் தமிழ் இருந்தது. கண்டி இராச்சியம் பிரிட்டிஸ்காரரிடம் வீழ்ச்சிசயடைந்தபோது கண்டியரசன் உட்பட சிங்களப்பிரதானிகள் பிரிட்டிஸ் அரசுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தில் தமிழிலேயே கையொப்பமிட்டனர் என்ற செய்தியை தமிழ் அரசுக்கட்சிகாரர்கள் சொலிப் பெருமைப் படாதமேடைகிடையாது. சிறவிக்கிரமராஜ சிங்கன் பிரிட்டிஸ் அரசுக்கு எதிராகப் போரடிய வரலாற்றை இவர்கள் பெருமைப்படுத்துவது இல்லை மாறாக தமிழன் கண்டியில் சிங்களவனை ஆண்டான் என்றே பெருமை பேசினர்.
இலங்கைவரலாற்றில் பிரிட்டிஸ் அரசை எதிர்த்த சிங்கள, முஸ்ஸிம் புரட்சி யாளர்களைப் பொருட்படுத்தாத தமிழ் தேசியவாதிகள் வீரபாண்டியகட்டப்பொம்மனை மருதுபாண்டியர்களை சினிமா ஊடாகத்தெரிந்து கொண்டு போற்றினார்கள் ஆனால் புரான் அப்புவையும் கெப்பிடிப்பெபொலவையும் அவர்கட்கு தெரியாது. சுபாஸ்சந்திரபோஸையும் மகாத்மாகந்தியையும் போற்றிய இலங்கையின் சுத தெரிந்தமட்டத்துக்கு கொல்வின் அர்.டி சில்வா.என்.மெ.பெரெரா லெஸ்லிகுணவர்த்தனவை தெரியாது. தமிழ் இனவாதிகள் சிங்களவரால் ஆளப்படுவதைவிட பிரிட்டிஸ்சால் ஆளப்படுவதை விரும்பினார்கள் என்பதே உண்மை, இலங்கை தழுவிய உணர்வு, இலங்கைமக்கள் என்ற உணர்வு சிங்கள முஸ்ஸிம் மக்களிடம் நிலவிய அளவுக்கு ஏன் இலங்கை பறங்கியரிகளிடம் நிலவிய மாதிரி இலங்கையர் எந்த எண்ணம் தமிழ் நடுத்தரவர்த்திடம் நிலவவில்லை 1948 இல் இலங்கை சுதந்திரத்தின் பின்பு கண்டியின் கடைசி அரசன் சறிவிக்கிரமராஜசிங்கனின் சிங்கக் கொடியே இலங்கைகொடியக ஏற்கப்பட்டது. இந்த கொடியை தெரிவு செய்ய ஏற்படுத்தப்பட்ட பாராளுமன்றக்குழவில் இருந்த கொடியை தெரிவு செய்ய ஏற்படுத்தப்பட்ட பாராளுமன்றக்குழுவில் இருந்த செனட்டர்நடேசன் தமிழ் மன்னனின் கொடி இலங்கை கொடிஙாக ஏற்கப்படுவது இலங்கையுpன் இன ஒருமைப்பாட்டின் அடையாளமாக இருக்கும் எனக்கூறினர். சிறவிக்கிரம் ராஜ சிங்கன் தமின் என்று கொண்டாடியோர் அவன் கொடியை சிங்களவர் கொடி என்றனர். உண்மையில் சிறிவிக்கிரமராஜசிங்கன் தமிழனாக்ககருதப்பட்டாலும் மதுரை நாயக்கர் வம்சத்தை சேர்ந்த தொலுங்க ராவான் அவனை இலங்கை வரலாற்றில் தமிழனாக்கிவிடார்கள்.

1957இல் வாகனங்களுக்கு சிறி எழத்தை கொண்டுவந்தபோது தமிழ்சறி, சிற்களசிறி என்ற சண்டைமூணடது. இருபகுதியும் தமக்குச் சொந்தமல்லாத சிறிக்கு போரிட்டனர் அவை தமக்கு உரியது என்று வாதிட்டனர். சிங்களப்பகுதகளில் தமிழ் எழுத்துகட்டு தார் பூவதாக கூறி தமிழரசுக்கட்சியும் சிங்கள எழுத்துக்கட்கு முன்பு வாகனங்களில் இருந்து ஊலுஇஊடுஇ ஊNஇநுலுஇநுடுஇ நுN என்ற எழுத்துகளுக்கு பதிலாகவே சிறி போட்டவாகளஇலக்கத் தகடுகள் புரியவாகம் கட்டுத் தரப்பட்டது தமிழ்ரசுக்கட்சி தமிழ சிறி தகடுகள் புhதியவாகளம் கட்டுத் போடும் உரிமை வேண்டும் எனக்கேட்டதுடன் சட்டவிரோதுமாக தமிழ் சிறியை நமது வாகளம்டிபாறித்து ஓடத்தொடங்கழயது. பிணம்கள் மேலேயே ஒடமுடியும் எனறு தமிழ் ரசுத்கட்சி சூழ் உரைத்தனர். ஆன்ல் பின்பு அதே சிங்களசிறிவாகனம் களில் தாம் ஊநுலுடுழுN என்பதன் எழுத்துக்களே பெறிக்கப்படன இந்த ஆங்கில எழுத்துகளை எந்த் தமிழ் இனவாதியும் எதிர்த்து இயக்கம் நாடாத்தியதில்லை அது அன்னய எழுத்து என்று ஆர்ப்ட்டம் செய்த்தில்லை.

இலங்கையில் சிங்கள மக்கள் மத்தியல் கல்வி கற்றவர்கள் மிகவும் கறைவாக இருந்தனர். தென்னிலங்கையில் சில முக்கிய இடங்கள் தவிர சிறந்த பாடசாலைகள் இருக்கவும் இல்லை, பெருமளவு சிங்கள அரசியல் வாதிகள் யாழ்பாணக்குடாநாட:டு ஆங்கில பாடசாலைகளிலேயே படித்தார்கள் யாழ்குடாநாட்டைபோல. கிறஸ்த்தவமிஸநெறிகள் நடத்திய ஆங்கிலப்பள்ளிகள் தென்னிலங்கையில் பெருமளவு இருக்கவில்லை. எனவே சிங்கள மக்கள மத்தியில் பெருமளவு கலவியாளர்கள் தோன்றவில்லை. பிரிட்டிஸ் அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டபுரட்சியாளர்கள் தொமிளாளர்கள் வர்க்கத்தில் சிறந்த தலைவர்கள் சிஙகள் மக்கள் மத்தியில் இருந்Nது தோன்றினார்கள். யாழ்குடநாட்டு நடுத்தரவர்க்கம் ஆங்கில வாத்தியார்கள், அரசேசேவையாளக்கும் அதிய மதிப்பும் சமூகமரியாதையும் கிட்டியது. தமிழ் வாத்திமாரின் வேட்டிக்கட்டுக்கு சம்பளம் குறைவு பொம்கிளை எடுப்பதும் கடினம் ஆங்கிலம் பேசுவது பெருமிதமானது.

தமிழர்கள் பெயர்த்து பிரிட்டிஸ் ஆட்சிகாலம் முதவே அரச உயர்ப்தவிகளை வகித்தனர் தோவிந்தபிள்ளை ஆழ்வார்ப்பிள்ளை பிரிட்டிஸ் ஆட்சியில் (ஊஊளு) இலங்கை நிர்வாகசேவையின் முழு இலங்கைக்கான அதிகாரிகயாக இருந்தார். 1942 இல் இரண்டாம் உலகயுத்ததை டெப்பியூட்டிக் கொமிசன்ற் 1960இல் இவர் பாராளுமன்றச்செயளாளர். பாதுகாப்பு உள்நாட்டு அமைச்சுச்செயளாளர் பெற்ரோலியகூட்டுத்தாபனத்தலைவர். இவரைப் போலவே சிறக்காந்தா வைத்தியநாதன் எம்.ராnpந்திரா ராஜிகுமாரசாமி போன்றவர்கள் இலங்கையின் அதி உயர்ந்த அரச பதவிகளுக்கு கொண்டிருந்தனர். பிரேமதாஸாவின் நிரந்தரச்செயளாலர் பாஸ்கரலிங்கம் முதல் சிறமாவோபண்டரறாயக்கி பண்டாரநாயக்க ஜெ.ஆர் சகலரின் அந்தரங்கச் செயளாளர்கள் தமிழர்களாகவே இருந்தனர். இங்கு இடதுசாரிகளின் அரசியல் சிக்கலானதாக இருந்தது. உயர்ந்த மற்றும் அரச நிர்வாகவேலைகளில் இருந்த தமிர்களின் உழைல்களை அம்பலப் படுத்தியபோது உடனே அது தமிழர் எதிர்ப்பு என்று திசைதிருப்பட்டது.

11 என்.எம். பெரேர

“தான்கற்றிருந்த பொருளாதார சூத்திரங்களை அறிமுகப்படுத்தியவராக” என்.மெ பெரேராவுக்கு எஸ்.போ எழுத்து அறிமுகம் செய்துள்ளார் என்.எம் போன்ற இடதுசாரிகளின் பொருளாதரம், தத்துவம் சார்ந்த கற்றறிவு மிகப்பெரியவை எஸ்.பொ போன்ற தேசியவாதிகளின் இட்டுமுட்டுப்படும் சிந்தனைகட்கு இது அகப்படாது உலகம் பிடிபடாது என்றலும எஸ்.போ தனக்கு புலப்படாததுறைகளில் தலையீடு செய்பவா தன்விளக்கபாடுகளில் மேலான உரிமை கோர்லாக அது ஆகிவிடும் என்று அவருக்கு எண்ணத்தெரியவில்லை தன் கல்வி பற்றியசுய புழுகுபடைத்தவரான எஸ்.பொவுக்கு என்.மெ.இன் கல்விதகமைபற்றி உறுத்தல் நிலவியதாலேயே பொருளாதரசூத்திரம்களைத் முயன்றவராய் காட்டப்படுகிறார்க. என்.எம் இலங்கையின் முதலாவதாகப் பிரிட்டனில் ய.Pர்னு.இ ய.னுளுஊ பட்டங்கலுடன் இலங்கைபல்கலைக்ழத்தில் னுழஉவழச ழக ளுஉநைnஉந பட்டம் பெற்றவர். கழகத்தில் ய.டீளுநு பட்டமும் பெற்றவர் லண்டனில் ளுஉhழழட ழக நுஉழழஅiஉள இல் புகழ்பெற்ற பொருளாதாரதுறைப் பேராசிரியரான ர்யசழடன டுயளமi இடம் பயின்றவர் ஜெர்மனியின் றுநiஅநச சுநடிரடமை வரை தன் பட்டப்படிப்புக்கு ஆரய்ந்தவர். எஸ்.போ போல இலங்கை பல்கலைக்கழகத்தில் நுழையமுடியாமல் இந்தியா போய் படித்தும் படிக்காமலும் பட்டம் வாங்கியவரல்ல அல்லது புலிகபாசிச தத்துவாதி அன்ரன் பாலசிங்கம் போல் அரசியல் விஞ்ஙானத்துறையில் பட்டம்பெறாமலே கலாநிதிபட்டம் சுமந்தவரல்ல ஆக்கப்பட்டவரல்ல இலங்கை முதலாளிய ஊடகங்கள் கூடலை தங்கமூனை என்று அழைத்தது உண்டு அவர் தன் வாததிறனும் பரந்த அறிவாவாலும் சேனனாயக்கா முதல் ஜோன் கொத்தலாவ முதலானசிந்தனை யாளர்களை பாராளுமன்றவிவாதங்களில் துவம்செய்தவர் 1940 இல் பிரிட்டிஸ் அரசால் சிறைவைக்கப்பட்டபோது இலங்கையில் முதல் முதலில் மாக்ஸிசின் சிந்தனையான ஒவ்வொரு குழந்தைக்கும் இலவசக்கல்வி என்ற கருத்தை நூலாக எழுதனர். அலவசக்கல்வ pபள்ளிப் பிள்ளைகட்டுமதிய இலவச உணவு இலவசப்பாடப்புத்தகங்கள் முதலிய கருத்துக்களை வெளியிட்டார் மலேரியா நோய்எதிர்ப்பு இயக்கத்தில் அவர் தீவிரமான பங்கு கொண்டு தொழளாளர் குடியிருப்பு கட்டும் ஏழைவிவசாயிகளிடம் சென்று உழைத்தவர். ஏழை மக்கள் மத்தியில் மலேரியா நோய் காலத்தில் பருப்புலினியோகித்த படியால் அவரை “பருப்பு மாத்தையா” என்று கிராமமக்கள்.

என்.எம் நிதி அமைச்சராக வந்தவுடன் பழைய 50,100 ரூபாய் நோட்டுக்களை செல்லுபடியாகாத ஆக்கி புதிய 50, 100 ரூபாய் நோட்டுக்களை கொண்டுவந்தர் புழக்கத்தில் இல்லாது பதுக்கப்பட்டிருந்த பல மில்லியன் ரூபாக்களை அவர் வெளியே கொண்டுவந்தர் செல்வந்தர்களாலும் ஒரளவு வசதி படைத்த்வர்களிம் அவரைச் சபித்தனிர் யாழ்
குடாநாட்டின் முடக்கப்பட்;டிருந்த பெருந்தொபப்பணம் கள்ளக்கடத்தல் காசுகள் வெளியே கொண்டுவரப்பட்டது. எழைகள்மேல் வரிகள் குறைக்கப்பட்டு செல்வந்ததரின்மேல் வரிகள் உயர்த்தப்பட்டது உதாரணமாக வருடம் 6,000 ரூபாய் 12,000 வரை வருமானம் பொறுபவர்கட்க்கு 2 விகித வரியும் 25,000 முதல் 60,000 ரூபாய் வருமானம் உடையவர்கட்கு 10 விகித வரியும் அறவிடப்பட்டது 60,000 முதல் 140,000 ரூபாய் வருமானம் உடையவர்கட்கு 20மூ வரியும் அறவிடப்பட்டது பெரும் நிறுவனம்கள் பெருமளவு அரசுடமை ஆக்கப்பட்டதுடன் மற்றவைகட்கு வருமானதில் 50 விகித வரியாக விதிக்கப்பட்டது. அவர் காலத்தில் முதன் முறையாக இலங்கை வரலாற்றில் வரமானவரி 1974இல் 1000 மில்லியன் ரூபா வைத்தாண்டியது Phடைடipள, ளுநைஅநளெ ஆகிய சர்வதேச நிறுவனங்கள் மேல் பல கட்டுப்பாடுகளும் புதிய கண் காணிப்பும் கொண்டுவரப்பட்டது இலங்கயில் பரிட்டிஸ் ஏகபோக நிறுவனமான டீசழழமந டீழனெ தேயிலை நிறுவனம்மேல் வரிஉட்பட புதிய கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டது. இந்தியாவில் கொச்சின், கல்கத்தா மற்றும் ஆபிரிக்காவில் மொம்பாசா போன்ற இடங்களில் கிளை நிறுவநங்களை கொண்டிருந்த இந்த நிறுவனம் இலங்கை இடது சாரி அரசின் பெரும் சத்துராதியாக மாறியது.

என்.எம்.பெரே காலத்தில் 1973 இல் இலங்கையின் வருடாந்த ஏற்றுமதி 2493 மில்லியன ரூபா வாக அதிகரித்தது இது 1966இல் 1676 மில்லியன் ரூபாவாக மட்டுமே இருந்தது 1966இல் தேயிலைறப்பர் தெங்குப் பொருள் உற்பத்தி 1560 மில்லியன் ரூபாவாக இருந்தது இது 1973இல் 1929 மில்லியன் ரூபாவாக அதிகரித்தது விவசாயிகளிடமிருந்து அரசு கொள்முதல் செய்யும் புசல் நெல்லின் விலை 14 ரூபாவிலிருந்து 33 ருபாவாக அதிகரிக்கப்பட்டது. விவசாயிகள் கோதுமைமா இறக்குமதிக்கட்டுப்பாடு காரண்மாக குரக்கன், சோழம் தினை எள்ளு கச்சான் என்றும் மறக்கப்படடிருந்த பழைய பயிரினங்களைப் பயிரிட்டனர் மரவள்ளி வற்றாழங்கிழங்கு ராசவள்ளிகிழங்கு கறணைக்கிழங்கு என்று பெருமளவு கிழங்குகள் பயிர்செய்யப்பட்டு சந்தைக்குவந்தன விவசாயமுயற்சிகள் அதிகரித்தமையால் பொருமளவு விவசாயத் தொழிலாளிகள் உருவாகினர் மிளகாய் வெங்காயம் என ஏக்கர் கணக்கில் பயிர் செய்யப்பட்டது வீட்டுக்க வீடு பயன்தரும் மரக்கறி நடும்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டதுஇ. 1972இல் காணிச்சீர்திருத்தம் செய்யப்பட்டபோது பெருந்தோட்டங்கள் எல்லாம் அரசு மயமாக்கப்பட்டது. சிங்கள, தமிழ் முதலாளிகளிடமிருந்து தோடடங்கள் பறிக்கப்பட்டது. தமிழர் கூட்டணி உடனே தோட்ட தோழிலாளிகளை வெளியேற்றி விட்டு சிங்களவர் குடியேற்றுவதாய் பிரசாரம் செய்தது. இன்று கிழக்pல் சிங்களவரைக் குடியேற்றுவதாக புலிகளும் தமிரசுக்கட்சியும் கூறுவது போலவே அன்றும் பொய்பிரச்சாரம் நடந்தது. தேயிலைத் தூட்டத் தொழிலாளர்களாக எங்காவது சிங்களவர் உள்ளார்களா? இத்தழன நடந்தது இவைகள் முதலாளிய இரசு மட்டத்தில் செய்யப்பட்ட சீர்திருத்தங்கள் தான் எனினும் பெரும்பான்மை ஏழைகள் தொழிலாளர்கள் விவசாயிகளின் நிலமைகள் சிறப்புற்றது எஸ்.பொ இவற்றை எதையும் ஆராயப் புகவில்லை மாறாக தன் சொந்தவீட்டு பிரச்சனையால் இட்டு நிரப்புகிறார் எஸ்.பொ விட கல்வி பொருளாதாரம் சமூகவாய்ப்பு தொழில்புரியவும் தோட்டத்தில் பிரையானசப்படவும் போராடுகறார்கள் என்ற உணர்வு அவரிடம தென்பட மறுக்கிறது. அவர் தனது நடுத்தரவர்க்கத்தின் பாதிக்கப்பட்ட விடையங்கள் பற்றியே சுய முறையீடுகள் செய்கிறார். என். எம் பெரேரா இன் சீர்திருத்தங்கள் எங்கள் உண்வுப்பழக்க வழக்கங்களை பாதித்தன குத்தரிசிச்சோறு மட்டுமே சாப்பிட்ட … பிள்ளைகள் வத்தாளங்கிழங்கு மரவள்ளிக்கிழங்கும் சாப்பிடுவதை வெறுத்தனர் என்று எழுதும் எஸ்.பொ சீனிவத்தாளைக் கிழங்கு மரவள்ளிக்கிழங்கு பலாக்காய் போன்ற் ஏழைகளின் உண்வுவகைகள் மேல்தட்டாரின் மேசைக்கும் வரவேண்டும் என்று என்.எம் பெரெரா ஏழைகளின் உணவுவகைகள் Nமுல்தட்டாரின் Nமுசைக்கும் வரவேண்டும் என்று என்.எம் பெரெரா சொன்னதையும் கூடவே குறிக்கிறார்

உண்மையில் நோகாமல் கொள்ளாமல் வாழ்ந்த நடுத்தரவர்க்கம் இக்காலத்தில் வாடிவரங்கத் தொடங்கியது உத்தியோகத்தருக்கு சமமாய் விவசாயிகள் நிமிர்ந்தனர் சோம்பல்படாமல் கோதுமைமாவை இறககிச் சாப்பிட்டவர்கட்கு அரிசிமா, ஆட்டாமா, குரக்கன்மா என்று வந்த போது அதற்கு பழக்கப்பட நாள் எடுத்தது தமிழன் தமிழ்த்துவம் பேசும் எஸ்.பொ சுதேசிய உணவு வகைகளையும் வினிவத் தாளங்கிழங்கும் மரவள்ளிக்கிழங்கும் கூடச்சாப்பிட இல்லாமல் இருக்கும் இலட்சக்கணக்கான தமிழ்க் குழந்தைகளாவது இவரின் நினைவில் தட்டுப்படவில்லை. ஒரு சமுதாயப்ப பிரச்சனையை தான் விவாதிப்பதை அவர் உணரவில்லை அவர் திரும்ப திரும்ப அதை தனி மனிதப்பார்வையுள் தனது சொந்தகுடும்பம் பற்றிய மதிப்புக்களிலேயே வந்து முடிக்கிறார் தன்பிள்ளை டொக்டர் என்ஜீனியர் எத்தவுண்டன. ஆகவேண்டும் தன் சொந்த அண்ணன் தம்பி கோதரிபிள்ளைகள் படியாமல் நோட்டழக்க எற்பதுதானே காவாலியாக …………. வேண்டும் என்பது தானே யாழ்ப்பாண நடுத்தரவர்க்கக்குணம். சீனி இறக்குமதி தடைசெய்யப்பட்டு உள்நாட்டு சீனிஉற்பத்தி ஊக்கு விக்கப்பட்டது. உட்னடியாக மக்களின் தேவைக்கேற்ற உற்பத்தியை அவர்களால் செய்யமுடியவில்லை சீனத்தட்டுபாடும் கியூவும் ஏற்பட்டது மக்கள் சீனியை நக்கியே தேனீர்குடித்தார்கள் பனங்கருப்பெட்டியும் திப்பிலிபக்கருப்பெட்டியும் சக்கரையும். பனஞ்சீனியும் கறுப்புச்சீனியும் பேரீச்சம்பழமும் பாவனைக்கு அதிகமாய வந்தன அவற்றோடு மக்கள தேநீர் குடித்தார்கள் கடைகளில் தேநீருக்குள் இரகசியமாய் சக்கரீனைக் கலந்தார்கள் வன்னிப்பகுதிகளிப் பாலைப்பழம் உட்படகாட்டில் உள்ள இனிப்புப் பழம்பள் சேகரிக்கப்பட்டு பாணிகள் காய்ச்சப்பட்டன தேன்பாவளையும் அதிகரித்து இந்த நிலரகைள் 2-3 வரடங்களே நிகழந்தன உள்ளுர் உற்பத்தி பொருகியவுடன் மக்களின் நுகர்வுக்குத்தேவை யானவை சந்தைக்கு வந்தன இங்கு எஸ்.பொ.வின் உணவுப்பொருள் தட்டுப்பாடு என்பது ஆரம்பத்தி;ல் நிலவிய பிரச்சனையே ஆனால் தமிழ். சிங்கள வலது சாரிகள் வலது சாரிகள் பொருள் தட்டுப்பாடு ……… மக்கள் நிற்பது கியூவில் பற்றித்திரும்ப திரும்ப முறையிட்டார்கள் யூ.என்.பிதாம் பதவிக்கு வந்தால் தேவையான உணவுப் பொருட்களைத் அமெரிக்காவில் இருந்து தருவிப்போம் என்றார்களெ தவிர ஒரு சுயசார்புப் பொருளாதாரத்தின் தேவையை அது சார்ந்த உள்ளுர் வளர்ச்சி மக்களின் தொழில் வாயப்பு இவற்றைப் பேசினாரல்ல எஸ்.பொ வுக்கு இது தான் திரும்ப திரும்ப நடக்கிறது மக்களின் தரப்பில் நின்று பிரச்சனையை கண்காணிக்கத் தெரியவில்லை ஒரு விவசாயியாக சாதாரண இலங்கையின் மனிதர்களாக அடதுசாரி கூட்டரசு காலத்திய பொருளாதாரச் செய்ற்பாடுகளை எண்ணத் தெரியவில்லை தேநேருக்கு பதிலாக காட்ட என்ற சங்களச்சொல் தமிழ் வழக்கத்துக்கு வந்தது என்று எஸ்.பொ எழுதிகிறார் இதில் என்ன புதிமை தமிழ்மொழியில் இருந்து சிங்களத்துக்கும் சிங்களத்தில் இருந்து தமிழுக்கும் மொழிகள் ஏராளமாய்ச் சென்றுள்ளது. இது பல ந}று நருடங்களாக நிகழ்ந்துவரும் செயற்பாடாகும் தமிழ்மொழி தூயமொழியாக அன்னியமொழி கலக்காமல்h இருக்கிறது? அன்னியமொழிகலவாக தூயமொழி உலகில் இருக்கிறதா சிங்களச் சொற்கள் தமிழில் கலந்தால் எஸ.பொ வின் தமிழ்துவத்துக்கு கோபம் வருகிறது தமிழில் ஆங்கிலம் கலக்கும்போது அவருக்கு அந்தக் கோபம்வராதா எஸ்.பொ தூயதமிழிலா எழுதுகிறார் பேசுகிறார் காரும் வுஏயும் ரோழயேயும் இயயகைக்கு வந்தபோது இச்சொற்கள் தமிழில் புகவில்லையா,? இங்கு ஆங்கிலவ் சொற்கள் தமிழில் கலப்பதை ஏன் இந்ததுஐய மொழிக்காவலர் எஸ்.பொ எதிர்த்து களம்புகவில்லை என.மெ.பெரெரா காலத்தில் கொழும்பில் மாடிவீடுகளில் பூஞ்செடிகளுக்க பதிலாக மிளகாய் கன்றுகள் வளர்த்தனர் தமிழ். சங்கள முஸ்லீம் நடுத்தரவர்க்கமே தன் நுகர்வுக்கு தட்டுப்பட்டது ஆனால் விவசாயிகள் சாப்பாட்டுக்குத் தட்டுப்படவில்லை அவர்களிடம் அரிசியோ சோளமோ கௌவபியோ கடைசி தோட்டத்தில் மரவள்ளிக்கிழங்கோ இருந்தது அடதுசாரிகள் கூட்டரசாங்கம் காலத்தில் உலகவங்கி சமூகச்செலவை குறைக்கும்படி நிர்பந்தித்தது கடன்களை தரமறுத்து பல தடைவ இடைவிடாது தடைகளை ஏற்படுத்தியது என்.மெ.நீதி மந்திரியாக இருந்தசமயம் சர்வதேச வஙகியின் கூட்டங்களில் பேசும்போது தனியே இலங்கை அரசின் பொருளாதாரத்தை பற்றிப்பேசவில்லை இந்தியா பாகிஸ்தான் உட்பட ஆசியநாடுகளது ஒன்றித்த பொருளாதர நடவடிக்கைகள் பொதுநிதி உருவாக்கும் திட்டங்களைப் பள்றிப் பேசினார் அப்போது ஆசியப்பிராந்தியத்தில் உலகவங்கி நிர்வாகியாக இருந்த Pநவநச ஊயசபடை அவரின் கருத்தக்களை அடியொற்றிய பேசவேண்டி வந்தது இறக்குமதி கட்டப்பாடு அன்னியச் செலவாணிக் கட்டுப்பாடு உள்ளளுர் உற்பத்தியை வளர்ப்பது பேன்ற பொருளாதார செயல்பாடுகள் மக்களை வருத்தும் செயலாகத் தெரிகிறதே தவிர இவை சுயசார்புப் பொருளாதார முயற்ச்சி அக்காலத்தில் தேசிய பொருளாதாரத்தைக் காக்கும் செயல் என்று எஸ்.பொ வுக்கு பார்க்கத் தெரியவில்லை இவை அர்த்தமற்றவை என்று கரதுகிறாருர்?

“பணநோட்டுக்களை எல்லாம் செல்லாமல் ஆக்கி சமசமாஜிகள் காசு சம்பாதித்தர்கள்” என்று எஸ் பொ திரவபதர்ஷார்த்தம் அருந்தி நிலையிலோ நிதானமில்லாத நிலையிலோ எமுதுகிறார் சமாஜிகள் வந்தால் விகாரை கோவில்களை இடித்து விடுவாhகள் என்று கூறப்பட்டு வந்த பொய்பளின் வரிசையிலேயே இதற்கும் இடம் உண்டு யு.என்.பி.யோ தமிழ் தேசியவாதிகளின் மேடைகளிலோ கூட
இத்தகைய
பொய்கள் சொல்லப்படவில்லை எஸ்.பொ போன்ற ஒரு தேசியவாதப் பொரும் பொய்யர் மட்டுமே இப்படி எழுதமுடியும் இது போகிறபோக்கில் ஏனோதானோ என்று கூறப்பட்டதல் எஸ.பொ எந்த ஆதாரத்திலிருந்து எந்த மூலத்திலிருந்து இதைக் கூறுகிறார். என். எம் பெரெரா உட்பட எல்.எஸ்.எஸ்.பி தலைவர்கள் அரசியல் தவறுகளை இழைத்தார் இவைகளில் பெரும்பகுதி தமிழ், சிங்கள இனவாதிகளின் சுற்றி வளைப்புக்களாலும் ஸ்டாலினிசம் சர்வதேசரீதியாக இழைத்த துரோகத்தினாலும் கொமியூனிஸ்ட்கட்சி தொழிலா அமைப்பை பிளந்ததினாலும் ஏற்ப்பட்டதாகுதம். இலங்கையில் ஒரு சோசலிசப் புரட்சி தள்ளிப்போன நிலமைகளில் முதலாளிய அரசியல் வழக்கம் கட்கு அவர்கள் ஆ;பட்டார்கள் சல சீமயம் திசைதப்பிச்சொன்றார்கள் எனினும் அவர்களின் தவறுகள் இலங்கயின் மிகப் பெரிய தொழிhளர் வர்க்கத்தின் தலைவர்கள் தவறுகள் ஆகும். அவர்கள் தனிப்பட்ட வாழ்வில் தமிழ் சிங்கள வலது சாரி அரசியல்வாதிகள் மத்தியில் நேர்மை மிக்க உளழல் அறியாத அரசியல்வாதிகளாக இருந்தனர் என்பதற்க்கு அனேக சம்பவங்களை நாம் வரிசைப்படுத்த முடியும் பழைய 100ஃ50 ரூபாய்கள் செலுபடியாகாது என்று அறிவித்த காலத்திலர் செல்வந்தர்கள் வங்கிகளில் பணத்தை மாற்ற லஞ்சம் வங்கியாநாட்டு கொடுத்தனர் என்பது உண்மையாக இருந்தது என்ற போதிலும் அதற்க்கு என்.எம். பெரெரா எந்த வகையில் பொறுப்பு அது முதலாளித்துவ அமைப்பின் குணமாகும் இடதுசாரி ஜக்கிய முன்ணனி அரசின் பெரும் கட்சியான சிறிலங்கா சுதந்திரக்கட்சியில் சல மந்திரிகள் லஞ்சம் வாங்கினார் என்றால் அதற்கு இடதுசாசரிகள் எப்படிப் பொறுப்பு சிறிலங்கா சுத்ந்திரகட்சியில் தமிழ் எம்.பி களாக இருந்த அருளம்பலம் தியாகராசா அடிக்காத லஞ்சமா என் எஸ் பொ வின் மச்சான் எம்.சி சுப்பிரமணியம் தனக்கு நெ;ருக்கமானவர்கட்கு அரச உத்தியோகங்கள் பெற்றுக் கொடுப்பதாய் குற்றச்சாட்டு எழுந்ததே. ஸ்டாலினி ஸ்டான பீற்றர் பெனமன வீடமைப்பு நிர்மானத்துறை மந்திரியாக இருந்து கொழும்பில் பெருமளவு வீடமைப்புத்திட்டங்களை மாடி வீடுகளை அமைத்தவர். ஆனல் ஒரு வீட்டுக்கு கூட இலஞ்சம் வாங்கியது கிடையாது ஆனால் பிரேமதாஸா காலத்தில் அமைக்கப்பட்ட வீடமைப்புத்திட்டங்களில் வீட்டுக்கு பிரேமதாஸாவின் மனைவியே நேரடி யாக காசு வாங்கினார் ஜி.ஜி பொன்னம்பலம் மந்திரியாக இருந்த காலத்தில் அடித்hத லஞ்சப் பணத்தில் மலேசியாவிலும் தென்னிலங்கயிலும் பொரும் தோட்டங்கள் வாங்கிய கதையை எஸ்.பொ எழுதலாம் மட்டக்களப்பு இராசதுரையும் வவுனியா சிவசிதம்பரமும் உத்தியோகம் இடது சாரிகள் அரசுடமையாக்க முயன்ற போது உத்தியோகம் எடுத்துக் கொடுக்க காசடித்ததை எழுத்லாம் உடுத்துக் கொடுத்தளமக்டு உபகாதமோக அப்பெண்களைபேபாடயப்ரிதியில் பயன்கடுத்திய விண்ணாரம்களை எஸ்.பொ எழுதலாம் அல்லது லேக்கவுஸ் நிறுவனத்தை இடது சாரிகள் அரசுடமையாகக் முயன்ற போது தழிழரசுக்கட்சியில் அமிர்தலிங்கம் தவிர மற்றய எல்லோருக்கும் லேக்கவுஸ் சந்தோசம் கொடுத்த வரலாற்றை தூசி தட்டிப் பார்ப்பலாம் நாகநாதன் கடைசிக்காலத்தில் காரியம் முடித்துக்கொடுக்க கை நீட்டிய கதைகளை ஆராஙலாம் எல்.எஸ்.எஸ்.பி மீது அரசியல் ரீதியில் தர்க்க ரீதியாக விமர்சிக்க முடியாத எஸ் பொ “எல்லா அரசியல்வாதிகளும் கள்ளர்” என்ற முதலிhளிய அமைப்பு பற்றிய மக்களின் பொதுக்கருத்தை அடதுசாரிகள் மேல் தந்திரமாக சுமத்திவிடுகிறார்கள்.

ஒரு சாராயப்போத்தலுக்காக அரசியல் மேடையேறும் பக்குவம் கொண்ட எஸ்.பொ இடதுசாரிகளைப் பழிக்கப்புகு வது இயல்புதான் பிரிட்டிஸ் எலிசபெத் மகாராணி இலங்கை வந்த போது கொழும்பு மேயராக இருந்தருத்திரா என்ற தமிழருக்கு மகாராணி தனது கையுரையைக் கழட்டிப்போட்டுக் கை கொடுத்தார் என்று புல்லரிக்கும் தமிழ் தேசிவாதிகளைப்போல் இல்லாமல் என்.எம் கொழுமபு மேயராக இருந்து நகரசபை தொழிலாளர்கட்க்கு மாதாந்த முற்பணம் சமபளஉயர்வு ஏழைக்ட்க்கு உதவ மாநகரசபை சுகாதராநிலையங்கள் ஏற்படுத்தியதை எஸ்.போ வும் பேச மாட்டார் அப்போது முழுக்கொழும்பு நகரமே இடது சாரிகளின் கையில் தான இருந்தது. என்.எம் நீதிமந்திரியாக இருந்தகாலம் ஏகாதிபத்தியங்கள் பலமாக இருந்தகாலம் 2ம் உலக யுத்தம் முடிந்தபோது உலகின் மொத்தத் தங்க இருப்பின் 75மூ அமெரிக்காவிடம் போய்ச் சோர்த்து டொலர் உலகமயமாக எறக்கப்பட்டது ஒரு அவுன்ஸ் தங்கம் 35 டொலராக நிர்ணயிக்கப்பட்டது. உலகவங்கி உலகச்சந்தை என்பன இதன் கீழேயே கட்டுப்படுத்தப்பட்து. அமெரிக்கா தனது இருப்பில் உள்ள தங்கத்தின் பெறுமதியை விட 40000 மில்லியன் டொலர் நாணயத்தாள்களை அச்சிட்டு சுற்றுக்கு விட்டது.இதனால் தங்கத்தின் விலை 1971 இல் 180 டொலராக ஒரு அவுன்ஸ்க்கு ஏறியது.இதனால் ஏழை நாடுகள் பொருளாதார ரீதியாக துன்பப்பட்டன.உள்நாட்டு நெருக்கடிகள் வளர்ந்தன. பாகிஸ்தானில் இருந்து வங்காளதேசம் பிரிந்தது. இந்தியாவில் நக்சலைட் கிளர்ச்சிகள் இலங்கையில் 1971இல் ஜெவிபியின் கிளர்ச்சி அதையடுத்து தமிழர்களின் ஆயுத நடவடிக்கைகள் எழுந்தன.எனவே இங்கு என்.எம். இன் தவறுகள் பிழைகள் என்பதற்கு அப்பால் ஏகாதிபத்தியங்கள் ஏற்படுத்திய பொருளாதாரப் பிரச்சனையில் இலங்கையும் சிக்கியிருந்தது.அந்த சூழலில்தான் இலங்கையின் சுய பொருளாதாரத்தைத் தட்ட என்.எம் முயன்றார். 1970இல் அவர் பதவிக்கு வந்ததும் யுஎன்பி இரகசியமாக பாராளமன்றத்துக்கு கூடத்தெரியாமல் பெற்றிருந்த பெளிநாட்டுக்கடன்களின் விபரம்களை வெளியிட்டார் இலங்கை வரபாற்றின் லளபெற்று கழைக்கப்பட்ட யேயெலயமமயசயியவாசையபந அயவin pநசநசய ஒருகாத்தின் குறி ஆயிரம் செல்லநாயகம்கள் பெயள்ளம்பிலம்கள் சேர்ந்தாலும் ஒருலளக்கு சம்மாகம்hட்டார்கள் N.ஆ கொல்ஆர் பு. சிய ………….. என்று உண்மையான பாட்டாளி வர்க்கக்கட்சி கொம்யூனஸஸ்கட்சியென்றும் தான் ஆக்காலத்தில் யாழ்பாணத்தில் பேசியதாக எஸ்.பொ நினைவுகூர்ந்துள்ளார் அன்று போலவே இன்றும் அவருக்கு “குட்ப முதலாளித்துவம்” பாட்;டளி வர்க்கம் “ரொட்ஸ்கி” போன்றவற்றுக்கு எந்த அரசியல் அர்த்தமும் தெரியவில்லை இந்த சொற்களின் அரசியல் பாதம் என்ன என்பது அவருடைய 50 வருட அரசியல் வாழ்வில் புலப்படத்தக்க தருணம்களும் வாய்த்தில்லை பேட்டதை சொல்லப்பட்டதை எம் காதுகளில் பொருள் புரியாமலே ஒதிச்செல்கிறார். செல்வநாயகத்தை தந்தை என்று அழைக்கத்துணிந்தவர் தர்மகுலசிங்கம் போன்ற யாழ்பாணத்தின் மிகச்சிறந்த தொழிலாளர் தலைசர் பற்றி ஒரு சிறு மதிப்புமிக்க குறிப்பை கூடத்தரவில்லை யாழ்பாண இடதுசாரி இயக்க வரலாற்றை தர்மகுலசிங்கத்தை விட்டு எவரும் எழுதமுடியாது டு.ளு.ளு.P பற்றி பிழையான காட்சிகளே அவரால் தரப்படுகிறது “ஏழுத்துக் தவம்” பற்றி வழி நெடுக புசப்பும் எஸ்பொ விடம் தனது சொந்தமனசாட்சிக்கு பொதறுப்புச்சொல்லும் கட்டாயம் கூட தென்படவில்லை அறியாமலோதகவல் இன்மையாலோ மட்டும் இது நிகழ்வில்லை. அரசியல் மாறு பாட்டாளர்கள் மீது காட்டும் வெறுப்புதான் சர்வ வியாபகமாக அவரை வழி நடத்துகிறது தன் அரசியல் எதிரிகட்கு எதிராக மாற்று வாதங்களை அவர் அணிவகுக்கவில்லை அவர் டு.ள.ளு.P யை உள்ளபடி பேசத்தொடங்கினால் தர்மகுலசிங்கம் என்ற கொம்யூனிஸ்ட் கார்த்திகேயன் முதல் எம்.சி சுப்பிரமணியம் வரையிலான ஸ்டாலினிஸ்டுக்களை எஸ்.பொ சார்ந்திருந்த கொம்யூனிஸ்ட் கட்சியோடு சேர்ந்து எஸ் பொவும் கீழ் வரிசைகட்கு தள்ளப்பட்டு விடுவார்கள் அவர்pன் இடதுசாரி இயக்க சில வாழநாள் கதையாடல்கள் பொறிந்துவிடும்.
எஸ்.பொ வின் எழுத்து துரோகத்தை வடபகுதியின் தொழிலாளர் இயக்கத்தின் உண்மை மனிதர்களை மறுபடியும் தேடிக்கண்டுபிடிக்க நாம் கடன்பட்டுள்ளோம் வடக்கில் டு.ளு.ளு.P வரலாறு தர்மகுலசிங்கத்துடனேயே தொடங்குகிறது. கார்த்திகேயனை அதுPமாக முன்னிலைப் படுத்துவதன் மூலம் ஸ்டாலினிஸ்டுகள் வடக்கு இடதுசாரி இயக்கத்தின் தொடக்கமான.


தர்மகுலசிங்கத்தை தந்திரமாய் கைவிட்டார்கள் தர்மகுலசிங்கம் வேளாளசாதித் தடிப்புக் கொண்ட துன்னாலையில் பிறந்து தொழிலாளர் இயக்கத்துக்கு வந்தவர் தென்னிலங்கயில் கொல்வின் ஆர்.டி சிலவா போன்று வடபகுதியின் எடுத்து காட்டான கொம்யூனிஸ்ட் அவர் முதன் முதலாக சாதியால் ஒதுக்கப்பட்ட மக்களிடையே அரசியல் செய்த அரசியல்கட்சி டு.ளு.ளு.P தான் அதன் பலனாக டு.ளு.ளு.P க்கு உயர்சாதிகள் உயர்வாக்கத்தமிழர்கள் பள்ளர்கட்சி “எனவும் :பள்க்கட்சி” எனவும் பெயர்ந்தனர். ஒடுக்கப்பட்ட சாதிமக்களின் வீடுகளில் புகுந்து அரசியல் வேலை செய்த முதல் தொழிலாலர் தலைவர் தர்மகுயசியகம் அக்காலத்pல் ஒடுக்கப்பட்ட சாதிமக்களின் வீடுகளில் புகுந்தவர்களும் கைநனைத்தவர்களும் மேல்சாதியால் சமூகப் பகிஷ்கரிப்புக்குள்ளாக்கப்படுவர்கள். சாதியால் தள்ளிவைத்துவிடுவார்கள் நல்லது கெட்டதுக்கு அழைப்பு விடமாட்டார்கள் தர்மகுலசிங்கம் இப்படி பலதை இழந்து தான் உயர்சாதிகளாலும் செல்வந்தர்களாலும் தனிமைப் படுத்தப்பட்டுதான் டுளுளுP யை வடக்கில் கட்டினார் ஒடுக்கபட்ட சாதி மக்களும் தொழிலாளர்களும் தமது முதலாவது அரசியல் போராட்டத்தை இப்படித்தான் நடத்த தொடங்கினார்கள்.

பொழும்பில் 1937.. 1938 களில் (டீஆ சுழனசபைழ டீரள ஊழஅpயலெல) தொழிலாளர் வேலை நிறுத்தத்தை டுளுளுP நடத்தியது 1945 இல் அவர்கள் “மோட்டார் தொழிலாளர் சங்கத்தினை அமைத்தனர். இதன் கீழ் தனியார் பஸ் தொழிலாளர்கள் திரட்டப்பட்டனர் கொழும்பில் காமினி பஸ் கொம்பணி விமிட்டெட் (புயஅini டீரள ஊழ. டுவன) ர்ஐபா டுநஎயட சுழயன டீரள ஊழ. டுவன பஸ் கொம்பனிகள் இயங்கின இந்த பஸ் முதலிhளிகள் பிற்காலத்தில் தீவிரமான யு.என்.பி ஆதரவாளராக இருந்தனர் இதன் ளுழரவாறநளவநசn டீரள ஊழ. டுவன ஆகிய தொடர்ச்சியாகவே வடபகுதியிலும் தனியார் பஸ் கொம்பனித் தொழிலாளர்களின் தொழிச் சங்கம்பள் உருவாக்கப்பட்டன. பஸ் கொம்பனிகளில் பெயரில் பெரும்பாலும் பஸ் தொழிலாளர் சங்கம்கள் உருவாக்கப்பட்டன.


1. வடஇலங்கை ஒம்னிபஸ் தொழிலாளர்சங்கம்

2. வலிகாமம் வடக்கு பஸ் தொழிலாளர் சங்கம்

3. வலிகாமம் மேற்கு பஸ் தொழிலாளர் சங்கம்

4. பருத்தித்துறை-யாழ்ப்பாணம் பஸ் தொழிலாளர் சங்கம் என்பன இயங்கின“NழுP” எனப்படும் நாகலிங்கம் பஸ் கொம்பனி மறறும்; முல்லைத்தீவு திருகோணமலை போன்ற இடம்கட்டு பஸ் சோவகளை நடத்தியது டீஆஊ சவர்லட், டொச், நெல்சன்பொடி, அல்பியன் பஸ் போன்ற பஸ்கள் ஒடின. இதைவிட சுருட்டுத் தொழிலாளர் சங்கம், சலவைத் தொழிலாளர் சங்கம், கள் இறக்கும் தொழிலாளர் சங்கம் என்பனவும் செயற்பட்டன டுளுளுP உருவாகு முன்பே வடக்கில் சுருட்டுத் தொழிலாளர் சங்கம் சல்வைத் தொழிலாளர் சங்கம் என்பன செயற்பட்டு வந்த போதும் தர்மகுல சிங்கமே அதைப் பரவலாக்கி அதிக தொழிலாளர்களைக் கொண்ட அமைப்பாக்கினார். வைத்தியலிங்கம் டுளுளுP யில் இருந்து கொம்ய+னிஸ்ட்கட்சிக்குப் போனவர் பொன்கந்தையா, கார்த்திகேயன் போன்றவர்களைவிட தொழிலாளர் இயக்கதின் முன்னோடி தர்மகுல சிங்கம்தான்

டுளுளுP – கொம்ய+னிஸ்ட் கட்சிமுரண்பாடுபற்றி சாடையாக எழுதும் எஸ்.பொ இவர்கள் ஏன் வித்தியாசப்பட்டார்கள் என விளக்கவோ ரொட்ஸ்கியம் பற்றி எழுதும் எஸ்.பொவுக்கு அதன் அரசியல் எதிர்நிலையான டுளுளுP விளக்கி வந்த ஸ்டாலினிசம் பற்றிய விளக்கும் கடமைப்பாடு இருப்பதையும் அவர் விலக்கி விடுகிறார் ரொட்ஸ்கியம் ஸ்டாலினிசம் போன்ற தத்துவ நிலைகளை விளக்கத் தேவையான அரசியல் எஸ்.பொவுக்கு இல்லை என்பது உண்மையாயினும் எழுத்து தனக்கு தவம் என்பவர் தன் இல்லாமையை நேரடியாக ஒப்பும் பண்பு வேண்டும். தானறியாத விடயம்களின் தான் விண்ணனா இருப்பதாகச் செய்யும் பாவனை தான் சகிக்க முடியாதது, தர்மகுலசிங்கம உயிரோடு இருந்தவரை கொம்ய+னிஸ்ட்கட்சியாலோ, பொன்கந்தையா, கார்த்திகேயாலோ அவரை மீறி டுளுளுP யைத்தாண்டி வரை முடியவில்லை அவர் இறந்த பின்பு பொன்கந்தையா பேன்றவர்கள் தர்மகுலசிங்கத்தின் சாயலில் அவரின் தொடர்ச்சியாக செயற்பட முனைந்தனர். அவர் உருவாக்கிய ஒடுக்கப்பட்ட சாதிமக்களின் இயக்கம்களையும் தொழிலாளர் இயக்கம்களையும் கைப்பற்றத் தொடங்கினர் போன்ற மாவோயிஸ்டுகள் கூட்டம்கட்குப் போகும் போது லேசில் தோழர்கள் விட்டில் தங்கமாட்டார்கள் பஞ்சிப்படுவார்கள் தம்வசதிகளைக் கருத்தில் கொண்டு விடுதிகள் சுநளவ ர்ழரளநகளைக் தேடுவார்கள். சண்முகதாசன் தொழிற்சட்டம்கள் சார்ந்த பிரச்சனைகளில் தொழிலாளருக்கான வாதாடியிருக்கிறார் சிறந்த சேவை செய்திருக்கிறார். என்ற போதும் முதலாளித்துவக்குணா சம்களை முழுமையாக அவரால் துறக்க முடியவில்லை பிற்காலத்தில் அவரை அது புலிகளின் மேதினக் கூட்டத்தில் ஏறும் வரை கொண்டுவந்து விட்டது. தர்மகுல சிங்கம் இந்த குணம்பட்டு முற்றிலும் எதிர்மாறானவர் எந்த இடத்திலும் சாப்பிடுவார் கூச்சமில்லாமல் படுத் தொழும்புவார் அவர் காலத்தில் அது மிகப் பெரும் கடிமையான விடயம் சாதிய உணர்வும் மத நம்பிக்கையும் மிகவும் தீவிரமாய் இருந்தகாலம்.

அந்தக்காலத்தில் அப்புக்காத்துமார் என்றால் சனம்கள் எழும்பி சால்வை தேளால் எடுத்து கைகட்டி நிற்பார்கள். பணிந்து குறுகிக்குடங்கித்தான் கதைப்பார்கள் அப்புக்காத்துமார் வீடுகளில் கதிரை வாங்கில் இராது போகிறவர்கள் வெளித்திண்ணைகளில் தான் குந்தவேண்டும், அப்புக்காத்துமார் இருக்கச் சொன்னாலும் சனம்கள் இருக்கமாட்டார்கள் நின்ருக்கொண்டுதான் கதைப்பார்கள். இங்கு ஒடுக்கப்பட்ட சாதி மக்களைப்பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. இங்குதர்மகுலசிங்கம் இந்த அப்புக்காத்துப் பெருமைகளை எல்லாம் உடைத்தார் சிறிய பிணக்குகளை அடிதடிகளைக் கோட்டுக்குப் போகாமல் இருபகுதியையும் கூப்பிட்டு பேசிசமா தானமாய்த்தீர்த்துவைக்கும் முறைகை; கையாண்டார். வழக்குகளில் ஏழைச்சனம்கள் கையில் காசில்லை என்று சொல்லிக்கையைப் பிசைந்தால் அதைவிட்டுப் போட்டு பிரச்சனையைச் சொல்லுங்கள் என்பார் தர்மகுலசிங்கம், நிதிமன்றத்தில் வழக்குப் பேப்படுக்கு ஒட்ட முத்திரை கூட வாங்கக் காசில்லாமல் வரும் சனம்கட்கு அவர்தானே முத்திரை

தர்மகுலசிங்கம் தொடர்ச்சி

வாங்கி ஒட்டுவார் அவர் நீண்டகாலம் தொழிலாளர்கள் மத்தியிலும் வடமராட்சி ஒடுக்கப்பட்ட சாதி மக்களின் நினைவுகளிலும் நின்ற காரணம் இது தான். ஜி.ஜி பொன்னம்பலம் செல்வந்தர்கள் உயர்சாதிகளின் வழக்கறிஞர் எனறால் தர்மகுலசிங்கம் ஏழைகளின் வழக்கறிஞர். அவர்கட்காக அலைந்து போராடி அடிபட்டுக் செத்த மனிதர் இம்மக்களின் வாழ்வுக்கான கலகம்களிலும் செத்தவீடு கலியாண வீடுகளிலும் சபை சந்திகளில் நின்ற வடபகுதியின்முதல் மாக்சியவாதி அவரே தர்மகுலசிங்கத்துக்கு எதிராக தமிழ்த்தேசியவாத்தினதும் யாழ். உயர்சாதிகளதும் அரணாக ஜி.ஜி பொன்னம்பலம் இருந்தார் அவர் தன்னை பொன் இராமநாதனின் அரசியல் தொடர்ச்சி என்று உரிமை கோரிக்கொண்டார். அவர் பஸ் கொம்பனி முதலிhளிகள், சாராயத்தவறணை முதலிhளிகள், நகைக்கடைக் காறர்கள் கள்ளக்கடத்தல்காரர்கள். அரசியல்வாதிகள். பெரும் கொலைவழக்குகள் இவைகளோடு சம்பந்தப்பட்டார். அவர் அக்காலததில் இலங்கையில் அதிக தொகை வாங்கும் வழக்கறிஞர் சாதாரண மனிதர்கள் வழக்குகட்கு அவரை நெருங்கமுடியாது 50 ஆயிரம், ஒரு லட்சம் என்று ஒரு வழக்குக்கு வாங்குபவர் வடமராட்சி முதல் யாழ்ப்பாணம் வரை சகல சண்டியர்களையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார். அக்காலத்தில் மிகப் பெரும் அரசியல் காடையரும் ஜி.;ஜி பொன்னம்பலம் தான். அவரின் வழக்காடும் கொட்டித்தனம்பற்றி பல தொகைக் கதைகள் மிகையாக உள்ளன. ஜி.ஜி என்றால் பெரிய விண்ணன் கோட்டில் நீதவான்மாரே பொன்னரைக் கண்டால் பயந்து நடுங்குவார்கள் என்ற எபகதைகளும் நிலவின். யாழ் தமிழ் நடுத்தர வர்க்கத்துக்க ஜி;ஜி பொன்னம்பலம் பெரும்பிரமிப்பூட்டு நபராக இரந்தார் சாதாரண மக்கள் பொன்னம்பலத்தின் அரசியலை அடையாளம் கண்டு இருந்தனர் அவரை அம் மக்கள் “திருகுதாளக் கள்ளன்” என்று தான் கூறுவார்கள். கொம்யூனிச எதிர்ப்பு, தமிழ்த்தேசிய வெறி, பிரிட்டிஸ் ஆதரவு, காதிவெறி, சைவசமய வெறி இவைகள் நிரம்பிய ஒர கிறமினல் அரசியல்வாhதியாக ஜி.ஜி பொன்னம்பலம் இருந்தார். தமிழ் அரசியல்வாதியாக மிகப்பெரிய சுயநலவாத வஞ்சகப் பொய்ராகவும் அரசியல் ரீதியில் மிகவும் குறைவாக மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தப்பட்ட நபராகவும் அவர் இருந்தார் 1947 இல் நடந்த தேர்தலில் தர்மகுலசிங்கம் இரண்டாவது இடத்தைப் பெற்றாh. ஸ்டாலினிஸ்டுகள் அப்போ இலங்கை முழுவதும் யுஎன்பி யுடன் கூட்டுச்சேர்ந்து இருந்தனர். அவர்கள் பொன் கந்தையாவை பருத்தித்துறையில் தேர்தலில் நிறுத்தியது ஊடாக இடதுசாரி வாக்குகளைப் பரித்தனர். இதனாலேயே ஜி.ஜி பொன்னம்பலத்திடம் தர்மகுலசிங்கம் தோல்வியடைந்ததுடன் பொன் கற்தையா 3வது இடத்தைப் பெற்றார் ஜி.ஜி பொன்னபம்பலத்தின் வழக்காடும் திஙமையோ ஆங்கிலம் பேசும் திறமையோ தேர்தலில் உதவவில்லை அவர் சண்யர்களைத் தன்பக்கம் திரட்டியிருந்தார் பணம் காடைத்தனம் உயர்சாதி என்பன அவருக்க உதவியது. செல்வந்தர்கள் உடையார் மணியம் ஊர்ப்பெரிய மனிதர்கள் சாதிமான்கள், கோவில் தர்மகர்த்தாக்கள் எல்லோரும் ஜி.ஜி பொன்னம்பலத்துடன் நின்றார்கள் கத்தோலிக்க மதபீடம் கொம்யூனிஸ்ட தர்மகுலசிங்கத்துக்கு எதிராக அவரை ஆதரித்தது. கிறமினல் லோயர் பொன்னம்பலம் தாம் என்ன செய்தாலும் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையில் சண்டியர்களும் கிறமினல்களும் அவருக்காக இடதுசாரித் தக்கின்hர்கள் பயமுற்த்தினார்கள் கூட்டம் குழப்பினர்கள் ஒடுக்கப்பட்ட சாதி மக்களைத் துரத்தியடித்தார்கள். “மார்க்கண்டு அங்கு ஒரு கண்வை” என்று பொன்னர் கண்சாடை காட்டினால் அவர்கள் மிச்சத்தைப் பார்த்துக் கொள்வார்கள். இவர்களின் பிரதான இலக்கு “சிவப்புச் சட்டைக்காரர்களாகவேயிருந்தனர்” “சிவப்புச்சட்டைக்காறர்கள் வந்தால் கோவில்களைப் பாதுகாக்கமுடியாது. எளியசாதிகள் கோயிலுக்குள் புகுந்து விடுவார்கள் எனவே கோவிலைப் பாதுகாக்க வேண்டுமஎன்றால் எனக்கு வாக்குப் போடுங்கள்” என்பதே பொன்னம்பலத்தின் பிரச்சாரமாக இருந்தது. மறுபுறம் ஒடுக்கப்பட்ட மக்களின் தொகையும் அதிகமாக இருந்தபடியால் அவர்கள் மத்தியில் பல தந்திரங்களை பொன்னம்பலம் கையாண்டார். அம்மக்களில் முக்கியமானவர்களைப் பிடித்து “உங்களுக்குப் பிரச்னை இருக்கிறது என்று எனக்குத் தெரியும். நான் அதை ஒத்துக் கொள்கிறேன் எனவே நீங்கள் எனக்கும் போடவேண்டுhம் கம்யுனிஸ்டுகட்கும் போடவேண்டாம் வீட்டில் இருங்கள்” என்று அவர்கள் மறித்துவிட்டு தன் ஆட்களைக் கொண்டு அத்தகைய வாக்குகளை போடுவித்த சம்பவங்கள் நடந்தன.

கம்யூனிஸ்:கள் ஒடுக்கப்பட்ட சாதி மக்களோடு திண்டு குடித்து ஒன்றாய்க்கை கலந்தபடியால் பொன்னம்பலம் ஒடுக்கப்பட்ட சாதிமக்களின் இடங்கட்கு வாக்குக் கேட்டுப் போகும்போது ஏதாவது குடிக்க வைக்க முயற்சிக்கப்படுவதுண்டு. இதனால் பொன்னம்பலத்தின் கிறிமினல் மூளையானது தன்னை ஏதாவது தமது வீடுகளில் குடிக்கச் சொல்லி மாட்டிவிடுவார்கள் என்பதால் அவர்களிடம் வாய் நனைக்காமல் தப்ப தானே முந்திக்கொண்டு “கந்தன் ஏறு ஏறு ஒரு இளநீர் பிடுங்கு உன்ரை பையாலை ஏதாவது குடித்துவிட்டுத் தான் போகவேண்டும்” என்பார். பொன்னம்பலம் ஒரு சிறந்த நடிகர். இலங்கை அரசியலில் எங்கு தேடினும் காணமுடியாத கசபோக்கிலி அரசியல்வாதி ஆப்போ தேர்தலுக்கு வாக்களிக்க பச்சைப் பெட்டி சிவப்புப் பெட்டிகளே வைக்கப்பட்டு இருக்கும் கட்சிகட்கு சின்னம், கட்சிப் பொயர்கள் கிடையாது. மேற்குநாடுகளில் உள்ளது போன்ற தேர்தலில் வாக்களிக்கும் நடைமுறைகள் இல்லை, ஏனேனில் கல்வியறிவு குறைவு, எழுத்திறவு பெற்றவர்களும் குறைவு பெரும்பகுதி கையெழுத்து போடத் தெரிந்த படிப்பு மட்டுNமு படித்தார்கள் காணிகளின் உறுதி முதல் அரச காரியங்கள் வரை கைவிரல் பெருவிரல் அடையாளம் இடும் வழக்கNமு நிலவியது. 1950 களின் பின்பு இலவசக் கல்வி வந்த பின்பே கல்வியறிவும் பரவி கையெழுத்துப் போடும் பழக்கமும் வந்தன. அக்காலத்தில் பெரும்பகுதி ஜே.சி.எனப்படுமு; 8ம் வகுப்புக் கல்வியே பொரும் படிப்பாக இருந்தது. ஆங்கில் மொழிக்கல்வி என்பதால் இந்தக் கல்வித்தகைமையுடன் அரச உத்தியோகத்துக்கும் போகலாம். கொஞ்சப் பேரே பெரும் பள்ளிகளில் எஸ்.எஸ்.சி பாஸ் பண்ணுவார்கள். இத்தகைய சூழலில் தான் கல்வியறிவு குறைந்த மக்கள் இலகுவாக வாக்களிக்க பச்சைப் பெட்டி, சிவப்புப்பெட்டி முறையும் பின்பு வாசிக்கத் தெரியாத மக்களைக் கருத்திற்கொண்டு யானை, கை, விட, சைக்கிள், குடை, பசு, மரம் என்று வேட்பாளர்களின் சின்னம்கட்க வாக்குப் போடும் முறையாக மாறியது. அப்போ இந்த சிவப்புப் பெட்டி பச்சைப் பெட்டி முறை பொன்னம்பலத்துக்கே வாய்ப்பாக இருந்தது. அவர் பொலீஸ், தேர்தல் உத்தியோகத்தர்களைப் பெரும்பாலும் வாங்கி விடுவார் தனது சிவப்பு பெட்டியை நிமிர்த்தி வாக்கச் சீட்டு போடும்படியாக வைப்பதும் எதிர்த்தரப்பு பச்சைப்பெட்டியை தலைகீழாக வைத்து பெரும்பகுதி வாக்குப் போடத் தெரியாதவர்களை தமது சிவப்புப் பெட்டியில் போடவைப்பதும் தர்மகுலசிங்கத்தின் பச்சைப் பெட்டியில் விழுந்த வாக்குகளை Nமுhசடி செய்து தமது சிவப்புப் பெட்டியில் போடப்பணிணியும் பொன்னம்பலம் எம்.பி.யாகினார். பச்சைப் பொட்டிக்காற மொக்கன்கடகு வாக்குகூடப் Nபுhடத் தெரியவில்லை என்ற பொன்னம்பலத்தின் ஆட்கள் தேர்தல் முடிந்த பின்பு நக்கல் விட்டனர் இனறு கல்வியறிவின்மை இலங்கையில் தோற்படிக்கப்பட்ட பின்பும் எழுதவாசிக்கத் தெரியாத மக்களுக்காகவே அறிமுகப்படுத்தப்பட்ட சின்னத்துக்கு வாக்களிக்கும் முறை மாறாமல் தங்கிவிட்டது. தர்மகுலசிய்கம் உயிருடன் இருந்தால் பொன்னம்பலம் அடுத்த தேர்தலில் கட்டாயம் தோற்பார் என்ற நிலை இருந்தது.

தனியார் பஸ் தோழிலார்கள் வேலை நிறுத்தத்தால் பஸ் மதுலிhளிகள் தர்மகுலசிங்கம் Nமுல் தீராப்பகை கொண்டு இருந்தனர். உயர்சாதி வேளாளர்கள் எளியசாதிகளைக் கூட்டிக்கொண்டு திரியும் அவரை ஒழித்துவிட விரும்பினர் எனவே அவர்களின் கூட்டு ஏற்பாட்டின்படி பொன்னம்பலம் தனது சண்டியர்களைக் கொண்டு தர்மகுலசிங்கத்ததத் தாக்கி படுகாயப்படுத்தனார்கள்.இதன் பின்பு அவர் அதனால் நோய்வாய்ப்பட்டு 1949 இல் இறந்தார் அவர் குடித்த சோடாவில் நஞ்சு கலந்து கொடுக்கப்பட்டதாகவும் இதைப் பொன்னம்பலமே செய்வி;தார் எனவும் அப்போ வடமராட்சியில் மட்டுமல்ல முழு யாழப்பாணப் பகுதியிலும் பேசப்பட்டது. வடமராட்சியில் ஒடுக்கப்பட்ட சாதி மக்களும் ஏழைகளும் அவர்இறந்த பின்பு அவர் படத்தை வீடுகளில் மாட்டி வைத்திருந்தார்கள்பஸ் தொழிலாளர்கள் பஸ்பளில் அவர் படத்தை கொழுவியிருந்தார்கள். இவர்கள் தம் பிள்ளைகட்கு தர்மகுலசிங்கம் என்ற பெயரையும் அவரின் புனைபெயரான ஜெயம் என்ற பெயரையும் வைத்தார்கள் அக்காலத்தில் பிறந்த பெரும் தொகையான குழுந்தைகட்கு இப்பொயர்கள் வைக்கப்பட்டன வில்லூன்றி மயானத்தில் ஒடுக்கப்பட்ட சாதிப் பெண் ஒருவர், தகனம் செய்யப்பட்டு அந்தச் சாம்பலை அகற்றப் போன முதலி சின்னத்தம்பியைச் சாதிவெறியர்கள் ஒழித்திருந்து சுட்டுக் கொன்றபோது இறந்தவரின் மனைவிக்காக வாதாட எந்தச் சட்டத்தரணியும் கிடைக்காதபோது தர்மகுலசிங்கம் அப்பெண்ணுக்காக வாதாடினார். தர்மகுலசிங்கம் கால அக்கால யாழ்ப்பாணப்பகுதி விவசாய சமூக பண்புகளைக் கொண்டது. மிகச் சிறிய உற்பத்தி ஆற்றல் கொண்டது இந்தனால் தீவிரமான சுரண்டலும் மூர்க்கமும் கொண்டதாக இருந்தது. தொழிற்துறை உழைப்பாளர்கள் இல்லாத சமூகமுமாகும். இந்தக் கடினமான நிலைகளில் தான் தர்மகுலசிங்கம் அரசியல் செய்தார்சாதி எதிர்ப்பு இயக்கத்தின் தொடக்கம் இன’;று கருதப்படுவது போல் உண்மையில் மாவோயிச இயக்கங்கடகு உரியதல்ல. இது தர்மகுலசங்கத்துக்கும் டு.ளு.ளு.P க்கும் உரியதாகும். அவாகளே ஒடக்கப்பட்ட சாதிமக்களுக்கான முதலாவது அரசியலைச் செய்தவர்கள் தர்மகுலசிங்கம் இறந்த பின்பு எல்எஸ்எஸ பி யின் அண்ணாச்சரி என்ற ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த தோழர் தன் ஆர்மேனியப் பெட்டியுடன் மேடை சாதியைச் இந்தப் பாடலைப் பாடினார். “எங்கள் அரும் தலைவர் தர்மகுலசிங்கம் மறைந்தாரே எங்கெங்கு தேடினும் இவர்து போல தங்கம் கிடையாதாம் கோட்டி வாசிலிலும் மக்கள் கூடும் இடம்களிலும் நாட்டம் அது கொண்டே நல்லதையே செய்திடுவாரே எங்கள் அரும் தலைவர் தர்மகுலசிங்கம் மறைந்தாரே” கம்யுனிச விரோதியும் ஒரு தொகை ஊழல்களால் வீங்கிப் பெருத்தவருமான ஜி.ஜி.பொன்னம்பலத்தை உயர்த்த எப்படி எஸ்.பொ ஆல் முடிகிறது? பொன்னம்பலம் யாரைக் காட்டிக் கொடுக்கவில்லை? யாழில் நந்த டுளுளுP கூட்டத்தில் ஏறி அவர்களது மேடையிலேயே அவர்கட்கு எதிராக ஸ்டாலினிஸ்டுகட்காக துண்டுப்பிரசரம் கொடுத்து” சமசமாஜிகள் ஒழிக” என்று கோசம் போட்டதை பெரும் தீரச்செயலாக எழுதும் எஸ்.பொ எத்தனை தமிழரசு, காங்கிரஸ் மேடைகளில் ஏறிக்கூட்டம் குழப்பியீருக்கின்றார்? மாறாக அவர் தமிழரசு மேடைகளில் ஏறி அவர்களுக்காகப் பிரச்சாரம் செய்ததை எண்ணி வெட்கப்படத் தெரியாத மனிதன் இந்த எஸ்பொ. தமிழரசு மேடைகளில் ஏறிக் குழப்பமுயன்று இருந்தால் அகிம்சைத் தத்துவத்தின் தந்தையான செல்வநாயகத்தின் தொண்டர்கள் இவரை அடித்து முறித்து ஈரப்பெரிய குளத்துக்கு புக்கை கட்ட அல்லவா அனுப்பியிருப்பார்கள். டுளுளுP க்கு எதிராகப் போட்டியிட்டசுருட்டுத் தொழிவலாளர் சங்கம் ஸ்டாலினிஸ்டுகளால் தொடங்கப்பட்டதை எழுதும் எஸ்பொ. தமிழரசு, தழிழ் காங்கிரசுக்கு எதிராக எந்த இயக்கங்களும் நடத்தியதில்லை குறைந்தது கம்யுனிஸ்ட கடசிக்காக என்ன ஊழியம் செய்தார்? எத்தனை பேரைக் கட்சிக்கு வென்று எடுத்தார். கம்யுனஸ்டு ஆக்கினார்? தர்மகுலசிங்கத்தை எழுதாத எவருக்கும் யாழ் குடாநாட்டு இடதுசாரி இயக்க வரலாற்றை எழுத உரித்துக்கிடையாது.

சொலமன்
“சிறையிலிருந்து டுளுளுP தலைவர்கள் தப்ப உதவிய சொலமன் ஒரு தமிழர் இந்திய மண்ணில் இவர்களைக் காத்த மருதப்பன் ஒரு தமிழன் இப்படியிருக்க இதை எல்லாம் மற்ந்துவிட்டு 1960 இன் இறுதியில் தமிழர்களை இழிவுபடுத்தும் மசாலவடை தோசை கோசம்களை சமசமாஜிகள் முன் வைத்தனர் பதிவிகட்காக செய்த உதவிகளை மறந்தவிடும் அரசியல்வாதிகள் ஆனார்கள்” என்று எஸ்பொ எழுதியுள்ளார் முதலாவதாக டுளுளுP தலைவர்கள் தமது சொந்த ஈNடுற்றத்துக்காக எஸ்.பொ வைப் போல் போராடவில்லை அவர்கள் இலங்கையின் அனைத்து மக்களின் சுதந்திரத்துக்காகப் போராடினார்கள் இடதுசாரிகள் சிறக்காவலாளியான சொலமனைக் கம்யுனிஸ்டு அக்கினார்கள் சமூகப் புரட்சிகாரனாக மாற்றினார்கள் சொலமன பருத்திதுறையைச் சேர்ந்தவர் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த தமிழராவர் சொந்தத் தமிழ்ச்சாதி வழங்காத மனித கௌரவத்தை தோழர் என்ற அரசியல் சமத்துவத்தை அவரிற்கு வழங்கினார்கள் அவரையும் அழைத்துக்கொண்டே தென்னிலங்கை சிங்களத் தோழர்களின் உதவியுடன் வடமராட்சிக்குப் போய் அங்குள் தமிழ் தோழர்களின் உதவியுடன் தப்பி இந்தியா சென்றார்கள். இங்கு தமிழர், சிங்களவர் என்ற இனவாதப் பகுப்புக்கள் கம்யுனிஸ்டுகளிடம் இருக்கவில்லை. இங்கு எஸ்.பொ இனவாதப் பார்வையுன் டுளுளுP தலைவர்கள் சிஙகளவர்கள் தமிழர்களாகவும் மட்டுமே தெரிகிறார்கள் சொலமன் தன்னை எப்போதும் தமிழரசு அல்ல கம்யுனிஸ்டாக சாகும் வரை அடையாளப்படுத்யவர் சொலமன் டுளுளுP தலைவாகட்கு செய்த உதவி தோழர்கட்கு உதவியதாகும். தமிழர்களின் உரிமையை கமயுனிஸ்டுகளா பிறத்தார்கள்? முதலாளித்துவ அமைப்பு அல்லவா பறித்தது. ஏகாதிபத்தியத்தால் படைக்கப்பட்ட சிங்கள இனவாதிகள் அல்லவா மறுத்தார்கள் இங்க முதலாளித்துவ அமைப்புன் தமிழர்கட்காகச் செய்யக்கூடிய ஆகக் கூடியதை டுளுளுP தமிழ் மக்களுக்கு செய்தார்கள். மேலும் 7 ஏப்ரல் 1942 இல் சிறையில் இருந்து தப்பிய கொல்வின் ஆர்.டி சில்வா என்.மெ.பெரேரா, பிலிப் குணவர்த்தனா லெஸ்லி குணவர்த்தனா, எட்மன் சமரக்கொடி போன்றவர்கள் இந்தியாவில் தமிழ்நாட்டில் மருதப்பனிடம் மட்டும் தங்கியிருக்கவில்லை. ஹைதராபாத், பம்பாய் உட்பட தமிழ்நாடு அல்லாத பிரதேசங்களில் கம்யுனிஸ்:களிடம் தான் தங்கியிருந்தனர். இங்கு எஸ்.பொ தமிழினவாத மூறை கணக்குப் பண்ணுவது போல் மருதப்பன் தமிழன், கொல்வின் சிங்களவர் என்ற பகுப்பாய்வுகள் இங்கு பொருளற்றவை டுளுளுP தலைவர்கள் லண்டனில் கல்வி கற்ற காலத்தில் பெருந்தொகையான இந்தியன் கம்யுனிஸ்டுகள் சோசலிஸ்டுகளுடன் தொடர்பு இருந்தது. தமிழன் சிங்களவன், திராவிடன், ஆரியன் என்ற முதலாளிய நோய்த்தன்மை வாய்ந்த அரசியலைக் கூடந்து இந்திய துணைக்கண்ட மக்கள் தொழிலாளர்கள் என்று சிந்திக்கத்தக்க உயர்ந்த இலட்சியம் அவர்கட்கு இரந்தது. மருதப்பன் இறுதி வரை இடதுசாரிக் கொள்கையை மதித்தனர். தன் குழந்தைகட்கு டுளுளுP தலைவர்கள் இந்தியாவில் தலைமறைவு வாழ்க்கையில் இருந்தபோது கொண்டிருந்த புனைபெயரான திலக் போன்ற பெயாகளைத் தன் குழந்தைகட்கு சூட்டியவா. தமிழக ஒவியக் கலைஞரான ரொட்ஸ்கி மருது இவரின் மகனாவார். டுளுளுP சார்பில் சொலமனை தென்னிலங்கையில் தேர்தலில் போட்டியிட வைத்தார்கள். ஒரு ஒடுக்கப்பட்ட சாதித்தமிழனை வடக்கில் கம்யுனிஸ்டுகள் தவிர வேறுயாரும் தேர்தலில் நிறுத்திய வரலாறு இரக்கிறதா? தமிழீழக் கோரிக்கை வந்த பின்பு அதுவும் உடுப்பிட்டியில் ஒடுக்கப்பட்ட மக்களின் வாக்குகளை வெல்ல தமிழதேசியவாதிகள் ராஜிலிங்கம் என்ற உயர்வர்க்க மனிதரை நிறுத்தினார்கள். அவருக்கும் ஒடுக்கப்பட்ட சாதிய மக்களுக்கும் ஒரு தொடர்பும் இல்லை சொந்தச் சாதிசனத்துடன் போய்க் கொண்டாடதவர் அவரது உத்தியோகம் பழக்கம் எல்லாம் உயர்வர்க்கத் தமிழர்களுடன் தான்.

1970 களில் சொலமன் நோய்வாய்ப்பட்டு பருத்தித்துறையிலிருந்த போது என்.எம்.பெரேரா போன்றோர்கள் அவரைச் சென்று பார்த்தனர் சொலமன் டுளுளுP ஆளாக வாழ்ந்தவர் அடுத்து எஸ்.பொ. வின் குற்றம் கூறல் என்னவெனில் டுளுளுP ஊர்வலத்தில் மசால் வடே, தோசை இனவாதக் குரலகள் எழுப்பப்பட்டன என்பதாகும். இது தமிழரசுக்கட்சி முதல் இன்றைய தமிழ், ஆய்தப்பயங்கரவாதிகள் முதல் 50 வருடமாய்ச் செய்யப்பட்டு வருவது. இந்தச் சம்பவம் நடந்ததால் குறிப்பிடப்படுவது 1964 மே தினத்தில் 21 அம்சக் கோரிக்ககைளை முன் வைத்து சகல இடதுசாரிக்கட்சிகளும் தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து நடத்திய ஊர்வலமாகும். இடதுசாரிகள் இந்த அரச எதிர்ப்பு இயக்கத்தில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசையும்; இணைப்பதில் வெற்றி கண்டு இருந்தனர். கொல்வின் ஆர்.டி.சில்வா, என்.மெ;.பெரேரா, பாலா தம்பு, பீற்றர் கெனமன், தொண்டர்கள் ஆகியோர் ஒன்றிணைந்தது ஒர பிரமாண்டமான ஊர்வலம் பொதுக்கூட்டமாக நடத்தினர். இந்த ஊர்வல நிகழ்ச்சியில் டுளுளுP யின் பின்பு அல்ல எஸ்.பொ அங்கம் வகித்ததாய் கூறப்பட்ட கம்யுனிஸ்ட் கட்சியின் பின்புறமிருந்து “மசால வடேதோசை அப்பிட்ட எப்பா மீனாட்சி மசாலவடே அப்பிட்ட எப்பா” என்ற கோசங்கள் எழுப்பப்பட்டன. இக்குரலை எழுப்பிய ஒரு சிறு குழு உடனேயே கம்யுனிஸ்டுகளால் ஊர்வலத்தை விட்டு துரத்தப்பட்டது. இப்படி ஒர இனவாதக் கோசம் ஒரு போதும் ஒரு இடதுசாரிகளின் ஊர்வலத்தில் எழுப்பப்பட்டதில்லை. பெரும்பாலும் ஒரு யுஎன்பி ஊர்வலங்களிலேயே இத்தகைய கோசங்கள் தொடர்ச்சியாக எழுப்பப்படுவது வழக்கம். உண்மையில் என்ன நடந்ததெனில் எப்போதும் யுஎன்பி யுடன் இணைந்திருந்த இலங்கைத் தொழிhர் காங்கிரஸ் இடதுசாரிகளுடன் சேர்ந்து இந்த ஊர்வலத்தை நடத்தியமையால் ஆத்திரமடைந்த யுஎன்பி யால் திட்டமிட்டு அனுப்பப்ட்ட சிறு குழுவே இந்த இனவாத கோசத்தை எழுப்பியது. அவாகள மலையகத் தோட்டத் தொழிலாளர்கட்கும் சிங்களத் தொழிலாளர்கட்கும் இடையில் ஒரு கலவரத்தை மூட்டிவிட முயன்றனர் அனால் அது நடைபெறவில்லை இடதுசாரிகளின் மேதின ஊர்வலத்தில் “மசாலவடே தோசை அப்பிட்ட எப்பா “கோசம் எழப்பப்பட்டதாக சுதந்திரன் பத்திரிகை எழுதியது. யுஎன்பிக்கு உதவிப்பிரச்சாரம் செய்தது. இடதுசாரிகளின் மறுப்புக்களையோ விளக்கங்களையோ தமிழனவாதிகள் காது கொடுத்துக் கேட்கவில்லை அவர்கட்கு இப்படிச் சம்பவம் தேவைப்பட்டன அதற்காக இவர்கள் காந்திருக்தனர் இடதுசாரிகளைத் தாங்கினர் இந்த ஒரேயொரு சம்பவம் யுஎன்பி யின் சதி என்று தெரிந்தும் தெரியாமலும் தமிழரசு, தமிழ்சாங்கிரஸ், தமிழர் சயாட்சிக் கழகம், தமிழ் ஆயுத இயபக்கங்கள் என்று வரிசையாக பல நூறு தடவைகள பிரச்சாரப்படுத்தப்பட்டு விட்டது. இதையே எஸ்.பொ வும் மரபுகளைக் காத்து எழுதுகின்றார் இதன் உண்மை பொய் பற்றிய உணர்வு எழுதும் எழுத்துக்கு பொறுப்பு எடுப்பது எஸ்.பொ வுக்கு தேவைப்படவில்லை. இடதுசாரிகள் இனவாதிகளாக இரந்தார்கள் என்று நிரூபிக்கவேண்டிய தேவை தமிழ் தேசிய வெறியர்கட்கு இருந்தது. இடதுசாரிகளாக இரப்பினும் அவர்கள் சிங்களவர்கள் என்று இனவாதிகள் கூட்டத்தை இவர்கள் சாகாமல் காப்பாற்றினார்கள். செல்வநாயகம், பொன்னம்பலம் கோமகன்கள் எப்போதாவது தமிழர்கள் மத்தியில் உள் ஏழைகளின் வீடுகளில் வாதியால் ஒடுக்கப்பட்ட மக்களின் குடிசைகளில் தோட்டத் தொழிலாளர்களின் லயங்களில் ஒன்றாய் இருந்து உண்வருந்தி அவர்களுடன் தங்கி அரசியல் செய்திருப்பார்களா? கொல்வின் ஆர்.டி.சிலவா, என்.எம். பெரேரா போன்றவர்கள் தோட்ட லயங்களில் தோட்டத் தொழிலாளர்களுடன் போய்த் தங்கி உரையாடி இயக்கம் வளர்;த்தவர்கள். அந்த மட்டுத்துக் தொண்டமான் கூடச் செய்ற்பட்டதில்லை.


என்.எம்.பெரேராவின் மரணச்சடங்கில் பேசிய அமிருதலிங்கம் “நான் என்.எம். கொல்வினிடம் தான் மாக்சியம் பயின்றேன். என்.எம் இன்வாதியாக ஒரு போதும்வினிடம் தன் மாக்சியம் பயின்றேன். என்.எம் இனவாதியாக ஒருபோதும் இருந்ததில்லை அவர் இனவாதியாக இரந்திருந்தால் பிரதமராகத் தான் இறந்திருப்பார் எனக் குறிப்பிட்டார் அதே அமிர்தலிங்கம் புலிகளால் சுட்டுக் கொல்லப்படுவதற்கு சிறது நாட்களுக்கு முன்பாக தமிழ்நாட்டில் பேசிய கூட்டமொன்றில் “இலங்கை இந்தியா போன்ற நாடுகளை உள்ளடக்கிய இந்திய துணைக்கண்டம் தழுவிய சமுதாயப் புரட்சிக்காக கொல்வின் ஆர்.டிசில்வா போன்றவர்கள் லெனினிய கட்சி என்ற கட்சியை ஆரம்பித்தமையைக் குறிப்பிட்டார் டுளுளுP ஒரு முதலாளிய அரசுடன் சீர்திருத்த அரசயலுலுக்கம் சமரசங்கட்குச் சென்றார்கள் என்பது உண்மையே. எனினும் தேசியப் பொருளாதாரம் வளர்ந்து உள்ளுர் உற்பத்தி சக்திகள் பெருகுவது சோசலிச சமுதாயமாக மாறுதற்கு இன்றியமையாத அடிப்படைகளை அமைக்கும் என்பதில் அவர்கள் திடமாக இருந்தனர். இலங்கையில் நாளை சோசலிசம் வரும்போது புரட்சியாளர்கள் கட்டாயம் டுளுளுP யை நினைவில் கொள்வார்கள் கொல்வின் கோன்றவர்கள் கட்டாயமாக வரலாறு தேடிக் கௌரவிக்கும்.

பிலிப் குணவர்;த்தனா
எஸ்.பொ வினால் மட்டுமல்ல பொரும் பகுதியினரால் பேசப்படாதவராகவுமுள்ள முக்கியமான இடதுசாரி பிலிப் குணவர்த்தனாவாகும். இவரே இலங்கையின் முதலாவது ரொட்ஸ்கியைப் பின்பற்றிய மாக்சியவாதி. இவரைப் பற்றி ரொட்ஸ்கியின் புகழ் வாய்ந்த வாழ்க்கை வரலாற்றை எழுதியவரும் சிறந்த சிந்தனையாளரும் எழுத்தாளருமான ஐளயஉ னுநரவளஉhநச தன் தூலிலி பிலிப் குணவர்த்தனா இலங்கையின் முதலாவது ரொடஸ்கிய சந்தனையாளர் என்பதைப் குறித்துள்ளார் பிலிப் குணவர்த்தனா பிரிட்டனில் இருந்த காலத்தில் முதலில் பிரிட்டிஸ் கம்யுனிஸ்ட் கட்சியில் இருந்தார். பின்பு 1929 – 1903 களில் நடைபெற்ற 3ம் அகிலம் பற்றிய சர்ச்சைகளின் பின்பு ஸ்டாலினிச அரசியலில் இரந்து வெளியயேறி லண்டனில் குசயமெ சுனைடநல போன்ற தோழர்களுடன் இணைந்து “சுஇபுசழரி” (ரொட்ஸ்கியக் குழு) என்ற அரசியல் அமைத்த செய்தியை பிரிட்டிஸ் இந்திய உளவுத்துறையின் அக்கால ஆய்வுகளில் பதிவுகள் உள்ளன. அவருக்கு ரொடஸ்கியுடன் தொடர்பு இரந்தது அவர் ரொட்ஸ்கியை துருக்கியில் சந்திக்க முயன்றபோதும் உளவாளிக்ள் பின் தொடர்ந்ததால் அதைக் கைவிட வேண்டி வந்தது. அவர் மிகச் சிறந்த பேச்சாளர் லண்டன் ஹைட் பார்க் கோணரில் பல முறை அவரது ஏகாதிபத்திய எதிர்ப்புக் குரல் ஒலித்துள்ளது அவர் ஸ்பெயினில் அல்போன்ஸசுக்கு எதிரான கிறர்ச்சியில் திட்டமிட்டு இருந்தார். தென்னிலங்கையில் பெருமளவு நிலம் இன்மையாலும் மலை சார்ந்த பிரதேசங்களாக பாரிய விவசாயத் திட்டம் அமைக்க புவியியல் ரீதியிலான தடைகள் தடைகள் இருந்தமையாலும் கிழக்கில் பெரும் விவசாயத் திட்டங்களை அமைக்கமுடியும் என்று அவர் எண்ணியிருந்தார். விவசாயத்தைப் பெருக்குதல் தொழிற்சாலைகளை அமைத்தல் என்று சுயசார்புப் பொருளாதாரத்துக்கு அவர் முயன்றவர். இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனம் துறைமுகங்களை தேசியமயமாக்கியது வரை அவர் பலவற்றை அரசுடமையாக்கினார். பண்டாரநாயக்கா கால பெருமளவு அரசுடமையாக்கப்பட்டு அவரே உண்மையில் பொறுப்பாக இருந்தார். 1957 இல் பண்டா செலடவா ஒப்பந்தம் 1966 இல் டட்லி – செல்வா ஒப்பந்தங்களை வரைந்தவர் இவரே. அவரது யுஎன்பி பண்டாரநாயக்காவுடனான் உறவுகள் அவரது ஆரம்பகால முன்னுதாரணங்களை அழித்தது. அவர் இறந்த போது “இலங்கையின் விஞ்ஙான பூர்வான சோசலிசத்தின் தந்தை பிலிப் குணவர்த்தனாவே அவர் கடைசி வரை ஏகாதிபத்திய எதிர்ப்பாளராக இருந்தார் என்று என்.எம்.பெரேரா குறிப்பிட்டார்.

கொல்வின் ஆர்.டி சில்வா
இலங்கையில் மட்டுமல்ல இந்தியத்துணைக்கண்டத்திலேயே சிறந்த மாக்சியவாதியாய் இருந்தவரான கொலவின் ஆர்.டி.சில்வாவைக் பற்றி ஆய்வதற்கு எஸ்.பொ எந்தவகையிலும் பொருத்தமானவரல்ல கொலவினை எப்படி மதிப்பிடுவது தனயே கொல்வினது நடத்தையை பண்பை மட்டுமல்ல அவரது அரசியல் சித்தாந்தப் பார்வை அது பிரயோகிக்கப்பட்ட அக்காலத்தில் இலங்கை மற்றும் சர்வதேச நிலையங்கள் ஊடாகவே மதிப்புக்க வரவேண்டும் அவர் காலத்திய இலங்கையின் ஒரு சோசலிசப் புரட்சிக்கு சாதகமான சூழல்கள் பாதகமான நிலைகள அக்கம் பக்கமாக ஆயப்படவேண்டும். இதைச் செய்ய அரசியலில் முடியாத எஸ்.பொ வுக்கு தகுதியோ சிரத்தையோ இல்லை. தனது ஆய்வுப் பொருளின் சகல திக்குகளிலும் ஊடறிந்து ஆய்ந்து ஒய்ந்து எழுத அவரால் முடியாது. கொல்வினின் எழுத்துக்கள், பேச்சுக்கள் அவரது அரசியல் அவைகள் ஆரம்பம் முதல் அறுதி வரை கண்காணித்து எழுதாமல் மழிழ்தேசியவாததின் குப்பை மதிப்பீடுகள் எம்மீது, கொட்டி விற்கப்படுகின்றது. இத்தகைய எழுத்துக்ளில் நாம் அதிக நேரத்தை தொலைக்க வேண்டியுள்ளது. எஸ்.பொ. வின் எழுத்தை வாசிப்பதென்பது எமக்குத் தரப்படும் தண்டனை தான் கொல்வினின் மவர் கருத்துக்கள் செயற்பாடுகள் ஊடாக விளங்காமல் தனிமிதராக மட்டுமே அணுக்கப்பட்டு சுதந்திரன் வகைப்பட எழுதப்பட்டுள்ளத. பிரிட்டனில் கற்கும் காலத்திலேயே கொல்வின் ஆர்.டி.சில்வா, பிலிப் குணவர்த்தனா போன்றவர்களுடன. இணைந்து ரொட்ஸ்கியின் மாக்சிய அரசியல் பார்வையைக் கொண்டிருந்தார். ஐரோப்பியத் தொழிலாளர்களின் இயக்கங்கள் ஆகிய ஆபிரிக்க விடுதலை இயக்கங்கள் ஆகியவற்றுடனான தொடர்பு இருந்தது. இலங்கை திரும்பி டுளுளுP ஆரம்பித்த பின்பு கட்சியின் முக்கியமானவராகவும் பிரதான கொல்வின் ஆர் டி சில்வாவின் எழுத்துக்கள் உரைகள், பாராளுமன்றப் பேச்சுக்கள் சிறந்த மாக்சிய இலக்கியங்களாகும். 30 ஆகஸ்ட் 1940 இல் மெக்சிக்கோவில் ஸ்டாலினிச உளவாளியால் கொல்லப்பட்டபோது அவர் மரணத்தின் இறுதித் துறுவாயில் தனது தோழர்கட்கும் 4ம் அகிலத்துக்கும் தொழிலாளர்கட்கும் கூறிய “ஐ யுஅ ளுரசந ழக வாந வுரஅph ழக வாந 4வா ஐவெநசயெவழையெட கழ சகழசறயசந” என்ற தலையஙகத்தைத் தாங்கி கொல்வின் அறிக்கை வெளியாயிற்று அன்றைய இலங்கையின் ஸ்டாலினிசம் பற்றிய ஆழமும் தீவிரமானதுமான கருத்துக்களை கொல்வின் ஆர்டி சிலவா நான் வெளியிட்டார் தத்துவத்துறையில் டுளுளுP யுடன் எல்லோரையும் விட அவர் முன்னே நின்றார். அவா ரொட்ஸ்கியின் கருத்துப்படி இந்தியத் துணைக்கண்;டத்துக்கான தொழிலாளர் வர்க்கக் கட்சியாக இந்தியாவில் லெனினிஸ்ட் கட்சியை ஆரம்பித்ததில் அவரே முக்கிய பங்கை வகித்தார். இந்திய மாக்சியவாதிகள்.

இந்திய காங்கிரசின் இடதுசாரிப் பிரிவு ஆகியோருடன் தொடர்புகளை ஏற்படுத்தினார் 14.02.1948 இல் பிஎல்பி இன் கல்கத்தா மாநாட்டில் காந்தியின் கொலை கோட்சேக்கும் பகத்சிங்குக்குமான வித்திஙாசம் இவைகளை ஆய்ந்ததுடன் இந்திய முதலாளிய வளர்ச்சிக்கு காந்நி எப்படி உபயோகமற்றவராக மாறினார் என்பதை விளக்கிப் பேசினார். அம்பேத்தகார் முதல் பெரியார் வரை காந்தியை இந்து மதம் முதல் பகுத்தறிவு வரை முழுமையாக அல்லாமல் கூறுகளை ஆராய்ந்த போது கொல்வின் ஒட்டுமொத்த இந்திய முதலாளிய அபிவிருத்தியில் ஏகாதிப்த்தியச் கூழலில் உள்ளுர் பழைமையான விவசாய உற்பத்தி முறைகளின் பிடிவாதமான உயிர்வாழும் போராட்டத்தில் வைத்து காந்தியை மதிப்பிட்டார் காந்தி பழைய இந்தியாவைப் பெருமைப்படுத்தியமையின் பொருளாதார உளவியலைக் கண்டு கூறினார். தமிழர்களின் பிரச்னையில் டுளுளுP யின் கருத்துக்கள் தோல்வியயுற்றதாய்த் தோன்றுவதன் காரணம் இலங்கையிலும் இந்தியத் துணைக்கண்டப் பிராந்தியம் தொழிற்துறை ரீதியாக வரை முடியாமல் போனதும் புதிய தொழிலாள வர்க்கம் உருவாகி சோசலிசப் புரட்சியின் கூறுகளைப் பலப்படுத்தத் தவறியதுமாகும். இந்தியத் துணைக்கண்டம் பலம் பெற ஏகாதிபத்தியங்கள் விடவில்லை. எனவே இப்பிரதேசம் பழைய உற்பத்தி வடிவம்களில் வலுக்குறைந்த உற்பத்திச் சக்திகளிடையே தொடர்ந்தும் விடப்பட்டன. சமயம் சாதி, இனம், பிரதேசம் சார்ந்த பிரச்னைகளை ஊடறுத்து ஒரே திசையில் வளதத்தக்க பொருளாதாரம் வளரவில்லை. மாடும் மாட்டு வண்டியும் அம்மி, உரல், ஆட்டுக்கல் தொழிநுட்பமும் கொண்ட இந்தியத் துணைக்கண்டத்தை வைத்துக் கொண்டு எப்படி சாதி சமயத்தை ஒழப்பது இவைகளைத் துறந்து கண்டம் தழுவிய மனிதர்களாவது? இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் எங்கும் ஏகாதிப்த்தியங்கள் தூண்டவிடத்தக்க பழைய இனக்குழுத்தன்மை வாய்ந்த மத மற்றும் தேசியப் போராட்டங்கள் நிலவின. பழைய விவசாய பொருளாதாரம் சாதியமைப்பை குலைய விடவில்லை. இயந்தியத் தொழில் தொழிநுட்பம் வந்திருந்தால் சாதி தளரத் தொடங்கியிருக்கும். எனவே இந்திய உபகண்டத்தின் பொதுநிலையான பின் தங்கிய பழைய பொருளாதார உறவுளே அது சார்ந்த சமுதாய மனோபாவமே இடதுசாரிகட்கு தடையாக இருந்தது. இலங்கையில் தமிழர் பிரச்சனை மட்டுமல்ல. கண்டிச் சிங்களவர். கரையோரச் சிங்களவர் பிணக்குகளும் தமிழர் பிரச்னைக்கு சமமாய இருந்தன. இவை இனக்குழுத்தன்மை வாய்ந்த முரண்பாடுகளாகும். தமிழர்களோ ஒரு இனமாக வளரத் தேவையான பொருளாதாரம், சமூக அடிப்படைகளைப் பெற்றிருக்கவில்லை. தமிழர்கள் தனித்தேசிய இனம் என்று கத்துபவர்கள் தேசிய இனங்கட்கான வரையறுப்புக்களை பூரணமாய் விளங்கவில்லை. ஸ்டாலினின் தேசிய இனம் எனில் மொழி, பொருளாதாரம், பண்பாடு நிலப்பரப்பு என்பவை இருக்கவேண்டும் என்பதற்கு அப்பால் தேசிய இனம் சோசலிச எதிர்காலத்தின் சாதகபாதகத்திற்கு உட்பட்டது எல்லா தேசிய இனங்களையும் அவற்றின் புவியியல் சூழல் ஏகாதிபத்தியங்களுடனான உறவுநிலை இவைகளைக் கணக்கெடுக்காமல் ஆதரிக்க முடியாது. தமிழ்ஈழப்போராட்டமும் புலிகளும் ஏகாதிபத்தியத்தில் அரசியற் கருவியாகிவிட்டன என்பதுடன் உலக மயமாகிய பொருளாதாரத்தின் காலத்தில் தேசியம் சுயநிர்ணயத்துக்கான போராட்டங்கள் காலங்கட்ந்தவையாகும். “சமசமாஜிகள் ஜேவிபியின் தலைவர் றோகண விஜேவீராவின் சமாதியில் சென்று மன்னிப்புக்கேட்க வேண்டும் என்று எஸ்.பொ.எழுதியுள்ளார். இங்கு 1971இல் 2 ஏப்பரல் முதல் 5 ஏப்ரல் வரை தொடங்கிப் பரவிய ஜேவிபி யின் எழுச்சியை தான் ஆதரிக்க முற்படுவது போல் காட்டுவது என்பது முதலில் சமசமாஜிகளை எதிர்க்கும் தருணத்துக்கு பாவிக்க மட்டுமே. கொல்வின் 1971 எப்ரல் கிளர்ச்சி பற்றி ஆய்வை சிறப்பாகச் செய்து இருந்தார் “யுஎன்பி க்கு எதிரான ஸ்ரீலங்கா சுதந்தரக்கட்சி டுளுளுP கம்யுனிசட் கட்சி என்பன வெற்றி பெற்று இடதுசாரி அரசாகப் பதவி ஏற்று இருந்த சமயம் மக்கள் புதிய அரசு மீது எதிர்பார்ப்புடன் இருந்தனர் கிட்டத்தட்ட எல்லாத் தொழிற்சங்கங்களும் அரசை ஆதரித்தன அல்லது சேர்ந்து செயற்பட்டன. நகர்ப்புறத்தின் அரசை செயற்படாமல் நிறுத்தக்கூடிய தொழிலாளர் அமைப்புக்களோ மலையகத் தோட்டத் தொழிலாளர்களிடமோ ஜேவிபி க்கு எந்த அதரவும் இருக்கவில்லை ஜேவிபி யின் எழுச்சி ஒரு இடதுசாரி அரசுக்கு எதிரான இடதுசாரிக்கலவரம் என்ற தோற்றத்தை எடுத்ததுடன் அது யுஎன்பி க்கும் இடதுசாரி அரசை பலவீனப்படுத்த முயன்ற ஏகாதிபத்தியத்துக்கும் சாதகமாகவே முடிந்தது. ஜேவிபி க்கு ஆதரவு தந்த நடுத்தரவர்க்க படித்த இளைஞர்கள், கிராமப்புற வேலையற்ற இளைஞர்கள் சமூகத்தை இயங்காமல் நிறுத்தக்கூடிய பலம் படைத்தவர்களாக இருந்தாரில்லை.

கிராமப் புறங்களில் கலகங்களை ஜேவிபி செய்தபோதும் நகர்ப்புறங்கள் வழக்கம் போல் இயங்கின. ஜேவிபி யுடன் தொழிலாளர்கள் இருந்;து கொழும்;பு உட்பட நகரங்களில் பொது வேலை நிறுத்தம் செய்தருந்தால் அரசு நிலைகுலைந்திருக்கும் அது ஜேவிபி யின் ஆயுதத்;தை விடப் பல மடங்கு சக்தி படைத்ததாக விளங்கி அரசை சரித்திருக்கும். ஆனால் ஆது எதுவும் நடைபெறவில்லை. ஜேவிபி மாவோயிசத்தில் இருந்து பெற்றுக் கொண்ட இந்திய விரிவாதிக்கம் என்ற கருத்து மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் போராட்டத்தில் இணைய விடாமல் அவற்றை இந்திய ஆக்கிரமிப்பின் கருவியால் காணத் தூண்டியது. இடதுசாரி அரசு பல சீர்திருத்தங்கள் செய்து இருந்தது. பெருமளவு நிலம் வைத்திருந்தவர்களின் காணிகள் பறிக்கப்பட்டன. 553,000 ஏக்கர் நிலம் தனியாரிடமிருந்து பறித்து அரசுடமையாக்கப்பட்டது. கூட்டுறவுத்துறை வளர்ந்து அதில் புதியதாக 33,000 பேர் நுழைந்தனர் பிரிட்டனின் முடிக்குரிய நாடு என்ற அந்தஸ்த விட்டு இலங்கை குடியாரசு ஆக்கும் முயற்சிகள் நடந்து வந்தன. எனவே ஒரு சமுதாயப் புரட்சி நடைபெற எதுவான உழகை;கும் மக்களின் பலம் இருக்கவில்லை. மாவோவின் இரண்டாம் யுத்த காலத்தியப் பரிசோதனையான கிராமப்புறங்களில் இருந்து நகரை நோக்கிய படை எடுக்கும் ஜேவிபி யின் இராணுவ தந்திரம் தோல்வியுற்றது. தொழிலாளர் வர்க்கத்துக்குரியதான முதன்மைப் பாத்திரத்தை விவசாயிகளின் துணைப்பாத்திரத்தை நிராகரித்து கல்வி கற்ற இளைஞர்கள் மாணவர்களைத் திரட்டிக் கொண்டு எழுந்த ஜேவிபி யின் எழுச்சி தோல்வியுற்றது. ஜே.விபி யின் எழுச்சி பாரிய மனித உழைப்புக்களையும் இடதுசாரி அரசின் பொருளாதார வளங்களையும் இழக்கவைத்து இடதுசாரிகளுடன் இணைந்து சோசலிச நாடுகளைச் சார்ந்து நின்ற சிறமாவோ பண்டாரநாயக்கா ஜேவிபி கிளர்ச்சியின்போது உதவி கோரி முதலிhளித்துவ நாடுகளிடம் ஒடினார் ஜேவிபி யின் கிளர்ச்சி எதிர்ப்புரட்சிக்கும் ஏகாதிப்த்தியங்களுக்கும் மட்டுமே பலம் சேர்த்துவிட்டுச் சென்றது. ஜேவிபி யின் கிளர்ச்சியின் தோல்வி இடதுசாரி களின் துரோக்கத்தால் ஏற்பட்டதென்று. எஸ்.பொ பேச முயற்சிக்கின்றார். 1940 களின் இறுதியில் யுஎன்பியுடன் கம்யுனிஸ்ட் கட்சி, ஸ்டாலினிசப் புத்திமதி கேட்டு உடன்பாட்டுக்குப் போகாமல் இருந்திருந்தால் இடதுசாரி அணியானது டுளுளுP கம்யுனிஸ்ட் கட்சின்று உடையாமல் இருந்திருந்தால் கெபரியாவிலும் வியட்நாமிலும் நடந்தது போல ஒரு சமூக எமுச்சி வெற்றிகரமாக இலங்கையிலும் நடந்தேறியிருக்கும். இது ஏகாதிபத்தியக் கட்சியான யுஎன்பி யுடன் கம்யுனிஸ்ட் கட்சி சேர்ந்ததால் தடைப்பட்டது யுஎன்பி – தமிழ்காங்கிரஸ், தமிழரசு போன்ற இனவாதக் கட்சிகள் தமிழ், சிங்கள, முஸ்லிம் உழகை;கும் மக்கள் ஒன்று சேரவிடால் பார்த்துக் கொண்டன. டுளுளுP இந்த இனவாதச் சக்திகளுடன் அரசியலில் மல்லுக்கட்ட வேண்டியிருந்தது. இந்த நிலைமைகளே இடதுசாரிகள் வலு இழக்கக் காரணம் தமிழ் ஆயுதப் போராட்டம் எழுந்து தமிழ், சிங்கள, இனவாதம் கூர்மையாடைந்த போது இடதுசாரிகள் மென்மேலும் பலவீனமடைந்தன 1970 களில் இடதுசாரி ஐக்கிய முன்னணி அரசின் காலத்தில் தான் தமிழ் ஆயுதக் குழுக்கள் பிறந்தன். இலங்கை இடதுசாரி இயக்க அரசியலுக்கு எதிராகவே தமிழ் தேசியவாதிகள் ஆயுதமெடுத்தார்கள் அவர்கள் ஆரம்பத்தில் சோசலிசம், மாக்சியம் பேசினார்கள் பின்பு படிப்பாய் கைவிட்டு தீவிர தமிழ் பாசிசத்தை வந்தடைந்தனர். மறுபுறம் ஜேவிபி ஆயுத ஏழுச்சி முடிந்த கையோடு தமிழ்தேசியவாதிகள் உடன் ஆயுதம் எடுத்தார்கள் இரண்டும் இடதுசாரி அரசின் காலத்திலேயே என்பதை நாம் மறக்கக்கூடாது. ஜேவிபி யின் மாணவர்கள் வேலையற்றவர்கள் எழுச்சி தற்செயலாக இராணுவ ரீதியாக வெற்றி பெற்று இருந்தாலும் இது மற்றொரு பொல்பொட்டிசமாக மாவேயிச மாதிரியாகவே மாறியிருக்கும். 1960 கட்குப் பின் டுளுளுP அதன் உள் வெளி நெருக்கடிகளினால் பாராளுமன்ற வாதத்தை நோக்கி சார்ந்துவிட்ட போதிலும் இடதுசாரிகள் இலங்கையில் சொந்தத் தொழிற்துறை பலத்தை உள்ளுர் பொருள்hதாரத்தை ஏற்படுத்துவதன் மூலம் சோசலிசப் புரட்சி ஒன்றுக்கு முன்பான நிலைமைகளை ஏற்படுத்த முயன்றனர். எனக் கொள்ள முடியும் ஏ.ஏஸ் ஜெயவர்த்தன போன்ற இடதுசாரி ஆய்வாளர்கள் இக்கருத்தை வெளியிட்டனர். முதலாளித்துவத்தின் உயர்ந்த தொழிற்துறை சார்ந்த வளர்ச்சி பலமான தொழிலாளர்களையும் சோசலிச சமூகத்தின் அடிப்படையான உற்பத்திச் சக்தியையும் படைத்திருக்கும். ஜேவிபி எழுச்சி என்பது சர்வதேச மற்றும் உள்நாட்டு நிலைமைகளை மதியாமல் எழுந்ததாகும். அது வீர சாகசமாக பல ஆயிரம் சிங்கள இளைஞர்களின் தியாகங்களில் முடிவுற்றது. இக்காலத்தில் இடதுசாரி ஐக்கிய முன்னணியுடன் இடதுசாரிகட்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கும் முரண்பாடுகளும் ஏற்பட்டன. எஸ்.டி.பண்டாரநயக்கா, சண்முகதாசன், டானியல் உட்பட பல இடதுசாரிகள் கைது செய்யப்பட்டனர். மாவோ புதிய இயந்திரத் துப்பாக்கிகளையும் ஏனைய இராணுவ உதவிகளையும் இலங்கை அரசுக்கு வழங்கினார் எனவெ அதில் டுளுளுP மட்டும் குற்றம் காட்டுவது சரியான பார்வையல்ல ஜேவிபி ஒரு மாவோயிஸ்ட் இயக்கம் என்பதும் இலங்கை மாவோயிஸ்டுகள் கூட ஜேவிபிக்கு ஆதரவு காட்டவில்லை என்பதையும் எஸ்.பொ. குறிக்கவில்லை ஜேவிபி பற்றி என்ன கருத்து எம்.சி. சுப்பிரமணியத்துக்கு இருந்தது? ஜேவிபி யினருக்கு புனர்வாழ்வுத்திட்டம் என்பவற்றில் இடதுசாரிகள் பங்கு இருந்தது. ரோகண விஜயவீர ஆயுதம் எடுத்தாலும் 40 ஆயிரம் இளைஞர்களைத் திரட்டியதாலும் அவர் கொல்வின் ஆர் டி சில்வாவுக்கு சமமான மாக்சிய அறிவைக் கொண்டிருந்தார் என்று எஸ்.பொ கருதுகின்றனரா? ஜேவிபி இடதுசாரிகளின் கோசம்களையே ஒலித்தார்கள். மாவோவின் மேற்கோள்களை ஒத்த சுலோகம்களைத் தத்துவம் என்று தவறாய் கருதினர்.


“சோவியத் யுனியனின் உடைவு” என்ற நூலை எழுதிய ரெஜி ஜெயவர்த்தன முன்பு எல்எஸ்எஸ்பியில் இருந்தவர். ஆவரின் அறிமுகத்தின் பினபே எஸ்.வி. இராசதுரை “ரஷ்யப்புரட்சி இயங்கிய சாட்சியம்” என்ற ஸ்டாலினிசம் பற்றிய குறிப்பிடத்தக்க விமர்சனம் உடைய மிகச் சிறந்த மொழி நடையில் அமைந்த நூலை எழுதினார். எஸ்.வி இராசதுரை உட்ப்ப் பல தமிழ்நாட்டு பழைய ஸ்டடாலிஸ்டுகள் ரெஜி சறீவர்த்தனாவைக் கவனித்த அளவுக்கு கொல்வின் ஆர் டி சில்வாவை அறியவோ கற்றிருக்கவோ இல்லை. கொல்வினைப் படிகாதவர்கட்கு ரெஜிசிறிவர்த்தனா போன்றவர்கள் பெரும் புதினமாகவே தென்படுவார்கள். ரெஜி சறீவர்த்தனா போன்ற அவநம்பிகை வாதிகள், சமூக இயங்கியலுக்கு மாற்றாக. அனுபவ வாதத்தை சரணடைந்தார்கள். அவர் இசாக்டொச்சரைச் சந்தித்து இருந்தார். ருஸ்ய மொழி தெரியும் என்ற காரணிகள் மாக்சிய இயங்கியலைக் கட்டாயம் புரிந்தமைக்கு உதாரணங்களல்ல., எஸ்.வி.ஆர் தமிழ்நாட்டு எல்லாப் பழைய ஸ்டாலிஸ்டுகளையும் வட முன்னேறியவராக இருந்தனர் என்பதில் சந்தேகமேயில்லை. எனினும் ரொட்ஸ்கி பற்றி மிக மிக எச்சரிக்கையுடன் எழுதினார் என்றபோதும் அவர் ரொட்ஸ்கியைக் கற்று இருக்கவில்லை. அவரது ரொட்ஸ்கி பற்றி அறிதல் ரெஜி சிறீவர்த்தனா மூலம் கிடைத்தது அல்லது தொடங்கியது எனலாம். ருஸ்யப்புரட்சி இயங்கிய காட்சியம் “தனிநாட்டில் சோலிசம்” என்ற ஸ்டாலினியக் கருத்து நிலைமை மறக்காமல் எழதப்பட்டதாகும் ஜெர்மனியப் புரட்சியில் எஸ்பிடி கெம்யுனிசக் கட்சியை கைவிட்டது. காசிகள் பதவிக்கு வருமுன்பு எஸ்பிடி கெம்யுனிஸ் கட்சி உறவை ஸ்டாலின் தடுத்தமை ஐரோப்பிய புரட்சிகள் 1920 களில் ஏற்பட்டபோது அவை வெற்றி பெறாமைக்கு ஸ்டாலினிசத்தின் காரணிகள் எவையென அவர் ஆராயவில்லை. 3ம் உலகம் கலைக்கப்ட்டமை போனற விபரங்களைக் கூட அவர் தொடவில்லை.

உண்மையில் எல்எஸ்எஸ்பி 1940 களில் பேசிய ஸ்டாலினிசம் பற்றியபுரிதலைவிடவும் மிகவும் குறைவாக 1990 களில் எஸ்.வி. இராசதுரை பேசினார். விளக்கினார் புரிந்து கொண்டார். முழுமையாக மாக்சிய விசாரணைக்குப் போகதவர்கள் பெரியார், அம்பேத்கர் பின்நவீனத்துவம் போன்ற போக்குகளில்நுழைந்து வேறுவாதப் பொருட்களைத் தேடியதின் மூலம் அவர்கள் விடுதலை பெற்றனர். கொல்வின் ஆர் டி சில்வா அன்றே ஸ்டாலினை “சிவப்பு ஜார்” என்று வர்ணித்தார். 1937 – 1938 வழக்குகளை அவர்கள் கண்காணித்து எழதினார். இன்று 60வருடம் கழித்து கிராம்சி அல்தூசரை கொஞ்சம் வாசித்து விட்டு மாக்சியத்தை வெருட்ட நினைத்த வர்களில்
ஒருவர்கூட ரொட்ஸ்கியின் பக்கம் போகவில்லை. ரொட்ஸ்கி அல்லது ரொட்ஸ்கியம் என்ற பதங்கள் எஸ்.பொ.வுக்கு வெறுப்பு ஊட்டுகின்றன. புகலிட நாடுகளி;ல் கூட ரொட்ஸ்கி என்றால் ஏதோ 4ம் அகிலக் குழுக்கள் சார்ந்த பிரச்னை ரொட்ங்கிக்கும் ஸ்டாலினிற்குமான போட்டியை இவர்கள் இப்போதும் பேசித்திரிகிறார்கள் என்ற தேங்கிய அறிவே காணப்படுகின்றது.

எவர் ரொட்கியைக் கற்கவில்லையோ ஸ்டாலினிசம் என்ற அரசியல் பார்வையை விளங்கவில்லையோ அவர் மாக்சியவாதியாய் இருக்தத் தகுpயில்லை முழு ஆசியாவிலும் ரொட்ஸ்கியின் சிந்தனை பலமாக இருந்த நாடு மிகப் பெரும் ரொட்ஸ்கியக் கட்சியும் தொழிற்சங்கமும் சிந்தனைவாதிகளும் இருந்த நாடு இலங்கையாகும். இந்தியாவில் ஸ்டாலினிசமும் மாவோயிசமும் பலமாக இருந்தமையால் ரொட்ஸ்கியின் கருத்துக்கள் அங்கு வளர்ந்திருக்கவோ அறிமுகமாகவோ இல்லை. எனவே இந்திய இடதுசாரி இயக்கம் கட்டு ஸ்டாலினிசம் தூரத்து அறிவாகக் கூட இருக்கவில்லை எனலாம். சோவியத் யூனியின் வீழ்ச்சியின் பின்பே அவர்கள் துடித்துப் பதைத்து எழுந்தார்கள். சோவியத் யூனியனை விளங்க முயன்றனர். ஸ்டாலினிச வாய்ப்பாடுகளால் அவர்கள் திருப்தி காண முடியவில்லை. நடப்பு நிலைமைகள் பிரம்hணடம்களை கோரி நின்றது.

அவர்கள் மாக்சியத்தில் மனித அகவயப் பிணபுகட்டு மதிப்பு இல்லை. இடதுசாரிக் கட்சிகள் அதிகாரத்துவயமாகிவிட்டன என்று கூறத் தொங்கினர். சோசலிசத்தை ஜனநாயகப்படுத்த முயன்றார்கள். லெனின் கட்சியை அதிகாரமாய் கட்டிஅமைத்து விட்டார் என்றார்கள். புரட்சி, கட்சி யாவுமே தன் அக நிலைகளை மட்டுமல்ல சூழுவுள்ள புறநிலைகள் மேல் ஆதிக்கம் செலுத்தம் மாற்றம் பாதிப்புறும்என்பதை மறந்தனர். சமுதாய மாற்றமும் உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியும் புரட்சி சார்ந்திருந்த சூழல் கட்சி சகலதையும் மாற்றும் வளர்க்கும் மாறா நிலைவாதிகள் மட்டுமே நேற்றுப் போல் இன்றும் நாளையும் கட்சியும் புரட்சியும் இருக்கும் என நம்புவர்.

ரோட்ஸ்கிய ஆய்வு ஐரோப்பவில் தொடர்கிறது. 2005இல் பேராசிரியர் Pநைசசந டீசழரந 1292 பக்கத்தில் எழுதிய “வுசழவணமi நin pழடவளைஉhந” டீழைபசழயிhiஉ” சிறந்த ஆய்வுநூலில் வெளிவந்துள்ளது.

தோட்டத் தொழிலாளர்கள்
யுஎன்பி யின் களனி மாநாட்டில் ஜேஆரினால் சிங்கள மொழிச் சட்டம் கொண்டு வரப்பட்டது. டட்லி 1952 இல் இராமசாமிக்கும் மீனாட்சிக்கும் வாக்குரிமையப் பறித்தார் என்று எஸ்.பொ.. எழுதியுள்ளார். இது தமிழரசு மேடைகளிலட பல நூறு தரம் சொல்லப்பட்டது தான். அத்தகைய யுஎன்பியுடன் எப்படி தமிழ்க்காங்கிரஸ், தமிழரசு என்போர் சேர்ந்து கொண்டனர்? எஸ்.பொ. எப்படி மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் வாக்குரிமை பறித்த யுஎனபி யினது மேடைகளில் கால் கூசாமல் ஏறினார்? அந்தத் துரோகத்தை மறந்தார்? எஸ்.பொவினதோ அவர் சார்ந்த தமிழ்த் தேசியவாதிகளது விபரிப்புப் போன்றோ மலையக மக்களுக்கு எதிரான பிரசா உரிமைச் சட்டம் வாக்குரிமைச் சட்டங்கட்பு பின்புலமாக பிரிட்டிஸ் இருந்து யுஎன்பி யே பிரிட்டனினால் தோற்றுவிக்கப்பட்ட கட்சிதான். கொலனிக்கால மேற்கத்தைய சிந்தனையாளர்கள் பல வித பிரிவினைவாகச் சிந்தனைப் போக்குகளைப் பரப்பினார்கள். ஆரியர் திராவிடர் பிரச்னைகிளப்பப்பட்டு இந்தியவின் பிரிவினைப் போக்குகள் கிளப்பப்பட்ட சமயமே இலங்கையிலும் ஏ.ஈ.குணசிங்கா போன்றவர்கள் சிங்களவர் ஆரியர் என்ற பிரச்னையையும் இந்தியர்கள், மலையாளிகள் எதிர்ப்பையும் தொடக்குகின்றார். இந்த வகையில் மக்களைப் பிளந்தவர்கள் பிரிட்டிஷ் எதிர்ப்புக்குப் பதிலாக உள்ளுர் மக்களிடையே பேதங்களை ஊட்டி நாட்டின் ஒன்றுபட்ட எழுச்சியைப் பலவீனப்படுக்தினார்கள். இந்தியாவிலும் சரி இலங்கையிலும் சரி உள்நாட்டின் பல ஆயிரமாண்டு காலப் பேதங்களை பேசி நியாயம் கேட்டவர்கள் இந்த கொடுமைகளை உயிருடன் வைத்திருக்கும் சமூக அமைப்பை மாற்றுவது பற்றியும் அதற்காக சகல மக்களுடனும் ஒன்றியையும் போககுக்;கு குறுக்கே நின்றனர். பிரிட்டிஸ் எதிர்ப்பை சிதறடித்தனர்.

கேராள்வில் உள்ள கொச்சியில் இருந்து வந்தபடியால் மலையாளத் தொழிலாளர்கள் பொதுவாகக் கொச்சியர் என அழைக்கப்பட்டனர். புகையிரதப்பகுதி, கொழும்பு மாநகரசபைஇ தொழிற்சாலைகளில் தொழிலாளர்களாகவும், ஐரோப்பியர் மற்றும் இலங்கையின் செல்வந்தர் வீடுகளில் பணியாட்களாகவும் இவர்கள் பணிபுரிந்தனர். ஒரு பகுதி கள்ளிறக்கும் தொழிலாளர்களாகவும் உழைத்தனர் உணவுவிடுதிகளை நடத்துபவர்களாகவும் இருந்தனர். இந்திய மலையாள எதிர்ப்புப் பேசிய ஏ.ஈ.குணசங்கா சிங்கத் தொழிலாளர்களை விட மலையாளத் தொழிலாளர்கள் குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்வதாகவும் சிங்களத் தொழிலாளர்களின் வேலைகளைப் பறித்துவிட்டதாகவும் சிங்கள இனவாதத்தைக் கிளப்பினார். இங்கு மலையாளத் தொழிலாளர்களை குறைந்த சம்பளத்தில் வைத்துச் சுரண்டிய முதலாளிகளை எதிர்த்து அவர் எதுவும் பேசவில்லை. மாறாக புதிய அந்நியச் சூழலில் அடிமை கொள்ளப்பட்ட பாதிப்புற்றவர்களான மலையாளத் தொழிலாளர்களையே ஏ.ஈ.குணசங்கா எதிர்த்தார். 1911இல் 1,000ஆக இருந்த மலையாளத் தொழிலாளர்களின் தொகை 1930இல் 30,000க்கும் மேலாக அதிகரித்தது. இந்தியாவில் பிரிடிஷ் அரசின் பொருளாதார கொள்கையால் இந்தியாவில் பட்டினி, வறுமை, வேலையின்மை விவசாய நெருக்கடி காணப்பட்டது. இக்காலத்தில் பொருளாதார ரீதியாக இந்தியாவை வடச் சிறப்பாக இருந்த இலங்கைக்கு இந்தியத் தென்பகுதிகளில் இருந்து மக்கள் வரத் தொடங்கினார்கள். இதுவே பின்பு கள்ளத்தோணி வருகையாக சுதந்திரத்தின் பின்பு மாறியது.

வெள்ளவத்தை தொழிற்சாலை வேலைநிறுத்தத்தில் மலையாளத் தொழிலாள வர்கத்தின் முதல் வரிசை பேராளிகளாக அவர்கள் இருந்தனர். இவர்களை ஆதரித்த எல்எஸ்எஸ்பி யைச் சேர்ந்த டி.சொய்சா “கொச்சி சொய்சா” என்று சிங்கள இனவாதிகளால் அழைக்கப்பட்டார்.அவர்களின் கூட்டங்களில் “அரோகரா” என்ற கோசம் எழுப்பப்ட்டது. கேரளத்தின் முக்கிய கெம்யூனிஸ்ட்டான ஏ.கே.கோபாலன் இலங்கை வந்து மலையாளத் தொழிலாளர்களின் கூட்டங்களில் பேசினார். மலையாளத்தைச் சேர்ந்தவரான கே.மாதவன் இடதுசாரிகளின் வர்த்தக ஊழியர் சங்கத் தலைவராக இருந்ததுடன் “நவசக்தி” என்ற மலையாள மொழிப் பத்திரிகையையும் அவர் நடத்தினார். 1940 இல் மலையாளத் தொழிளாளிகள் திரும்பிச் செல்லும் வரை அவர்கள் தொழிலாளர்கள் இயக்கத்தில் பல்வகையில் பங்கேற்றனர். மலையாளத் தொழிலாளர்கள் கள்ளுச்சீவும் தொழிலைப் புரிந்தபோது சிங்கள, பௌத்த இனவாதிகள கள்ளுக்குடிப்பது பௌத்த மதத்துக்கு எதிரானது எனப் பிரச்சாரம் செய்தபோது எல்.எஸ்.எஸ்.பீ கள்ளுச்சீவும் தொழிலாளர்களைப் பாதுகாத்தது. சிங்கள இளவாதிகள் பிரிட்டிஷ் எதிர்ப்பைக் காட்டுவதற்குப் பதில் மலையாளிகள் எதிர்ப்பையும் பின்பு அவர்கள் வெளியேறிய பின்பு அது தீவிர இந்திய எதிர்ப்பாக மாறியது. கொழும்பில் பெரும் வர்த்தகர்களாக இருந்த செட்டிகள், நாடார் போன்ற இந்தியச் செல்வந்தர்கட்கு எதிராக அவர்களது சுரண்டலுக்கு ஏதிராக இருந்த எதிர்ப்பு நியாயமானதாக இருந்தது. இவர்கள் ஏற்றுமதி இறக்குமதி மற்றும் சில்லறை வர்த்தகங்களில் ஈடுபட்டு இருந்தனர். 2ம் உலக யுத்தத்தில் இந்திய வர்த்தகக் கொள்கைக்கு எதிராக பெரும் எதிர்ப்பு நிலவியது. இதற்கு அடிப்படை இரந்தது. ஆனால் மறுபுறம் 1ம் உலக யுத்த சமயத்தில் முஸ்லம் வர்த்தகர்கட்கு எதிரான இத்தகைய உணர்வுகள் நிலவின.

இதற்கு முதலிலே இந்திய - முஸ்லிம் வர்த்தகர்கள் மட்மே பொறுப்பாக இருக்கவி;ல்லை. பிரட்டிஸ் உட்பட ஊகாதிபத்தியங்களின் யுத்தக் கொள்கைகளாலேயே இலங்கையுள் பொருளாதார சுமைகள் ஏற்பட்டது பிரிட்டிஸ் அரசு புதிய வரிகளை விதித்தமையால் ஏற்பட்டது. பிரட்டிஷ் அரசே முஸ்லிம்களுக்கு எதிராகவும் இந்தியர்கட்கு எதிராகவும் உணர்வுகளை உருவாக்க ஒரு வகையில் உதவியது அதன் மூலம் தன் மேலான இலங்கை மக்களின் எதிர்ப்பைவேறுதினைசக்கு மாற்றிவிட்டனார் இலங்கை மக்ளிடையேயான முரண்பாடாக மாற்றிவிட்டனர். இப்படி இந்திய முதல்hளிகட்கு எதிரான எதிர்ப்பு மலையகத் தோட்டத் தொழிலாளர்கட்கு எதிரானதாக வளர்த்துச் செல்லப்பட்டது. பிரிட்டன் இந்தியாவையும் பாகிஸ்தானையும் பிரிவினை செய்து கொண்டு இருந்த சமயமே பிரிட்டிஸ் அரசின் வளர்ப்பான யுஎன்பி மழையக்குத் தோட்டத் nதூழிலாளர்கட்கு எதிரான சட்டத்தைக் கொண்டு வந்தது. பிரசாஉரிமை, வாக்குரிமையைப் பறித்தது. இதற்குப் பல நோக்கங்கள் இருந்தன டுளுளுP யின் தொழிலாளர் இயக்க வளர்ச்சியைத் தடுப்பது, இலங்கையின் மக்களிடையே இனரீதியிலான பிரிவினைகளை வளர்த்தல் பாகிஸ்தான் போல இலங்கையிலும் இந்திய எதிர்ப்பை வளர்ப்பது இந்த நோக்கங்கள் யுஎன்பிமூலம் பிரிட்டனால் சாதிக்கப்பட்டது. இலங்கையும் பாகிஸ்தான் போல் இந்திய எதிர்ப்பு அணிக்குக் கொண்டு வரப்பட்டது. காஸ்மீர் ஹைதராபாத், கோவா போன்ற இடங்களை ஆக்கிரமித்தது போல் இலங்கையும் இந்தியா ஆக்கிரமிக்கவுள்ளது என்ற கருத்தை யுஎன்பி பிரச்சாரம் செய்தது. இந்தப் பிரிட்டிஷ் அரசியலுக்கு எதிராக டுளுளுP இந்தியத் துணைக்கண்ட ஒற்றுமை, இலங்கை தழுவிய மக்களின் ஐக்கியம் என்ற இலட்சியத்தை முன் வைத்தது யுஎன்பி பிரிட்டனை எதிர்த்த வரலாறு இல்லை மாறாக இந்தியாவைத் தீவிரமாய எதிர்த்தார்கள். இலங்கையை கைப்பற்றும் திட்டம், ஒரு மாகாணமாக இனைக்கும் கொள்கை இந்தியாவுக்குள்ளது என்று தொடர்ந்து பிரச்சாரம் செய்தது. மலையத் தோட்டத் தொழிலாளர்கட்கு எதிரான சட்டம் மூலம் இடதுசாரிகளையும் தோட்டத் தொழிலாளர்களையும் அரசியல் ரீதியில் பலமிழ்க்கச் செய்தனர். ஆனால் தோட்டத் தொழிலாளர்களிடையே தமிழன உணர்வுகள் ஒருபோதும் செயற்படவில்லை. அவர்கள் வர்க்க ரீதியில் தொழிலாளர் உணர்வுகளுடன் இறுக்கமாக தொழிற்சங்கங்களில் இணைக்கப்பட்டிருந்தனர் தமிழரசுக் கட்சியின் “இமயத்தில் புலிக்கொடி பொறித்த தமிழன்” கதைகட்கு எல்லாம் அவர்கள் செவி கொடுக்கவில்லை. அவர்கள் பெரும்பகுதி தமிழோடு சிங்கள் மொழியையும் பேசினார்கள் தோட்டத் தொழிலாளர் உரிமைப்பறிப்புக்கு டி.எஸ். சேனநாயக்கா மட்டுமே காரணமென்பது இலங்கை - இந்திய முரண்பாடுகளின் பின்பு பிரட்டன் இருந்தது என்பதைக் காணத்தவறுவதாகும். இடதுசாரி அரசுகள் இலங்கையில் ஏற்பட்ட எல்லாச் சமயங்களிலும் அது இந்தியாவுடன் நெருங்கிச் சென்றது. எந்தப் பிரிட்டிஸ் அரசு தமது பெருந்தோட்டச் செய்கைக்காக இந்தியாவிலிருந்து மலையகத் தோட்டத் தொழிலாளர்களைக் கொண்டு வந்ததோ அவர்களே தோட்டத் தொழிலாளர்களின் உரிமையைப் பறிக்கும் கட்சியின் பின்புல நிர்வாகிகளாக இருந்தனர் பிரிட்டிஷ் அரசு டுளுளுP யை இந்திய ஆதரவு அமைப்பு என்ற காட்டியது. 1937 இலேயே சிங்களத் தேசியவாதிகளும் இக்கருத்தைக் கூறத் தொடங்கியருநதனர். அதே சமயம் இவர்கள் பிரிட்டிஸ் அபிமானிகளாக இருந்தனர். 1935களின் இறுதியில் நடேசஐயர் டுளுளுP யின் உதவியுடன் மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் முதல் தொழிலாளர் அமைப்பைக் கட்டினார். அதன் பின்பு டுளுளுP மலையகத்தில் தீவிரமான தொழிற்சங்க நடவடிக்கைளில் ஈடுப்பட்டது. 1935 இல் முல்லோயா 1940 இல் பதுளை போன்ற இடங்களில் பெரும் வேலை நிறுத்தப் போராட்டங்கள் எழுந்தன. இந்த வேலைநிறுத்தங்கள் பிரிட்டிஸ் மற்றும் இலங்கைத் தோட்ட முதலாளிகட்கு எதிராக நடத்தப்பட்டது. தோட்ட முதலிhளிகள் பிரிட்டிஷ் ஆதாவாளர்களாக இருந்தனர். இந்த வேலைநிறுத்தத்தின் பின்பே டுளுளுP பியை ஒடுக்க பிரிட்டிஷ் அரசு முயன்றது.

அதன் ஒரு விளைவாக இந்திய காங்கிரசின் நேரு இரண்டாம் தடவையாக இலங்கை வந்து டுளுளுP யை பிரிட்டன் தடை செய்திருந்த சமயத்தில் மலையகத்தில் டுளுளுP க்கு எதிராக இலங்கை இந்திய காங்கிரஸ் என்ற தொழிற்சங்கத்தை ஆரம்பித்தார். இந்த அமைப்பு தோட்ட முதலாளிகளின் நேரடி நிர்வாகிகளாக இருந்து தோட்டக்கங்காணிகளைக் கொண்டு தொழிலாளர்களைத் திரட்டியது அமைப்பாகியது. அக்காலத்தில் தோட்டக்கங்காணிகள் மிகக் கொடியவர்களாக இருந்தனர். டுளுளுP அதற்கு முனபே தோட்டங்களில் கங்காணி முறைகளை ஒழிக்கவேண்டும் என்று போராடி வந்தது. அதே கங்காணிகளை வைத்தே இலங்கை இந்தியக் காங்கிரசும் தொடங்கப்பட்டது. இதன் முலம் மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் ஏனைய இலங்கையின் தமிழ், சிங்கள, முஸ்லிம் தொழிலாளர்கள் ஏனைய இலங்கையின் தமிழ், சிங்கள, முஸ்லிம் தொழிலாளர்களிடமிருந்து பிரிக்கப்பட்டதுடன் பொது ஐக்கியத்தின் பலத்தை இழந்தனர் என்பதுடன் தமிழ், சிங்கள, முஸ்லிம் ஒற்றுமையும் உடைக்கப்பட்டதுஃ சிங்கள, தமிழ் இனவாதிகளின் அரசியல் பலம் பெற்றது, பிரசாஉரிமை, வாக்குரிமைச் சட்டம் 1948 இல் கொண்டு வரப்பட்டபோது மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் தனித்து நின்றனர். டுளுளுP 1935 இல் மலையகத்தில் ஊநுறுரு தொழிற்சங்கத்தை ஆரம்பித்தது. (பின்பு டுநுறுரு என ஆகியது) இதற்காகப் பிரச்சாரம் செய்ய இந்தியாவிலிருந்து காங்கிரசின் இடதுசாரி அணியில் அப்போது இருந்த கமலாதேவி சட்டோ பாதத்தியா உட்படப் பலர் இலங்கை வந்தனர். ஊநுறுரு நடத்திய போரட்டம் முறியடிக்க தோட்டங்களுக்குள் சிங்கள தொழிலாளர்களை 1938, 1939 களில் இறக்க முயன்றபோது இதை ஊநுறுரு தடுத்து நிறுத்தியது. இலங்கை இந்திய தொழிலாளர் சங்கங்கள் உருவாக்கப்பட்டதுடன் சிங்களத் தொழிலாளருடன் இருந்த மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் தொடர்புகள் அறுந்தது. இலங்கை இந்தியத் தொழிலாளர்கள் காங்கிரஸ் இடதுசாரிகளை எதிர்த்த நடவக்கைகளைத் தொடங்கினர். தோட்டத் தொழிலாளர் மத்தியில் டுளுளுP யின் செய்ற்பாடுகளை அழிக்கவும் தாமே தனியமைப்பாகவும் முயன்றனர். டுளுளுP யும் ஊநுறுரு வம் பிரிட்டிஷ் எதிர்ப்பு நலை எடுத்தபோது அதன் தலைவர்கள் கைது வழக்கு சிறை நடந்திரா விட்டால் இலங்கை இந்தியத் தொழிலாளர் சங்கத்தால் இலகுவாக மலையகத்தில் ஊன்றியிருக்கமுடியாது. டுளுளுP யின் இடத்தைக் கைப்பற்றபிரிட்டிஸ்அரசும் ஏன் நேருவும் கூட இணைந்து சூழல் அமைத்துக் கொடுத்தது. அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த கம்யுனிஸ்டான ஆ.டு.ய டீசயஉந புசனைடந மலையகத்தில் டுளுளுP க்காக பிரச்சாரம் செய்தார் அன்றைய இலங்கையின் கவானரான செர் றெஜினோல்ட் ஸ்ரப்ஸ் அவரை 48 மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேற்ற முயற்சித்தார்.

1937 ஏப்ரல் 22 ஆம் திகதி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது டுளுளுP உடன் டீசயஉந புசனைடந ஐ மறைத்து வைத்துவிட்டு அவரை அரசு கைர்து செய்து விட்டதாக ஆட்கொணர்வு மனு ஒன்றை தொடர்ந்தனர் பிரிட்டிஸ் அரசுக்கு எதிரான இயக்கமாக இதை ஆரம்பித்தனர். 1937 மே தின ஊர்வலத்தில் சமசமாஜிகள் “றுந றுயவெ புசைனடநஇ னுநியசவ ளுவரடிடிள” என்ற குரலோடு நடந்தார்கள் 18 மே இல் டீசயஉந புசனைடந கைது செய்யப்பட்டபோது இலங்கையின் சிறந்த வழக்கறிஞரான செ;.வி.பெரேரா ஆவருக்காக வாதிட்டார் இதுவும் தோட்டத் தொழிலாளர்களின் போராட்டத்தின் ஒரு பகுதியாகும் பிரசாஉரிமை. வாக்குரிமைச் சட்டத்தை எதிர்த்து 1948 இல் பாராளுமன்றத்தில் என்.எம்.பெரேரா பேசும்போது, கிட்லரின் இனவாதக் சட்டத்துடன் ஒப்பிட்டுப்பேசியதுடன் இச்சட்டத்தின் உட்கிடை மனிதநீதியோ சமுதாய நீதியோ அல்ல மாறாக ஒரு குறிப்பிட்ட ஒரு வர்க்கத்தின் தேவையாகும் பறங்கியர், ஜாவா, தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் குடியுரிமைச் சட்டப்படி பிறப்பால் பரம்பரையால் இலங்கைப் பிரசைகளாக ஏற்பது போல் மலையகத் தோட்டத் தொழிலாளர்களும் நடத்தப்படல் வேண்டும் என்று சமசமாசவாதிகள் சார்பில் வாதிட்டார். யுஎன்பி தோட்டத் தொழிலாளர்கள் இந்திய ஆதிக்கத்தன் கருவி எனக் கூறியது. இதுவே பிற்கால மாவோயிச இயச்சமான ஜேவிபி யின் அரசியல் சித்தமாகவும் இது இருந்தது. பிரசாஉரிமை, வாக்குரிமைச் சட்டத்தை ஆதரித்து ஜி.ஜி. பொன்னம்பலம், சி.சுந்தரலிங்கம், சி.சிற்றம்பலம், கே.கனகரத்தினம், ரி.இராமலிங்கம், எஸ்.யு.எதிர்மன்ன சிங்கம், வி.நல்லையா, ஏ.எல. தம்பையா ஆகிய சுயச்சை தமிழ்க் காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆதரித்து வாக்களித்தபோது சமசமாஜிகளுடன் சிங்கள் சுயேச்சை எம்.பி.க்களான லக்ஸ்மன் ராஜபக்ச, வில்மட்பெரேரா, ஆர்.எஸ் பொல்கொல்ல, ஐமெ;.ஆர் ஈரியகொல்ல, மெ.சிறிநிசங்க போன்றவர்கள் எதிர்த்து வாக்களித்ததை தமிழ் பாசித்தால் கண்கெட்டுப் போன எஸ்.பொ பதிவு செய்யவில்லை, ஆனால் மலையக மக்களுக்கு துரோகம் இழைத்து ஜி.ஜி. பொன்னம்பலத்துடன் சேர்ந்த சாப்பிடக் குடீக்க எஸ்.பொ.வுக்கு ஒங்காளம், சக்தி வரவில்லை. இத்தகையவரா சமசமாஜிகள் இனவாதக்கட்சி என்கிறார்? தோட்ட முதலாளி தொண்டமானை தனது நண்பர் என்ற மட்டத்துக்கு எழுதும் எஸ்.பொ 1972 இல் இடதுசாரி அரசுகளில் நிலச்சீரத்திருத்தத்தில் தொண்டமானின் பறிக்கப்பட்ட பெருந்தோட்டங்கள் பற்றி எழுதியிருக்கலாம்.

முற்றும்.
தமிழரசன் பேர்லின்