Thursday, March 18, 2010

எஸ்.பொ.வின் வரலாற்றில்(பகுதி:3)

எஸ்.பொ.வின் வரலாற்றில் வாழ்தல் நூல் விமர்சனம்


(டிசம்பர் 2007 இன் இக்கட்டுரை கையெழுத்துப் பிரதியாக எழுதப்பட்டு ஐனவரி 2010 இல் அச்சுப்பிரதியாக வெளியிடப்படுகிறது)


பகுதி:(3)

அவுஸ்ரேலியத் தமிழன் எஸ்.பொ

தமிழ்ஈழத் தேசப்பக்தர் எஸ்.பொ மறுபுறம் தன்னை அவுஸ்ரேலியத் தமிழன் என்றும் உரிமை கோருகிறர். ஒரு தனிநாடு தமிழ்ச்சனத்தின் கேடுகாலத்துக்கு தற்செயலாக வந்தாலும் எஸ்.பொ. எஸ்.பொ. தனது அவுஸ்ரேலியத் குடியுரிமையைத் தூக்கியெறிந்துவிட்டு ஒரு காலமும் தங்கமாமணித் தமிழ்ஈழத்தின் பக்கம் கூடப்போக மாட்டார் என்று எமக்கெல்லாம் நன்கு தெரியும். சுதந்திரம் தனித் தமிழ்ஈழப் பிரகடனம் செய்யப்படும்போது இன்றுமுதல் இந்தநிமிடம் தொடக்கம் தமிழ்ஈழர்பிரசை தேசியத்தலைவரின் பக்தன் இதோ எனது அவுஸ்திரேயக் குடியுரிமைத்துறந்து தமிழ் ஈழப்பிரச்;சனையாகிறேன் என்றெல்லாம். எஸ்.பொ. அறிக்கையிடமாட்டார். என்ற உண்மை மீது எமக்கு ஒரு மில்லி கிராம் சந்தேகமும் தேவையில்லை. அவுஸ்ரேலியாவின் வெள்ளை மனிதர்களிடம் பயபக்திகாட்டும் எஸ்.பொ. அந்த நாட்டின் பழங்குடி மக்களான Aborigines பற்றி வெள்ளை இனவாதிகள் வகுத்துள்ள கருத்துக்களை தனது கருத்துப்போல விபரித்துச் செல்கிறார். இந்தப் பார்வையைப் பொதுவாகத் தமிழர்களிடமுள்ள ஆபிரிக்க மற்றும் Aborigines மக்கள் மேலான கண்ணோட்டமாயும் கொள்ள முடியும். அவுஸ்ரேலியாவில் அகதிகட்கு உதவும் Philippa Mclntosch என்ற வெள்ளைப் பெண் பற்றி உயர்வாக எழுதி அவரின் படமும் போட்டு முன்னுரையும் வாங்கியுள்ள எஸ்.பொவின் வெள்ளைத் தோல் மனிதர்கள் மேலான பரவசநிலை விசுவாசம் பிரிட்டிஸ்காலத் தமிழ் நடுத்தரவர்க்கத்தின் தொடர்ச்சிதான். எழுத்தாளர் மனிதர்;களை நுணுகி அறிந்து எழுதும் இலக்கியவாதி என்ற எந்தத் தகுதியும் எஸ்.பொவுக்கு வாய்ந்திருக்காத நிலையில் அவுஸ்ரேலிய வெள்ளை இனவாதக் கருத்துக்களை தனதுபோல் எமக்குத்தருகிறார்.

“யுடிழசபைiநௌ மிதமிஞ்சிக் குடிக்கிறார்கள் குடித்துவிட்டு தள்ளாடிக்கொண்டிருப்பார்கள். அவர்கள் தெருவில் டக்சியை மறித்தாலும் டக்சி நிற்பதில்லை அவர்கட்கு தாரளமாக நிவாரணம் கிடைக்கிறது. அவர்கட்கு தாராளமாய் பணம் கொடுப்பது பணிவது கூடச் சரியானதா? என்பது கேள்விக்குரியது வேலையற்றவர்களாக, சும்மா கிடைக்கும் பணத்தை அவர்களின் குழந்தைகள் செலவழிக்கிறார்கள். குடிகாறர்களைப் பெருக்குவது பொறுப்புள்ள அராசங்கத்தின் கடைமையா? என்ற எஸ்.பொவின் அவுஸ்ரேலியா முதலாளியச் சமுதாயம் உற்பத்தி செய்துள்ள கருத்துக்களையே நாம் காண்கிறோம். எஸ்.பொ. தன்னைத்தானே வெல்ல முடியாதவர். மதுவுக்கு அடிமையானவராக அறியப்பட்டவர். Aborigines க்களை குடிகாரர்களாக வர்ணகிறார். குடி ஒரு சமுதாயப் பிரச்சினை இல்லையா? மக்கள் குடிகாரர்களாக மாறுவதற்கான சமுதாயக்காரணிகள் இல்லையா? குடிப்பது என்பது என்ன? Aborigines க்களின் பண்பாடா? அவர்களை யார் குடிகாரர்களாக மாற்றினார்கள்? மனிதர்கள் ஏன் மதுவில்; ஒழிந்து கொள்ளும் உளவியலுக்கு ஆட்படுகிறார்கள்? எழுதுவோனுக்கு இதை உணர்ந்து எழுதும் கடமை இல்லையா? ஏற்கனவே புலிப்பாசிச மனித விரோதக்கருத்துக்களை உடைய எஸ்.பொ. இப்போ அவுஸ்ரேலிய இனவாதக் கருத்துக்களையும் உள்வாங்குகிறார். அமெரிக்காவில் கறுப்பு இனமக்கள், செவ்விந்தியர் மேல் இத்தகைய குற்றச்சாட்டுகள் கூறப்படுவந்தள்ளன. ஜெர்மனியில் சிந்திரோமா மக்கள் மேல் இத்தகைய எஸ்.பொ கூறும் கருத்துக்களையே பாசி;ஸ்டுகள் கொண்டிருந்தனர்.
அமொரிக்காவில் எப்படி குடியை பயன்படுத்தி செவ்விந்திய மக்களினம்களை வெள்ளைக் குடியேறிகளும் அரசம் சீரழித்தன. மருந்து, உணவுப்பொருட்களைவிட மதுவை அதிகமாக வினியோகித்து, வினியோகித்தே அவர்களை அடையாளம் இழந்து அழியப்பண்ணினார்கள். இந்த வழியிலேயே அவுஸ்ரேலியாவிலும் வெள்ளைக் குடியேற்றவாதிகளின் அரசு Aborigines களைக் குடிகாரர்களாக ஆக்கினர். அவர்களைக் சோம்பேறிகள், அநாகரிகர்கள் என்று முத்திரையிட்டார்கள். அவர்களின் வளமான பாரம்பரிய நிலம்களில் இருந்து குடியொழுப்பினார்கள். கூட்டம் கூட்டமாக அழி;த்தார்கள். அவர்களின் குழந்தைகளப் பறிந்தார்கள். கட்டாய முகாம்கட்கு கொண்டுசென்றார்கள். இக்கொடுமைகள் ஜெர்மனியில் சிந்தி ரோமா மக்களுக்கும், அமெரிக்கச் செவ்விந்தியர்கட்கும் இழைக்கபட்ட கொடுமைகளை ஒத்தவையே, இலங்கையின் கிழக்கில் புலிகள் ஏன் நாடோடிக் குறவர்களைக் கொன்றார்கள்? வேடர்களை சுட்டார்கள்?

இவைகளை எப்படி எஸ்.பொ. விளக்குவார்? இயற்கை சார்ந்த வாழ்வும் நாடோடிக்குணாம்சம்களும் நவீன உற்பத்தி முறைகளையுடைய முதலாளிய சமூகத்துக்கு புதினமாயும் தென்படும் இம்மக்களை இவர்களால் விளங்க முடிவதில்லை. பல பத்தாயிரமாண்டு கால வரலாறு உடைய அவுஸ்ரேலியாவில் பழங்குடிகளான யுடிழசபைiநௌ களின் சரித்திரத்துக்குப் பதிலாக 1788 ஜனவரி இல் தமது முதல் குடியேற்றத்துடன்தான் அவுஸ்ரேலியாவில் வரலாறு தொடங்குவதாக வெள்ளை இனவாதிகள் எழுதி வைத்துவிட்டார்கள். அதுதான் எஸ்.பொ. போன்ற மனித விரோதப்பண்புடையவர்கட்கு மூலநூலாகிவிடுகிறது இங்கு பழங்குடி மனிதர்கட்டு இடமில்லை அவர்களின் சொந்த மண்ணும் மலைகளும், ஆறுகளும், இயற்கையும் அவர்கட்கு சொந்தமில்லை என்று சொல்லப்பட்டது. வெள்ளைக் குற்றவாளிகள், கொலையாளிகள், கடற்கொள்ளைக்காறர்கள், ஆக்கிரப்பாளர்களை விசாரிக்க மறுக்கும் எஸ்.பொ உலகின் 5வது கண்டத்தின் மூத்த மனிதர்களான Aborigines களை குடிகாறர்கள், சோம்பேறிகள், ஊதாரிகள் ஆகியோரின் பண்புடைய கடை நிலை மனிதர்களாக எழுதிச்செல்கிறார். அந்தமக்களின் கீழ் நிலைக்காக வருந்தாத ஒரு மனிதனை மனிதத்தகுதிபடைத்தவராகக் கொள்ள முடியுமா? 200 வருடங்களுக்கும் மேலாக அம்மக்கள் அனுபவித்துவரும் அவலநிலையை மறந்துவிட்டு பாதிக்கப்பட்டவர்களையே ஒடுக்கப்பட்டவர்களையே, தமது வாழ்வை இழந்துவிட்டு நிற்பவர்களையல்லவா? எஸ்.பொ குற்றம் குறை செய்கிறார், பார்த்து அருவருக்கிறார்.Aborigines மக்கள் நிலையான விவசாயம், நிரந்தர வாழ்விடம், மந்தை வளர்ப்பு இவைகட்கு முந்திய வேட்டையாடல், இயற்கையிலிருந்து தமக்கு உணவுப்பொருட்களைப்; பெறுதல் போன்றவற்றைக் கொண்டிருந்தனர். வளர்ந்த உற்பத்தி முறைகளோ நகர்ப்புற வாழ்வுமுறைகளோ அவர்களிடம் இருக்கவில்லை. வெள்ளைக் குடியேற்றவாதிகள் அவர்களை காட்டுமிராண்டின், அநாகரீகர்கள் என்றே மதிப்பிட்டு நடத்தினர். அவர்கள் ஈவிரக்கமற்றுக் கொன்றொழிக்கப்பட்டனர். அவர்கள் ஆபிரிக்கர்கள், செவ்விந்தியர்கள் போல் அழிக்கப்பட்டனர். இவற்றை விசாரிக்க எந்த நியூரென்பேர்க் நீதிமன்றம் உருவாக்கப்படவுமில்லை. அவுஸ்ரேலிய இனவாத அரசு முன்பு நடத்திய படுகொலைகட்கு மன்னிப்புக் கேட்கக்கூட மறுத்துவிட்டது. Aborigines மேலான கொடுமைகளைப் பேசாத எஸ்.பொ. அவர்களையே குற்றவாளிகளாக்குகிறார். கல்வி, பொருளாதாரம், மருத்துவம், அரசியல், சமூக நிலைமைகளில் சமவாய்ப்போ முன்னுரிமையோ கூட இல்லாத இந்த மக்கள்மேல் எந்த மனித இரக்கமும் ஏற்படவில்லை. பல ஆயிரமாண்டுகாலத்திய வாழ்க்கை முறைகள் பண்பாடுகளைAborigines ஒர் இரண்டு நூற்றாண்டுகளில் எப்படி கைவிடுவர் மறப்பர்? அவர்கட்கு கல்வி தொழில், சமுதாய வாழ்வில் சமத்துவம் தரப்பட்டு அவர்களுக்கு சலுகைகள் அவுஸ்ரேலிய வெள்ளை அரசால் வழங்கப்படுகிறதா? அவர்கள் சமூக, பொருளாதார பெறுபேறுகளை அனுபவித்து வளர்ந்து பண்பட்டு வளர்ச்சிகள் பெற நீண்டகாலம் தேவை அவர்கள் இன்று இந்தநிலையில் வாழ்வதற்கு அவுஸ்ரேலிய அரசு பொறுப்பில்லையா? பின்தங்கிய மக்கள் பிரிவுட்கு மனிதக்கருணை காட்டவும் அனுதாபத்துடன் நெருக்கவும் கூடத்தெரியாதவர்களளை எப்படி நாகரீகமனித வரிசையில் சேர்ப்பது? வெள்ளை குடியேற்றவாதிகளின் கருத்தை ஆட்சேபிக்கக்கூடத் தெரியாத எஸ்.பொ அவுஸ்ரேலியப் பழங்குடிகளைக் கேவலப்படுத்துவதன் மூலம் தன் சகலமும் நிறைந்த அறியாமையும் முதலாளிய சிந்தனை ஒழுக்கத்தையும் நிறுவிக்கொண்டு செல்கிறார். 1619இல், போர்த்துகேயர் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய அடுத்த மணித்தியாலயத்திலேயே தமிழர்கள் தாடி, தலைக்குடுமி, காதில் கடுக்கன், இடுப்பில் துண்டு குறுக்கக்கட்டு இவைகளை விட்டு உடன்மாறி, கழிசானும், கமிசும், சப்பாத்;தும் போட்டுக்கொள்ளத் தொடங்கி விட்டார்களா? கிளாக், வாத்தி, அப்போதிக்கரி தொழில் பார்க்கத் தொடங்கிவிட்டார்கள்? எனவே மக்கள் புதிய நிலைகட்கு மாற காலம் தேவைப்படும்.


நிலம், காணி, ப+மி இல்லாத ஏழைச்சிங்கள விவசாயிகள் இலங்கையில் கிழக்கு மாகணத்தில் குடிசனம் இல்லாத இடங்களில் யானைக்காடுகளில் குடியேறினால் காட்டையழித்து நாடாக்கினால் விவசாயம் செய்து உயிர் பிழைத்தால் ஐயோ தமிழனின் பாரம்பரியப் பிரதேசம் பறிபோகிறது. சிங்களவன் ஆக்கிரமிக்கிறான் என்று கதறும் எஸ்.பொ போன்றவர்கள் எப்படி தமது நாடே அல்லாத தமிழனின் பாரம்பரியப் பிரதேசமேயல்லாத அவுஸ்ரேலியாவில் குடியேறிக்கொண்டு தம்மை அவுஸ்ரேலிய தமிழராக என்று நெஞ்சை நிமித்துவர்கள்? ஒரே நாட்டில் இலங்கையுள் பிறந்த நிலமில்லாத ஏழைச்சிங்களவர்கள் கிழக்கில் குடியேறினால் அது தகாது ஆனால் தான் பிறந்திராத அன்னிய அவுஸ்ரேலியாவில் குடியேறி எஸ்.பொதான் அவுஸ்ரேலித்தமிழன் என்று திமிரெடுத்துக்காட்டுகிறார். ஏன் இதை யுடிழசபைiநௌ மக்களின் பாரம்பாரிய நிலப்பறிப்பு மண் அபகரிப்பு என்று நாம் சொன்னால் எஸ்.பொ. என்ன பதிலிறுப்பார்? யுடிழசபைiநௌ இன் சொந்த மண்ணில் குடியேறிக்கொண்டு அவர்களையே பழிக்க எஸ்.பொவுக்கு என்ன திமிர் வெள்ளைக் கொழுப்பேறியிருக்க வேண்டும் என்று நாம் கேட்கலாமா?

அவுஸ்ரேலியாவில் உள்ள NACCHO, OXFAM ஆகிய அமைப்புகள் அண்மையில் நடத்திய மதிப்பீட்டில் யுடிழசபைiநௌ மக்களிடையே ஆண்களின் ஆயட்காலம் சராசரியாக 56 வருடங்கள் இது பெண்களிடையே 63 வருடங்களாகவுள்ளது. ஆனால் பௌ;ளையர்களை பெரும்பான்மையாகக் கொண்ட அவுஸ்ரேலிய ஆண்களின் காலம் 76 வருடங்களாகும். அதாவது யுடிழசபைiநௌ ஆண்களைவிட 20 வருடங்களால் அதிகம் இதைபோல் சாதாரண அவுஸ்ரேலியப் பெண்களின் ஆயுட்காலம் 19 வருடங்கள் அதிகமாக வாழ்ந்தனர். பழங்குடிமக்கள் வறுமை, வேலையின்மை, மருத்துவ வசதிக்குறைபாடு, சமூக ஒடுக்குமுறை, அவமானப்படுத்தல்கட்கு உட்பட்டுள்ளதாக இந்த மதிப்பீடுகள் காட்டுகின்றன. யுடிழசபைiநௌ மக்கள் நிறரீதியாகவும் மிகவும் கேவலமாக நடத்தப்படுகிறார்கள் 2007 யூலை இல் அவுஸ்ரேலியவில் வெளியான “சுதந்திர விசாரணைக்குழவின் அறிக்கையில் இந்தப் பழங்குடிமக்களிடையே கடந்த 11 வருடத்தில் வறுமை, வன்முறை, பாலியல வன்முறைகள், பாலியல் நோய்கள் பரவியுள்ளதாய் குறிப்பிட்டுள்ளது. இவர்களிடையே Pornographi உள்ளிட்ட சகல முதலாளிய நுகர்வுச் சீர்கேடுகளும் பரவியுள்ளன. அண்மையில் யுடிழசபைiநௌ தம் குழந்தைகளை அரசு பாதுகாக்க வேண்டும் எனக்கோரி ஊர்வலம்களை நடாத்தினார்கள் >>The Little Children are Scared<< என்ற சுலோகம்களை எடுத்துச்சென்றனர். அவுஸ்ரேலியப் பொலிஸ் பழங்குடிகளை மேசமாக நடத்தியது. 2004 இல் அவுஸ்ரேலியாவின் Queensland மாநிலத்தில் குடிபோதையிலிருந்த ஒரு Aborigines ஒருவரை பொலிஸ் அடித்துக்கொன்றுவிட்டது. இதற்கு இன்றுவரை நீதியில்லை அவுஸ்ரேலிய வெள்ளை பொலிஸ் அதிரடிப் பிhவான “AFP” இம்மக்களுக்கு எதிராக இறக்கப்பட்டது. இப்பொலிஸ்படைப் பிரிவே கிழக்கு திமோர், சொலமன் தீவு போன்ற அன்னிய நாடுகளில் இறக்கப்பட்ட படைப்பிரிவுமாகும். என்று ஜெர்மனிய இடதுசாரிப் பத்திரிகையான Junge Welt, தனது Kriegserklarung an Aborigines’ என்ற கட்டுரையில் 17 யூலை 2007 இல் எழுதியது. மானுடவியல் ரீதியில் அவுஸ்ரேலியப் பழங்குடிமக்கள் முக்கியமானவர்களாவர். இவர்கள் மத்தியில்; நிலவிய 250 க்கு மேற்பட்ட மொழிகளில் ஒரு சிலதவிர மற்றவை அழிந்துவிட்டன. 1990இல்Nhanda மொழி பேசிய Lucy Ryder என்ற கடைசிப் பழங்குடிப் பெண்ணை அமெரிக்க மானுடவியலாளாரன Juliette Blevens கண்டு அம்மொழியைப் பதிவு செய்தனர் அம்மொழி பின்பு மொழிபெயர்க்கப்பட்டு மொழியின் அமைப்பு ஆராயப்பட்டு nஐர்மனியில் உள்ள Max Planck-Insitute இல் மானுடவியல் ஆய்வுத்துறையில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. எஸ்.பொவுக்கு அவுஸ்ரேலியாவின் புத்துயிர்ப்பான வரலாறு தெரியவில்லை Aborigiines மக்கள் மேலான அவுஸ்ரேலிய அரசு ஒடுக்குமுறை பற்றி பேசாத எஸ்.பொவுக்கு இலங்கைத் தமிழர்களுக்காகப் பேச எந்த தார்மீக உரிமையும் கிடையாது. புலிப்பாசிஸ்டுகள் வழிபடும் உரிமையை மட்டும் அவர் வைத்திருக்கட்டும். அவுஸ்ரேலிய கூலிப்படை நிறுவனமான Unity Resources ஈராக்கில் ஆட்கணக்கு இல்லாமல் மக்களைக் கொல்கிறது. பெண்கள், குழந்தைகளை முதியவர்களை சுடுகிறது. 72 வயதான்Kays Juma என்ற ஈராக்கிய பேராசிரியரை காரணமின்றிச் சுட்டுக்கொன்றது. இவைகளை எமது அவுஸ்ரேலியத்தமிழன் எஸ்.பெ. துணிவிருந்தால் கண்டிக்கப்பட்டும் எதிர்த்து எழுதட்டும். இலங்கை அரசுத் தலைவர்களை எழுதுவதுபோல் பாலியல் விபரணைகளுடன் எழுதட்டும் பார்க்கலாம். அவுஸ்ரேலியத் தேசபக்தி நிறைந்த தமிழரான எஸ்.பொ. இவற்றை எழுதமாட்டார். அவுஸ்ரேலியாவில் உள்ள நட்சத்திரன் செவ்விந்தியன் 1990 முதல் 2000 வரையில் எஸ்.பொ. அவுஸ்ரேலியாவில் வேளார்களுடன் மட்டுமே உறவு வைத்திருந்தார். வந்து போய் கொண்டாடினார். எந்த இடத்திலும் ஒடுக்கப்பட்ட சாதி மக்களுடன் கொண்டாட்டம் வைத்துக்கொள்வதில்லை. அவர்களைப் பற்றிப் பேசுவதில்லை, எழுதுவதில்லை. டானியல் ஒடுக்கபட்ட சாதி மக்களின் எழுத்தாளராகப் பேசப்படத் தொடங்கிய பின்பே “டானியலுக்கு என்ன தெரியும் நான்தான் டானியலுக்கு எழுதித்கொடுத்தேன்” என்று பேசத்தொடங்கிய தாய் குறிப்பிட்டார். இது மிக அவதானத்துக்குரிதாகும். டானியலுக்கு தமிழ்நாட்டில் தலித்திய எழுத்தாளர், சிறந்த இலக்கியவாதி என்ற பாரட்டுரைகள் கிடைத்தபின்பே அதைத் தாங்கமாட்டாமல்தான தீவிரமாக எழுதத்தலைப்பட்டார். யாழ்குடாநாட்டு சாதிப்பிரச்சாளை மற்றும் அதுசார்ந்த போரட்டங்களை அவரால் எழுத முடியாமல் போனமைக்குக் காரணம் அவரது சமூக உணர்வுக்குறைப்பாடு மட்டுமல்ல அவற்றில் இருந்து அவர் அன்னியப்பட்டு தூரவில்த்தி இருந்தமையுமாகும்.” எஸ்.பொ சந்தைக்காக எழுத முயன்றவர் கைலாசபதி பற்றி தன்னிடம் தனிப்பட்ட பெரும் தூற்றல்களைச் செய்தார் என்று நடத்திரன் செவ்விந்தியன் நினைவு கூர்ந்தார். நைஐPரியா உலகமெலாம் உணர்ந்து ஓதற்கரிய ஞானம் வாய்க்கபெற்றவரான தன்னை உலகம் சுற்றியவர் என்று உரிமையோடு உரைக்கும் எஸ்.பொ இப்போ நைஐPரியாவை விளங்கப்புகுகின்றார். அவர் தனது யாழ்ப்பாண வடலிவளவுகளில் பெற்ற அறிவையும் தமிழ்த்தேசியத்தின் நுண்மாண் புலன்களையும் பயன்படுத்தி நைஐPரியாவைப் பற்றி எமக்கு அறிவுபகட்டப்புகுந்தனன். அவரது சிங்கள மக்கள் மேலான வெறுப்புடன் கறுப்பினமக்கள் மேலான வெறுப்பும் சமமாக வெளிப்பட்டபோதிலும் இப்போ சிங்கள வெறுப்பிலிருந்தே நைஐPரியா பற்றிய விளக்கம் தொடங்குகிறது. “சொக்கொட்டோ மாநிலத்தில் வாழ்ந்த சிங்களச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இலங்கை நாட்டுக்குக் பெருமை சேர்க்கும் விதமாக நடக்கவில்லை. இரண்டு சிங்கள பெண்கள் கார் வாங்குவதற்கான முற்பணம் பெற்றுக்கொண்டு திருட்டுத்தனமாக ஒடிவிட்டார்கள்”. “சிங்கள இனத்தைச் சேர்ந்த 10 கும் மேற்பட்டவர்கள் நானறிய ஒப்பந்தக்காலப்படி பணியாற்றாமல் ஏதோ ஒருவிதமாக அரசை ஏமாற்றி ஊர் திரும்பி பழைய பதவிகளைத்திரும்பப் பெற்று வாழ்கின்றனர்.” “சிங்களப பெண் ஒருத்தி கல்வி அமைச்சு அதிகாரியைத் திருப்பத்திப்படுத்தி வசதியான வீட்டில் வாழ்கிறாள்”. “சிங்கள கல்விமான்கள் மோசமாக நடந்து கொண்டார்கள்” ஆக எஸ்.பொ வைப் பொறுத்து சிங்களச் சமூகம் ஆண், பெண் என்ற பேதமின்றி குற்றப்பரம்பரையாகும். ஏமாற்றும் இனம் தமிழ்ர்கள் எல்லாம் தங்கக்கண்டுகள் தமிழர்கள் மத்தியில் ஏமாற்றுதுல் தமிழ்ப்பெண்கள் பாலியல் ஒழுங்கங்கள் மீறல் என்பன கிடையாதா? தமிழர்கள் பதவிகட்கு பந்தம்பிடிப்பதில்லையா? ஏன் எஸ்.பொ. பதவி பெற இலங்கையரசுகட்டுபிடிக்காத பந்தமா? மனிதர்கள் ஏன் சட்டங்களை மீறுகிறார்களா? மனிதப் பொதுவிதிகளை உடைக்கிறார்கள்? இலங்கையில் தமிழ், சிங்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள், மந்திரிகள், பதவி உயர்வுக்கு புதிய நியமனங்களுக்கு பணம் முதல் பெண்களின் உடல்கள் வரை விலைதரவேண்டியிருந்தது. எஸ் பொவின் தமிழ்ச்சினிமாவில் பெண்கள் நிலையென்ன? இவை எஸ்.பொ அறியாத புதுமையா? ஆசிய நாடுகள் போலவே ஆபிரிக்க நாடுகளிலும் ஊழல், துஷ்பிரயோகம், பெண்களைப் பாலியல் ரீதியல் பயன்படுத்தல் இல்லாமல் மனிதர்கள் வாழமுடியாமல் இருப்பதற்காக சமூக அமைப்பு சார்நத காரணிகள் எஸ்.பொ.வுக்கு தென்படவில்லை. மனிதர்களை இந்த முதலாளித்துவம் களவு செய்யவும் ஒழுக்கம் மீறவும் கட்டாயப்படுத்தவில்லையா? இதனூடு மக்கள் பொருளாதார வாய்ப்புக்களை தேட முயல்கின்றனர். நைஐPரியாவில் தாமறியாமல் புதிய சூழலில் தொழில், பதவிப்போட்டி நிலைமகளில் சலுகைகள், ஊழல், தவறான நியமனங்கள் இடம் பெறாமல் விடாது. இதற்கு இலங்கையில் இருந்து பிழைக்கப்போன சிங்கள மக்களைக்குறை செய்வதும் நைஜீரிய அரசுப் பொறியளம்பு குற்றவாளி இல்லையா? நைஐPரிய எரிபொருள் வளத்தால் குறிப்பிட்ட நைஐPரிய உயர் சமூகத்தார் பயன் பெற்றனர் அவர்கள் ஏன் எரிபொருள் செல்வத்தை கல்விக்கு செலவிடவில்லை. நைஐPரியமக்கள் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தவில்லை. முழுநாட்டின் மக்களுக்கும் இலவசக்கல்வியைத் தந்து எரிபொருள் வளம் முழுவதையும் மக்கள் மயமாக்கி ளூநடட உட்பட அன்னிய ஏகாதிபத்திய எண்ணை நிறுவனங்களைத் துரத்தியிருக்கவேண்டும். முழுநாட்டையும் கல்விமயப்படுத்தியிருந்தால் எஸ்.பொ போன்ற கூலிக்கு பணிபுரியும் ஆசிரியர்கள் ஏன் பொறுப்புள்ள ஆசிரியர்களே தம் மாணவர்கட்கு கல்வி தந்திருப்பார்கள். இலங்கையோ, நைஐPரியாவோ ஏன் மேற்கு நாடுகளில்கூட மக்கள் முதலாளித்துவ அரசுக்கு, விசுவாசம் காண்பதில்லை. அவரவர் தப்பிப்பிழைக்க முயல்வார்கள் நாடும் அரசியலும் மக்களுக்கு விசுவாசம் தெரிவிக்காதபோது மக்கள் எப்படி நாட்டையும் அரசியலையும் விசுவாசிப்பர். சிங்களவர்களின் நேர்மையின்;மை பற்றி பட்டியலிடும் எஸ்.பொ.வின் சொந்த நேர்மை எத்தகையது குற்றம் செய்த சிங்களவர்களிடமிருந்து ஏதாவது விதத்தில் மாறுபட்டதா? எஸ்.பொ.வின் முறைகேடுகள் இலங்கையிலேயே தொடங்கிவிட்டது. நைஐPரியா செல்ல வாய்ப்புப் பெற எஸ்.பொ.வே பணம் லஞ்சமாகக் கொடுக்கிறார். இவரே நைஐPரியாவிடம் காரியம் சாதிக்க லஞ்சம் தருகிறார். இவற்றை இவரே இந்த நூலில் பிரிதொரு இடத்தில் எழுதுகிறார். தன்னாலேயே சொந்தமாய் கடைப்பிடிக்க முடியாத ஒழுக்கத்தை அடுத்தவர்களிடம் எதிர்ப்பார்ப்பது தமிழர்கள் நைஐPரியாவில் இத்தகைய முறைகேடுகளில் ஈடுபடாதவர்கள் என்று கட்டியமைக்க எஸ்.பொ முயல்வது தமிழ்த்தேசிய வெறியின் உச்சம். எஸ்.பொ.போலவே அவர் எழுத்தும் நேர்மையற்றது. ஒழுக்கம் கெட்டது. இவரின் வாதப்படியே பார்த்தால் எஸ்.பொ.வின் முறைகேடுகள் தமிழினத்தின் முறைகேடாக ஏன் கருதப்படலாகாது? நைஐPரிய அரசிடம் அல்ல நைஐPரிய மக்களிடம் நம்பிக்கை வைக்கவேண்டும் என்று எஸ்.பொ.வினது சிந்தனைக்குத் தோன்றவில்லை. அவருக்கு நைஐPரியர்கள் என்றால் செல்வம்மிக்க உயர்வர்க்க மனிதர்கள்தான் சாதாரணமான பெரும்பான்மை ஏழை நைஐPரிய மக்கள் பற்றிய எந்த விபரமும் அவர் எழுத்தில் இல்லை. இந்தியர்களைப் புழுகும் எஸ்.பொ அங்கு பணிபுரியும் பாகிஸ்தானியர்களை வெறுக்கும் பிழையான தகவல்களை எழுதுகிறார். “பாகிஸ்தானியர்கள் மதத்தையும் உறவையும் சொல்லி உயர் உத்தியோகத்தில் ஒட்டிக்கொண்டார்கள்” என்கிறார். ஏன் எஸ்.பொ போன்ற தமிழர்கள் நாம் தமிழர் ஒரு தாய் வயிற்றுப்பிள்ளைகள் என்று தானே தமிழகத்தில் ஒட்டிக்கொண்டிருக்கிறார்கள். சொந்த இலங்கையின் சகோதரச் சிங்கள, முஸ்லீம் மக்களுக்கு எதிராக ஆள்திரட்டுகிறார்கள். அரசியல் அனுகூலம்களைப் பெற்றார்கள். இதைப் பாகிஸ்தானியர்கள் செய்தால் கூடாத காரியமா? இலங்கையில் இலவச மருந்தும் இலவசக்கல்வி, இலவச அரிசி, இலவச நிலம் என்று பெற்று வளர்ந்து ஆளாகிவிட்டு சொந்தநாட்டுக்கு எஸ்.பொ போன்றவர்கள் தமிழகம்-இந்திய நோர்வே என்று காரணியை வைத்து முன் உரிமை பெறுவது தவறு என்பதை தமிழன் என்ற இனக்காரணியை தமிழ்நாட்டில் காட்டிச்சலுகை பெறும் எஸ்.பொ போன்ற புலிப்பாசிச ஆதரவாளர்கள் கூற முயலக்கூடாது. பாகிஸ்தானியர்கள் நைஐPரியாவில் உள்ள வாய்ப்புகள் நியாயமாக வழங்கப்படாத நிலையிலேயே இப்படி தமது விசேட தன்மைகளை அல்லது முஸ்லீம் மதரீதியான ஒருமைப்பாட்டைக்காட்டி தம்மை நிறுத்திக் கொள்ள முயறசிக்கின்றார் என்ற பின்புல உண்மைகளை எஸ்.பொ கணக்கிடத் தெரியாதவர். பாகிஸ்தானியுர்களின் நைஐPரிய நடத்தைகளை விபரித்து முடிந்த எஸ்.பொ கண்டம் விட்டுக்கண்டம்தாவி பிரிட்டனில் உள்ள பாகிஸ்தானியர்களிள் பற்றி எமக்கு வகுப்பு எடுக்கத்தொடங்கிறார். “இங்;கிலாந்தில் வெறுக்கப்படும் இனம் என்றால் அது பாகிஸ்தானியர்கள்தான் இங்கிலாந்தில் வாழும் பாகிஸ்தானியர்கள் எஸ்.கெட்டோன் உள்ள பாகிஸ்தானியர்கள் மேலான பிரிட்டஸ் அரசு ஒடுக்குமுறை முழுமேற்குலகு தழுவிய முஸ்லீம் எதிர்ப்புணர்வுக்கு அம்மக்களும் பலியிடப்படுவதும் 11 செப்டெம்பருக்கு இவர்கள் பலியாடுகளாக ஆக்கப்பட்டமை எல்லாம் எஸ்.பொ.விடம் தகவல்களைக் கூடஇல்லை. பாகிஸ்தானியர்கள் பற்றிய மேற்கத்திய ஊடகங்களை வாசிக்க ஒரு விசேட அறிவும் தேவையில்லை. மறுபுறம் பிரி;ட்டனில் உள்ள தமிழ்த்தேசியவாதப் பிரிவிடம் உள்ள பாகிஸ்தானிய இஸ்லாமிய எதிர்ப்பும் இவரிடம் வெளிப்படுகிறது. 11 செப்டெம்பர் அமெரிக்கத்தாக்குதல்கள் பல தொகை பாகிஸ்தானியர்கள் பிரிட்டனில் கைது செய்யப்பட்டனர். பிரி;ட்டன் வெள்ளை இனவாதிகள் இவர்களைப் பாகிஸ்தானுக்கு திருப்பியனுப்பவேண்டும் என்று கோரினார்கள். இவர்கள் “பாகி” என்ற நையாண்டியில் அழைக்கப்பட்டனர். இம்மக்களில் பிரிட்டனில் பிறந்து வளர்ந்த இளம் பாகிஸ்தானியச் சந்ததி பிரிட்டன் வெள்ளை இனவாதிகட்கும் பொலிசாருக்கும், குறிப்பிடத்தக்க எதிர்ப்பைக் காட்டினர். எஸ்.பொ.வுக்கு பிரிட்டனைப் பற்றி எதுவும் தெரியாததாலோ, மேற்குலக முஸ்லீம் எதிர்ப்பு அரசியலைத் அறியாததாலோ மட்டும் இது நிகழவில்லை. இவைகளின் பின்பு அவரின் தமிழ் வலதுசாரிக்குணம் பிரிட்டனுக்கு எதிராய்க் கருதவிடாது. இவர் மிக மிக ஆபத்தான வெள்ளை மேற்குலக இனவாதக் கருத்தையும் ஆக்கிரமிப்பு அரசியலையும் ஆதரிக்கும் எழுத்தை எழுதியுள்ளார். லண்டனில் இந்தியர்கள், இலங்கையர்கள், பாகிஸ்தானியர்கள் அனைவரும் ‘பாகி’ என்று அழைக்கப்படுவதாயும். கறுப்பு ஆபிரிக்கர்களைவிட தான் பாகிஸ்தானியர்களை வெறுப்பதாக” இவர் எழுதும்போது, இவர் சந்தேகப்பட்ட முடியாத பாசிஸ்ட் குணாதிசய முடையவராக ஆகிவிடுகிறார். பாகிஸ்தானியர்களையும், ஆபிரிக்கர்களையும் ஒன்றுசேர்த்து வெறுப்பையும் புலப்படுத்திவிடுகிறது. லண்டனில் தமிழர்கள் போன்றுவதற்குரிய நிலையிலா வாழ்கிறார்கள். கிரடிட் கார்ட் மோசடி இல்லை? புலிப்பாசிஸ்டுகள் தமிழர்களையே கொல்லவில்லையா? பாகிஸ்தானியர்களிள் நாணயமற்றவர்த்தகர்கள் என்கிறாரே? தமிழர்கள் என்ன நாணயம் வாய்ந்த வர்த்தகர்களா? புகலிட தமிழ் வர்த்தகர்கள் அல்லவா? புலிகளை வளர்த்துவிட்டர்கள் புலிப்பாசிஸ்;டுகள் அல்;லவா? புகலிட நாடுகளில் தமிழர்களிடையே முழு வர்த்தத்தையும் கட்டுப்படுத்துகிறர்கள். அரசியல், வர்த்தகமாபியாக்களாக இருக்கிறார்கள். தான்பேசும் விடயம் பற்றி ஒரு மனிதன் இப்படி இந்தளவுக்கு தகவலின்மையால் நிரம்பியிருக்க முடியுமா? பாகிஸ்தானியர்கள் ஏனைய ஆசிய மக்களைப்போன்ற பொதுப்பண்புகள் படைத்தவர்கள். பொருளாதாரம், சமூக இவைகளில் முன்னேறாத வாழக்கடினமான நாடுகளில் இருந்து வந்தவர்கள் என்பதால் கடின உழைப்பும் பணப்பேராசையும் இருக்கும். தமிழர்கள் சொத்துச் சேர்ப்பு, கடின உழைப்பு, பணப் பேராசையுடையவர்கiளாகவே உள்ளனர். இவர்கள் தம்கடந்தகாலத்திய தாய்நாட்டின் கருத்துக்களாலும் ஆட்சிசெய்யப்படுகிறார்கள். எதிர்காலம் குறித்த பயமும் அவர்களைச் சூழ்ந்து கொள்கிறது. தொழிற்துறை வளர்ச்சி கண்ட மேற்குலக நாடுகளில் ஜனநாயகம், மனிதஉரிமை, தொழிலாளர் சட்டங்களை இவர்கள் பெரும்பகுதியால் விளங்குவதில்லை. இந்தகையவர்கள் புதிய நிலைமைகளில் பிரிட்டனில் நாகரீகமற்றவர்களாகவும் வாழும் நாட்டுக்குப் பொருத்தமற்ற குணம்களைக் கொண்டவர்களாகவும் தோன்றுகின்றனர். அவர்களின் முன்னேறாத விவசாயக சமூகங்களில் இருந்து வந்தவர்;கள் முதலாளித்துவத்தின் கட்டுத்திட்டம்களில் சமூக ஒழுங்குக்குள் வாழ அவர்கள் சிரமப்படுகிறார்கள். அவர்கள் குடும்பம், மாமன், மாமி, பாட்டன், ப+ட்டி என்று பெரும் மனித உறவுகளை உடையவர்கள் அவர்கள் ஐரோப்பியர்களைப் போன்று குடும்பம் கூட இல்லாத அதீத தனிமனிதவாதம் கொண்ட தனிமனிதர்கள் அல்ல, பின்தங்கியவர்கள் மேல் அனுதாபம் வேண்டும். அவர்களை ஏனைய மனிதர்கட்கு சமமாக்கும் கடமை எழுத்தாளனுக்கு உண்டு. மனிதர்களை நாடு, இனம், சாதி, சமயம், நிறம் சொல்லி விரோதிவன் பாசிஸ்ட். எஸ்.பொ.வின் “பாகித்தானியர்கள் மோசமான வியாபாரிகள்” என்பதைப் போலத்தான் ஜெர்மனியில் நாசிகள் “யூதர்கள் மோசமான வியாபாரிகள்” ஒட்டுண்ணிகள் என்று பிரச்சாரம் செய்தாhகள், பாகிஸ்தானியர்கள், ஆபிரிக்கர்களை தீயமனிதர்களாக நிறுவிவிட்டு இப்போ பிலிப்பைன்ஸ் பெண்கள் மேல் பழிப்பு தொடங்குகிறார் “நைஐPரியாவில் உள்ள பிலிப்பைன்ஸ் நாட்டுப் பெண்களில் 50 வீதமானவர்கள் குற்ற உணர்வு எதுவுமின்றி பெரும் தனவர்களான அல்ஹாஐpகளுடைய சின்ன வீடாக வாழ்ந்து மேலதிக வருமானம் திரட்டினர்” பெண்கள் தம்மை விற்றுத்தான் வாழமுடியும் என்ற நிலையை ஏற்படுத்தியுள்ள முதலாளிய அமைப்புகள் தான் வாழவிடப்பட்டுள்ளோம் என்று வெட்கப்படத் எஸ்.பொ.வுக்கு தெரியவில்லை. அந்த பிலிப்பைன்ஸ் பெண்கள் மேல் வர்க்க வாழ்வுக்; ஆசைப்பட்டவர்களாக நடுத்தரவர்க்கனவுகட்கு ஆட்பட்டவர்களாகவே இருக்கக்கூடுமெனினும் பெண்கள் தம் உடலைப் பண்டமாக்கும் நிலையில் அவர்களை விட்டுள்ள இந்த சமுதாய அமைப்பு மீது எஸ்.பொ.வுக்கு கண்டனம் இல்லை. இது ஏதோ பிலிப்பைன்ஸ்சில் சில பெண்களின் தவறு, அல்லது பண்பிழக்கும் செயற்பாடு மட்டும்தானா? பணத்தால் எதையும் வாங்கும் அல்ஹாஐpமார் எந்த வர்க்கம் சாதாரணமான நைஐPரியர்கள் பிலிப்பபைன்ஸ்சில் சில பெண்களின் தவறு, அல்லது பண்பிழக்கும் செயற்பாடு மட்டும்தானா? பணத்தால் எதையும் வாங்கும் அல்ஹாஐpமர் எந்த வர்க்கம் சாதாரணமான நைஐPரியர்கள் பிலிப்பைன்ஸ் பெண்களை நெருங்கமுடியுமா? மத்தியகிழக்கு நாடுகளில் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், பலிப்பைன்ஸ் பெண்கள் பாலியல் ரீதியாக சுரண்டப்படவில்லையா? பாலியல் வன்முறை, கொலை, சித்திரவதைகளுக்கு ஆட்படவில்லையா? இவர்கள் இந்த விடயம்கட்கு ஆசைப்பட்டா தாம் கற்பனை செய்து பார்த்திராத உலகப்படத்தில் எங்கே இருக்கிறது எனத் தெரியாத இந்த நாடுகட்குப்போனார்கள். வேலையை இழக்காதிருக்கவும், வீட்டுவசதிக்கும் தொழில் பெறவும் அதிகாரத்தையும், செல்வத்தையும் வைத்துள்ள ஆணுடன் படுத்தால்தான் பெறமுடியும் என்ற நிலையில் பெண்களை வைத்திருக்கும் முதலாளியம் மீது எஸ்.பொ வுக்கு எந்தகோபமும் இல்லை. அவர் பாதிக்கப்பட்ட பெண்களையே குற்றவாளியாக்கி விசாரனை மேற்கொள்கிறார். இவர் போன்ற தனியுடமைச் சமுதாயச்சட்டங்களால் மூளைகழுவப்பட்டவாகள்; இப்படி தனிப்பட்ட பெண்களையே தனிமனித நடத்தைகளையே சகலதுக்கும் பொறுப்பாக்குவார்கள். ஒரு சின்ன பொருளாதார அறிவு சமூகவியல் பற்றிய ஞானம் பெற்ற ஒருவர்கூட இத்தகைய எஸ்.பொ.வின் முடிவை வந்தடைய மாட்டார். இது எஸ்.பொ.வுக்கு ஏற்பட்ட சிந்தனை விபத்து அல்ல மாறாக அது அவரின் இயல்பான சிந்தனைப்பாங்கு. பெண்கள் தமது உடலைக்காட்டி, ஆண்களை மயக்கி காரியமாற்றுவிப்பவர்கள் என்ற மரபான ஆண்ஆதிக்க கருத்துத்;தான் இது. நைஐPரியாவில் வெளிநாட்டில் இருந்து சென்று தொழில் புரிபவர்களிடையே ஒரு கூட்டும் அங்குள்ள அநீதிகட்கு எதிரான ஐக்கியமும் தேவை இந்தியர், பாகிஸ்தானியர், இலங்கையர், பிலிப்பனியர் என்று அனைவரும் ஒருவருக்காக மற்றவர் ஆதரவுதர வேண்டும். இணையவேண்டும் என்று சிந்திக்கத்தொடங்க எஸ்.பொவுக்கு தெரியாது அதெல்லாம் மெத்தப்பெரிய நடைமுறைக்கு வராத விடயம்களாகவே அவரது பிற்போக்கு மூளை சித்திக்கத்தூண்டும். எஸ்.பொ. பிரதிநிதித்துவப்படுத்தும் யாழ்ப்பாண நடுத்தரவர்க்கம் புதிய அன்னிய சூழல்களில் தனது ஆங்கில அறிவாலும் எதிர்ப்புத் தெரிவியாத நசிந்து பல்லிளிக்கும் குணத்தாலும் தப்பிப்பிழைக்கும் இயல்புபடைத்தது. பாகிஸ்தானியர்கள், அரபுக்கள், ஆபிரிக்கர்கள் புகலிட நாடுகளில் தொழிலாளர்களாக, அகதிகளாக வாழ்ந்துவருபவர்கள் அதிகம் கல்வி பெறாதவர்களாக இருந்தபோதும், ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வு, மேற்குலக அதிகாரத்துக்கு பணியாமை, நிறவாத எதிர்ப்பு போன்றவற்றை கொண்டவர்களாகவும், தீவிரமாக போர்க்குணம் படைத்தபவர்களாகமுள்ளனர். ஆனால் தமிழர்களிடையே நடுத்தரவர்க்க செல்வாக்கு அதிகம். ஆங்கிலமொழி அபிமானம் மேற்குலகு சார்பான மனநிலை என்பன நிறம்மாறி குணம்மாறி புதியன நிலைமைகட்கு தகவமைக்கும் பண்பு கொண்டதாகும். அரபுக்கள் மற்றும் ஆபிரிக்கர்களிடம் போலிப்பணிவுகாட்டி அடங்கல், கடிமாக உழைத்து நல்ல பெயரெடுத்தல் எதிர்ப்புக்காட்டாமை போன்றவைகிடையாது. நைஐPரியாச்சூழலில் எஸ்.பொ. போன்றவர்கள் கட்டாயமாக “நல்லபிள்ளை” என்ற பெயரெடுத்திருப்பார்கள். இவர் எழுதுவதைப் பார்த்தால் ஏனைய நாட்டவரை சிங்களவர்களைக் காட்டிக்கொடுத்துக்கூட பயன்பெற்றிருக்கலாம். இது குற்றச்சாட்டே, அபாண்டமான பழியோ அல்ல எஸ்.பொ.வின் குணம் படைத்தவர்கட்கு அது சிரமமான குற்றமான செயலாக இராது. நைஐPரியாவில் எஸ்.பொ.தானே லஞ்சம் கொடுத்ததை எழுதியுள்ளபோது பெண்கள் சிலர் காரியம் பார்க்க தம் உடலைத்தந்திருப்பார்கள். பெண்கள் செய்தது தவறு எஸ்.பொ செய்தது சரி என்பதா அவரின் வாதம். “நைஐPரியா மிகச் செல்வவசதியுள்ள நாடாக இருந்தது. பெற்றோலியப்பணம் அவர்களுடைய வாழ்க்கை முறையை முற்றாக மாற்றியமைத்தது. ஒரு நெடுஞ்சாலையில் வாகம் விபத்துக்குள்ளான போது அதை அவர்கள் அப்படியே விட்டுச்சென்றார்கள் என்ற இவரின் நைஐPரியா பற்றிய மதிப்பீடு, அங்கிருந்த ஏழை மக்களை வி;ட்டுவிடுகிறது பெற்றோலியம் மூலம் ஒரு சிறு சமூகப்பிரிவே பயன்பெற்றது. பெற்றோலிய வருமானம் தொழிற்சாலைகளை அமைத்தல், கல்வி, சமூகசேவைகளை ஏற்படுத்தியிருந்தால் நாட்டு மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்து ஜனநாயக உணர்வு வளர்ந்து இருக்கும் விவசாயம் நவீனமாகி நாட்டின் பெரும்பாண்மை மக்களின் பொருளாதார பிரச்சினை சீர்ப்பட்டு இருக்கும். ஆபிரிக்க மக்கள் ஆபிரிக்கர்களாக கறுப்பு நிறம் படைத்தவர்களாக இருப்பதால் பின்தங்கியிருக்கவில்லை. அவர்கள் உலகின் பழைமையான வாழ்வுககும் உற்பத்திமுறைக்கும் உரித்தான மக்கள் அவர்கள் உலகிலேயே அதிக வளம்களை உடையவர்கள் அவர்கள் தொழில்நுட்பத்தைப்பெற்றால் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் ஆபிரிக்காவில் தென் ஆபிரிக்கா தவிர மற்றைய நாடுகள் நவீன தொழிற்துறை நுழையவில்லை. தமது வளங்கள் மேலான அதிகாரத்தை ஆபிரிக்க மக்கள் பெறும்போதுதான் அவர்கள் எனைய மக்களைப்போல வளர்ச்சி பெறவார்கள். ஆபிரிக்க மக்கள் திறமை குன்றிய மனிதவளர்ச்சி பெறாத மக்கள் என்ற கருத்துடன் இன்று நிறவாத கருத்துக்களும் கலந்துள்ளன. ஆபிரிக்க மனிதர்களே எம்மனித குலத்தின் ஆதித் தந்தையும், தாயுமாவார்கள். “ஆபிரிக்க பெண்கள் அனைவரும் தடித்த உதடுகளுடன் கறுப்பிகளாக அவலச்சணங்களாக இருப்பர் என்ற ஒரு பொதுவான பிம்பம் நம்மவரிடையே நிலவுகிறது. அது தப்பு கறுப்புத்தான் அழகிய நிறம் என்ற பெண்பிற்கும் அழகிய ஆபிரிக்கப் பெண்கள் ஏராளமாகவுள்ளனர் என்று எஸ்.பொ. எழுதியபோது கறுப்பு, மற்றும் உடலைமைப்புத்தோற்றம் சார்ந்த நிற, இனவாதக்கருத்துக்கள் படிந்துள்ளன. அதாவது நைஐPரியா பற்றிய நினைவுக்குறி;ப்புகளில் “தெற்கில் வாழும் சில இனம்களைச் சேர்ந்த பெண்கள் வெள்ளைக்காரிகள் போன்று அத்தனை வெள்ளை நிறமேனி அழகுடன் காட்சிதருவார்கள். என்று எழுதுவது வெள்ளையே அழகு என்ற கருத்து கட்டாயமாக நிறவாதமே, மேற்குலகவாழ்வியலை அறியாத மக்கள் வெள்ளையை அழுகுடையதாக் கருதுவத இல்லை. ஆசிய, ஆபிரிக்கப் பழங்குடிகள் தம் சொந்த நிறம் உடலைமைப்புதான் வெள்ளையைவிட அழகுடையது என்று கருதினார். மனிதர்கள் எல்லோரும் அழகுடையவர்களே, இதில் வெள்ளை, கறுப்பு, வெழுப்பு என்ற பேதமில்லை. மலர்களி;ல் எத்தனை வர்ணம்கள் இருப்பதும் அவை வித்தியாசம் வித்தியாசமான அழகு என்றே பொருளாகும். இதில் உயர்ந்த தாழ்ந்த பேதமில்லை. மேற்கத்தைய நாடுபிடிப்பாளர்களே வெள்ளை உயர்வு அழகு எ;னற கருத்தியலைக் கொண்டு வந்தனர். உயரம், நிறம், உடலமைப்பு என்பன வித்தியாசமான புவியியல் அமைப்பு, உறவுமுறை என்பவற்றின் விளைவாகும். மேற்குலகக் கருத்துக்கள் வெள்ளை உயர்வு என்ற கருத்தியல் மட்டுமல்ல மெல்லிய பெண்களே அழகு என்ற அபிப்பிராயமும் உடையனவாகும். அன்றைய பழைய விவசாய ஐரோப்பாவில் கொழுத்த திடகாந்திரமான பெண்களே அழகு என்ற அபிப்பிராயமும் உடையதாகவிருந்தது. பழைய விவசாய ஐரோப்பவில் கொழுத்த திடகாத்திரமான பெண்களே விரும்பப்பட்டனர். அவளே அதிக பிள்ளைகளைப் பெற்றுப் பராமரிக்கக்கூடியவளாகவும் விவசாய முயற்சிகளில் ஈடுபட வலிமை படைத்தவளாகவும், நோயைத் தாங்கக்கூடியவள் என்று நம்பப்பட்டது. ஆசிய, ஆபிரிக்க நாடுகளில் இதே காரணம்கட்காக கொழுத்த பெண்களே விரும்பப்பகி;ன்றனர். இக்காரணிகள் மெலிந்தவள், கொழுத்தவள் என்ற பிரிப்பு உயர்வு தாழ்வு அடிப்படையில் அல்லாமல், சமூகத்துக்கு உழைகை;குக்கூடிய கடின உழைப்புக்கு ஏற்ற பெண்களைப் பயன்பாட்டின் அடிப்படையில் இவை அமைந்தது. எம் நாடுகளில் பெண்கள், மட்டுமல்ல, ஆண்களும் மெல்லிய உடலைமைப்புடையவர்கள் ஒட்டல், வத்தல், தொத்தல் நெத்தலி, ஒல்லிப்புறு என்று பட்டம் சூட்டப்பட்டனர். இது உழைப்பக்கேற்ற தோதற்ற உடல் என்ற கருத்திலேயே அடிப்படையைக் கொண்டு இருந்தது. எனவே வெள்ளை கறுப்பு, ஒல்லி தொக்கை கட்டை நெட்டை என்பதெல்லாம் சமூகத்தின் வளர்ச்சி நிலையை ஒட்டி மாறும் தற்காலிகமான கருத்துக்களாகும். மனிதர்களின் உடல் அமைப்பு, நிறம் என்பதற்கு அப்பால் மனிதரின் பெறுமானம்களை மதிக்கும் சமூகமே நாகரீகமானதாகும். எஸ்.பொ. தனது நூல் முழுவதும் சிவப்பி, சிவப்பி என்று எழுதும் போதே சிவப்பு, வெள்ளை, கறுப்பு என்ற இனவாதக்கருத்துகட்கு அவர் வாதாடும் நிலையில் உள்ளார். 8 வருடங்கள் நைஐPரியாவில் வாழ்ந்த எஸ்.பொவுக்கு சாதாரணமக்களோடு உறவு இருக்கவில்லை எனத் தெரிகிறது. ஒரு ஆபிரிக்க மனிதரின் வீடுபோய்க் கொண்டாடியிருப்பார் என்று நம்ப முடியாது. அவர் கொண்டாட்டமெல்லாம் தமிழ்ச்சாதியுடன்தான் தமிழ்ப்படம், சமையல், சாப்பாடு, தண்ணி, வென்னியுடன் அவர் காலம் தள்ளியிருப்பார். நைஐPரிய மக்களைக்குறிக்க ஐரோப்பியர்கள் போன்று சுதேசிகள், என்ற சொல்லை அவர் பயன்படுத்துகிறார், நைஐPரிய நெடுஞ்சாலைகளில் ஏற்படும் வீதி விபத்துக்களில் இறந்துகிடக்கும் பிணம்கள் மேல் நூற்றுக்கணக்கான கார்கள் ஒடிச் சென்று மறையும் என்ற எஸ்.பொ.வின் வரிகள் எங்கோ நிகழ்ந்த தற்செயல்களை விதிவிலக்குகளை முழு நைஐPரிய மக்களுக்கு மாக்கும் போக்கு என்பதில் சந்தேகம் இல்லை. ஐpத்தா விமான நிலையத்தில் அரபு சுங்க அதிகாரிகள் இந்தியர்களை ஆபிரிக்களை மனிதப்புழுக்களாக நடத்;துகிறார்கள். இந்த விமான நிலையம் ஊடாக இனிப்பயணிப்பதில்லை என்று சபதமெடுக்கிறார். அது அவரது அரபு எதிர்ப்புக்கு உதவிவிடுகிறது. குடிபெயர்வுகள் உலகளாவிய மட்டத்தில் முன்னொருபோதும் இல்லாதளவு பொருளாதார வாய்ப்புத் தேடும் ஆசையையும் தூண்டிவிட்டுள்ளது. மறுபுறம் மத்தியகிழக்கு நாடுகள்தமது எரிபொருள் வளம் மூலம் பெற்ற செல்வத்தை வைத்து பாரிய தொழிற்துறைக்குப் பதிலாக கட்டங்கள் உயர்நுகர்வுக்கான குடியிருப்புகளை எழுப்புகின்றனர். இதில் பணிபுரிய ஆசிய, ஆபிரிக்க நாடுகளில் இருந்து பெருமளவு பயிற்றப்பட்ட மற்றும் பயிற்றப்படாத தெழிலாளர்களையும் நிர்வாகிகளையும் பெறுகிறார்கள். மத்தியகிழக்கு நாடுகளில் முதலாளிய ஜனநாயகம்கூட இல்லை. வளர்ச்சிபெற்ற சமூகசேவைத்திட்டம்களோ, சட்டம்களோ கிடையாது. தொழிலாளர் சட்டம்கள் பெண்களுக்கு, குழந்தைகளுக்கான பாதுகாவல்கள் இல்லை. எனவே வேலைவாய்ப்புத்தேடி அலையும் ஆசிய, ஆபிரிக்க மக்கள் ஏழை நாடுகளில் இருந்து வரும்போது அவர்களை மோசமாக நடத்துகறார்கள். ஆபிரிக்க கறுப்பின மக்களையோ, ஆசியரையோ மோசமான நடத்தும் விமானநிலைய அதிகாரிகள் ஒரு அமெரிக்க கறுப்பின மனிதரைக்கட்டாயம் அப்படி நடத்தமாட்டர்கள். இங்கு இந்தியர் ஆபரிக்க என்பதைவிட எந்த பொருளாதார அரசியல் பின்புலம்களில் இருந்து வருகிறார்கள் என்பதும் இங்கு மனிதர்களை அவமதிக்க மோசமாய் நடத்தும் காரணியாகிவிடுகிறது. ஏழைநாடுகளின் மக்கள் அரபு நாடகளில் மட்டுமல்ல மேற்குலகளில் எல்லைகளிலும், விமானநிலையங்களிலும் அப்படித்தான் நடத்தப்படுகிறார்;கள். nஐர்மனியில், பிரான்சில் அதிகள் அடித்துக்கொல்லப்படுகிறார்கள். nஐர்மனிய-போலந்து எல்லைகள் அகதிகள் இறக்கிறார்கள. அமெரிக்க-மெக்சிகோ எல்லைகளில் வருடம்வருடம் நூற்றுக்கணக்கானவர்கள் சாகிறார்கள். எழை மெக்சிக்கோ அருகே முதலாளியச் செழிப்புமிக்க அமெரிக்கா அமைந்தகாரணத்தல் மனிதர்கள் பொருளாதார விடிவுதேடி சமுத்திரங்களை, நாட்டு எல்லைகளைத்தாண்டி ஒடுகிறார்கள். 1980களின் தொடக்கம் முதல் 1990 வரை nஐர்மனியில் இருந்து சுவிஸ் நுழையும் தமிழ் அகதிகள் சுவிஸ் பொலிசாரால் பிடித்து அடித்து உதைக்கபப்பட்டார்கள். இந்திய விமானநிலையம்களில் அதிகத்தமிழர்கள் பட்டபாடுகள் சிறை வாழ்க்கை பட்டஅவமானம்கள் இழந்த பணத்தொகைகள் கொஞ்சமா? இவைகளையும் எஸ்.பொ பேசலாம். தமிழகத்தின் சென்னை விமான நிலையம் எத்தனை அகதித்தமிழர்கட்கு மேற்குநாடு செல்ல முயன்றவர்கட்கு இரக்கம் காட்டியது. அவர்கள் பணத்தொகைகளைக் கண்டவுடனேயே பணிந்து வழிவிட்டார்கள். இங்கு அரபு, தமிழன், இந்தியர் என்பதெல்லாம் உண்மையில் வெளித்தோற்றமே முதலாளித்துவத்தை பொருளாதாரக் காரணிகளே ஆட்சி செய்கிறது. முதலாளித்துவ அரசுப்பொறிமுறை மூலத்தனதின் கட்டளைக்கு பணியுமே தவிர மனிதாபிமானத்துக்கு நன்நெறிகட்கோ அல்ல. தான் வெளிநாட்டுக்கு வந்து அரசியல் தரிசனம் பெற்ற பிறகு அவரது எண்ணம்கள் மாறியதாய் குறிப்பிடும் எஸ்.பொ. “மாக்சிய ஞானம் பெற்றால் உலகஞாணமே வரப் பெற்றவராகி முழுமனிதராய்விடுவேன் என்ற நம்பிக்கை முற்றுமுழுதாக இலக்கிய உலகத்தைப் பெற்றுத்துத்தகர்ந்தது” என்கிறார். இங்கு நாம் எஸ்.பொ வை மாக்சியத்தின் இலக்கியக் கொள்கை யாது? என்று உசாவலாம். ஸ்டாலினிசம் என்ற ஒன்றை அவர் கேள்விப்பட்டிருந்தால் அதன் இலக்கியப் போக்கும் மாக்சிய இலக்கியப் பார்வைக்குமான வித்;தியாசம்கள் என்ன? அதில் எதை அறிந்திருந்தார்? எல்லா விளங்கங்கட்கும் மாக்சிய ஞானத்தைவிடப் பெரிய ஞானமாக எதைக்கண்டறிந்தார் அதைச் செப்புவாரா? முதலாளித்துவ ஜனநாயகத்தின் இலக்கியப் போக்குகள்கூட எஸ்.பொ விட முன்னேற்றமானது. ஈழவேந்தன் இலங்கை அரசை ஏகாதிபத்தியம் என்கிறார். அது போலவே எமது கடலலளவு ஞானம் பெற்ற இலக்கியவாதி எஸ்.பொ.வும் இலங்கை அரசை ஏகாதிபத்தியம் என்கிறார். ஏகாதிபத்தியம்-முதலாளித்துவம் போன்ற மாக்சிய கலைச்சொற்களுக்குக்கூட வித்தியாசம் தெரியாத மேதைகள் மாக்சியத்தை கற்றுத் தெளிந்தாய் செய்யும். பாவனை கொடுமையானது. பெண்கள் பெண்களின் சமூகநிலை, உளவியல் குணாம்சங்கள் பற்றிய விடயம் காட்டுவதற்குப் பதில் எஸ்.பொவுக்கு பெண்கள் தசைதொகுதியாய் படைக்கப்பட்டவர்களாகவே தென்படுகிறார்கள். மார்பும், பிறப்புறப்பும் அடிக்கொருதரம் எழுதப்படுகிறது. எலிப்பொந்து, யோனி, ‘முலை பற்றிய விதம்விதமான வர்ணனைகள் பெண்கள் பற்றிய எழுத்தோடு கூடவே இடம்பெறுகின்றது. செல்லனின் பெண்டில் அள்ளிச்சொருகிய கொண்டையுடனும், துள்ளிவிழும் தனம்களை அமுக்கிக்கட்டிய குறுக்குக்கட்டுடனும், ‘தாவணி அணியாத குரும்பைக் கொங்கைகளைக் காட்சியாக்கி செவ்விள நீர்குலையுடன் நிற்கும் பெண்கள்” என எழுதப்படும்போது, பெண்களின் தொழில் வீட்டில் சமூகத்தில் உள்ளநிலை ஆண்களின் பாதிப்புக்குள்ளாகும் பெண்கள் என்று எந்த மதிப்பீட்டுக்கும் எஸ்.பொ தகுதிபடைத்திராத மனிதர் எஸ்.பொ வின் பெண்கள் பற்றிய போர்னோகிராபிப் பார்வைக்கும், இலக்கியத்துக்குரிய பாலியல், அது சார்ந்த உறவுகளை எழுதும் எழுத்துரிமை என்பது முதலாளித்துவத்தில் பெண்களை அவர்களது பாலியல் உறுப்புக்களைப் பண்டமாக்கும் உரிமையல்ல. இங்கு எஸ்.பொ பாலியல் எழுதுவது என்ற பெயரில் ஆண்களது பாலியல் உறுப்புகளை வர்ணிக்கப்போகவில்லை. பெண்களில் உடல் உறுப்புகளே பார்வைக்கு விடப்படுகிறது. இலக்கியத்தி;ன் உரிமையான அழகியலுக்கும் மென்நுணர்வுகட்கும் எஸ்.பொ இடம் இடவில்லை. நேரடியாக எழுதுவது வாசிப்போரை மலிவாகக் கிளரச்செய்யும் உத்திக்குரியதே. எஸ்.பொ எழுதும் அக்காலப் பெண்களின் சமுதாய வாழ்நிலை எதுவாக இருந்தது? வறுமை, நோய், வாழும்காலம் குறைவு, கர்ப்பிணி மற்றும் பேறுகால மரணம்கள் இக்காலத்தைவிட பெண்களிடையே மிக மிக அதிகம் அக்காலத்தில் பெருமளவு பெண்கள் பேறுகாலத்தில் இறப்பால்; ஆண்கள் இரண்டாவது தடவையாக திருமணம் செய்வது இறந்த மனைவியின் தங்கையை அல்லது வேறு பெண்ணை மணப்பது வழக்காக இருந்தது. அக்காலத்தில் பெண்கள் இன்றுபோல் 13,14 வயதில பருவமடைவதில்லை. உடல் வளர்ச்சிக்குறைவு, போசாக்கற்ற உணவு, மருந்துவசதிகள் குறைவு பருவமடைந்த சில மாதம்களிலேயே அனேகமாக மச்சான், மாருக்குக் கட்டிவைத்துவிடுபார்கள். இந்தச்சிறுமிகள் உடல் உறுப்புக்கள் பூரணவளர்ச்சியடைந்து பாலியலுக்கு தயாராகு முன்பே இது நடந்துவிடும் காதலுணர்வு, பாலியலுக்காக ஏங்குதல் போன்ற கனவுகள் வருமுன்பே அவர்கள் தாயாகி விடுவார்கள். 8, 10 பிள்ளைகள் என்று பெறுவார்கள் பிள்ளைகளின் அரைவாசிதான் தப்பும் முதல்பிள்ளை பிறந்தது அடுத்த வருடமே பிள்ளை பெறுவது வருடத்துக்குகொரு பிள்ளை என்பது சாதாரணம். முதல் பிள்ளை பால்குடிமறக்கு முன்பே அடுத்த பிள்ளையும் பிறந்து விடுவதால் பலதாய்மார் இரண்டு பி;ள்ளைகட்கும் ஓரே சமயத்தில் பாலூட்டுவார்கள் அக்காலப்பிள்ளைகள் நீண்டகாலம் 3-4 வயது வரைகூட தாயிடம் பால் குடிப்பார்கள் இங்கு வீட்டில் கடைசியாக மிச்சச்சாப்பாட்டைச் சாப்பிடும், வருசத்துக்கொரு பிள்ளை பெறும் பெண்களின் மார்புகள் எப்படி எஸ்.பொ வர்ணனைக்குள் வரும் “திமிறி நிற்கும”; “குத்தி நிற்கும”;, மார்புகள் எல்லாம் எஸ்.பொ பின் பாலியலில் அலையும் எழுத்துக்களின் கற்பனை எங்கேனும் அரிதாகத் தொன்படுவதை பொதுமைப்படுத்தி மிகையாக எழுதுவதாகும். மார்புக்கச்சை அணிதல், அலங்காரம், அழகு சாதனம், மேற்சட்டை போடல் என்பன மிகவும் பிற்காலத்தில் ஏற்பட்டதாகும். அக்காலப் பெண்கள் வறுமையால் மட்டுமல்ல. வெப்பமான காலநிலை போன்றவற்றாலும் குறுக்குக்கட்டு போன்றவற்றை அணிந்தனர். மார்புக்கச்சை அணிவது மார்பு அழகு கெட்டுவிடும் என்று பிள்ளைகட்கு பால்தரும் உரிமையை மறுப்பது. பிற்காலத்தில் ஏற்பட்டது. பால்மாவின் வருகையும் நடுத்தர வர்க்கம் சார்ந்த படித்தவர்களின் தோற்றமும் தான் பிள்ளைகட்கு பால்மாவைத் திணிப்பதும் மார்பை முக்கிய பாலியல் உறுப்பாக கருதும் போக்கும் வளரத்தொடங்கியது. எஸ்.பொ. காலத்தில் இருந்ததுபோல் பெண்களின் முக்கிய பாலியல் உறுப்பாக மார்பு கருதப்படவில்லை பிள்ளைக்குள்ள தாயிடம் பால்குடிக்கும் இயற்கையான உரிமை பறிபோகத்தொடங்கியது மிகவும் பிற்பட்ட காலத்திலாகும். தாயிடம் பால்குடிக்கும் உரிமையை இழந்த குழந்தைக்கும் தாய்க்குமான உறவு மற்றும் உளவியல் சார்ந்த பினைப்புகளும் பாதிப்புற்றன. எஸ்.பொவுக்கு தெரிந்த பெருமளவு நடுத்தர வர்க்கபெண்கள் எஸ்.பொ போல பாலியல் சார்ந்த ஆடை அணிகள் நடத்தைகளில் ஈடுபாடு பெண்களுக்கு போதிய உணவு, ஊட்டசத்து கிடையாதுள்ளபோது ஒய்வும் ஆறுதலாக யோசிக்க வாய்ப்புமில்லாதபோது பாலியல் பற்றிய கற்பனைகட்கும் பாலியல் மனவிகாரங்கட்கும் இடம்இராது. அது மிகவும் சாதாரணமாக விடயமாக சில சமயம் புருசன்மாரால்; செய்யப்டும் தாங்கமுடியாத ஆய்க்கினையாகக் கூட இருந்திருக்கும். பாலியலை நுகர ஆரோக்கியமான உடல்நிலை, பாலியல்சார்ந்த அறிவு, பொருளாதாரச்சூழல் தேவைப்படும். நெடுக நோய்வாய்ப்படும், அதிக பிள்ளைகளை உடைய, வீட்டில் சோத்துக்கு தவண்டையடிக்கும்போது பாலியலும் பெண்களுக்கு பெரிய முலைகளும் எப்படி இருக்கும். இந்த மார்ப்பு பற்றிய எஸ்.பொவின் எடுப்புகள் நடுத்தரவர்க்க மூளைஉழைப்புக்கு பாலியல் நூல்களிள் வருகையின் பின்பு ஏற்படும் நினைப்பாகும். அக்காலப் பெண்கள் குறுக்குக்கட்டோ, மார்பை மூடி சிறு துண்டோ போட்டிருப்பர். தாய்ப்பால் மிக முக்கிய மருந்துப்பொருளாக இருந்தது. அக்கால நாட்டு வைத்தியர்களின் குளிசைகள் பெரும்பகுதி தாய்ப்பாலுடன் சேர்த்துக் கரைத்தே கொடுக்கப்படும். ஏழைப்பெண்கள் பெரும்பகுதி தாய்ப்பால் கொடுப்பதை சமூகசேவையாகவே செய்து வந்தார்கள். கண்நோய்க்கு அக்காலத்தில் தாய்ப்பால் மருந்தாகச் கருதப்பட்டது. ஆண்களுக்கு முன்புகூட பெண்கள் தமது மார்பில் இருந்து பாலை எடுத்துக்கொடுப்பார்கள் சில சமயம் வேலையில் ஈடுபட்ட பெண்களிடம் வீட்டில் உள்ளவர்களோ நெருக்கமானவர்களோகூட மார்ப்பில் இருந்து தாய்ப்பால் எடுத்துக்கொடுப்பது சாதாரணமாக இருந்தது. இக்காலம் போல அது நாணமுறும் செயலாகவோ அல்லது மார்வைக்காட்டுவது தீவிர பாலுணர்ச்சியைத் தூண்டும் செயலாகவோ இருக்கவில்லை. மிகவும் பிற்காலத்தில்தான் பெண்களின் மார்பு முக்கியமானதாயும், ஆண்களின் பாலியலைத் தூண்டும் கவர்ச்சி அங்கமாகவும் மாறத் தொடங்கியது. பெண்கள் தமது மார்பில் பாலியல் கவர்ச்சிக்குரிய அங்கம் என்ற பொருளில் அக்கரைகாட்டுவது அதிகரித்து. மேற்கத்தையக் கலாச்சாரத்தின் செல்வாக்கு, பாலியல் நூல்கள், போர்னோகிராபியின் வளர்ச்சி என்பன பெண்களின் மார்புக்கு புதிய நுகர்வுப்பண்ட மதிப்பையும் சந்தை மதிப்பையும் தேடித்தந்தன. சில வருடம் முன்ப ஐரோப்பாவுக்கு வந்திருந்த தமிழ்நாட்டு பின்நவீனத்துவவாதி ஒருவர், ஐரோப்பியப் பெண்களின் பெரிய முலைகளையிட்டு தனது ஆனந்தத்தை தெரிவித்த அவர் இந்தியப் பெண்களுக்கு சிறிய முலைகள் உள்ளதாக தன் நண்பர்களிடம் குறை கூறினார். பெண்களின் முலைகள் பற்றி கதையெழுதிய புகலிட தமிழ் எழுத்தாளர்களாகத் தம்மைக் கருதிக்கொள்ளும் இருவர் உள்ளனர். எழுத்துக்கலகம், பாலியல் விடயம்களை சுதந்திரமாக எழுதல் என்ற உரிமையை இந்த முதலாளித்துவ போர்னொகிராபி எழுத்தாளர்கள் துஸ்பிரயோகம் செய்தார்கள். தமிழ்நாட்;டில் பாலியல் உரிமை பற்றிப் பேசப்புறப்பட்டவர்கள் கூடிய கூட்டத்தின் பெண்களின் பாலியல்உறுப்புக்கு பதிலாக ஆண்கள் பெண்களின் ஏனைய உறுப்புகளை பாலியலுக்குப் பயன்படுத்தலாம் என்று பெண்களின் உடல் முழுவதையும் பாலியல் அடிப்படையில் பங்கிடப்பட்டார்கள். இப்போக்குகள் எஸ்.பொ.வை மட்டுமல்ல புகலிட நாடுகளில் நாம் சிறுகதை எழுதுவதாய்க் கருதும் சிலரையும் பாதித்து. இவர்கள் சில உளவியல் போக்குகளைப் பொதுவாக்கிக்கொண்டு ஆண், பெண்களின் பாலியலல் சமுதாயம், பொருளாதாரம் தொழில்வளர்ச்சி சாதிப்பதை எண்ணிப்பார்க்க முடியாது போயினர் இவைகளின் விளைவாகவே மனித உளவியல் எழுகிறது என்பதை மறந்தனர். இவர்களில் ஒருவர் கூட பெண்களின் மார்பில் குழந்தைக்குரிய உரிமை பற்றி தாயின் கருப்பையில் பெற்றுள்ள அதே உரிமை தாயின் மார்பில் தனது உணவைத்தேடும் அடிப்படையான உரிமை படைத்த குழந்தை பற்றிப்பேசியது கிடையாது. இவர்களைப் பொறுத்து பெண்கள் பாலியல் அங்கங்களைச் சுமந்து திரியும் உயிரிகள். அவள் உடலை எப்படிப்பயன்படுத்துவது எந்தெந்த அங்கங்களை எந்த வழியில் நுகர்ந்து தள்ளுவது என்று ஆண்தீர்னரிப்பான் பாலியல் சுதந்திரம் என்பது பெண்களை அனுபவிக்கும் தடையற்ற சுதந்திரம் முதலாளியத்தின் பாலியல் சந்தைக்கு இது மிகவும் தோதான சிந்தனைப் போக்காகும் சந்தையின் பணம்கொடுத்து பெறும் விலைமாது ஆண்களை எப்படி வெறுக்கிறாள் என்பதையோ, அவள் போலியாய் பொய்யாய் அவள் பாலியலால் தானும் திருபத்தியுறுவதாய் காண்பிக்கிறாள் என்பதை ஒருவரும் பொருட்படுத்துவது இல்லை. எஸ்.பொ தனது நூல் முழுவதும் சினிமா நடிகைகளைப் பற்றிப்பேசி அவரது சினிமா அறிவையையும் மெய்ப்பித்துச் செல்கிறார். டி.ஆர்.ராஐகுமாரி, சரோஜாதேவி, பத்மினி என்று நடிகைகளை பூலோக ரம்பைகள், ஊர்வசிகள் என்ற புராண வகைப்பட்ட பெண்களையும் அவர் திரும்பத்திரும்ப தன் எழுத்துக்கு கூவி அழைக்கிறார். சினிமா நடிகைகளின் வாழ்வுகள் தற்கொலையிலும், தற்கொலையிலும் வலைமாதர் முடிவடைந்தமை எஸ்.பொ. அறியாத ஒன்றாகியது. இரவுலீலை, அம்மனம், நிர்வாணம், பாம்புபினைதல் புணர்ச்சி, எலிப்பொந்து, யோனி, காம்பு, முலை, தனம், பெண்கள் அடிக்கழுவுதல் என்ற சொற்பிரயோகங்கள் வலிந்து திணிக்கப்படுகிறது. இச்சொற்கள் பேச்சு மொழியின் அவசியத்தால் பாத்திரம்களின் யதார்த்த மொழியின் தேவையாக இராமல் எஸ்.பொ.வின் எழுத்துச்சீரழிவின் நிரூபணமாகிறது எதிர்ப்படும் பெண்களை எல்லாம் சீலையை உரிந்துபார்க்க எண்ணத்தூண்டுவதல்ல எழுத்து. சொல்லுக்குரிய செய்தியின் பெறுமதி எத்தகையது என்று உணர்ந்தவராக இருக்க வேண்டும். எஸ்.பொ தமிழ்நாட்டில் இருந்தபோது அரசியல் நூல்களைப்படித்ததாக எழுதவில்லை. கண்ட பாலியல் நூல்களைப் படித்ததாக அவரே எழுதியிருக்கிறார். அதன் தாக்கம்தான் எஸ்.பொவிடம் இன்றுவரை அவர் எழுத்தில் உள்ளது அத்துடன் சினிமாத்தனமும் சேரும்போது என்ன நடக்கும் என்பதற்கு எஸ்.பொவிட சிறந்த உதாரணம் இல்லை. உடல்உறவு காதலின் நுட்பமான மொழி என உயர்தத்துவம் எல்லாம் எழுதும் எஸ்.பொ மறுபறும் தானே தமிழ்நாட்டில் விலைமாதரிடம் போய் பென்சிலன் ஊசி போட்டதையும் எழுதுகிறார். விலைமாதரிடம் எப்படி காதலற்ற உறவுக்குப் போனார் என்பதை விளக்கவில்லை. காதல் என்பது கற்காலத்தில் இல்லை அப்போது பாலியல்தடைகள் கட்டுப்பாடுகள், குடும்பம், ஒருதார மணம் என்பன இல்லை. இவை பிற்கால விவசாய சமூகம்கட்கு தனிச்சொத்துடமை அமைப்புகட்குரியதாகும். பாலியல் ஒடுக்குமுறைகள் தோன்றியபோது காதல் விரும்பியவரை அடைய ஒரு வடிவம் ஆயிற்று. ஆண்-பெண் உறவுக்கான ஒருவகை அங்கீகாரமானது எமது சமூகம்களில் “உனக்காகச் சாவேன்” ‘உயிர் விடுவேன்’, ‘நஞ்சு குடிப்பபேன்’ என்பது வரை தீவிரமான நிலையில் உள்ளது சுதந்திரமான பாலியல் தடுக்கப்பட்டுள்ளது. திருமண உறவு முறைக்கு வெளியே உடல்உறவு தடுக்கப்பட்டுள்ளது. இங்கு காதல் உயிர்வாழ அனுமதி பெறுகிறது. ஆனால் வறுமை முன்பு காதல் பெரும்பாலும் தோல்வியடைகிறது. எம்தேசக் காதல் முரட்டுத்தனமானவை. ஆண் ஆதிக்க வரம்புக்குடப்பட்டது, காதலில் பெண்களின் உடல், உணர்வு சார்ந்த விடயங்களின் முக்கியத்துவம் மிகவும் குறைவு, பாலியல் பற்றி அறிவியல் பூர்மாக அறிவு குறைந்த ஆண் பெண்கள் பாலியல் கட்டுப்பாடுகள் காரணமாக அதீதமான காதல் வயப்படுகிறார்கள். சாசத்துணிகிறார்கள். ஆனால் காதல் உறவில் ஆண்தான் செயற்படுகின்றான். பெண் பங்குபற்றுகிறாளே தவிர செயற்படுவதில்லை. அவள் தன் பாலியல் விருப்பை வெளிப்படையாய் காட்டுவது ஆணுக்குச்சமமாய் பாலியலில் பங்கெடுப்பது ஏற்கப்படுவதில்லை. எனவே அவள் அடங்கிக்கிடக்கிறாள். ஆண்கள் தம் காரியம் முடிந்ததும் பாலியல் முடிகிறது. பெண்களின் திருப்தி கவனத்தில் கொள்ளப்படுவதில்லை. இங்கு எஸ்.பொ கூறும் உடலுறவு காதலின் நுட்பமான மொழி என்ற சொல்லெடுப்பது வெறும் அலங்கார வார்த்தை, எம்தேச ஆண்களின் பாலியல் முரட்டுத்தனமானது மென்மையையும் இரசனையுணர்வும் குறைபட்டது. பெர்லினில் நடந்த “மாக்சியச் சந்திப்பு” ஒன்றில் புகலிட தமிழ்ப்பெண் எழுத்தாளர் ஒருவர் தமிழ் ஆண்கள் பெண்களின் பாலியல் திருப்தி பற்றிக்கவலையுறுவதில்லை என்று வெளிப்படையாக விவாதத்தின்போது குறிப்பிட்டார். பெண்களை கப்பலுக்கு ஒப்பீட்டு எல்லோரும் ஏறி இறங்கிறார்கள் என்ற ஒப்பீட்டுச் வரும் எஸ்.பொ பெண்களின் ஒழுக்கத்தைக் கண்காணிக்கிறார். அவர்கள் பாலியல் சட்டதிட்டம்கள் மீறும்போது அதன் காரணியைப் பற்றி வினா எழுப்பாமலே தண்டனை தரும் குற்றம் காட்டும் சொற்களை அணிவகுக்கிறார். தன்சொந்த பாலியல் மீறல் என்ன விதமான பாலியல் ஒழுக்கம் சார்ந்த பிரச்சினையாகவும் அவரிடம் எழவில்லை. “பாலியல் எழுச்சி புனிதமானது” என்று பகவத்கீதை குறிப்பிடுவதாக அவர் குறிப்பிடும்போது அது ஆண் தன்மைக்குரியதாகவே பெருமையாகவே கருதப்படுகிறது. தனது மாமாவின் திருமண உறவுக்க வெளியேயான பாலியல் தொடர்புகொண்டுள்ள பெண்ணுடன் எஸ்.பொ பாலியல் தொடர்பு வரை செல்வது காதலா? எந்த வகையிலும் பாலியலைத்தீர்க்கலாம் என்ற எஸ்.பொ வின் நடத்தை அவர் வலியுறத்தும் தமிழத்துவம், பொது ஒழுக்கம் இவைகட்கு எதிரானதில்லையா? இன்னெருத்தன் மனைவியான் கண்ணனைவிட 7 வயது கூடிய ராதாவை அழைத்துச்கொண்டு பிருந்தாவனம் காட்டுக்குள் கண்ணன் நுழைவதாக எழுதும் எஸ்.பொ எல்லாப்பக்கமும் தன் சொந்த மீறலுக்கு தக்க சாட்சிகளைத்தயாரிக்கிறார் புராண இதிகாசக்காலக் கண்ணனுக்கு 18108 மனைவியர் 80 ஆயிரம் குழந்தைகள், கிருஷ்ணனின் சொந்த மகன் சம்பா கிருஷ்ணணின் மனைவியருடன் உறவு கொண்டு இருந்தான். கிருஷ்ணன் ஐமுனையில் நீராடும் கோபியரின் ஆடைகளைத் திருடிக் கொண்டுவந்து அவர்கள் நிதர்வாணமாக வந்து தமது ஆடைகளைதரும்படி கொஞ்சிகேட்பதை ரசிப்பான் மற்றயமன்னர்களின் பெண்களைக் கூட தன் அந்தபுரத்துக்குக் கொண்டுவருவான் இத்தகைய கதையை ஏன் தனக்கு ஆதாரயை காட்டுகிறார் மற்றப்பாக்கம் ஒழுக்கம் பற்றிய கருத்துக்களையும் அகவயமாக வலியுறுத்;;;துகிறார். ஆக தன்னால் கடைப்பிடிக்க முடியாத தானே மீறும் ஒன்றை மற்றபவர்கள் முக்கியமாகப் பெண்கள் கைப்பிடித்து ஒழுகவேண்டும் என்ற போலிப் போதனை நேர்மை தவறிய எழுத்து எஸ்.பொ.வினுடையது. உடல் உறவைத் நெய்வதரினம் எனும் எஸ்.பொ இப்படித் தான் கூறுவதை தானே மறுத்து எழுதும் இடம்கள் ஏராளம் தான் சொல்லும் கருத்தை முரணின்றி வளர்த்துச் செல்லாத ஒரு தொகை;குழப்பங்களின் குறுக்கீடுகள் இடம்பெறுகிறது. கனகம்மா என்ற விலைமாதைப் பற்றி பேசப்போன எஸ்.பொ அவளின் எத்தகைய செயற்பாட்டை விபரிக்கிறார் என்று பாருங்கள் கனகம்மா கொல்லைக்குப்போய் அடிக்கழுவாவிட்டாலும் ஒண்டுக்கப்போனால் கழுவுவாள்” என்ற அவரது விளக்கம் கனகம்மாவின் வாழ்வு பற்றிய எந்தச்சித்திரத்தையாவது தருகிறதா? அவளுக்கு வயிறு என்றொரு அங்கம் இல்லையா? அவள் தன்மானத்தையே அந்த வயிற்றுக்காக விற்கத்துணிந்தமை சமுதாயக் காரணி. பொருளாதார நிலையின் கொடுமை ஏன் எஸ்.பொ.வுக்குப்படவில்லை தான் இழந்தவர் கனகம்மாக்கள் தம்மை விற்றுத்தான் வாழவேண்டும் என்று கட்டாயப்படுத்தியுள்ள முதலாளித்துவ சமூகம் அதில் பெண்களின் கடைநிலை இது இவருக்கு மனிதம் சார்ந்த ஆத்திரம் வரவில்லை. கனகம்மா ஏன் சாதாரண மனிசியாய் வாழ முடியாமல் போனது. இதை விரும்பி மனமொப்பியா இவர்கள் செய்தார்கள், விதம் விதமான பாலியல் விகாரம்படைத்த ஆண்களிடம் சிக்கி பாலியல் நோய்களும், சிரங்கு தோல்வியாதிகளும் வந்து அவர்கள் அநாதையாகப் புழுத்தச் செத்த வரலாறுகள் இருக்கிறது. இதுதான் கற்புக்கரசிகளைப் போற்றி கண்ணகியையும், அருந்ததியையும் பேசிவாழ்ந்த தமிழச்சமூகத்தின் கடந்தகாலம் “அன்னம்மா நாகராஐனின் சின்ன வீடாக இருந்தவள். அவள் ஊர் மேயும் குணமுற்றவளாக இருந்தமையால் அவளை அவன் துரத்திவிட்டான்” எனும்போது எஸ்.பொ தன் உடலை மூலதனமாயப் பிழைக்கும் நிலையில் விடப்பட்ட பாதிக்கப்பட்ட பெண்களின் சார்பில் வழக்குரைப்பவராக எஸ்.பொ இல்லை அவர் சராசரி தமிழச் சமூக ஆணாத்திக்கத்தில் வார்க்கப்பட்டவராகவே சிந்திக்கிறார். ஒரு இலக்கிய மனிதனின் மனிதர்களை ஊடறுத்தறியும் பண்பு வெளிப்பவில்லை. கல்குடா எம்.பியாக இருந்த தேவநாயகத்தின் பேச்சை “பெட்டைப்பேச்சு” என்று வர்ணித்து முடித்த எஸ்.பொ அவர் “மாடும் கண்டுமாய் ஒரு தமிழ்பெண்ணைக் கலியாணம் முடித்தார்” என்று யாழ்ப்பாணப்பாசையில் எழுதுவதும் சிங்களப் பெண்களைப் பற்றிக் கூறவரும்போது “இலகுவாக் பாலியலுக்குப் பணிந்துவிடும் இளகிய மனசுக்காறிகள்” என்ற பொருள்படும் பழமொழியைக் குறிப்பதும் பெண்களின் பாலியல் ஒழக்கம் பற்றிய பிரச்சனைதான் அவருக்கு சர்வமாய் எழுத்தில் புகுந்துள்ளது. ஊர் உலகத்துப் பெண்களை எல்லாம் மோசமாய் காண்பித்து அவர்கள் சீலையை உரிந்து பார்த்து எழுதும் எஸ்.பொ தனது குடும்பம் சார்ந்த பெண்களை உறவுகளை நற்குணவதிகளாக காவியத்தன்மை வாய்ந்த தியாக செரூபங்களாக வார்த்துள்ளார். அவர்கள் எம்சமயத்திலும் பாலியNலூடு தொடர்புபடும் விளக்கம்களில் இருந்து காப்பாற்றப்பட்டுள்ளார். பெண்களின் ஆடைகள் கூட எஸ்.பொ இனால் கண்டிக்கப்படுகிறது சேலைத்தலைப்பு, தாவணி என்பன ஆண்களை மயக்குபவை இந்த ஆடை அலங்காரம்கள் வசியம் செய்ய பயன்படுபவை என்ற பொருளில் எஸ்.பொ இதைப்பாவிக்கிறார். இத்தகைய பார்வையில்; தமிழ்தேசியவாதப்பரப்பின் இயல்பான பார்வையாகும். பெண்களைக் கொலைசெய்த பாசிப்புலிகள் தமிழப் பெண்களின் ஆடைகளைக் கட்டுபடுத்த முனைந்தவையும், ஒழுக்கம் மீறியதாக கொன்றதையும் பெண்களை பாலியல் வதை செய்த இந்திய இராணுவம்கூட தமிழ்ப் பெண்களின் ஆடைகள் அணியும் முறை இந்திய இராணுவத்தை தூண்டுவதாகவும், ஆடை அணிவதைக் குற்றமாகக் காட்டிய சம்பவங்கள் உள்ளன. இங்கு எஸ்.பொ.வும் இவர்களோடு ஒன்று படுகிறார். தமிழ்ச் சினிமாவின் ‘பாலான’ என்ற சொல்லை எழுதும் போதே எஸ்.பொ. வின் எழுத்தின் தரமும் சிந்தனை மட்டமும் சிறப்பாக துலக்கப்பட்டுவருகிறது. புலம்;பெயர்ந்தவர்கள் “புலம்பெயர் தமிழர்கள் தம்மை இலங்கையர்களாக அடையாளப்படுத்தாது தமிழர்களாகவே அடையாளப்படத்துவதாக எஸ்.பொ பூத்துப்போகிறார். பல ஐரோப்பிய நாடுகளில் தமிழர்கள் ஐரோப்பிய மக்களால் இந்தியராகவே கணிக்கப்பட்டனர். சில சமயங்களில் நீங்கள் இந்தியரா என்ற கேள்விக்கு இவர்கள் இந்தியர் என்று பதிலாளிப்பது நடப்பதுண்டு மேலும் புகலிடநாடுகளில் தமிழர்கள் சிறிலங்கா என்கிறார்களே தவிர தமிழர்க்ளாக தம்மைப் பொதுவாகக் கூறுவதில்லை. தமிழ் ஈழப் பிரசைகள் எனச் செப்புவதில்லை தமிழர்களாக அடையாளப்படுத்துவதில் என்ன பெருமை இருக்கிறது? பல இன நிறமக்களோடு வாழக் கொடுத்து வைத்த இவர்கள் முதலில் தம்மை மனிதர்களாக அடையாளப்படுத்த தெரியவேண்டும். தமிழர்களாக வழ்வது என்றால் என்ன? சாதிபார்த்து, ஊர்பார்த்து பெண்களையும் பிள்ளைகளையும் அடிமை கொண்டு புலிக்கு காசுகொடுத்து சைவக்கோவில் கட்டி, சாமத்தியத்தியத்திற்கும், கலியாணவீட்டுக்கும் மண்டபம் எடுத்து கொண்டாடி வாழ்வதா? தமிழர்களாக வாழ்வதன் அடையாளம்? ஐரோப்பிய நாடுகளில் காவடியெடுத்து, வெறும் மேலுடன் தெருக்களில் பிரதட்டை செய்து, செடில், வேல் மூஞ்சையிலும், முதுகிலும் குத்தி, பறவைக்காவடி எடுத்தானே தமிழர் பண்பாடுகளைக் காக்க முடியும். வாழ்விடமும், ஆடை அணிகலனும், உணவும், பொழுது போக்கும், மொழியும் மாறத்தொடங்கிவிட்டது. பிள்ளைகள் தமிழர்களின் அடையாளம்களை பின்பற்ற முக்கிய காரணிகளோ வாய்ப்போ இல்லை. அவர்கள் கொஞ்சும் தமிழ் கொச்சைத் தமிழ் மொழிபேசுபவர்களாகி விட்டனர். புலிகள் தமிழர்பள்ளிகளைத் திறந்து பல்லினக்கலாச்சாரத்துக்கு மாற்றாக புலிப்பாட்டு சொல் லித்தந்து தமிழ்மொழியைத் தீத்தினாலும் தமிழ்மொழி, தமிழர் அடையாளம் புகலிட வாழ்க்கைக்கு தேவையில்லை. என்று ஆகத் தொடங்கிவிட்டது. பாலியல்வாழ்வு சார்ந்த கட்டுப்பாடுகள் தளரத்தொடங்கிவிட்டதுடன் இரண்டாம் தலைமுறை ஐரோப்பிய இளம் சந்ததிபோல் சுதந்திரமான பாலியல் தேர்வுக்கும் போகத் தொடங்கிவிட்டது. தமிழ்க்குடியேறிகளின் முதல் தலைமுறையின் தமிழ்க்கலாச்சாரக்கனவுகள் தகரத்தொடங்கியதில் அவர்கள் இந்த எதிர்நிலை மாற்றத்தை ஈடுகட்ட புலி என்றும், இந்து கோயில், சாமத்தியவீட்டுக்குக்கூட பிராமணி பிடிப்பு என்று தீவிரமடைந்தனர். ஆனால் 25 வருடத்துக்கும் மேற்பட்ட புகலிட அகதித் தமிழர்களின் குடியேற்றத்தின் விளைவுகளை காணாமல் தமிழர்களை எஸ்.பொ ய+தர்களுடன் ஒப்பிட்டுக்காட்டுகிறார். முதலில் யூதர்கள் இனமல்ல மதநம்பிக்கையாளர்களாகும். எஸ்.பொ அவர்களை இனமாய் கருதுகிறார். அடுத்து ஐரோப்பிய யூத நம்பிக்கை கிறிஸ்தவத்தை விட மூத்தவை உதாரணமாக ஜெர்மனியில் அவர்களது நம்பிக்கை அன்றைய ஐரோப்பிய கருத்துகளைவிட முன்னேறியதாக இருந்தமையினால்தான் யூதர்களின் யூத நம்பிக்கையும் கிறிஸ்தவமும் ஐரோப்பாவை நாகரீகப்படுத்தின ஜெர்மணியில் பழைய nஐர்மானிய இனக்குழுக்களின் காட்டுமிராண்டி நிலைய மாற்றி மனித நாகரீகத்தக்கு இட்டு வந்தன. இங்கு நாம் ஐரோப்பிய கிறிஸ்தவத்தின் ஒடுக்கும்முறையால் யூத நம்பிகை சினியோகிச் வெறியாய் மாறியதையே ஆரம்ப காலக்கிறிஸ்த்தவத்தின் மனிதர்களைப் பற்றி சிந்திக்கத்தூண்டிய அதை பிற்கால கிறிஸ்தவத்துடன் ஒப்பிடக்கூடாது செமிட்டிக்சிந்தனைதான் ஐரோப்பாவை நாகரீகமாக்கியது யூத சமூகத்தில் இருந்தே மாக்ஸ், ரொட்ஸ்கி, கான்ட், மொசாட், தோமஸ்மான்கள் வந்தனர். ஐரோப்பாவில் செமிட்டிக் சிந்தனை ஆழமான சமுதாயக்கருத்து ஆகவுள்ளது. ஆனால் தமிழர்கள் ஐரோப்பிய நாகரீகத்துக்கு எதைத்தந்தனர். அவர்களின் சிந்தனை செமிட்டிக் கருத்துக்கள் போல் ஆழமானதல்ல. செமிட்டிக் சிந்தனை முதல்முதலில் மனிதர்களைப் பேசியது. கடவுளின் இடத்தில் மனிதர்களைக்; கொண்டு வந்தது ஆனால் தமிழ்ச்சமூகம் இன்றுவரை தன் சொந்த மக்களுக்குக்கூட புகலிடத்தில் வழிகாட்ட முடியாது ஏனெனில் ஐரோப்பிய சமூகங்களின் பொருளாதார, சமூக முன்னோற்றம் முன்பு இன்னமும் ஐரோப்பாவில் கோயிலில் தீக்குளிக்க இடம் தேடிக்கொண்டிருக்கும் தமிழர்கள் எப்படி நின்றுபிடிப்பர். தமிழ்ப்பள்;ளிகளில் பலவந்தப்படுத்தி அப்பர் ஆத்தைகளின் ஆசைக்கத் திணிக்கப்படும் தமிழ்ப்படிப்பு புகலிட வாழ்க்கையின் கோரலல்ல தமிழ்ஈழம், மற்றும் தேசியத்தலைவர் பிரபாகரன் எனும் உளநோய்த் தன்மை வாய்ந்த தமிழ் பள்ளிப்போதனைதான் தமிழ்க்குழந்தைகளைப் பற்றிகொள்ளாமுயல்கிறது சாதி, ஊர் அடையாளங்கள் பார்ப்பதும் திருமணம் பேசிச் செய்ய முயல்வதும் இரண்டாவது தலைமுறைக்கு மேலான சித்திரவதையாகிவிட்டது. ஊரில் ஒரு விலைமாது ஊருள் வந்தவிட்டால் அடிபோட்டு அவமானப்படுத் தலுக்குபழகியவர்கள் புகலிடநாடுகளிர் மனிதர்களைக் விலைமாதரான பெண்களோடு பக்கத்து அல்லது மேல்வீட்டுக் கீழ்வீட்டுக்காறராக வாழ தமிழர்கள் விடப்பட்டுள்ளனர் இரண்டாம் தலைமுறை இவர்களது தமிழ்க்கட்டுப்பாடுகளைவிட்டுப் போகப்போக இவர்கள் தீவிர மத உணர்விலும் தமிழ் அடையாளத் தேடலிலும் மூழ்கினர். இது தமிழ் நம்பிக்கைகளின் தோல்வியாகும். மேலும், எஸ்.பொ புகலிடத் தமிழர்களை பற்றி விபரிக்கப் புகுந்தபோது “nஐர்மனி, சுவிஸ், ஒல்லாந்து போன்ற நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்கள் தொழில்சார்பட்டப்படிப்புப் பெறாதவர்கள். அடைக்காலம் புகுந்துள்ள நாடுகளி;ன மொழியை முறையாகக் கற்காதவர்கள் என்கிறார். ஆகத்தமிழர்கள் புலிடநாட்டு மொழியைக் கற்றிறியாமல் இருப்பதும் தொழில்சார் பட்டப்படிப்புப் பெறாமலும் இருப்பது எஸ்.பொ விரும்புவதுபோல தமிழர்களாக தம்மை புலிடத்திலும் அடையாபப்டுத்தும் செயலாக ஏன் விளங்கக்கூடாது. இலங்கையில் சிங்களம் படியேன் என்ற தமிழன் வீத்தமிழனாக எஸ்.பொ ஆல் கருதப்படும்போது அன்னிய நாட்டில் வாழும் நாட்டின் மொழியைப் படியேன் என்பது சுத்த தமிழனின் பண்பு என்று ஏன் எஸ்.பொ வால் வாழ்த்த முடியவில்லையா? மாறாக அவர்கள் கல்லாதோர் தொழில்சார்பட்டம் பெறாதோர் என்று இந்த அகதித்தமிழர்களை இலங்கையில் ஆங்கிலமல்லாது தாய் மொழியில் கல்வி பெற்றவர்களைத்தரமிறக்குகிறார். பிரிட்டனில 1960, 1970களில் குடியேறிய படித்த தமிழர்கள் அதாவது அங்கிலக்கல்வி பெற்றவர்கள் துறைசார் பயிற்சி பெற்றவர்கள் பின்பு 1980, 1990 களில் பிரிட்டன்போன மிகக்குறைந்த ஆங்கில மொழியறிவும் தாய்மொழியில் கல்விபெற்றவர்களைத் கணக்கெடுப்பதில்லை மேலும் அவர்கள் துறைசார் பயிற்சி பெறாத அகதிகள் என்பதால் ஆட்களை அண்டுவதில்லை. இந்த யாழ் நடுத்தர வர்க்க குணமே எஸ்.பொவின் பிற்கால அகதியாய் வந்த தாய்மொழிக் கல்விகற்றவர்கள் மேலும் காட்டப்படுகிறது. இவர்களைப் பொறுத்து ஆங்கிலம் தெரியாதவர்கள் படியாதவர் என்று தேர்ந்தேடுப்படுவார்கள்;. யுத்தம் பொருளாதாரக்காரணிகள் போன்றவைகளால் அன்னிய இடம்கட்கு குடிபெயரும் மக்களின் வரலாறு முழுவதும்காண்பிப்பது என்னவெனில் அது மிகவும் அவலமானதாகும். இலங்கையில் தோட்டத்தொழிலாளர்கள் குடியேற்றம், அமெரிக்காவில் ஆபரிக்க, சீன, இத்தாலிய, ஸபெயின், nஐர்மனிய, ரஸ்ய மக்களின் குடியேற்ற வரலாறுகளைப் பர்த்தால் குடியேறிய நாடுகளில் மொழியறியாது, தொழில் தகுதிகள் இல்லாத கடைநிலை மனிதராய் புதிய சூழலில் அன்னியப்பட்டு விகாரமடைந்து நின்றனர். இத்தகைய பொதுப்போக்குக்கு தமிழர்கள் விதிவிலக்கல்ல. எஸ்.பொ போன்ற பிரிட்டஷ்கால ஆங்கிலகல்வி பெற்றவர்கள் தம்மைப் படித்தவர்களாக எண்ணிக் கொள்வதால் ஏற்படும் விளைவுகளை நாம் ஆராய வேண்டும். இவர்காலத்தவர்கள் சிங்கள அரசகரும் மொழிச்சட்டம் வந்ததுடன் தமிழும் வேண்டாம் சிங்களமும் வேண்டாம் ஆங்கிலமே போதும் என்று பிரிட்டனுக்கு ஒடினார்கள். இலங்கை மக்களின் பெரும்பான்மை மொழி சிங்களத்தை செத்தாலும் படியோம் என்று பிரிட்டனுக்கு வந்து இவர்கள் எப்படி கறுப்பராக எண்டாலும் வாழச்சம்மதித்தனர் என்று நாம் தேடினால் நாம் பலதைக்கண்டு பிடிப்போம். பிரிட்டன் ஆட்சிக்காலத்தில் பிரிட்டன் கொலனிகளான மலேசியா, சிங்கப்ப+ர், கென்யா உட்பட பல நாடுகட்கு இலங்கை யாழ்ப்பாணத் தமிழர்கள் நிர்வாகிகளாக, ஊழியர்களாக இவர்கள் சென்று பிரிட்டன் ஆட்சிக்குப் பணிபுரிந்தனர். இவர்கள் ஆங்கிலமொழியில் கற்றவர்கள் அனேகமாக Nஐ.சி வரை படித்தாலேயே பாஸ் பண்ணிலாலே இவர்கட்கு இந்தத் தொழில் கிடைத்து. இப்படி தமிழ் நடுத்தர வர்க்கம் பிரிட்டன் ஆட்சிக்கு ஊழியம் செய்துக்கொண்டு இருந்தபோது சிங்கள மக்கள் பிரிட்டிஸ் ஆட்சிக்கு எதராகப் போராடிக் கொண்டு இருந்தனர். ஆனால் நடுத்தரவர்க்கத் தமிழர்களோ பிரிட்டிஸ் ஆட்சிக்கு நல்ல பிள்ளைகளாக இருந்தனர். எனவே எஸ்.பொ போன்றவர்களிடம் காணப்படும் ஆங்கில மிதப்பு தம்மைக் கற்றவர்கள் கல்விச்சமூகம் என்ற கனம் பண்ணுதல் தென்படுகிறது. பட்டம் பெற்றவர்கள், தொழில்சார் கல்வி பெற்றவர்கள். தாய்மொழியில் கற்ற தொழிலாளர்களாக பயிற்றப்படாத தொழில்களைச் செய்தவர்களை இவர்கள் மதிக்கவில்லை. இவர்கள் குறைந்த ஆங்கில அறிவுடன் பாரம்பரிய தமிழ் நடுத்தர வர்க்க தகுதிகட்கு புறம்பானவர்களாக. இருந்தனர் எஸ்.பொ. போலவே மதிபடைத்தவர்கள் புகலிட தமிழ் ஊடகத்துறை, அரசியல், இலக்கிய ஐனநாயகப் போக்குகளிலும நிறைந்திருந்தனர் ஆங்கிலக்கல்வி பெற்றவர்கள், பேராசிரியர்கள் என்போர் இவர்களிடம் உயர் மரியாதை பெற்றனர். ஆனால் இவர்கள் அரசியல், இலக்கியத்துறைகளில் எதையும் சாதிக்கவில்லை. இவர்களின் இந்த முதலாளித்துவத்தகுதிகள் ஒரு தமிழ் மக்கள்சார்பான சாதாரண அரசியலுக்குக் கூட உதவவில்லை. புகலிட நாடுகளில் வாழும் தமிழர்கள் தாம்வாழும் நாடுகளின் மொழிகளைக்கற்கவில்லை என்பது எஸ்.பொ.வின் மற்றைய குற்றச்சாட்டாகும் மொழியைக் கற்பது கற்காமல் விடுவதற்கான காரணிகளைக் காணவேண்டும் இவை திட்டமிட்டோ தனிமனிதர்களின் ஊக்கமின்மையாலோ நடைபெறவில்லை. ஐரோப்பிய நாடுகட்கு அதிகளாக வந்த தமிழர்களின் நோக்கம் முதன்மையாய் பொருளாதார நோக்கமாக இருந்தது அரசியல் அகதி என்பது ஒரு கூறப்பட்ட காரணியாகவே இருந்தது இந்த நாடுகளில் இவர்கள் எப்போதும் போ, போ என்று துரத்தப்படும் நிலையில் இருந்தனர். அகதிவழக்கு நிராகரிக்கபட்டு வதிவிட விசா நிரந்திரமாக இல்லாத நிலை என்பன நிலவியபோது ஆரம்பத்தில் உழைக்க முடிந்ததை உழைத்துக்கொண்டு செல்வதே நோக்கமாக இருந்தது. மேலும் பெருமளவு தமிழர்கள் பயிற்சிப்படாத மொழியறிவு தேவைப்படாத தொழில்களையே செய்தனர். கொழிற்சாலைகள்,துப்பரவுத்தொழில் இரவு விடுதிகள், உணவுச் சாலைகளில்தான், தொழில்களைச் செய்தனர். இரவு என்பனவற்றிலேயே ஈடுபட்டு இருந்தனர். தொழில்துறை வளர்ச்சியடைந்த மேற்கு நாடுகளில் உயர் மொழில் நுட்பம் தொழிலாளர்களின் வேலையை இலகுவாக்கியதுடன் உரையாடலுக்கான தேவையைக் குறைந்தது. படிப்பு மொழியறிவு என்பன பயிற்றப்படாத தொழில்களைச் செய்யும் தொழிலாளர்கட்கு கட்டாயமாக இராதபடியால் புகலிட நாடுகளில் அந்தநாட்டு மொழிகள் பயில்வதில் ஆர்வம் நிலவலில்லை. மனித நடத்தைக்கான காரணிகளைப் பகுத்தறிய முடியாதவர்கள் குற்றச்சாட்களை நிரைப்படுத்துகிறார்கள். கடின உழைப்பு, கடும்குடி, விரைவாக நோயுறுதல், சொத்துச் சேர்த்தல் இவைகட்கு தமிழ்க்குடியேறிகள் ஆட்டபட்டுப் போனார்கள் பலவித மனப்பாதிப்புக்கு ஆட்பட்டார்கள். தம் சொந்தநாட்டின் கடந்தகாலத்திய வாழ்வை நினைத்து ஏங்கிச் சாகும்நிகழ்வுகளும் இடம்பெற்றது. இலங்கையை விட்டுப்புறப்படும் வரை தமிழ் இலக்கியத்தைக் கற்காதவர்கள் இங்கு வந்தபின்னரே இலக்கியத்தைக் கண்டறிந்தததாகவும் எஸ்.பொவின் அடுத்த கண்டனம் வருகிறது. மேற்நாட்டுகட்கு வந்தவர்கள் பெரும்பாண்மையினர் வீடு வளவுகளை ஈடு வைத்து, நகை; நட்டுக்களை விற்றுச்சுட்டு, வட்டிக்கெடுத்துத்தான் வெளிநாட்டுக்கு வந்தவர்கள். வந்த முதல் சில வருடம்கள் கடுமையாக உழைத்து பட்ட கடன்களைக்கட்டி விடுவளவு, நகைகளை மீட்டு பொருளாதாரச் சுமைகளை அகற்றிய பின்பே இவர்கட்கு ஏதாவது படிக்க நூல்களை வாசிக்க ஒரளவு வாய்ப்பும் உளவியலும் நேரமும் வாய்ந்தது. தொழிலாளர் பாதுகாப்;புச்சட்டங்களை அறியாமல் நீண்டநேரம் உழைததார்கள். விடுமுறை எடுக்காமலும், வருடாந்த சுற்றுலாவுக்குப் போகாமலும் அவர்கள் உழைத்தார்கள். இரண்டு வேலை செய்தார்கள். பொருளாதாரத்தின் முக்கிய தேவையின் நிறைவேறிய பின்பே இவர்கள் இலக்கியம், அரசியல்; முயற்சிகளிலும் சிறுபத்திரிகைகள், கவிதை சிறுகதை விமாசன முயற்சிகளிலும் இறங்கினார்கள். பல திசைகளிலும் இவை சார்ந்த தேடல்களின் ஈடுபட்டனர். இலக்கிய முயற்சிகளில் ஈடுபடவும் நுகரவும் ஓய்வும் வாழ்வியல் தேவைகள் குறிப்பிடத்தக்க அளவில் நிறைவேற்றப்பட்ட சூழலும் தேவைப்படும். இங்கு இலங்கையில் இலக்கிய முயற்சிகளில் ஈடுபடாதவர்கள் அப்படி ஈடுபடாமைக்ககான காரணமாக வயது சூழல் ஆகியவைகள் கொண்டிராதவர்கள் புகலிட நாடுகளில் தம் சொந்த வாழ்வியல் அனுபவங்கள் எழுத வேண்டிய தேவை எழுந்தது கவிதையும், சிறுகதைகளும், கட்டுரைகளும், விமர்சனங்களும் சிறுபத்திரிகைகளும் அப்போதே தோன்றின இவர்கள் முன்பு இலங்கையில் இலக்கியவாதிகளாக, சிறுகதை எழுத்தாளர்களாக அரசியலை, இலக்கிய கட்டுரைகளை கண்டறிந்தோராக இல்லாத காரணத்தால் பெரும்பாலும் புகலிட அனுபவங்களை அவர்கள் எழுத்தாக்கினர். தமது சொந்த இலங்கை நிளைவுகட்கு வடிவம் தந்தனர் “புகலிட நாடுகளில் அரசியில், இலக்கியம் பேசும் முக்கியமானவர்களைகூட பிற்காலத்தில் வாசிப்பைக் கைவிட்டார்கள். ஆசைக்கு நூல்களை வாங்கி அடுக்குவதும் பலர் சொந்த நூல்நிலையங்களை கொண்டிருந்தபோதும் வாசிப்பு என்பது கிட்டத்தட்ட இல்லை என்றாகியது. சிறு பத்திரிகைகள் கடின உழைப்பில் சில தனிப்பட்டவர்களின் பொருட்செலவில் வெளியிடப்பட்டபோது அவை கரிசனையோடு படிக்கப்படுவதில்லை. அரசியல் கலைச்சொற்கள் பொருளாதாரம், சமூகம் சார்ந்த சொற்பிரயோகங்கள் உடைய கட்டுரைகள் அச்சொற்களோடு பரீட்சயமின்மையால் ஒதுக்கப்பட்டன. கட்டுரைகள் சிறிதாக எழுதப்பட்டல் வேண்டும் என்று கருதிய சிறுசஞ்நிகைக் குணமானது இவர்களின் வாசிப்புப் பஞ்சியும் பரந்தவிடயதானம்களை கிரகிக்க முடியாத தேடல் மட்டமும் நிலவியது. முன்பு தீவிரமாக கதை, கவிதை, கட்டுரை எழுதியவர்கள் எல்லாம் வரட்சிகண்டு ஒதுங்குகிறார்கள். சோபாசக்தி, நிருபா, கருணாகரமூர்த்தி போன்றவர்களே எழுதுகிறார்கள் சிறுகதை மற்றும் இலக்கியத்துறைப் பலவிதகுழு நிலைப்போக்குகளும் முதலாளிய கருத்தோட்டச் செல்வாக்கும் தனிமனிதர்கட்கு எதிராக துண்டுபிரசுரம் விடுவது என்றவகையில் தனிமனித ரீதியாக சிந்தனை விகாரமடைந்துவிட்டனர். அரசியல், இலக்கியப்பிரச்சினை விளங்குமளவு வாசிப்பு இல்லாதொழிந்து அரசியல், இலக்கிய நபர்கள் சலிப்பும், தோல்வியுணர்வும் ஆதீதமான மனித வெறுப்பம் படைத்தவர்களாக ஆகிவிட்டனர். தனிமனிதர்களிடையே ஒயாத கலகங்களை கருத்துகட்கு வெளியே மூட்டுபவர்களாவிட்டனர். புகலிடத் தமிழர்களி;ன் வாழ்வு பற்றிய ஒரு நூல்கூட இன்னமும் எழுதப்படவில்லை. எழுதக்கூடிய பெரும்பிரச்சினைகள் தம்மை எழுத்தாக்குபவருக்காக காவல் உள்ளன. எஸ்.பொ.வுக்கும் இந்த புகலிடச்சூழலின் மூலம் பிரச்சனைகளை நாடிச் செல்ல முடியவில்;லை. அவர் தன்னைமட்டுமே நிறுவும் வலதுசாரித் தனிமனித ஆசைக்கு மிச்சமானாh.; தனது மேதமை பற்றிய மயக்கம் சுயகாதல் நிலையால் பாதிக்கபட்டே மற்றபவர்கள் எல்லாம் சக்கட்டை என்று நிரூபிக்க முயற்சித்தார். கொலண்டில் நடந்த கூட்டமொன்றில தன்னிடம் “முற்போக்கு இலக்கியம்” பற்றிக் கேட்டகேள்விக்காக ஆத்திரப்பட்டு நின்ற எஸ்.பொ. “முற்போக்கு இலக்கியம் பற்றி பேசுவது அர்த்தமற்றது ஈழவிடுதலைப்போரட்டத்திலிருந்து ஒதுங்கி அரசு இராணுவத்துக்கு எதிராக மூச்சுவிடாது பதவிகள் சம்பாதித்தல் இலக்கிய ஊழியமல்ல என்கிறார். முதலாவதாக இது முற்போக்கு இலக்கியத்துக்கான பதிலல்ல. ஆட்டுக்குள் மாட்டைவிடுவது ஆகிறது எஸ்.பொ முற்போக்கு இலக்கியம் பற்றிப்பேசுவது அர்த்தமற்றது என்றால் நற்போக்கு இலக்கியம் பற்றி பேசுவதுதான் அர்த்தமுள்ளதா? முற்போக்கு இலக்கியவாதிகள் பொரும்பகுதி இடதுசாரிகள் என்பதால் புலிப்பாசித்தை ஆதிரிக்க என்ன தேவையிருக்கிறது? இலங்கை இரானுவத்தால் விடுவக்கப்பட்ட பகுதிகளில் வாழ்கிறார்கள் என்றால் என்ன பொருள்? புலிபாசிப்பயங்கரவாதம் எழுத்துக்கு கழுத்தறுப்புச் செய்வதால்தானே எழுதுவோர் எல்லாம் புலிப்பாசிசத்தை விட இலங்கை அரசு பரவாயில்லை என்று தப்பியோடுகிறார்கள். சிங்கள இராச்சியத்துக்கு எதிராக மூச்சுவிடாது வாழ்கிறார்கள் என்கிறாரே எஸ்.பொ புலிப்பாசிஸ்களின் தமிழ் இராணுவத்துக்கு எதிராக கதைக்க இவருக்கு துணிவு இருக்கிறதா? புலிப்பாசிஸ்டுகளை விட்டுவிட்டு பாதிக்கப்பட்ட இடதுசாரிகளை எஸ்.பொ. சாடுகிறார் புலிப்பகுதிக்குவந்து தமது அவாகளிடம் நம் கழுத்தை அறுக்கதரும்படி கேட்கிறாரா? சிங்கள் இராச்சித்துக்கு எதிராக மூச்சுவிடாது வாழ்கிறார்கள். என்கிறாNர் ஏன் எஸ்.பொ அவுஸ்ரேலியா வரை ஓடிப்போனார் வன்னியில் வாழ்ந்து ஏன் புலிகளின் கீழ் தமிழ்தத்துவைத்தை தரிசிக்கத்தவறினார். புதுவை இரத்தினதுரை, போல் புலிக்கு கூலிக்கு எழுத வேண்டுமா? அற்பமனிதரான தேசித்தலைவரைப்பாடி சைக்கிள் பரிசு வாங்க வேண்டுமா? ஏன் முற்போக்கு இலக்கியவாதிகளை புலிகட்கு அடிமையாக வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார்? தான் முதலில் சிறந்த தமிழீழ தேசபக்தராக வன்னியில் வாழ்ந்து காட்டட்டும், எஸ்.பொ அவுஸ்ரேலியா போகாமல் இருந்திருந்தால் வன்னியிலா இருந்திருபார்? கட்டாயம் கொழும்பில்தான் குடியேயிருப்பார். இந்த உலகிலேயே தமிழ்ஈழம்தான் தமிழனுக்கு சிறப்பான இடம் என்றால் மாவீரனின் தந்தையான எஸ்.பொ இன்னமும் அவுஸ்ரேலியாவில் உட்கார்ந்து என்ன செய்துகொண்டு இருக்கிறார். தங்கமாமனித்; தமிழ்ஈழத்திற்கு போய் இறங்கி சுதந்திரத்தை எல்லையில்லாமல் அனுபவிக்கலாமே. தான் பாரிஸ் வந்தபோது அம்மா, உயிர்நிழல் என்பன தன்னைத்;தாக்கி எழுதின என்று அவர் கூறும்போது அவர்கள் என்ன விமாசனம் வைத்தார்கள் என்று குறிக்கவில்லை. பாரிஸ் சிறு சஞ்சிகைகள் பற்றிக்குறிப்பிடும்போது எக்சில் பெரும் பொருட்செலவில் வெளிவருகிறது. என்கிறார். எக்சில் மட்டுமல்ல உயிர்நிழல், அசை, அம்மா, சமர், சகல சிறுசஞ்சிககைளும் பெரும் நேரச்செலவுகளையும் பகுதியாய் பொருட்செலவுகளையும் தாண்டியே வந்தன. சில தனிமனிதர்கள் இதைப்பொறுப்பெடுத்தனர். ஆனால் எஸ்.பொ எக்சில் தன்னை விமர்சிக்காத நற்பண்புக்காகவும் அவரின் மருகர் கலாமோகனின் பார்வையை அவர் பெற்றுக்கொண்டமையாலும் பாரிசின் சிறுபத்திரிகைகிடையேயான சச்சரவுகளில் அவர் நுழைந்து கொள்கிறார். சோபாசக்தி தன்மேல் விமர்சனம் வைத்தமைக்கு பதிலெழுத வந்த எஸ்.பொ. புனித பைபிளில் இருந்து உதாரணம் தேடப்போய் “நாய், பன்றி, முத்து, பரிசுத்தம், போன்ற சொற்களைதுணைக்கு வரவழைத்து திட்டத் தொடங்குகிறான் ஏன் அவருக்கு பைபிளில் இருந்து ஆன்மீக அருட்செய்திகள் கிட்டவில்லை. காந்தியமும் அறமும் பேசும் எஸ்.பொ ஏன் பைபிளில் இருந்து. “உங்கள் பகைவரை, நேசியுங்கள் உங்களைச் சபிப்பவர்கட்கு நீங்கள் ஆசி கூறுங்கள். உங்களை வெறுப்பவர்கட்கு நன்மையே செய்யுங்கள். உங்களை அவமதித்து அடக்கிக்கொடுமைப்படுத்துபவர்கட்காக நீங்கள் பிரார்த்தனை; செய்யுங்கள்” என்ற அறிவுரைகளைத் தேர்ந்து கொள்ளவில்லை? காந்தி, யேசு, அகிம்சை என்று நடைபோடும் எஸ்.பொ. ஏன் வள்ளுவர் வழியிலாவது இன்னா செய்யதாரை ஒறுக்க முடியவில்லை? சகலதையுமம் துறந்த ஆன்மீக மனிதரைப்போல் துறவுபூண்டவர்போல் எழுத்துக்களில் சாத்வீகம் பொழிபவர் சோபசக்தியின் ஒரு சிறு விமர்சன்த்துக்கு எண்ணைக் கொப்பறை போல் ஏன் கொதிக்கிறார். அகிம்சையை நம்பி ஆன்மாவைத் தூய்மையாக்கிய எஸ்.பொ பழியொடுக்கவல்லா அலைகிறார். வானத்தில் போன பிசாசை ஏணி வைத்து இறக்கியதுபோல்” என்று எஸ்.பொ வுடனான போட்டி குறித்து சோபாசக்தி குறிப்பிட்டது. சரியிலும் மிகச்சரியாகும். இந்து மதவாதிகளை பெருமைப்படுத்துபவர் ஏன், மனம், வாக்கு, காயம் இவைகளை அடக்குவதில்லை. உடலும் உள்ளமும் சார்;ந்த தவத்துக்கு எஸ்.பொ ஏன் செயல்வதில்லை. தவம் பற்றிஅ டிக்ககடி எழுதுபவரிடம் தனக்கு மாற்றாக ஒரு சிறு விமர்சனத்தை கூடத்தாங்கும் மனப்பக்குவம் இல்லை. தான் எப்படி பிறரைத்தூசித்து அநாகரீகமாக எழுதுகின்றேன் என்ற விடயம் அவருக்கு புலனாவதில்லை.. கெட்டவன் நடேசன் துட்டான கைமுனுவை மக்கள் துட்டகைமுனு ஆக்கியதுபோல் யாழ்ப்பாண மக்கள் கெட்டவனான நடேசனை கெட்டவன் நடேசன் ஆக்கினார்கள். ஏழைகள், பலமற்றவர்கள், ஒடுக்கப்பட்ட சாதிமக்களை ஒடுக்கியவன்தான் கெட்டவன் நடேசன், ஆரியகுளம் சண்டியனான பொன்சராசாவின் முக்கிய அடியாட்களில் கெட்டவன் நடேசன், மணியம் என்போர் அடங்குவார்கள். அத்தகைய தகுதிபடைத்த கெட்டவன் நடேசன் எஸ்.பொ.வுக்கு இளமைக்கால் நண்பன். நெருக்கிய தோஸ்த்து. எஸ்.பொ அடிபிடிகட்கு அவனையே கூட்டிச்செல்கிறார் அவனைப் புகழ்ந்து அவரது வரலாற்றில வாழ்தலில் எழுதப்படுகிறது. அவனை சகலவிதமான நல்லது கெட்டதுகளுடனும் பலம், பலவீனம்களுடனும் காண்பிக்கவில்லை மாறாக அவனது காடைத்தனம், அட்டூழியம் நியாயப்படு;த்தப்படுகிறது. பிழைகள் சரியொன்று வாதாடப்படுகிறது எஸ்.பொவைப் பொறுத்து அவன் உத்தமமான மனிசன் அவரை ஆபத்தில் காக்கும் தோழன் மக்களுக்கு மற்றவர்களட்கு அவன் என்ன கொடுமை செய்தான். யார் யாரிடம் ஏவல் பேயாய் செயற்பட்டடான். என்பதெல்லாம் அவருக்கு பொருட்டல்;ல அவன் எப்படி இவ்வாறு ஆனான் என்ற கேள்விகள் அவருக்கு அநாவசியமானது. கெட்டவன் நடேசன் போன்றேர் பொன்ராசாவின் கீழ் ஆட்களை அடித்துமுறிப்பது, கையுக்கு இவ்வளவு. காலுக்கு இவ்வளவு என்று கூலிபேசி சண்டித்தனம் செய்து வாழ்ந்த கூட்டமாகும். பெண்களைக் கடத்துவது, ஆட்களைக்கடத்துவது, வாடகை வீடுகளில் இருந்து எழும்பமறுப்பவர்களை, வீடு புகுந்து அடித்து உடைந்து வெளியேறுவது. ஆரியகுளம் சந்திச்சண்டித்தனம் என்பதுதான் இவர்களது செயற்பாடாகும். யாழ்நகரில் உள்ள தியேட்டர் உணவு விடுதிகள், கடை முதலாளிகளின் காசுக்கும் சாராயப் போத்தலுக்குமாக இவர்கள் இயங்கியவர்கள். யாழ்ப்பாணம் நகர்மயமாகத் தொடங்கியபோது சாதிசார்நத தொழிலில் இருந்து பெருமளவு ஒடுக்கப்பட்ட சாதி மக்கள் வெளியேறத் தொடக்கினர். கராச்வேலை. சாரதி தச்சுவேலை, கம்மாலைவேலை, முட்டாள்வேலை எனப்படும் கட்டடத்தொழிலில் வேலை, சிறுவியாபரம் என்பவைகளில் ஈடு;பட்;டமையின் மூலம் இவர்கள் சாதியை தகர்க்கத் தொடங்கியிருந்தனர். இத்தகைய உடல் உழைப்புகுக்குச் செல்லாத சிறுபிரிவு சமுதாய உதிரிகiளாகவும் சண்டியர்களாகவும், சமூகவிரோதிகளாகவும் மாறினார்கள். இத்தகையவர்களில் ஒருவரே கெட்டவன் நடேசனாகும். இவர்கள் உழைப்பில் ஈடுபடாது. சமுதாய ஒட்டுண்ணிகளாக உழைக்கும் மக்கள் தொழிலாளர்களின் எதிரிகளாக இருந்தனர். சொந்த ஒடுக்கப்பட்ட மக்களையும் அதட்டி உறுக்கிப் பணியவைத்தார்கள் சந்திக்கட்டு உயர்த்திக்கட்டிமைக்காகவே சேட்கையை உயர மடித்துவிட்டுக்கொண்டு சென்றமைக்காக்கூட இவர்கள் யாரையும் அடிப்பார்கள். பல்லை, மூக்கை உடைப்பார்கள். பொருளாதார ரீதியாக துன்புறம் மக்களிடம் கப்பம் வாங்கி பாவப்பட்டசனம்களிடம தட்டிச் சுத்தி வாழ்ந்தவர்கள் இவர்கள். பொன்ராசா பொலிசுக்கு காசுகட்டி வந்ததுடன், பொலிஸ் செல்வாக்கும் இருந்தது. பொலிசுக்கும் இத்தகைய சண்டியர்கள் தேவைப்பட்டதுடன், சண்டியர்களும் பொலிஸ் பிடிக்காமல் இருக்கவும் பிடித்தால் உடன் வெளியே எடுக்கவும் காசு பொலிசுக்கு கிடைத்தது. எஸ்.பொ தான் எழுதும்போது பொன்ராசாவுக்கு கெட்டவன் நடேசனுக்குமுள்ள தொடர்பை எழுதும்போது பொன்ராசவுக்கும் கெட்டவன் நடேசனுக்குமுள்ள தொடர்பை எழுதாததின், மூலம் பொன்ராசாவுக்கு சனம்களிடம் இருந்த கெட்ட பெயரின் பாதிப்பு பொன் ராசாவுக்கு தான் சொந்தம்உறவு என்ற விபரத்தைகூட எஸ்.பொ தவிர்த்து விட்டார். கெட்டவன் நடேசன் ஒரு வீரத்தியாகி மட்டத்துக்கு எழுத்து ஆராதனை செய்துள்ள எஸ்.பொ அவன் ஒரு மீன்பிடிச்சமூகப் பெண்ணை மானபங்கப்படுத்தியதுடன் மீன்பிடிச் சமூகமக்களுடன் ஒரு சாதிச்சண்டையை மூட்டிவிட்டதை அவர் கண்டிக்கக்கூட இல்லை. இதை மிகவும் எளிமையான விடயமாக எழுத்துக்கொள்கிறார். 1970கட்கு முன்பும், பின்புமாக பலதடவை கரையூர் மீன்பிடிச்சமூகத்திற்கும் யாழ் நகர நளவர்சமூக மக்களிடையேயும் பெரும் சாதிக்கலவரம்கள் நடந்தன. கரையார் என் அழைக்கப்படும் மக்கள் கரையூர் சார்ந்த ஒரு பிரதேசத்திலேயே ஒன்றாக அடர்த்தியாக வாழ்ந்தனர். ஆனால் நளவர் சமூக மக்கள் அவர்கள் வாழ்;ந்த கரையூரைச் சுற்றி வாழ்ந்தனர். ஆரியகுளம், மறுவகுளம், தேவரீர் குளம் உட்பட யாழ்நகரப்பகுதியில் பரவிவாழ்ந்தனர். எனவே நளவர் சமூக மக்களுக்கு எதிராக கரையூரில் வாழ்ந்த மீன்பிடிச்சமூகமக்களால் எதுவும் செய்யமுடியவில்லை. அவர்களால் யாழ்நகரில் உள்ள கடைகள், ஆஸ்பத்திரி, டிஸ்பொன்ஸசரி, சந்தை, சினிமா என்பவற்றைக்கு போகமுடியில்லை. தமது மீன்களை அவர்களால் சந்தையில் விற்கமுடியவில்லை. அவர்கள் எங்கும் தாக்கப்பட்டனர். கரையூர் மக்கள் பெரும்பகுதி எம்.ஐp.ஆர் ரசிகர்கள் அவர்களால் எம்.ஐp.ஆர் படம் வந்தால் தியோடர்கள் ஹவுஸ் புல் ஆக்குபவரில் அவர்களால் நோயளிகளைக்கூட ஆஸ்பத்திரிக்குகொண்டு போகமுடியவில்லை. உணவுப்பொருட்களையும் அவசியமான மருந்துகளையும் வாங்க முடியாதிருந்தது. இரு பகுதியும் சண்டைகளில் வாள், கத்தி, கோடாரி, நாட்டு வெடிகுண்டு துவக்கு என்பனவற்றைப் பாவித்தனர். கலவரங்களில் பொலிஸ் இருபகுதிக்கு மத்தியில் நிறுத்தப்படும். கொலைகள், வெட்டுக்குத்துகள் மாறிமாறி நடந்தன. கரையூர் மீன்பிடி மக்கள் கல்வி, பொருளாதாரம், என்பவற்றில் குறிப்பிடத்தக்க பலத்தைக் கொண்டு இருந்தனர். கிறிஸ்தவ பாதிரிகள் இருபக்கமும் சமரசம் ஏற்படுத்த முயற்சித்தாய் சொல்லிபோதும் அவர்கள் கிறிஸ்தவர்களான மீன்பிடிமக்கள் பக்கமே நின்றனர். எல்.எல்.எஸ்.பிவிசுவநாதன் எம்.சி.சுப்பிரமணியம் போன்ற இடதுசாரிகளே இப்பிரச்சினைகளைத் தீர்க்க மனப்பூர்மாக நின்றனர். தமிழரசுக்கட்சி, தமிழ்காங்கிரஸ் போன்றவற்றுக்கு இவர்களிடையே வாக்குகள் பெருமளவு இன்மையால் உரிய அக்கறைபடவில்லை. சாதிச்சண்டை என்று பெயரிட்டுவிட்டு நின்றனர். துரையப்பா இருபகுதி ஆதரவையும் இழக்கவிரும்பாது சமரசத்தில் ஈடுபட்டார். நளவர் சமூகத்திற்கு வேளாளர் பகுதிக் சண்டியர்களும் ஆதரவு கொடுத்தனர். வடமராட்சிப்பகுதியில் உள்ள வேளாளச் சண்டியர்களான சம்பந்தர் போன்றவர்கள் வந்து ஆதரவு கொடுத்தனர். தமக்குப் போட்டியாக இருந்த கரையார் சமூகத்தை கல்வி, உத்தியோகத்தில் போட்டியாக விளக்கியவர்களை உயர்வர்க்க வேளாள சமூகம் தட்டி வைக்கவிரும்பியது 1970களின் தொடக்கதில் இவர்களிடையே ஏற்பட்ட மோதலைத்தீர்க்க அரசாங்கம் எஸ்.பி.சுந்தரலிகங்கத்தை நியமித்து இருந்தது. அவர் இருபகுதிச் சமூகங்களையும் அழைத்து ஒரு சமாதான மாநட்டைச் கூட்டினார். அதில் இருபகுதியும் சமாதானமாகாவிட்டால் இனிச்சண்டை நடந்தால் அக்கராயன்குளத்தில் உள்ள சேகுவாராக்காரர்களோடு ஒன்றாக முகாமில் சேர்த்து அடைத்துவிடுவேன் என்று வெருட்டினர். அக்காலத்தில் ஆயிரக்கணக்கான சிங்கள இளைஞர்களை 1971 ஏப்ரல் கிளர்ச்சியில் ஈடுபட்டதாகக்குற்றம் சாட்டப்பட்டு கிளிநொச்சித் தொகுதியில் உள்ள அக்காரயன்குளம் புனர்வாழ்வு முகாமில் அடைத்து வைக்கப்பட்டு இருந்தனர். எஸ்.பி.சுந்திரலிங்கம் உண்மையில் அக்காரயன்குளத்தில் கொண்டுபோய் அடைக்கும் அதிகாரம் எதுவும் இல்லாதபோதும் அக்காலத்தில் பொலிஸ் அதிகாரப் போக்குகட்டு இது ஒரு அடையாளமாகும். இப்படிப்பல வருடங்கள் இடைவிடாது நடந்த சாதியச்சண்டைகளின் ஆபத்தான காலகட்டதில்தான் கரையூரைத்சேர்ந்த சந்தையில் மீன்விற்கும் பெண் ஒருத்தியை அவளை யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரியடியில் மறித்து அவளின் தலையில் இருந்த மீன்கடகத்தைக் தட்டிவிட்டு இந்த றோட்டடிலை ஆட்களுக்கு முன்னாலே சீலையை உரிந்து மானபங்கப்படுத்திப்போட்டுவிடுவன் என்று அவள் மார்பை கையால் நசித்தபடி கெட்டவன் நடேசன் கூறியதையும் எஸ்.பொ எழுதுகிறார். ஒரு ஆணால் பலர் முன்னிலையில் இப்படி அவமானப்பட்டுத்தப்பட்ட ஒரு ஏழையான மீன் விற்கும் பெண்மேல் எஸ்.பொவுக்கு கொஞ்ச இரக்கமும் இல்லை. மாறாக அவளை அல்லிராணியென்று பெயரிட்டு அழைத்தின் மூலம் கெட்டவன் நடேசனின் செயலுக்கான நியாயத்தை அவர் வழங்கிவிடுகிறார். பெண்களின் வாயை அடக்க அவர்களை பாலியல் ரீதியாக மானம் கெடுக்கும் மரபான ஆண்களில் செயலை எஸ்.பொவும் எதிர்ப்பின்றி ஏற்றுக்கொள்கிறார். ஒரு சமூகம் சார்ந்த படைப்பாளிக்கு தனது சாதிசனம், நட்பு என்பவைகளை மீறிய மனிதக்கோலம் ஏற்பட்டு இருக்கவேண்டும் ஒரு உயர்சாதி செல்வந்தப் பெண்ணை ஏன் கயை+ரைச்சேர்ந்த கல்வியாளனையும் அரச உத்தியோகமும் கொண்ட ஒரு மீனவசாதிப் பெண்களைக்கூட கெட்டவன் நடேசன் இப்படிச்செய்யமாட்டான் அப்படிச் செய்திருத்தால் பொலிசை வைத்து கை, கால் முறிப்பித்து கைகால் வழங்காமல் செய்திருப்பார்கள். அல்லது ஆள்வைத்து சுடுவித்து இருப்பார்கள். இவன்போன்ற சண்டியர்களின் இலக்காக ஏழைகளே இருந்தனர். கெட்டவன் நடேசனின் பொறுப்புக்கெட்ட போக்கால் ஒரு சாதிக்கலவரம் தூண்டி கரையூர் மக்கள் கிளர்ந்தமை எல்லாம் எஸ்.பொ.வுக்கு அற்பமான விடயங்கள். அது பற்றி அவர் எழுத்துக்கு அக்கரையில்லை. அவர் கெட்டவன் நடேசனின் வீரத்தையல்லவா சுற்றிச்சுற்றி எழுதுகிறார். அவமானப்படுத்தப்பட்ட அந்த சந்தையில் மீன்விற்கும் பெண்பற்றி எந்த இரக்கமும் காட்டப்படவில்லை. அக்காலச் சந்தைகளில் ஆண்களைவிட பெண்களே அதிகமாக மீன், மரக்கறி என்பவற்றை விற்பார்கள். இதில் ஒடுக்கப்பட்ட சாதிகளைச்சோந்த பெண்கள் அதிகமாக இருப்பார்கள். இதில் மீன்விற்கும் பெண்கள் பொருளாதார ரீதியாக வாய்பபுக்குறைவான மக்கள் பிரிவுக்குரியவராக கல்வியறிவு குறைந்தவர்களாக தாறுமாறாக உடையணிந்தவர்களாக வெற்றிலை போடுபவர்களாக பெண்களுக்குரிய அழகு, ஆடம்பரம்களில்; புலனைவிடாதவர்களாக இருப்பார்கள். கடின உழைப்பு, அதிக பிள்ளைகள் உடையவர்களாக அதிகம் பேசுபவர்களாக, வெட்கப்படாதபவர்களாக இருப்பார். ஒரு கதைக்கு நூறுகதை சொல்வார்கள். அவர்களிடம் பேசி வெல்ல முடியாது. அது அவர்களின் சிறு வருமானம் தரும் தொழிலில் சந்தை வியாபாரத்தில் கடுமையான போட்டியிருக்கும். இந்தச்சிறு வியாபரத்தில் உற்பத்தியாளர்களுக்கும் நுகர்வோருக்கும் இடையே தம் பங்கைப்பெற கடுமையாய் போராட வேண்டியிருக்கும். பொறாமை, ஆத்திரம், போட்டிநிலை வியாபாரிகளிடையே நிலவும் நிறைய வாயடித்து. பொய்பேசித்தான் வியாபாரம் நடக்கும். உள்ள கோயில், மாதாகோயில் எல்லாவற்றையும் இழுத்து தன்ரை பிள்ளையைக் கொண்டு சத்தியம் பண்ணி உன்னானை, என்னானை என்று பல பத்துச்சத்தியம் பண்ணித்தான் வியாபரம் நடக்கும். சந்தையில் நிறைய இவர்கள் தூசணம் பேசுவார்கள். ஆண், பெண், சாதி, சமயம் என்று பாராமல் வசை பொழிவார்கள். மீன்வாங்க வருபவர்கள் விலை கேட்பார்கள், பேரம் பேசுவார்கள், சண்டைகள் வரும், இவை அப்போ சாதாரணமாக எல்லாச்சந்தைகட்கும் உரியதாக இருந்தது. மீன்காரிகள் பிள்ளை, புருசன், கடவுள் சகலதையும் சொல்லி சத்தியம் பண்ணாமல் விற்பனை செய்யமாட்டாள் பெத்த பிள்ளையறிய நான் பொய் சொன்னால் என் தலையில் இடிவிழும் என்பார்கள். மீன்விற்கும் பெண்களின் கணவர் கடற்தொழில் புரிபவராக இருப்பார்கள். இதன் மூலம் போதிய வருமானம் ஈட்ட முடியாதபோதுதான் அனேகமான பெண்கள் சந்தைக்கு மீன்விற்க வருவார்கள். இவர்கள் பெரும்பாலும் கடற்கரையில் மீன்பிடியாளர்களிடம் கூறாக விலைக்கு வாங்கி கடங்களில் தலையில் சுமந்து வந்து சந்தையில் கூறுபோட்டு விற்பார்கள். அதிகளவு மீன் கடலில்படும் நாட்களில் மீன் விலை இறங்கிவடும். மாலையிலும் புதுமீன் சில இடம்களில் வருவதால் காலையில் எடுத்த மீனை விற்க முடியாது. வாங்கிய விலைக்குகூட விற்கமுடியாது. எனவே இவர்கள் எரிச்சலும், ஆற்றாமையும் உடையபவர்களாக இருப்பார்கள். பல பெண்கள், கள்ளு, சாரயம்கூடப் குடிப்பார்கள். குளிர்சாதனப்படுத்தும் வசதியறியாத காலமது, அது ஏழைகள் கால் இறாத்தல,; அரைக்கால் இறாந்தல் சீனி, காப்போத்தல் அரைக்கால்ப்போத்தல் மண்எண்ணை வாங்கும் காலம். 5சதம் 10 சதத்துக்கு மிளகாய், வெங்காயம், காய்பிஞ்சு வாங்கும் காலமது இந்தப் பெண்கள் தம் உழைப்புக்கேற்ற வருமானத்தை ஈட்ட முடியாதவர்களாக இருப்பர். கெட்டவன் நடேசன் போன்ற தட்டிச்சுத்தி சிவிப்பவர்கட்கு உழகை;கும் மக்களின் கடினம் தெரியாது உத்தியோகம் செய்த எஸ்.பொவுக்கு இந்த வகையில் பெண்கள் எரிச்சலூட்டுபவர்களாகவே இருந்திருப்பர். சிங்கப்பூர் பென்சாரியான உயர்சாதிப் பெண் ஒரு ஒடுக்கப்பட்ட சாதி இளைஞனை காதலித்து அவனோடு ஒடியபோது பொன்ராசாவின் கட்டளைப்படி கெட்டவன் நடேசன் அந்தப்பெண்ணை மீண்டும் தேடிப்பிடித்துக் கடத்தி வந்து தகப்பனிடம் ஒப்படைத்;தமை கெட்டவன் நடேசனுக்கு எந்த ஒடுக்கப்ட்ட சாதி மக்களின் மேலான அனுதாபமும் இருக்கவில்லை என்பதற்கு அடையாளம் இது காசுபெறும் கைக்கூலியின் செயலாகும். எஸ்.பொ இதை இந்த விடத்தில் சாதி, காசு என்பன சம்பந்தப்பட்டுள்ளதை குறிப்பிடாமலே கெட்டித்தனமாகவே எழுதியுள்ளார். 2-3 பெண்டாட்டி வச்சிருக்காதவன் ஒரு சண்டியனோ, என ஒரு முறை தன்னை கெட்டவன் நடேசன் கேட்டதாய் எஸ்.பொ கூறும்போது அக்காலச் சண்டியர்களை பெண்கள் சமுதாயத்தில் பெற்றிருந்த இடம்களை விளக்க அவர் முயலவில்லை. அக்காலச் சண்டியர்கள் பெண்களை வெருட்டிதமக்கு சட்டபூர்வமற்ற மனைவியராக வைத்திருப்பதும் வழக்கமாக இருந்தது எனில் பெண்களின் கையறுநிலையை விளங்க முடியும். கெட்டவன் நடேசனின் அநியாயம் தாங்க முடியாமல் அவன் மனைவி கிணற்றில் பாய்ந்து தற்கொலைக்கு முயற்சித்தபோது கெட்டவன் நடேசனம் கிணற்;றில் பாய்ந்து தற்கொலைக்கு முயற்சித்தபோது கெட்டவன் நடேசனும் கிணற்றில தானும் குதித்து இனிமேல் கிணற்றில் குதிக்கமாட்டேன் என்று அவள் கிணற்றுக்குள்ளேயே சத்தியம் பண்ணிய பிறகே அவள் கிணற்றுக்கு வெளியே எடுக்கப்பட்டதாக எஸ்.பொ மிகுந்த நகைச்சுவையுணர்வோடு எழுதுகிறார். இச்சம்பங்கள் கெட்டவன் நடேசனின்; மறக்கமுடியாத நினைவுகளாகவே அவருக்கு இருக்கிறது. இனிதாங்க முடியாது என்ற கடைசிக்கட்டத்தில்தான் அப்பெண் கிணத்தில் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றிருப்பாள். இப்பெண்ணின் செயலை அடிப்படையாக்கொண்டு அக்காலப் பெண்கள் குடும்பத்தில் இருந்த நிலைமையை அல்லவா எஸ்.பொ எமக்கு விளக்கியிருக்கவேண்டும். கணவன்மாரின் குடி, சித்திரவதை என்பனவும் குடும்பத்துள் வன்முறையும், மிருகத்தனமும் நிலவியது. குடும்பக்கஸ்டம்களாலும் குடியரான கணவன்மாருடன் வாழ முடியாது என்று முடிவெடுத்து பொலிடோல் முதல் அரளிவிதை, தூக்குப் போடுவது முதல் கிணற்றில் பாய்ந்து இறப்பது என அக்காலப் பெண்கள் தம் முடிவுகளைத் தேடிக்கொண்டார்கள். கிடைத்தரிய இந்த மனிதவாழ்வை ஏன் இந்தப்பெண்கள் நரகமாக்கருதி தற்;கொலைக்கு முயல்கிறார்கள். எஸ்.பொவுக்கு கெட்டவன் நடேசன் மனிசிக்கு அவன் “சவள் அடி” கொடுத்தாக இரக்கமில்லாமல் எழுதுகிறார். இந்த நூலை மட்டுமல்ல நனவிடை தேய்தலிலும் கெட்டவன் நடேசன் பற்றிய எஸ்.பொ வின் குறிப்புகள் இடம்பெற்றன. கெட்டவன் நடேசன் காராளிமுத்தையன் போன்ற சண்டியர்கள் கைலாசபதி, பிரேம்ஐp போன்றவர்களைவிட உயர்ந்தவர்கள் என்றும் எஸ்.பொ புத்தரைவிட மேலானவர் என்றும் நாம் ஒத்துக்கொண்டாக வேண்டும். இலங்கையில பெரிய சண்டியனும், கொலையாளியுமான களு அல்பேட், தமிழ்நாட்டின் ஒட்டோ சங்கர் எல்லாம் எஸ்.பொ.வைவிட மேலான வீரமறவர்கள் மாவீர மரியாதைக்குரியவர்கள் என்பதையும் ஏற்றாக வேண்டும். புலிகளும் எஸ்.பொவும் பாசிசப்புலிகள் பற்றியும் அதன் தேசியத்தலைவர் பற்றிம் எழுதும்போது மட்டும் எஸ்.பொ.வின் எழுத்துக்களுக்கு அடக்க ஒடுக்கம் வந்துவிடுகிறது. இது மாவீர்குடும்பம், தேசியத்தலைவரின் குடிமகன், தமிழ் ஈழத்தின் பிரசை என்பதால் வந்தது என்பதைவிட தனது தலை பற்றிய எல்லையற்ற கவனத்துடன் சம்பந்தப்பட்டதாகும். இவரது புத்திரனைப் புலிகள் மாவீரனாக்கியதுடன் இவரும் வன்னிவரை சென்று புலிகளால் உபசரிக்கபட்டு தேசியத்தலைவருடன் ஒன்று சேர அமர்ந்து விருந்துண்டு திரும்பியவர் என்பதால் அந்த ஆனந்தநிலை பெரும் பேறு பெற்றதான் மெய்சிலிர்ப்பும் ஏற்பட்டது என்று நாம் விளங்கிக்கொள்ளலாம். புலிகள் மீது ஒர்; மில்லகிராம் விமர்சனமோ அரசியல் கண்டனமே இவருக்கு இல்லாமல் போனதேன் என்ற கேள்விக்கு எஸ்.பொ கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில் வலுகவனமாக எழுத்தெழுத்தாக புலியைப்பற்றி எழுதியதைக்கவனிக்க முடியும். இலங்கையில் எந்தச் சாதாரண மனிதருக்கும் தெரிந்த கொஞ்சம் பிசகினாலும் புலிகள் ஆளை போட்டுத்தள்;ளிவிடுவார்கள் என்ற தமிழீழ இலட்சியத்தின் அதி உன்னத நிலையை எஸ்.பொ தெட்டதெளிவாக யாதொரு சந்தேகமின்றி புரிந்துள்ளார். அவர் தன் வாழ்வில் பூரணமாய் புரிந்துகொண்ட ஒரே விடயமும் அதுதான். வெலிக்கடையில் நடந்த தமிழர்களை மேலான கொலைகளை ஏ.ஜே. கனகரத்தினாவின் மேற்கோளுடன் குறிப்பிடும் எஸ்.பொ பாசிசப்புலிகளின் ஆயிரம், இரண்டாயிரம் என்று மனிதர்களை அடைத்து வைத்து இருக்கும் கொலை முகாம்களை சித்திரவதைக் கூடம்களுடன் ஒப்பிடுகையில் வெலிக்கடைச் சிறைப்படுகொலை ஒரு தூசியாகும். இந்த புலி முகாம்களில் நீதி விசாரணைகள் மனித உரிமைகள் இல்லாமல் தமிழர்களை தமிழர்களே கொலல்லாம் வெட்டிப்புதைக்கலாம். சித்திரவதை மூலம் உள்ப்பாதிப்புடையவர்களாக அங்கவீனர்களாக ஆக்கலாம். கொன்று எரிக்கலாம். அடிமைகளைப்போல் கட்டாய உழைப்பில் ஈடுபடுத்தலாம். அது எல்லாம் தவறு அல்ல. சிங்கள அரசு தமிழர்களைக் கொல்லக்கூடாதேதவிர புலி தமிழர்களை கொன்றழிக்கலாம். அது பேசப்பட்டாது கணக்கில் எழுத்துக்கொள்ளப்படாது அரசு செய்தால் மட்டுமே மாபெரும் மனித சங்காரமாக இனக்கொலையாக சிங்கள இனவெறியாக மாறிவிடும். புலிப்பாசிசத்துக்கு தமிழர்கள் மட்டுமல்ல முஸ்லீம்கள், சிங்களவர்கள் என்று இலங்கையின் எந்தப்பிரசையும் கொல்ல உள்ள உரிமையைத் தவறு என்று கூறமாட்டார். உதாரணமாக காத்தான்குடி பள்ளிவாசலில், வெலிக்கடைப்படுகொலையவிட பெண்கள், குழந்தைகள் உட்பட அதிகளவு முஸ்லீம்களைக் புலிகள் கொன்றார்களே அதெல்;லாம் எஸ்.பொவுக்கு கண்ணில் படாததற்காக நாம் அவரைக் குற்றம் சாட்டக்கூடாது. ஏன்எனில் அவர்தமிழ்த்துவத்தால் வழி நடத்தப்படுபவர். தேசியத்தலைவரை வழிபட்டு தமிழ்ஈழத்து இலட்சியத்துக்காக தன் வாழ்நாளை ஒட்டிவருபவர். வெலிக்கடைப்படுகொலை நிகழ்வு இன்று தமிழர்கட்கு முன்பு போல் எந்த மனக்கிளர்ச்சியையும் ஏற்படுத்துவது இல்லை. ஏனெனில் புலிகளின் தமிழ்ஈழத்தில் மட்டுமல்ல சிங்கள மக்கள் மத்தியலும் பல வெலிக்கடை கொலைகளை புலிகள் நிகழ்திவிட்டார்கள். புலிகளத்மனித அழிப்பு முகாம்கள் நிறுவி ஆட்கொல்லிகளாக பாலகர், பாலகிகளை பிடித்துச்செல்லும் கடத்தல் காரர்களாக இருக்கையில் கால் நூற்றாண்டு முன்பாக வெலிக்கடைப் படுகொலைகளை நினைத்தழ அவர்கட்கு நேரம் இல்லை. தமிழ் தேசியவாதிகள் வெலிக்கடைப் படுகொலைகளை நினைவு கூர்வதை வெறும் சடங்காக்கி அரசியல் நடத்துகிறார்கள். புலிகள் புதைத்த பிணத்தைக்கூடவிடாது துரோகி என்று கிண்டி வெளியே எடுத்து மீண்டும் டயர்போட்டு எரித்து இறந்தவர்களைக்கூட அவமானப்படுத்துவதை கண்டு வாழ்ந்து வரும் தமிழ் மக்களுக்கு தூரத்து நினைவாகிவிட்ட வெலிக்கடை கொதித்தெழவைக்காது வெலிக்கனடயில் கொல்லப்பட்டவர்கள் உயிருடன் இருந்து இருந்தால் புலிகளின் துரோகிகளாகச் செந்திருப்பார்கள். எஸ்.பொ தனது புலிகளில் இருந்து இறந்த புத்திரனைப் பேசுகிறார். புத்திரசோகத்தில் ஆழ்கிறார். ஆனால் இவரின் மாவீரனான மகன் புலியில் இருந்த சமயம் கொன்ற தமிழ் அப்பாவிமக்களின் பட்டியலை நினைக்க் மறுக்கிறார். புலிக்கொலையாளியினால் மரணமடைந்தவர்களின் தாயும், தந்தையும், மனைவியும், கணவரும், குழந்தைகளும் விடும் கண்ணீர் வைத்த ஒப்பாரி ஒலிகள் எஸ்.பொவுக்கு எட்டியிராமல் இராது. எனினும் அந்த மனிதர்களின் அழுகுரலை புலிகளுடன் சேர்ந்து எஸ்.பொவும் மறைக்கிறார். புலிகளின் மாவீரர்விழா எடுப்புகள் சமாதிகள், நினைவுச் சின்னம்கள் என்பன தமிழ் மக்களிடம் புலிகளின் ஊடகம்கள் மூலமாக பலவந்தமாய் திணிக்கப்பட்டவையாகும். மாவீரர் பற்றிய விம்பங்கள் இப்படிக்கட்டியமைக்கப்பட்வையே. புலிகளின் ஊடகப் பயங்கரவாதம் தமிழ் மக்களைக்கட்டுபடுத்துகிறது. எஸ்.பொ போன்ற மக்களுக்கு விசுவாசமற்றவர்கள் புலி அழியும்போது இவர்களும் சேர்ந்தே பொசுங்கிப் போவர்கள் ஒரு நாளில் மனிதம் மறவாத தமிழ், சிங்கள முஸ்லீம் எழுத்தாளர்கள் இன, மத பேதமின்றி ஒரு உண்மை வரலாற்றை தமிழ்ப்பாசிசத்தையும் இலங்கை அரசு வன்முறையை ஒன்று சேர்த்து ஆய்ந்து எழுவார்கள். நற்போக்கு தமிழ்நாட்டிலும், இலங்கையிலும் முற்போக்கு பற்றி தென்பிதேட்டாக ஆய்வுகளின் பாற்படாத வாய்ப்படுகள் சொல்லப்பட்டு வருகிறது. இலங்கையில் மு.பொன்னம்பலம். யேசுராசா போன்ற இரண்டு மேதைகள் தாம் நற்போக்குப்;பரம்பரையின் வழிவந்தவர்கள் என்ற காட்ட தம் சக்திக்குட்பட்ட தெல்லாம் செய்து இப்போ களைத்து ஆவி சீவன் இல்லாம் நிற்கிறார்கள். இப்போ எஸ்.பொ தனது நூலில் நற்போக்கு பற்;றி அவரால்க்கூட நம்பச்சிரமமான விபரனைகளைக் கூறியுள்ளார். “நற்போக்கு இயக்கம்” இலங்கையில் தமிழ் இலக்கியப்பரப்பைக் கட்டியவிட்டதாக கதையாடல்களைப் புனைந்துள்ளார். நாம் வரலாற்றுக்கும் உண்மை நிகழ்வுகட்கும் விசுவாசமாக இதை ஆராயவேண்டும். தமிழ்நாட்டில் பெரும் கதையாடல்களைத் தகர்கக்ப்புறபட்;டவர்கள் நற்போக்கைச் சுற்றி புதிய சிறுகதையாடல்களை; எழுப்பிவிட்டுச் சென்றுள்ளனர். தாம் ஒருபோதும் ப+ரணமாக அறிந்திராத விடயம்களையிட்டு பக்கச்சார்பான செய்திகளையும் புதிய திரிபுகளையும் உள்ளடக்கிய பார்வையை உருவாக்க முயன்றுள்ளனர். இந்த எழுத்துச் சேதிகள் வந்த போதுதான். மு.பொன்னம்பலம், எஸ்.பொ. போன்றவர்கள் நிமிர்;ந்து உட்கார்ந்து கொண்டார்கள். நற்போக்கு எதிராக தாம் முற்போக்கு நாட்டியதாக சில கற்பனைகளைப் பேசத்தொடங்கினர். இடதுசாரிகளை மையமாயக்கொண்ட முற்போக்கு இலக்கிய அமைப்புகட்கு எதிராக தமிழ் தேசியவாதிகளும் தமிழ் இலக்கியத்தின் மரபுவாதிகளின் பிரிவும் ஒன்றிணைந்தே நற்போக்கு போக்கை உருவாக்க முனைந்தனர். பிரிட்டிஸ் அரசு விசுவாசி சேர் பொன்னம்பலம் இராமநாதனின் மருமகனும், அரசியல்வாதியுமாகிய தமிழாய்வுக் கட்டுரைக் எழுதியவருமான சு.நடேசபிள்ளையே முற்போக்கு அணிக்கு எதிராக நற்போக்கு என்ற பெயரைத்தேர்ந்து கொடுத்தார் நற்போக்கு தொடக்கப்பட்டபோது பேராசியர் சதாசிவம், சு.நடேசபிள்ளை, புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை, அ.வ.இராசரத்தினம், தளையசிங்கம், எஸ்.பொ போன்றவர்கள் அதில் வந்து கூடினர். இதில் எஸ்.பொ. கனக செந்தில்நாதன், போன்றவர்களே எழுதக்கூடியாது. இவர்களிடையே வலதுசாரிகட்கு உரிய உள்மோதல், தலைமைப்போட்டிகளால் தொடங்கிய வேகத்திலேயே நற்போக்கு இல்;லாமல்போனது. கடைசியாக எஸ்.பொவும் தளையசிங்கமும் மட்டுமே மிஞ்சியிருந்து எஸ்.பொவும் வெளியே போக தளைசிங்கம் மட்டுமே தனித்திருந்த லெட்டர் கெட் அமைப்பாக நற்போக்கு 1973இல் தளையசிங்கத்தின் மரணத்துடன் அதுவும் உயிர் நீத்தது. இலங்கை முற்போக்கு இலக்கிய அமைப்பில் நடந்த எழுத்து இலக்கிய விமர்சனம் வாதம்களின் நூறில் ஒரு பங்குகூட நற்போக்கில் நடக்கவில்லை. அது ஒரு அமைப்பாக இயங்குமளவு ஆள் அணியோ ஒற்றுமையே நிலவவுமில்லை. முற்போக்கை வயிற்றுப் போக்கு வசையெழுதிய தமிழரசுச் சுதந்திரன் நற்போக்கு அதரவு கொடுத்து. அது ஒரு மாநாட்டையோ ஒழுங்கான கூட்டத்தையோ ஒரு சிறப்பு இதழையோ கூட வெளியிட்டதாக எந்தத்தகவலுமில்லை. இன்று நற்போக்கு பெரும் இலக்கிய இயக்கமாய் காண்பித்தும் முற்போக்கு எழுத்தாளர்கள் அமைப்பு விட்ட இலக்கியத்தவறுகளைத்திருத்தி எழுத்து மீறல்களை அது கண்காணித்துக் கருத்துiர்த்தது என்பதெல்லாம் பின்னால் கட்டப்பட்ட வளமான கதை தமிழ்நாட்டில் தளையசிங்கமும் அவரது ஏழாண்டு இலக்கிய வளர்ச்சியும் புதியது தேடியவர்களாலும், nஐயமோகன் போன்ற இந்து மதவாதிகளாலும் வராது வந்துதித்த இலக்கிகயச் செல்வமெனக் கண்டுபிடிக்கப்பட்ட பின்பு இலங்கைத் தமிழ் தேசியவாத எழுத்தாளர்கட்கு புதிய நம்பிக்கைகள் பிறந்தது. அவர்கள் தம்மைத்தாமே நம்பத் தொடங்கினர். நரிகளைப் பரிகiளாக்கும் சக்தி தமக்குண்டு என்று உரைக்கத் தொடங்கினர் தாம் சாதனையாளர்கள் தளையசிங்கம் போலவே எம்மையம் இடதுசாரிகள் புறக்கணித்துவிட்டர்கள். எங்கள் எழுத்துகட்கு கொடுமையிழைத்து விட்டார்கள். மகாகவியை கைலாசபதி கண்டுகொள்ளவில்லை என்று கூட்டாக குந்தியிருந்து புலிப்பாசிசச்சுருதி சேர்ந்துப்பாடத் தொடங்கினார்கள். நற்போக்கு தமிழ்த்தேசியவாதிகள், இலக்கியத்தில் மரபுகாப்பார்கள், பண்டிதர்கள் புலவர்கள் கூட்டத்தால் ஆரம்பிக்கப்பட்டபோதும் அது நின்று நிலைக்காமைக்கான சமூகக்காரணிகள்; இருந்தது. 1960, 1970கள் உலகரீதியில் இடதுசாரிகள் அரசியல், இலக்கியப் பருவகாலமாகும். புரட்சிகளையும், மக்கள் எழுச்சிகளையும், மாணவர் கலகங்களையும் அவர்கள் பாடிய காலம் எழுதியகாலம், இலங்கையிலும் இலவசக்கல்வியால் சுதேசிய மொழிகளில் கல்விகற்ற இளம் சந்ததி இந்த எழுச்சி போன்றவற்றோடு இன, மத, சாதியம் கடந்த அரசியலுக்கு அது சார்நத எழுத்துக்கு வந்தது. இது இடதுசாரிகளினால் கட்டாயமாக்கப்பட்டு கொண்டு வரப்பட்டதல்ல. அது அன்றைய சமுதாய வளர்ச்சியின் விளைவாக இருந்தது. சமூகநிலை சாதகமாக இராமல்விட்டால் இடதுசாரிகளினால் செயற்பட்டிருக்க முடியாது. கைலாசபதி என்னைப் பாராட்டவில்லை. இ.மு.எ.சங்கம் தமிழ் தேசியவாதிகளை அங்கீகரிக்கவில்லை என்று இன்று கூறுகிறவார்கள். புலிப்பாசிசம் எந்த மூலத்தில் இருந்துவருகிறது? கொம்யூனிஸ்டுகள் தொழிற்சங்கவாதிகள் பெண்ணிய வாகிகளை ஜனநாயக சக்திகளை அழித்து. எஸ்.பொ. தளையசிங்கம் கும்பல் பிரதிநித்துவப்படுத்திய தமிழ் தேசியவாதத்தில் இருந்துதானே இவைபிறப்பெடுத்தன. இந்தப் பிசாசுகளை அவர்கள் அன்றே எதிர்த்து என்னபிழை? விமர்சித்து வந்தது என்ன தவறு? இங்கு பாதிக்கப்பட்டவர்கள் இடதுசாரிகளாக இருக்க எஸ்.பொ. பாதிக்கபட்டவர்களின் பாத்திரத்தை தமிழினவாதிகட்கு அல்லவா வழங்குகிறார்? இடதுசாரிகiளா தமிழ்தேசியவாதிகளைக் கொன்றார்களா? சரித்திர உண்மைகளை மறுத்து நிற்பது யார்? பாதிக்கப்பட்வர்கள் யார்? தம் உயிரை விலையாக இடதுசாரிகள் அல்லவா கொடுத்திருக்கிறார்கள். இலக்கியம்கட்கு வர்க்கப் பார்வை, பொருளாதார, சமூகவியல் நோக்கு நிலைகளைப் புகுத்தி ஆயும் முறையை தகாது என்பவர்கள் கட்டுடைப்பாளர்களின் எழுத்துக்கள் சாதியையும், பிரமாணியத்தையும் மட்டும் தேடித்திரிவதை ஒப்பிட்டுப்பார்ப்பதில்லை. ஸ்டாலினிசம் இலக்கியத்துள் அதிகாரம் செலுத்தியமைக்கான காரணத்தை தேடப்போகாதவர்கள் விளைவுகளை மட்டுமே மேடைபோட்டு விளக்குகிறார்கள். வயலில் நிற்கும் மனிதரையும் கடலிலும் தொழில் புரியும் தொழிலாளிகளையும், தொழிற்சாலைகளில் உழைப்பவர்களையும் எழுதுங்கள். சமூகத்தில் பெரும்பான்மையான முதலாளித்துவத்தால் ஏறெடுத்துப்பார்க்கப்படாதவர்களை எழுத்துக்குக் கொண்டுவாருங்கள் என்றால் நடுத்தர வர்க்கத்தை குளிர்த்திபண்ண எழுதும் எஸ்.பொ. போன்றவர்கட்கு கோபம் வருகிறது. வறுமையும், பசியும், கடும் உழைப்பில் உருக்குலைந்து கொண்டும் இருக்கும் மனிதர்களை எழுதும் கடமையை இடதுசாரி எழுத்தாளர்கள் ஏற்றார்கள். சாதியை முதல்முதலில் பேசத்தொடங்கினார்கள். இங்கு தமிழ்ச்தேசியத்தை ஏற்கவில்லை. இடதுசாரிகள் தமிழனைப்பார்க்க மறந்தார்கள் என்று கத்திக்குழறும் எஸ்.பொ. இன்றைய தமிழப்பாசிசம் எப்படி வந்தது. யாரை அழித்து நிர்;மூலமாக்கி புலிப்பாசிசம் யாருக்காக எழுந்தது? யாரின் கைக்கருவியாக அது உள்ளது. இவற்றைப்பேச நாவெடாதவர்கள் கால்நூற்றாண்டுக்கு முன்பு நடந்த இடதுசாரி இயக்கக்கதைகளில் ஒடிஒழிகிறாhகள். இடதுசாரிகள் மகாகவியைப் பாரட்டவில்லை என்பவர்கள் மகாகவியை செல்வநாயகமும், அமிர்தலிங்கமும் எப்பவாவது கண்டுகொண்டார்களா பாராட்டிப் பரிசளித்தார்களா? ஏன் தமிழ்தேசியவாதிகள் எல்லோரும் இடதுசாரிகளின் ஆசீர்வாத்துக்கு அலைகிறார்கள் இவர்கட்கு கடைநிலை இலக்கிய உணர்வாவது வாசிப்பு, எழுத்துக்கரிசனையாவது இருந்ததா? நற்போக்கு என்று நாமம்; இட்டுக்கொள்பவர்கள் சுயபலமுடையவர்களாக இல்லாமல் நடந்த தமிழ்விழாக்கள், மதவிழாக்கள், தமிழன் விழாக்கள் என்ற சகலதிலும் இழுபட்டர்கள். 1963 இல் ஈழத்தமிழர் விழாநடத்தப்பட்டது பற்றியும், தானும் அதில்கலந்தது பற்றியும் தனது நூலில் எஸ்.பொ. குறித்திருக்கிறார். இந்த விழாவுக்கு இந்துமதவாதி ஆத்மஜோதி முத்தையா, யாழ்ப்பாணத்தின் பிரபல சைவ சயமயப் பிரச்சாரகி சிவத்தமிழ்ச்செல்வித ங்கம்மா அப்பாக்குட்டி, அமிர்தலிங்கம் மங்கையற்கரசி அமிர்தலிங்கம், மட்டக்களப்பு எம்.பி ராசதுரை, தீவிர இடதுசாரி எதிர்ப்பு மற்றும் தமிழ் மரபு வாதிகளான பேராசிரியர் சதாசிவம், மகா வித்துவான் நடராசா, தமிழரசு அபிமானியும் யாழ் வீரகேசரி நிருபருமான செல்லத்துரை ஆகியோர் வந்தமைபற்றி எஸ்.பொவே எழுதுகிறார். தமிழ்த்தேசியவாதிகள், சைவசமயவாதிகள், தமிழ்மரபு இலக்கியவாதிகள் இணைந்த நற்போக்கு எப்படியிருக்கும் அதன் அரசியல் இலக்கியப்போக்கை விளங்க இதுபோதும். இந்த விழாவுக்கு கைலாசபதி அழைக்கபடவில்லை என்பதையும் எஸ்.பொ. பெருமகிழ்வோடு குறிப்பிட்டு இருக்கிறார். இ.மு.எ. சங்கம் சிறிமா அரசைச்சார்ந்து நின்றது என்பதை துரோகமாய் கணித்து எழுதும் எஸ்.பொ கொழும்பில் அரசு புத்தக வெளியீட்டு நிறுவனத்தில் எப்படி முக்கிய நபராக நுழைந்தார். யார் உதவியில் இப்பதவிகிடைந்தது. எஸ்.பொ.விட கல்வியறியும் தகுதியும் வாய்ந்தவர்கள் இருக்கத்தக்கதாக இவருக்கு யாரின் சிபார்சில் அரசு பதவி கிட்டியது? அரசவெளியீடாக அரசு நிதியில் தனது நூல்களையும் தளையசிங்கம் நூல்களையும் வெளியிட்டது மட்டும் தமிழத்துரோகம் இல்லையா? சிங்கள அரசிடம் உதவி ஒத்தாசை பெறுவதாகாதா? இடதுசாரிகள் தனிமனிதர்களாக அல்லாமல் ஒரு இயக்கமாய் சிறிமா அரசில் பங்கு பற்றினால் அது தமிழச்துரோகம் ஆனால் அதே சிங்கள அரசுகளுடன் யு.என்.பி, சிறிமா என்று எஸ்.பொ சேர்ந்தால் அங்கு அவருக்கு தமிழ்த்துரோகத்தில் இருந்து விசேட விடுவிப்புக்கிடைப்பதேன்? 1965, 1970 வரை அரசபாடத்திட்டக்குழுவில் எஸ்.பொ.எப்படி யூ.என்.பி போன்ற சுந்திரக்கட்சியைவிட மேசாமான ஏகாதிபத்திய சார்ப்புகட்சியின் அரசாங்கத்தில் இணைந்து நின்றார். இலங்கை வானொலியில் எப்படி இவர் புகுந்தார். அது தமிழ்ஈழ அரசால் நடத்தப்பட்டதா? தமிழரசுக்கட்சி அமைச்சர் மு.திருச்செல்வத்தை விசேட அதிதியாய் அழைத்து பேராசிரியர் சதாசிவம் தலைமையில் யு.என்.பி காலத்தில் எஸ்.பொ நடத்தும் புத்தக வெளியீட்டு விழா நற்போக்கும்-எஸ்.பொ கும்பலும் எத்தகைய மோசமான வலதுசாரிகள் என்பதற்கு நல்ல அடையாளம். இக்காலத்தில்தான் 1970இல் தளையசிங்கத்தின் போர்ப்பறைக்கு சாகித்pய மண்டலப்பரிசு கிடைத்தது. ஈழத்தமிழர் விழாவுக்கு நிதிதந்தபடியால் எஸ்.பொ. இந்து மதவாதி ஆத்மஜோதி முத்தையாவை புகழ்வதை நாம்காண முடியும். “அவருக்குக் கைக்கட்டிச் சேவகம் செய்யபவர் இருந்தும் தன்மாட்டில்தானே பால் கறக்கும்” அவரின் எளிமைகண்டு எஸ்.பொ. மனம் கசிந்து உருகுகிறார்.” அவர் முதலாளி ஆனது சுரண்டலால் அல்ல அவர் அங்கு வந்து பாமரச்சிங்களவனை ஏமாற்றிச் சுரண்டிக் கொள்ளையடித்து பணக்காரராக ஆனதாக எண்ணுவது தவறு” என்று ஏழை மனிதர்களையும் தொழிலாளர்களையும் முதலாளிகள் சுரண்டுவதை வந்தனம் செய்கிறார். சுரண்டல் இல்லாமல் முதலாளியாக இருக்க முடியும் என்று தத்துவம் செல்வந்தர்கட்கு வகுத்துத்தருகிறார். முதலாளி ஆத்மஜோதி ஏழைத்தோட்டத் தொழிலாளர்களை சொந்தத்தமிழ்ச் சகோதரர்களை சுரண்டுவதை பேசாது ஏதோ சிங்களவன் அவரைப்பார்த்து வயிறு வாய் எரிவதாய் திட்டமிட்ட திசைமாற்றல் நடைபெறுகிறது. யாழ்ப்பாணத்தில் தமிழாராய்சி மாநாட்டை நடத்தவேண்டும் என்று நற்போக்கு சார்பில் பேராசிரியர் சதாசிவம் நின்றார் என்று எஸ்.பொ குறிக்கும்போது அப்போதும் நற்போக்கு இலக்கியம் நிலவிய தாய் நிரூபணம் செய்யும் முயற்ச்சியே 1974இல் நற்போக்கு என்று எதுவும் கிடையது. எஸ்.பொ.வும் அதைப்பிரதிநிதித்துவப்படுதியதில்லை. என்பதுடன் தமிழராய்ச்சிமாநாட்டுக்கு நற்போக்கு அமைப்பு சார்பில் யாரும் கலக்கவோ, ஆய்வுக்கட்டுரை சமர்ப்பிக்கவோ பேசமோ இல்லை 1973 இல் நற்போக்கின் கடைசிமனிதர் தளையசிங்கம் மரணமடைந்ததுடன் நற்போக்கு கூடவே பரம்பதமடைந்துவிட்டது. கடைசியாக தனிமனிதர் இலக்கியவாதியாக மிஞ்சிக்கிடந்த தளையசிங்கத்தையும்; நற்போக்கையும் சபித்துச் சாம்பலாக்க முயன்ற அக்காலத்திய எஸ்.பொ இப்போதானே அதன் தர்மகத்தா என்று சிருஷ்டிக்கிறார். மேலும் தமிழராய்ச்சி மாநாட்டில் எஸ்.பொ அவரது சொந்த மரபுவாதிகளாலோ, தேசியவாதக் கூட்டாளிகளாவே கௌரவிக்கப்பட்டதாய் செய்தி இல்லை. இன்று எஸ்.பொ தனக்கு முதலில் நண்பராக இருந்து பகைவராய்ப் போன தளையசிங்கத்தை இடையிடையே இந்த நூலில் குறிப்பிடுவதற்கு காரணமுண்டு தமிழ்நாட்டில் சிலர் தளையசிங்கத்தை பெரிய இலக்கியவாதியாகவும், விமர்சகராகவும், எழுத்தாளாராகவும் கண்டுபிடித்துள்ளதால் அந்த கண்டுபிடிப்பின் பயனைத்தானும் அடைய விரும்பினார். தளைசிங்கம் ஒரு தமிழ்தேசியவாதி, சர்வோதய அமைப்பு நபர், காந்தியத்தில் நம்பிக்கைடைதவர், அவர் தமது ஆரம்பக்காலத்தில் பெற்ற சில இடதுசாரிகளின் நட்பு இ.மு.எ.சங்கத்;தின் ஆட்களிடமிருந்து சேகரித்துக்கொண்ட சில சோசலிசச்; சொற்களையும் தமிழ்தேசியம், சர்வோதய அமைப்பு திரட்டல்களையும் கொண்டிருந்தார் மாக்சிய அறிவோ அது சார்ந்த படிப்போ இருக்கவில்லை. ஆழ்ந்த வாசிக்கும் பழக்கமோ, சரியாக வாதம்கட்கு பதிலளிக்கும் திறனோ அவரிடம் இருக்கவில்லை. அவருக்கு சோவியத் சோசலிசப்புரட்சியின் உள்நாட்டு மற்றும் சர்வதேச புலம் சார்ந்த எந்த தகவலும் அறிவுமில்லாத ஒரு சாதாரணய புங்குடுதீவுள்மட்டுப்பட்ட சர்வோதயக்காறர். தளையசிங்கத்தை தமிழ்நாட்டில் ஜெயமோகனை ஒத்தவராக அவரை இடதுசாரிகளைவிட உயர்த்திய கொடுமையைச் செய்தவர்கள் எதிர்காலத்தில் தப்பமாட்டர்கள். தமிழ்நாட்டு உதிரி ஜீவிகட்குத்தான் தளையசிங்கத்தை தெரியாது என்றால் எஸ்.பொவுக்கு, மு.பொவுக்கும் சகலதும் தெரிந்தே தம்சொந்த இருப்பிடங்களைப் பலப்படுத்த தளையசிங்கத்துக்கு எழுத்துக்கலகம் புரிந்தவர் என்ற இருக்கை தந்துவிட்டார்கள். இவர்கள் தளையசிங்கம் ஒரு சர்வோதய நபர், புங்குடுதீவுப்பிரதேசவாதி என்ற விபரம்களை தெரிந்தே மறைத்தனர். வடபகுதிச் சர்வோதயம் என்றபெயரில் சிங்களவர்களுடன் சேர்ந்திருக்க முடியாது என்று பிரிந்தபோது அதற்கு தளையசிங்கத்தின் சர்வோதய குருவான க.திருநாவுகக்கரசு பொறுப்பாக இருந்தார். இவர் கடும் சிங்கள எதிர்ப்பாளர், தமிழரசுவாதி, ஆன்மீகவாதி, காந்தியவாதி, யோகர்சுவாமியின் பக்தன். இவர் தமிழரசு மேடைகளில் தேர்தல்பிரச்சாரம் செய்தவர். இந்தியாவில் சர்வோதயம், தமிழருக்கு ஒரு சர்வோதயம், வங்காளிக்கு ஒரு சர்வோதயம் என்று பிரியவில்லை அது இந்தியா தழுவிய ஒரு அமைப்பாக இருந்தது. இலங்கையில் அதை தமிழருக்கு என்று க.திருநாவுக்கரசு போன்றவர்கள் தமிழரசுக்கட்சியின் புத்தி கேட்டுப்பிரித்ததுடன் கடைசியில் அது புங்குடுதீவுச் சர்வோதயமாயிற்று. அதற்கு வெளியே அவர்கள் இல்லாதிருந்தனர். இந்தியா போலவே இலங்கையிலும் சர்வவோதயம் இடதுசாரிகட்கு எதிராயே ஆரம்பிக்கக்பபட்டது. வலிமைகுறைந்த சமூகப்பிரிவுகளை சாதியால் ஒடுக்கப்பட்ட மக்கள், ஏழைகளிடம் இடதுசாரிகள் செல்வாக்குப் பெறுவதைத்தடுக்கவே இது ஆரம்பமானது. தளையசிங்கம் புங்குடுதீவு சர்வோதயத்தில் இணைந்து 1965, 1970 ஆண்டுகள் வரை தொடக்கம் வரையில் சமபந்திபோசனம், சிறுவர் பாடசாலை, தமிழ்விழாக்கள், சிரமதானம், தண்ணீர்பந்தல், அன்னதானம் போன்றவைகளில் ஈடுபட்டனர். சர்வோதயத்தில் சேர்பவர்கள், காந்தியத்துக்கு, சத்தியாக்கிரவிதிகட்கும் விசுவாசமாக இருக்க வேண்டும் என்று சத்தியப்பிரமாணம் செய்ய கட்டாயப்படுத்தப்பட்டனர். கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட சாதிமக்கள் இந்து சமயத்துள்ளும் காந்தியத்துள்ளும் இழுக்கும் முயற்சிகள் நடந்தது. சர்வோதயத்துக்கு வெளிநாடுகளில் இருந்து நிதிகள் வந்தன. ஊழல்களும் நடந்தன. சர்வோதயத்துக்கு சி.ஐ.ஏ தொடர்பு அமெரிக்க நிதி வருகிறது. என்ற செய்திகளும் வந்தன. ஒழுங்காக அரசியல் இலக்கிம் தெரியாத தளையசிங்கம் போன்ற மனிதர்கள் திட்டமிட்டு அறிவாளிகள் ஆக்கப்பட்ட கதைகள் இன்னமும் ஆயப்படல்வேண்டும். மேலும், தளையசிங்கம் வெறிபிடித்த புங்குடுதீவு பிரதேசவாதியாகும். இவர்கள் சர்வோதயத்தின் பலத்துடன் தமிழரசுக்கட்சியில் எம். பி பதவிக்கும் போட்டியிட விண்ணப்பித்து தோற்றவரான பி.கதிரவேலு என்ற புங்குடுதீவுவாசியை தேர்தலில் சுயேச்சையாக நிறுத்தினார்கள். இவருக்கு கொழுப்பில் உள்ள புங்குடுதீவு கடைமுதலாளிகள் பெருமளவு நிதிகள் கொடுத்தனர். எமது புங்குடுதீவு பின்தாங்கியுள்ளது. காரைநகர், வேலனை என்பன முன்னேறுகிறது எல்லா அரசாங்க நிலையம்களும் அங்குதான் உள்ளது. என்று இவர்கள் வெளிப்படையாக புங்குடுதீவு பிரதேசவாதப்பிரச்சாரம் செய்தனர். புங்குடுதீவு முன்னேற்றம் என்பது கோரிக்கையாக இருந்தது. இதன்மூலம் காரைநகர், வேலனை மக்கள் புங்குடுதீவுக்கு எதிராயினர். கொழும்பில் அரிசி, போன்ற பொருட்களில் மொத்த விற்பனையைக்கட்டுப்;படுத்;திய புங்குடுதீவு முதலாளிகள், பி.கதிரவேலுவுக்கும், தளைசிங்கத்துக்கும் பணத்தை அள்ளி தேர்தலுக்காக இறைந்தனர். தேர்தலில் சகல ஊழல்களும் முறைகேடுகளும் வெறித்தனமான பிரச்சாரம்களையும் இருபகுதியும் செய்தன. தளையசிங்கமும், இதில் தீவிரமாக ஈடுபட்டார். இந்த தேர்தல் போட்டியில்தான் க.பொ.இரத்தினம் பொலிசை வைத்து தளையசிங்கத்தையும் ஆதரவாளர்களையும் தாக்கினார் தளையசிங்கம் சாதிப்பிரச்சனைக்காக போராடித்தான் அடிக்கப்ட்டார் என்பது சரியானதல்ல. சர்வவோதயப் பணம் அவர்கட்கு வந்தது. கொழும்பு புங்குடுதீவு முதலாளிகள் நிதிகள் கிடைத்தது தளைய சிங்கம் தர்மத்தில் பொதுச்சேவை புங்குடுதீவுச்சேவை புரியவில்லை. 1955-1956 இல் பண்ணை தாம்போதிப்பாலம் அமைக்கப்பட்டது. இதன் மூலமே தீவுப்படுதி தரை வழியாகக் குடா நாட்டுகள் இணைக்கப்பட்டது. இதைக்கட்ட 1937 இல் சட்ட நிருபணசபையில் விவாதம் நடந்தபோது அதற்கு ஏ.ஈ.குணசிங்கா ஆதரவு கொடுத்தார். நற்போக்கில் முக்கியமானவராக இருந்த வ.அ.இராசரத்தினம் தான் மூதூர் மஜீத்தை சிறிலங்கா சுதந்திரக்கட்சியில் கொண்டுவந்து சேர்த்ததுடன் அவரை எம்.பி யாக்கவும் வேலை செய்தவர். அவர் ஒருபுறம் தமிழ்தேசியவாதத்தினால் பிணியுற்றவராகவும். மறுபுறும் சொந்த நலன்கட்கு சிறிலங்கா சுதந்திரக்கட்சிப்பக்கம் உலாவுபவராகவும் இருந்தார். இவரின் சிறிலங்கா சுதந்திரக்கட்சி தொடர்புகளை அதனுடன் தனக்குள்ள தொடர்புகளை எஸ்.பொ தொடவே இல்லை. முதூர் மஜீத் மூலம் வ.அ.இராசத்தினம் சாகித்திய மண்டலக்குழுவிலும் இடம்பெற்றார். எஸ்.பொ இத்தொடர்புகளினூடாக பல தனிப்பட்ட பலன்களை அடைந்தார். அப்போதெல்லாம் சிறிலங்கா சுதந்திரக்கட்சித் தொடர்பை எஸ்.பொ குற்றமாயக்காணவில்லை. 1960களில் மூதூரில் எஸ்.பொ, வ.அ.இராசத்தினம் நடத்திய தமிழ் விழாவில் தமிழரசு, சிறிலங்கா சுதந்திரக்கட்சி அரசியல்வாதிகள், எஸ்.பி மார்கள் சகலரும் அழைக்கப்பட்டனர். மட்டக்களப்பு தமிழரசு எம்.பி. இராசதுரை கூட அழைக்கப்பட்டு இருந்தார். வ.அ.இராசரத்தினம் தமிழ்மரபுக்காக நின்றவர் முற்போக்கை அவர் ஏற்காதவர். தன்னை ஈழத்துப் பூதத்தேவனாரின் தொடர்ச்சி அவரின் தம்பி என்றதுடன் தமிழ் இலக்கியத்தின் இரண்டாயிரமாண்டுப் பெருமை பேசியவர். எஸ்.பொவின் இடதுசாரிகள் “நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லை என்று அறிவித்துக்கொண்டே நாடாளுமன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இவர்களுக்குக் கொம்யூனிச நாடுகளிலிருந்து பணம் கிடைக்கிறது”. என்று முதலாளிய ஊடக உளவியலை எஸ்.பொவிடம் நாம் கேட்கிறாம். முதலாவதாக கொம்யூனிஸ்டுகள் நாடாளுமன்றத்தைப் பகிஸ்கரிப்பது என்பது அல்லது அதற்கு வெளியே இயக்கம் நடாத்துக்கொண்டு முன்கூட்டியே தீர்மனிக்கக்கூடிய ஒன்றல்ல. முதலாளித்துவ ஐனநாயக அமைப்புகளின்வடிவங்களை புரட்சிக்கு முந்திய காலப்பகுதியைக் கொம்யூனிஸ்டுகள் பயன்படுத்தி உள்ளவார்கள். இதை அன்றய அனார்ககிஸ்டுகளும், இன்றைய மாவோவாதிகள் மட்டுமே மறுப்பர். இலங்கையில் இடதுசாரிகள் பாராளுமன்ற வாதத்தில் ஈடுபட்டு தமது புரட்சிகர ஆற்றலை இந்துவிட்டார்கள் என்பதற்காக எப்போதும் பாரளுமன்றத்தைப் பகிஸ்கரிப்பதுசரியானதல்ல. சோஷலிசப் புரட்சிக்கான காலகட்டம் நெருங்குவதற்கு முன்னர் முழுமையாகப் பாரளுமன்றதைப் பகிஸ்கரிகத்தால் அந்த இடத்தை பாசிசமே நிரப்பும். சூழவுள்ள சமூக நிலைமைகள் சமூக எழுச்சியின் காலகட்டங்களைத் தீர்மானம் செய்கின்றன. அன்று இடதுசாரிகளுடன் சேர்ந்து தேர்தலுக்கு நிற்பது சரியென அவர்களுடன் கூடி மேடையேறித் திரிந்த எஸ்.பொ இப்போ தனக்கு அதில் எந்தப் பொறுப்பும் இல்லையென்பதுபோல் சுத்தவான் ஆக மாறி இடதுசாரிகளை விமர்சிக்கிறார். தேர்தலை நீண்டகாலம் பகஸ்கரித்துவந்த பகிங் கொம்யூனிஸ்ட் கட்சியும், பாராளுமன்ற வாதத்தை தெரிந்துகொண்ட இடதுசாரிகக் கட்சிகள் அடைந்த அதே அரசியற்கதியை அடைந்ததென்பது எதைக்காட்டுகிறது? ஒரு புரட்சிகரச் சமுதாயமாற்றமென்பது கட்சியிகளால் செயற்கையாக வரலாற்று வீச்சை மீறிச்கொண்டுவரப்படுமல்ல. அது உள்நாட்டு நிலைமகளில் மாத்திரமல்ல சர்வதேச நிலைமைகளிலும் வேர்கொண்டுள்ளது. ஸ்டாலினிசம் ஏகாதிபத்தியங்களோடு ஏற்பட்டுத்திய சீர்திருத்த அரசியல் உலகின் புரட்சிகளைத் தடுத்து நிறுத்திய பிரதான காரணியாகும். ஸ்டாலினிசக் கட்சிகள் முதலாளித்துவக் கட்சிகளோடு சேர்ந்தே ஐக்கிய முன்னணி, மக்கள் முன்னணி கூட்டுக்கள் உடன்பாடுகள் சீர்திருத்ததைத் தாண்டி நாடுகளைப் புரட்சிக்குச் செல்ல விடவில்லை. இடதுசாரிகளின் பாராளுமன்ற பிரவேசம் பற்றிய பிரச்சினை ஒரு தத்துவார்த்தைப் பிரச்சினையாகும். அதில் எஸ்.பொ போன்ற அரசியலின் தமிழ் இனவாதத்தைப்பின்னேடிகட்டு இடமில்லை. இடதுசாரிகள் தேர்தலில் ஈடுபட்டபோதும், தனிப்பட்டமுறையில் மிகச் சிறந்த மனிதர்களாக ஊழல் அற்ற பொதுவாழ்வை உடையவர்களாக இந்தனர். ஆனால் தமிழ்தேசியவாதிகள் எப்படித்; தேர்தலில் ஈடுபட்டனர். லஞ்சம் வாங்கினார்கள்? உத்தியோகம் எடுத்துகொடுத்து காசு வாங்கினார்கள். பெண்களுக்கு ஆசிரியர் வேலை எடுத்துச்கொடுத்தற்காக அவர்களைப் பாலியல் ரீதியில் பயன்படுத்தினர். சிங்கள மக்களைத் துவேசித்தார்கள். தேர்தலில் தமக்கு வாக்களிக்கும்படி காசு மூட்டை மூட்டையாகச் சாராயம், ஆடு, கோழி வெட்டிச்சாப்பாடு போட்டார்கள். பெண்களின் தாலியிலும் பிள்ளைகளின் தலையிலும், கற்பூரம் கொழுத்தியும் கடவுள் முன்பும் குழந்தைகளைக் கடக்கப்பண்ணியும் துவாயைப்போட்டுத்தாண்டியும் சத்தியம் வாங்கினார்கள். தலையை மொட்டையடித்து மீசை வழித்து வெற்றி, தோல்விகள் வெளியிடப்பட்டது. எம்.பி மாரின் மனைவிமார் வீடுவிடாகப்போய்த் தாலிப்பிச்சை கேட்டார்கள். தோற்றபோது கிணற்;றில் பாய்ந்தார்கள். இதுதான் தமிழரசு, காங்கிரஸ், தமிழர் விடுதலைகூட்டணியின் தேர்தல் முறையாக இருந்து. மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி இடதுசாரிகள் ஒருபோதும் நடந்து கொண்டதில்லை. இடதுசாரி இயக்கங்கள் மரணப்படுக்கையிற் கிடக்கின்றது என்ற எஸ்.பொ எழுதத் துணிந்தமைக்கு சோஷலிச நாடுகளின் வீழ்ச்சி உலக முதலாளித்துவத்தின் தற்காலிக வெற்றி இலங்கையின் புலிப்பாசிசத்தின் இராணுவ வலிமை அவருக்குக் காரணங்காகப் பட்டிருக்கிறது. இன்று இலங்கையின் இடதுசாரிக்கட்சிகள் கடந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில் முதலாளித்துவ அரசியலுக்கு எதிராக எழுந்தவை. ஆனால் இன்று உலகமயமாதலின் காலத்தில் உலகளாவிய மூலதனத்தின் விதிகளின் கீழ் பழைய நிலைமைகளின் தோன்றிய இந்த அமைப்புகள் பலவிழப்பது சமுதாய விதியாகும். மறுபுறமம் மூலதனம் சுரண்டல் முன்பைவிடப் பலமாயும் நவீனமாயும் உலகர்;ந்த வீசுச்சுக்கொண்டாதகவும் சோஷலிச இயக்கங்கள் மறுபடியும் புதிய நிலைமைகளுக்குத் தகவமைத்துக்கொண்டு முதலாளிய நிலமைகளுக்கான அரசியல் மறுப்பாக கட்டாயம் தோன்றியே தீரும். இது நடந்தே தீரும். இவை எமது அகவய விருப்பு அல்ல. அது ஒரு சமுதாய விதியாகும். ஐரோப்பிய நாடுகளில் தொழிலாளர் மற்றும் மக்கள் இயக்கங்கள் தீவிரமாய் எழுகின்றன. இது 1970களிலோ 1990களிலோ இல்;லாத நிலையாகும். சமூகசேவைகளும் நுகர்வும் தீவிர வேகத்தில் மக்களிடமிருந்து பறித்தெடுக்கப்படுகிறது. ஆசிய, லத்தீன், அமெரிக்க நாடுகள் மேற்குலகைத் தோற்கடிக்கும் தொழில் நுட்பபொருளாதார பலத்தைப் பெறும் போராட்டத்தைத் தொடங்கிவிட்டன. மேற்குலக மனிதர்களால் நேற்றுப்போல இன்றும் இனியும் வாழந்துவிட முடியும் என்ற கனவு கலைந்துபோய்விட்டது. முதலாளியம் நிலவும் வரை சமூகங்கள் ஒருபோதும் அமைதியாய் இருக்கமாட்டர் மக்கள் சாந்தமாக வாழ மாட்டர்கள். மேற்குலக நாடுகளின்வேலையின்மை தொழிற்சாலைகள் மூடல் உற்பத்திக் குறைப்பு நுகர்வு வீழ்ச்சி, வறுமை தொடர்வேலை நிறுத்தப்போரட்டங்கள் ஏன் ஏற்படுகின்றன. ஏன் இந்த நாடுகள் ஈராக்கிற்கும், ஆப்கானிஸ்தானுக்கும் யுத்தம் செய்யப்போகின்றன. இதற்கான காரணிகள் விளைவுகள், பிரதிவிளைவுகள் இல்லையா? இங்குதான் மாக்சியம் விளக்கும் மூலதனம் வர்க்கம் சமூகமாற்றம் பற்றிய பிரச்சினைகள் எழுகின்றன. சமூக் இயக்கம் பற்றி எந்தச் சுறணையும் இல்லாத எஸ்.பொக்களுக்கு இது சிதம்பர சக்கரத்தைப் பேய் பார்த்த கதையாகவே இருக்கும். பொதுமக்களின் மனநிலையை அதுசார்ந்த சமூக பொருளியற் பாங்குகளின் ஏற்ற இறக்கங்களை கண்காணிக்கத் தெரியவேண்டும். புரட்சிகர சூழல் எப்போதும் எல்லாக் காலத்துக்கும் உரியதுமல்ல. அது எப்போதும் நிலவுவதுமில்லை. அது உழைக்கும் மக்களின் சமுதாயக்கோபமும், அதிருப்தியும் இனிவாழ்ந்திட முடியாதென உணரும் கட்டத்திலேயே வரும். அப்போ முதலாளித்துவப் பிரச்சாரங்ககளைப் போதிக்கும் எஸ்.பொ போன்றவர்கள் வலதுசாரிகளுக்குரிய இருட்கிடங்குகளிலே வாரிக்கொட்டப்படுவார்கள். முதலாளிய சிந்தனையின் தொலைநோக்கற்ற நிகழ்வின் மேலோட்டங்களில் தூங்குபவர்கள் முழுமையாக கைவிடப்படுவார்கள். சமுதாய மாறுதல் என்பது விபத்து அல்ல. சிலரின் தனிப்பட்ட ஆசையோ அகவிருப்போ தீவிரப் புத்திசாலித்தனத்தின் விளைவோ அல்ல. மாறாக அது ஒரு சமுதாய நியதியாகும். மாக்சியம் பேசிய கட்சிகள் அரசியல் அதிகாரம் ஆதிக்கம் தேடின என்கிறார் எஸ்.பொ மாக்சிய இயக்கம்தன் பொருளாதாரத்;தை கையாள வல்ல. அரசியல் அதிக்கத்தை இலக்காகக் கொண்டனர் முதலாளித்துவ அரசியல்; கட்சிகள் அரசியல் அதிகாரம் இல்லாமலா ஆட்சி புரிகின்றன. ஆயுதம் ஏந்தாமலா மக்களைக் கட்டுப்படுத்துகிறார்கள். புலிப்பாசிஸ்டுகள் வன்னியில் ஆயும் இல்லாமல் “அன்பே சிவம் என்றா ஆட்சி புரிகின்றார்கள்” இன்னா செய்தாரை அவர் நாண நன்னம்செய்தா” எதிரிகளை ஆட்கொள்கிறார்கள். புலிகளின் ஆயுதப் பயங்கரவாதம் இல்லாமல் ஒரு நிமிடம் கூடத்தமிழ் மக்களை ஆளமுடியாது. மாக்சியவாதிகள் பேசுவது கையேற்பதுஉழைக்கும் மக்களின் அதிகாரமாகும். சோஷலிசம் வரும்போதுகூட அதிகாரமும் அரசும் சட்டமும் ஆயுதமேந்துதலும் உடனடியாக மறையாது. தனித்சொத்துடமை உருவாக்கிய இவை உடனேயே செயலிழக்க முடியாது. பலநூறு ஏன் ஆயிரம் வருடங்களாக மனிதர்கள் அரசு அதிகார ஒழுங்கு வன்முறையாற் கட்டுப்படுத்தப்பட்டார்கள். அதற்குப் பழக்கப்பட்டுள்ளனர். இதற்க மாற்றான புதிய சோஷலிச ஒழுங்கும் பொருளாதார சமூகவியற்போக்கும் செயற்பட்டு மனிதர்கள் அதற்கேற்றபடி மாற பல பத்து வருடங்கள் தலைமுறைகள் தேவைப்படும். சோவியத்யூனியன் உலக ஏகாதிபத்தியங்களால் சுற்றி வளைப்பட்டு பொருளாதார இராணுவ தொழிற்துறை நெருக்கடிகளை உண்டாக்கிய படியாற்தான் அது அதிகாரத்துவமாக மாறியது. அது ஏதோ ஸ்டாலினின் தனித்த கொடுமையான குணத்தால் நிகழ்ந்ததல்ல. சோஷலிசப் புரட்சி, ரஷியாவில் மட்டும் தனித்து விடப்பட்டதால் ஏற்பட்டதாகும். தமிழ்நாட்டில் நடுத்தர வர்க்க அறிவாளிகள் சொல்வதுபோல் மாக்சியத்திலும் லெனின் கட்சி அமைப்பிலும் அதிகாரம் இருந்ததினால் இது விளையவில்லை. 1990களில் தமிழ்நாட்டிலிருந்து வெளிவந்த எழுத்துகளை மொண்டுகொண்டு 2005 ஆம் ஆண்டுகளின் அரசியலுக்கு விடைதேட எஸ்.பொ முயல்கிறார். நவமாக்சியம் ஜனநாயகம் சோஷலிசம், சிவில் சமூகம் என்று எழுதியவர்கள் பேசியவர்கள் எல்லாம் இன்று எங்கே? ஒரு சிறிய தீக்கதரிசனக் கருத்தையாவது இவர்கள் எமக்கு விட்டுச்சென்றுள்ளார்களா? முதலாளித்துவ அரசமைப்பானது தனது ஆயுத அதிகாரத்தால் மட்டுமல்ல வாழ்வியல் ஒழுங்குகளாலும் கருத்துக்களால் தனக்குச் சார்பாய் மக்களைத் தயாரித்துள்ளது. அது எஸ்.பொ கூறும் அகிம்சையாலே ஒரு கன்னத்தைக்கொடுத்தால் மறுகன்னத்தைக் கொடு என்ற யேசுவின் போதனையாலோ ஆட்சி புரிவதில்லை. அரசு என்பது மூலதனத்தைக் காக்கும் வன்முறை இயந்திரமாகும். பொறிமுறையாகும் இது நிகழ்காலத்தில் மட்டுமல்ல எதிர்காலத்திலும் சோஷலிசததின் கீழும் குறிப்பிட்ட காலத்திற்கு இந்த வடிவம் நீடிக்கும். முதலாளியத்தின் பொருளாதாரம் உற்பத்தியாற்றல் அரசமைப்பு என்ற வடிவங்களைத் தனதாக்கி சோஷலிசம் தனது பண்புகளைச் சமுதாயத்திற்கும் கொண்டுவரும். இவை ஒரேநாளில் புரட்சி நடந்தவுடன் உச்சதலை இடியாய் இறக்குவதில்லை. அவை மாற்றங்களுக்குரிய காலத்தைக்கோரும், சமூக இயக்கவியற்போக்குகளை அறிந்தவர்கள் இந்தச் சிக்கலானதும், கட்டாயமானதுமான காலப்பகுதியை உணர்வார்கள். இங்கு கடந்த காலத்தில் முதலாளிய அமைப்புகள் வாழக்கட்டாயப்படுத்தப்பட்ட இடதுசாரி அமைப்புகள் தனது அமைப்புகள் செயற்பட்டதக்க மக்களை அடையத்தக்க சக்தி அதிகாரம் இவைகளை கொண்டிருந்தன “மாக்சியவாதிகள் சித்தாந்தங்களுக்கு அப்பாலுள்ள நூல்களை வாசிக்காத மனக்குறுக்கம் உடையவர்கள்” என்று விரிந்தகன்ற பல்துறை அறிஞர் இனவாதத்தையும் எஸ்.பொ எழுதிச்செல்கின்றார் இவர் புலிப்பாசிசத்தையும் தமிழ் இலவிததமிழ் கதைப்புத்தக்த்தையும் தவிர வேறு ஏதாவது படித்ததை இவர் எழுத்துக்கள் கூறுகிறதா? பல்துறை அறிவின் நிரம்பி வழியும் செய்தி எதுவும் இவரின் எழுத்தில் புலிகளின் வாதங்களைவிட்டு வெளியோ வராத எஸ்போவுக்கு சிறுகதைப் பரப்பிலாவது சக்திபடைத்த வாசிப்புள்ளதா? தமிழ்நாட்டு இந்தியசோவியத் மேற்குலக சிறுகதை நாவல் இலக்கியங்கள் பற்றி அடிப்படைக் கவனம் இல்லாது விட்டாலும் இலங்கையின் சிறுகதைப் பரப்பிலாவது ஒழுங்காக பேசமுடியுமா? மாக்சியம் எதைப் படிக்கவில்லை. எதைப்படிக்க எதிர்ப்புத் தெரிவித்தது என்பதை எஸ்.பொ கூறட்டும். மாக்சியவாதிகள் படிக்காதுவிட்ட அருஞ்செல்வங்கள் எவை என்பதைப் பட்டியலிடட்டும் பார்க்கலாம்?. 1970இல் வட்டுக்கோட்டையில் அமிர்தலிங்கமும், உடுப்பிட்டியில் சிவசிதம்பரம் ஒடுக்கப்பட்ட மக்களின் எதிர்ப்பு வாக்குளால்தான் தோற்றனர். இடதுசாரி அரசியலின் எதிர்ப்பு அலையாற்தான் தமிழத்தேசியவாதித்;தின் இரண்டு முக்கியகட்சிகளின் தலைவர்கள் தோற்கடிக்கப்ட்டார்கள். தமிழ்காங்கிரஸ்; கட்சியின் தலைவரும், செயலாளரும் தமிழரசுக்கட்சியின் தலைவரும், செயலாரும் தேர்தலில் தோற்றார்கள். இந்த தோல்வியின் அரசியல் வேக்காட்டிலிருந்தே இடதுசாரிக் கூட்டரசுத்கெதிராகத் தமிழீழக்கோரிக்;கை எழுந்தது. இச்சம்பவங்களுக்கான மூலங்களை நாம் காணவேண்டுமாயின் தேர்தலுக்கு முன்பான சில அரசியல் நிகழ்வுகளுக்குத் திரும்பிச்செல்லவேண்டும். சாதி எதிர்ப்புப்போரட்டம் தீவிரமாக நடந்த நிச்சாமம் அமர்தலிங்கத்தின் வட்டுக்கோட்டைத் தொகுதியில் இருந்தது. சாதியொழிப்பு இயக்கமென்பது இடதுசாரிகளின் சதி வேலையே காரணமென தமிழரசு தமிழ்க்காங்கிரஸ், தமிழர் கூட்டணி போன்ற அரசியற் கட்சிகளின் அபிப்பிராயமாக இருந்தது. சாதி எதிர்ப்போரட்டங்கள் சாதிவெறிக்கெதிரான கலகங்கள் மூண்டபோதெல்லாம் இடதுசாரி இயக்கங்களே குற்றம்சட்டப்பட்டன. அவர்கள் பொறுப்பு என ஆக்கப்பட்டனர். அவர்கள் தமிழ் மக்களின் ஒற்றுமையைக் குலைப்பவர்களாகத் தமிழ்தேசியவாதிகளில் குற்றம் சாட்டப்பட்டனர். இது ஒடுக்கப்பட்ட மக்களின் மனிதர்களாக வாழும் முயற்சியை பொருளாதார வாழ்வில் ஏனைய மக்களுக்குச் சமமாகப் பங்கொடுக்கும் முயற்சியென இவர்கள் கருதுவதில்லை. சிறுபான்மைத் தமிழர் மகாசபை போன்ற அமைப்புகளைத் தமிழ்தேசியவாதத் தலைமைகள் உடைக்க இடைவிடாது முயன்றனர். அதைக் கொம்யூனிட் மகாசபை என அழைத்தனர். அதிலிருந்த நல்லையாவைச் செனட்டர் ஆக்குவோம் என ஆசைகாட்டி தம்பக்கம் இழத்தார்கள். எம்.சி.சுப்பிரமணியம், நல்லையா உட்பட டி.எஸ்.சேனநாயக்கர் காலத்தில் செனட்டராக இருந்தவர்கள் எல்லோரும் நளவர்சமூகத்தைச் சேர்ந்தவர்கள். ஏன் தலைமைப் பதவிக்கு மற்ற சாதிகளான பள்ளர் கோவியர் இல்லயா என இவர்கள் கிண்டிக் திரிந்தனர். ஜீ.ஜீ.பொன்னம்பலம் விஷம்கொண்ட மேல்சாதி வெறியராவார். இவர்கள் சிறுபான்மைத் தமிழர் மகாசபை நளவர் சமூகத்திற்கு மட்டும் உரியதென்றே பிரச்சாரம் செய்துவந்தனர். அமிர்தலிங்கத்தின் தொகுதியாக வட்டுக்கோட்டைத் தொகுதியில் இருந்த நடந்த சங்கானைச் சாதியப்போரட்டத்தின்போது அது சம்பந்தமாகப் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பட்டபோது பொறுப்புள்ள தமிழ்த்தலைவரான அமிர்தலிங்கம் சங்கானையில் பள்ளருக்கும், கோவியருக்கும் சண்டை இரண்டு சமூகத்துக்கும் இடையேயான போரட்டம் சங்கானைப் போரட்டம் சங்காய்ப் போரட்டம் அது சீனக் கொம்ய+னிஸ்ட்;கட்சியின் போரட்டம் என்ற கூறினார். தென்னிலங்கையில் இருந்து எஸ்.டி.பண்டாரநாயக்கர் வடபகுதிக்கு வந்து சங்கானை, அச்சுவேலி, கரவெட்டி ஆகிய ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்ந்த பிரதேசம்கட்கு சென்று அவர்களைச் சந்தித்துப்பேசினர். ஆனால் தனது வீட்டில் இருந்து 2 மைல் தொலைவுகூட இல்லாத சங்கானைக்கு அமிர்தலிங்கம் போய் பாதிக்கப்பட்ட இம்மக்களுக்கு ஆறுதல் சொல்லவில்லை என்பதுடன் அமிர்தலிங்கம் இவர்கள் மேல் ஒயாமல் சண்டை பிடிப்பவர்கள் என்ற கடும்பகையுணர்ச்சியைக் காட்டினர். தமிழருக்கெல்லாம் தந்தையான செல்வநாயகம் அந்தப்பக்கம் போகவில்லை? இந்த தந்துரோகம்கட்கு பதில் தருமுகமாகவே 1970 தேர்தலில் அமிர்;தலிங்கத்தை இம்மக்கள் தேர்தலில் தோற்கச் செய்து தம்பலத்தைக்காட்டினார்கள். வட்டுக்கோட்டையில் போட்டியிட்ட தியாகராசா கோவியர் சமூகமக்களிடம் போய் உங்களைச் சாதி சொல்லி அமிர்தலிங்கம் பேசிவிட்டார் என்றும் பள்ளர் சமூகமக்களிடம் உங்களைப்பள்ளர் என்று அமிர்தலிங்கம் பாராளுமன்றத்தில் சாதி சொல்லிப் பழிந்துவிட்டார். அத்தகையவருக்கு வாக்குப்போடப்போகிறீர்களா என்று வாக்குத்தேடினர்? ஆக எல்லா அரசியல்வாதிகளும் சாதிஎதிர்ப்பு இயக்கங்களின் எழுச்சிக்கு ஆட்பட்டார்கள் தமிழரசுக் கோட்டை எனப்பட்ட அமிர்தலிங்கத்தின் வட்டுக்கோட்டை மண்கோட்டையாகத் தகர்ந்தது. சாதி எதிர்ப்பு இயக்கங்கள் வளர்ந்ததால் தமிழர் கூட்டணியில் சாவகச்சேரி நவரத்தினம், காசி ஆனந்தனுடன் சேர்ந்து சலூன்களுக்குப்போய் ஆட்களுக்கு முடிவெட்டுவதாக நாடகம் நடத்தினார்கள். சாதியை ஒழிக்க சலூனுக்குள் போன அவர்கள் பறையர் சமூக மக்களின் தொழிலான மலம் அள்ளிச்சுமந்து காட்டமுன்வரவில்லை. 1972 இல் செல்வநாயகம் புதிய அரசியலமைப்பை எதிர்த்து பதவியை ராஜினாமா செய்தபோது செல்வநாயத்தின் வீட்டுக்குப் போனகட்சி ஆட்களை எல்லாம் அவரின் மனைவி “செல்வநாயகத்தை எல்லோரும் வில்லங்கப்படுதி பதவியை ராஜீனாமா செய்யப் பண்ணிவிட்டதாய் சொல்லி ஆட்களைக் பேசிக் கலைத்தார் யு.என்.பி யில் மந்திரியாக இருந்த திருச்செல்வத்தை படாதபாடுபட்டுத்தான் வெளியே எடுத்தார்கள் அது பற்றித் தனிக்கதையே உள்ளது. திருச்செல்வம் மந்தியாக இருந்தபோது தமிழில் பேசுவது கிடையாது. அவருக்கு தாய்மொழி ஆங்கிலம்தான். தமிழில் பேசி அவருக்கு பழக்கமுமில்லை. தமிழும் சரியாக வராது. அவர் கொழும்பு கறுவாக்காட்டுத் தமிழர், ஆள் வெள்ளைக்காரனின் நிறம் பேந்தேன். தமிழ் பேசுவான். திக்குமுக்காடித் தமிழ்பேசும் இந்த உயர்வக்கத் தமிழர்கள், தமிழ் போரட்ட வீரர்களாம். தமிழுக்கும் தமிழருக்கும் உடல், பொருள், ஆவி சகலதும் தரக்காத்துக்கிடப்பவர்களாம். வடக்கு-கிழக்கில் தமிழ் நீதிமன்ற மொழியாக்கப்;பட்ட போது தமிழரசு தமிழ் காங்கிரஸ், அப்புக்காத்துமார் ஆங்கிலத்தை விடச்சம்மதிக்கவில்லை. நீதிமன்றம்களில் தொடர்ந்தும் அதையே ஆங்கிலத்தையே பாவித்தனர். தமிழில் வழக்காடவில்லை. ஒருமுறை மல்லாகம் நீதிமன்றத்தில் தமிழரசுக்கட்சி பொட்டா நடராசாவும் மு.திருநாவுக்கரசுவும் ஆங்கிலத்தில் வழக்காடத்தொடங்க குற்றம்சாட்டப்பட்ட ஆங்கில மறியாதவர் எழுந்து நீதிவானைப் பார்த்து “ஐயா இப்போ தமிழில் பேசலாம் என்று சட்டம் வந்திருப்பதாகக் கேள்விப்பட்டேன். இங்கு சட்டத்தரணி ஆங்கிலத்தில் பேசுவது எனக்கு விளங்கவில்லை” என்று சொல்ல முழு நீதிமன்றமும் சிரித்துவிட்டது தி;க்குமுக்காடிப்போன பொட்டர் நடராசாவால் தமிழில் வழக்காட முடியவில்லை. அவரால் தமிழர் தம் சொந்த தாய்மொழியால் வழக்காட முடியவில்லை. தமிழ் உரிமைப்போரட்ட வீரர் பொட்டர் நடராசா எதிரியையும், வழக்காளியையும் சமாதானமாக்கி வழக்கு நடத்துவதில் இருந்து தப்பியதுதான் அவர் செய்த வேலை. பொட்டர் நடராசா போன்ற தமிழரசு வழக்கறிஞர்கள் தம்மிடம் வரும் வழக்குளை இலேசில் முடிக்க மாட்டர்கள். ஒவ்வொரு முறையும் வழக்கு கோட்டில் எடுக்கும்போது எதிரி-வழக்காளி சட்டத்தரணிகள் இரண்டு பேரும் ஒன்றாயப் பேசிப்பறைந்து நீதிவானிடம் வழக்கை அடுத்த தவணைக்கு ஒத்திவைக்கும்படி கேட்பார்கள். நீதிமன்ற விசாரணைக்கு முதல் நாளே தமது வழக்காளியை வீட்டுக்கு வரச்சொல்லி காசை வாங்கிவிடுவார்கள். இப்படி சாதாரண இலகுவில் தீர்க்கப்படும் வழக்குளை, தவணை போட்டு தவணை போட்டு தள்ளிவைத்து வருடக்கணக்கில் இழுத்தடித்துப் பணம் உழைப்பார்கள். வழக்காடுபவர் மனிசியின் நகைநட்டு தாலிக்கொடி வரை தொடங்கி காணி ப+மிவரை விற்று சட்டத்தரணிகட்கு கொடுத்து அழிவார்கள். தமிழரசுவாதிகளின் பிள்ளைகள் கொழுப்பில் ரோயல் கல்லூரி போன்ற இடம்களில் படித்தார்கள். ஆங்கிலத்துடன் சிங்களமும் படித்தார்கள். செல்வநாயகம், பொன்னம்பலம், திருச்செல்வம், நாகநாதன் பிள்ளைகள் இத்தகைய கல்வியைப் பெற்றனர். வெளிநாட்டுக்கு மேற்படிப்புக்கு அனுப்பிப்பட்டனர். சிங்களம் அரச கருமமொழியச்சட்டமானதை எதிர்க்;துவிட்டு தமிழர்களைச் சிங்களம் படிக்ககூடாது என்று போதித்துவிட்டு சிங்களம் படிக்க மாட்டேன் என்ற கோடீஸ்வரன் வழக்கை லண்டன் பிரிவுகள் கவுன்சிலுக்கு கொண்டு போனவர்கள். தம்பிள்ளைக்கட்கு சிங்களம் படிப்பித்தார்கள். திருச்செல்வம், நாகநாதன், பொன்னம்பலத்தின் பிள்ளைகள் தமிழைவிட சிங்களத்தை சிறப்பாய் பேசுவார்கள். தம் சட்டத்தரணி தொழிலை சிங்கள மொழிகலேயே செய்யுமளவு சிங்களமொழி அறிவு இருந்தது. “ஆனால் மேடைகளில் இவர்கள் சிங்கள இனவெறியர்களை மிஞ்சம் தமிழ் இன வெறியைப்பேசினர். “நாய்க்குணம் கொண்;ட நத்தசேனா, பேய்க்குணம்கொண்ட புஞ்சிநோனா” பற்றி மங்கயைற்கரசி அமிர்தலிங்கம் பேசினார்”. புலிப்பாசிஸ்ட் தத்துவவாதி பாலசிங்கம் “மோட்டுச் சிங்களவன், சிங்களவனுக்கு மேல்மாடி இல்லை” என்று பிரச்சாரம் செய்தார் எஸ்.பொவுக்கு தமிழ் இனவாதத்தை தொடர்ந்து சென்று விளக்கத்தெரியாதபோது, வைதீக மாக்சியம் பற்றி குறையிரக்கிறார் அப்படியென்றால் எஸ்.பொ என்ன நவமாக்சியவாதியா? தன் பேசுபொருள் சார்ந்து, எந்த உணர்வுமில்லாமலே கேள்விப்படவைகளை எங்கேனும் அரைகுறையாய் கிரகித்ததை தனதாக்கிக்கொண்டு தத்துவ நியாயம் பிளக்கிறார். ரஷ்ய, சீன முரண்பாட்டுச் காலத்தில் வாழ்ந்தும்கூட அதுபற்றி விளக்க முடியாதவர். தமிழ்நாட்டில் இருந்து எழுந்த வைதீக மாக்சியம் என்ற குரலை தனதாக்குகிறார். தொடரும்...

-தமிழரசன் பெர்லின்

எஸ்.பொ.வின் வரலாற்றில் வாழ்தல் நூல் விமர்சனம் (டிசம்பர் 2007 இன் இக்கட்டுரை கையெழுத்துப் பிரதியாக எழுதப்பட்டு ஐனவரி 2010 இல் அச்சுப்பிரதியாக வெளியிடப்படுகிறது

1 comment:

jeya said...

எஸ்.போ வின் பொறுக்கி ரவுடித்தனங்களை ஆதார பூர்வமா அறிய தந்ததற்கு மிகவும் நன்றி சொல்கிறேன்.உங்கள் கடமை தொடரட்டும்